Monday, October 6, 2014

குறுந்தொகை-125




தலைவி கூற்று
(தலைவன் மணம் செய்யாமல் நெடுநாள் இருந்ததால் வருந்திய தலைவி, அவன் கேட்கும் அண்மையில் இருப்பத்தோழியை நோக்கி, தலைவன் என் நலம் கொண்டான்; அந்நலம் என்னைப் பிரிந்தது. நான் இன்னும் உயிரோடு வாழ்ந்திருக்கின்றேன்” என்று கூறித் தலைவன் மணக்காவிடின்  உயிர் நீங்குமென்ற குறிப்பை உணர்த்தியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் அம்மூவன்

இனி பாடல்-
 
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
   
உளெனே வாழி தோழி சாரற்
   
றழையணி யல்குன் மகளி ருள்ளும்
   
விழவுமேம் பட்டவென் னலனே பழவிறற்

பறைவலந் தப்பிய பைத னாரை
   
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
   
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.

 
                             - அம்மூவன்
உ ரை-.

(தோழி) மலைச்சாரலில் விளைந்த தழையினாலாய உடையை அணியும் பெண்மை அழகுடைய மகளிர் யாவரினும், விழாவைப்போலச் சிறப்பெய்திய எனது பெண்மை நலம்,பழைய விறலையுடைய சிறகின் வன்மை தவறியதனால் உண்டாகும் துன்பத்தையுடைய  நாரை,அலைகள் தோயப் பெற்ற வளைந்த மரக்கிளையில்தங்கியிருக்கும் குளிர்ந்த கடல் துறையை உடைய தலைவனோடு என்னை விட்டுப் பிரிந்து சென்ற இடம் பெயர்ந்தது அங்ஙனமாகவும் யான் மாத்திரம் விலங்குகின்ற வளைகள் நெகிழும் படி மெலிந்து இன்னமும் உயிருடன் உள்ளேன்.


   (கருத்து) தலைவன் விரைவில் வவந்து மணக்கவிடின் உயிர் தரியேன்.

மரம் கரையிலிருப்பினும் அதன் கிளை அலைவந்து தோயுமாறு வளைந்தது.  மீனைத் தாராதொழியின் நாரை இரையின்றி உயிர்நீத்தலைப் போலத் தலைவன் இரங்கி வரைந்து கொள்ளானேல் யானும் உயிர்விடுவேன்..

No comments: