Wednesday, October 1, 2014

குறுந்தொகை- 121

தலைவி கூற்று
(தலைவன் சொன்ன இடத்தில் சந்திக்க வராமையால் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)

குறிஞ்சி திணை - பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மெய்யோ வாழி தோழி சாரல்
 
மைபட் டன்ன மாமுக முசுக்கலை்
 
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
 
கோட்டொடு போகி யாங்கு நாடன்

தான்குறி வாயாத் தப்பற்குத்
 
தாம்பசந் தனவென் றடமென் றோளே.

                   =கபிலர்

உரை-

(தோழி) இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ! மலைப்பக்கத்தில் மைபட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன் அக்குரங்கை ஏற்றுக் கொண்டு முறிந்த அக்கொம்பினிடம் சென்றார் போல தலைவன் சொன்ன இடத்தில் வராத தன் தவற்றின் பொருட்டு என் பரந்த மெல்லிய தோள்கல் பசலையை அடைந்தன.



    (கருத்து) ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?

     .
    “குரங்கு, கொம்பு ஏற்றுக் கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல, தலைவர் நான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பசந்தன” என்று தலைவி கூறினாள்.

   

No comments: