Friday, January 22, 2010

தர்மம்


அந்தணர்க்கு

ஆடை, தட்சணை

நுனிவாழை இலையில்

சோறு..பொரியல்..கூட்டு

வடை பாயாசம் என

தந்தையின் திதி

செய்து முடித்து

சாப்பிடுகையில்

அம்மா பசிக்குது

சாமி தருமம் - என

வாசலில் ஒலிக்கும் குரலை

விரட்டுகிறான்

இடது கையால்

போ..போ..என

29 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல வரிகள்...

வெற்றி said...

உண்மையான வரிகள்..

goma said...
This comment has been removed by the author.
goma said...

காகத்தின் வடிவில், முன்னோர் வருகிறார்கள் என்று நம்புகிறோம் .
அவர்கள் மனித வடிவிலும் வரலாம் என்று நம்ப மறுக்கிறோம்

மாதேவி said...

கவிதை சிந்தனைக் கருத்துடன் அழகு.

ஆரூரன் விசுவநாதன் said...

உண்மைதான் .....இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்......

இல்லாத காக்கையை தேடி, கூவி அழைத்து சோறு போடுபவன், அருகி நடக்கும் பட்டினிசாவை தடுக்க முனைவதில்லை

வேடிக்கை மனிதர்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
நல்ல வரிகள்...//

நன்றி Sangkavi

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெற்றி said...
உண்மையான வரிகள்..//

நன்றி வெற்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
காகத்தின் வடிவில், முன்னோர் வருகிறார்கள் என்று நம்புகிறோம் .
அவர்கள் மனித வடிவிலும் வரலாம் என்று நம்ப மறுக்கிறோம்//

முன்னோர் வருகிறார்களோ இல்லையோ..பசியால் வாடுபவர் பசியை தீர்ப்பது போன்ற புண்ணியச் செயல் வேறு ஏது?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
கவிதை சிந்தனைக் கருத்துடன் அழகு.//



நன்றி மாதேவி

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை அருமை ..

பின்னோக்கி said...

இந்த கடமைகளை செய்து முடிக்கும் போது அவனுக்கு பசிக்கிறதோ ?

vasu balaji said...

இருக்காங்க சார் இப்படியும்:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

சிநேகிதன் அக்பர் said...

வாழ்க்கையில் இப்படியும் சிலர் கடமைக்காக.

S.A. நவாஸுதீன் said...

நிதர்சனம். சமூகத்தில் நிறைய உண்டு இவர்களின் (அ)தர்மம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை அருமை ..//

நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
இந்த கடமைகளை செய்து முடிக்கும் போது அவனுக்கு பசிக்கிறதோ ?//

:))))

ஈரோடு கதிர் said...

அதர்மம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
இருக்காங்க சார் இப்படியும்:((//

அப்படிப்பட்டவர்களை என்ன செய்யலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
வாழ்க்கையில் இப்படியும் சிலர் கடமைக்காக.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//S.A. நவாஸுதீன் said...
நிதர்சனம். சமூகத்தில் நிறைய உண்டு இவர்களின் (அ)தர்மம்.//

தர்மம் ????

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
அதர்மம்//

ஆம்

Ashok D said...

நன்று

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ashok

ஹேமா said...

வலது கையால் கலைத்தால் ஒட்டியிருக்கும் உணவு உதிர்ந்துவிடுமாம்.அதனால்தானாம் இடது கையால கலைப்பான் கஞ்சன்.நல்ல கவிதை.

Radhakrishnan said...

இருக்கும் கொஞ்சத்தைப் பரிமாறி இருக்கலாம்.

என்ன தர்மமோ!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன்