Friday, October 10, 2014

குறுந்தொகை=129


தலைவன் கூற்று
(தலைவியோடு அளவளாவி மீண்ட தலைவனது வாட்டத்தைக் கண்ட பாங்கன், “ உனக்கு இவ்வாட்டம் உண்டாதற்குக் காரணம் யாது?” என்றவழி, “ஒரு மங்கையின் நுதல் என் உள்ளத்தைப் பிணித்தது” என்று தலைவன் கூறியது.)


நெய்தல் திணை - பாடலாசிரியர் கோப்பெருஞ்சோழன்

இனி பாடல்-

எலுவ சிறாஅ ரேமுறு நண்ப
   
புலவர் தோழ கேளா யத்தை
   
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
   
பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
   
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே.

                  - கோப்பெருஞ்சோழன்
    உரை-

(தோழா) இளைஞர் இன்புறுதற்குக் காரணமாகிய நட்பையுடையோய் அறிவிடையாருக்குத் தோழா கேட்பாயாக! ஓரிய கடலின் நடுவில் எட்டாந் திதிக்குரிய இளை வெள்ளிய சந்திரன் தோன்றியதைப்போல, ஒரு மகளின் கூந்தலுக்கு அயலில் விளங்குகின்ற சிறிய நெற்றி புதிதாகப் பிடிக்கப்பட்ட யானையைப்போல எம்மைப் பிணித்தது.

        (கருத்து) ஓர் அழகிய மகள் என் நெஞ்சத்தைக் கவர்ந்தாள்.

 

No comments: