Friday, October 10, 2014

அழுத மரம்

                                 


ஊர் எல்லையில்

ஓர் அரசமரம்..

மேடை மீது

ஏறிய மரம்...

வெயிலுக்கு நிழல்

கொடுத்த மரம்...

பஞ்சாயத்து பல செய்ய

இடமளித்த மரம்...

வெட்டப்பட்ட போது

பஞ்சாயத்து செய்ய

யாருமின்றி

அழுத மரம்.


2 comments:

ராமலக்ஷ்மி said...

மரங்களுக்கும் உணர்வுண்டு. அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

thanks ramalakshmi