Thursday, October 30, 2014

அழும் நீர்

         

வேகமாய்

தண்ணீர் வீழ்ந்ததில்

உண்டாகின

பல நீர்க்குமிழிகள்

அவை நொடியில்

பிரியப் போவதை எண்ணி

பாத்திரத்தினுள் வீழ்ந்த

நீர் அழுதது


2 comments:

ரிஷபன் said...

அவை பிரிவதில்லை. இணைவதற்கே அந்த ஆனந்தக் கூத்து

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரிஷபன்