Wednesday, September 16, 2009

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

11 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am first

நல்ல கருத்துக்கள்

venkat said...

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்.
நூத்துல ஒரு வார்த்தை.

JesusJoseph said...

இந்த அவசர உலகத்துக்கு தேவையான கட்டுரை

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

குடுகுடுப்பை said...

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..//

இவங்கள வேடிக்கை பாத்தாலே நமக்கு சிரிப்பு வருமே சார்.

உடன்பிறப்பு said...

இவங்கள வேடிக்கை பாத்தாலே நமக்கு சிரிப்பு வருமே சார்

/\*/\

அடுத்தவர்களை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம் அல்லவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//venkat said...
சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்.
நூத்துல ஒரு வார்த்தை.//


நன்றி வெங்கட்..உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்..பதிவைப் பார்க்கவும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// JesusJoseph said...
இந்த அவசர உலகத்துக்கு தேவையான கட்டுரை

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்//


நன்றி Joseph

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..//

இவங்கள வேடிக்கை பாத்தாலே நமக்கு சிரிப்பு வருமே சார்.//

அப்படியாவது நீங்கள் சிரித்தால் நல்லது தானே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
இவங்கள வேடிக்கை பாத்தாலே நமக்கு சிரிப்பு வருமே சார்

/\*/\

அடுத்தவர்களை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம் அல்லவா//


வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உடன்பிறப்பு