Wednesday, September 23, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1. நம்ம அடுத்த படத்தில ஹீரோவிற்கு திருடன் வேஷம்
கதை என்ன
அதைத்தான் எந்த மொழியிலே இருந்து திருடலாம்னு யோசித்துக் கிட்டு இருக்கோம்.

2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

3.அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்

4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்

5.பாடகி பல்லவி திருமணம் முடிந்து பல வருஷம் பாடாம இருந்தவர்..இப்போ திரும்ப பாட வந்துட்டார்
இப்ப எப்படி பாடறாங்க
பழைய பல்லவியைத்தான்

6.உங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்டு நாய் விடாம குரைக்குது
பயப்படாதே! குரைக்கிற நாய் கடிக்காது
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே!

4 comments:

இராகவன் நைஜிரியா said...

இஃகி, இஃகி...

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன்

அக்னி பார்வை said...

//அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்///

suuppar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்னி