Wednesday, April 8, 2009

இறுதி வேண்டுகோளும்...அப்பாவி தமிழர்களும்


இறுதி வேண்டுகோள்..என்றால் என்ன...ஆங்கிலத்தில் சொல்வதானால் Last request.அதாவது கடைசியாக பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

உதாரணமாக...உங்கள் நண்பனால்..உங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும், அக்காரியத்தை அவர் ஒருவரால் தான் செய்யமுடியும்..நீங்களும் பலமுறைக் கேட்டும்..அவர் செய்யவில்லை..என்றால் என்ன பொருள்.

நீங்கள் நினைப்பதுபோல்..அந்த காரியத்தை முடிக்கும் சக்தி அவரிடம் இல்லை , அல்லது உங்களுக்கு செய்ய அவர் விரும்பவில்லை.

இந்நிலையில்...இறுதி என்ற வார்த்தை ஏன்..அதுவும்..நீங்கள் வேண்டும்போது. உங்கள் மனதில் உள்ளது 'பல முறை கேட்டு விட்டேன்..மரியாதையாய் செய்..இல்லாவிட்டால்.."

இல்லாவிட்டால் என்ன செய்வதாக எண்ணம்.அவரை மீறவும் முடியாது. அதிக பட்சமாக பதவியை துறக்கலாம்.அதனால் யாருக்கு பயன்? மீண்டும் அந்த பதவிக்கு வர நமக்கு..அவர் தயவு தேவைப்படலாம்.

ஆகவே..தற்சமயம் எந்த முடிவும் எடுக்க முடியாது. வேண்டுமானால்..இறுதி வேண்டுகோள் ஒன்று, இறுதி வேண்டுகோள் 2 என அறிவித்துக்கொண்டிருக்கலாம்.அப்பாவி தமிழினம் அங்கே..அழிந்ததும்..மத்திய அரசு உதவலாம்.

தமிழினம் அழியும்வரை வேண்டுமானால்..நாம் மனிதச்சங்கிலியும், பேரணிகளையும்,அறிக்கைகளையும்,எந்த திராவிடகட்சி தமிழர்பால் அக்கறை கொண்டுள்ளது என ஒரு சொற்போரும் விட்டுக்கொண்டு...நம் பதவிக்கு ஆபத்து வராமல் பதவி காப்பதில் கண்ணாய் இருக்கலாம்.

அதுவரை...இலங்கை தமிழர்கள் இருந்தால் என்ன..அழிந்தால் என்ன...அவர்களா நமக்கு வாக்களிக்கப் போகிறார்கள்? அவர்களா நாளைக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்போகிறார்கள்?

தமிழக தலைவர்களே..உங்களுக்கு உங்கள் வேலை முக்கியம்...முதலில் அதை கவனியுங்கள்

2 comments:

Suresh said...

அருமை தோழா அவர்கள் கட்டாயம் செவி சாய்க்க மாட்டார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்..ஆனா கடையில கூட்டத்தைக் காணோம்