Monday, April 13, 2009

மீண்டும் கிளம்பிய இடத்திற்கு வரும் இயக்குர் பாலசந்தர் ..

ரவிஷங்கர் இதைப்பற்றி ஒரு பதிவு போட்டு, என் கருத்தைக் கேட்டிருந்தார்.அதனால் இப்பதிவு...நன்றி ரவி...

பாலசந்தர் கதை , இயக்கத்தில் 'பௌர்ணமி' என்ற நாடகம் 18-4-09 அன்று அரங்கேறுகிறது.

தன் பயணத்தை தொடக்கிய இடத்திற்கு அவர் மீண்டும் வந்துள்ளார்.நாடக உலகிலிருந்து...நாகேஷ்,சௌகார் ஜானகி,மேஜர் ஆகியவர்கள் துணையுடன் வெள்ளித்திரையில் நுழைந்தார்.அனந்து இவரின் வலதுகரமாக திகழ்ந்தார்.(அவர் மறைவிற்கு பின்..இவரால் வெற்றிப்படத்தை தரமுடியவில்லை என்பது மறுக்கமுடியா உண்மை)

இவரின் பல படங்களின் ஆங்கில படங்களின் பாதிப்பு இருந்ததுண்டு.தாமரை நெஞ்சம்..வங்கக்கதை....சத்யகம் ஹிந்தி படம் புன்னகை ஆயிற்று.தண்ணீர் தண்ணீர் கோமலின் எழுத்து..இருகோடுகள் ஜோசப் ஆனந்தன்...அவள் ஒரு தொடர்கதை..எம்.எஸ்.பெருமாளுடையது.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.பின் சில காலம் விசுவுடன் காலம் தள்ளினார்.

வெள்ளித்திரை வெற்றி சற்று மங்கியதும்...சின்னத்திரைக்கு வந்தார்.இதனிடையே பல இயக்குநர்கள் மூலம்...ரஜினி போன்றோரை வைத்து படமெடுத்து காசு பார்த்தார்.சின்னத்திரையில் இளைப்பாறி முடிந்ததும்..மீண்டும் நாடகத்திற்கு வந்திருக்கிறார்.

திரையுலகில்..பிரபலமாகியும் நாடகத்தை மறக்காதவர்கள்...சிவாஜி,மனோகர்,சகஸ்ரநாமம் போன்றோரே.இன்று இந்த பட்டியலில் எஸ்.வி.சேகர்,மகேந்திரன்,மோகன் ஆகியோரைச் சொல்லலாம்.மற்றவரெல்லாம்...வசதி வந்ததும் தாய் வீட்டை மறந்தவர்கள்தான்.

இந்நிலையில்...நலிந்து..மரணப்படுக்கையில் கிடக்கும் நாடகத்தை சாகவிடாமல்..அமைச்சூர் நாடகக் குழுக்களே காத்து வருகின்றன.லாப..நஷ்டம் பாராது...இவர்கள் இன்று நாடகக் குழுக்களை நடத்தி வருகின்றனர்.

வெள்ளித்திரைக்கு போனதும்...100 படங்களுக்கு மேல் இயக்கிவிட்டு... பின் தொலைக்காட்சி தொடர்கள் பக்கம் வந்து...சமீபகாலமாக வெற்றியை சுவைக்காதவர் பழைய குருடி... யாய் நாடகத்திற்கு வந்திருக்கிறார்.

உண்மையிலேயே..இவருக்கு நாடகப் பற்று இருக்குமேயாயின்...தன் கதை, இயக்கத்தில்..இன்று இயங்கிவரும்..அமைச்சூர் குழுக்களை வைத்துக் கொண்டு நாடகம் நடத்த வேண்டும்.

அதை விடுத்து..சின்னத்திரை நடிகர்களான ரேணுகா, பூவிலங்கு மோகன் (இவர் கோமல் குழுவில் இருந்தவர்..வெள்ளித்திரை,சின்னத்திரை நடிகர் ஆனதும் நாடகத்தை மறந்தவர்)போன்றோரை வைத்து நாடகம் போடுவதென்பது...வியாபார நோக்கோடுதான் இருக்க முடியும்.

இவரால்...மாதம்..ஒன்றிரெண்டு நாடகத்திற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்துக் கொண்டிருந்த குழுக்களுக்கு அவை இல்லாமல் போவதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.

இதைத்தவிர...இவரால் இன்று ஒன்றையும் சாதிக்க முடியப் போவதில்லை.

4 comments:

தருமி said...

தாமரை நெஞ்சம் உச்ச காட்சி Sidney Poiter நடித்த ஒரு படத்தின் காப்பி என்பதாகக் கண்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நானும் கேள்வி பட்டிருக்கிறேன்...ஆனால் படக்கதை ஒரு வங்கக்கதை..
வருகைக்கு நன்றி தருமி sir

Unknown said...

இன்றைய காலக் கட்டத்தில் டிராமா போடும் டிரெண்டு ஒத்து வருமா என்பது சந்தேகமே.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரவி