Friday, April 3, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்-6

1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிறந்த கதையம்சம் அப்படின்னா...

கொஞ்சம் சுருக்கமாகவாவதும் சொல்லுங்க சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வக்கீலான சிவாஜி, மனைவி பண்டரிபாய் மீது சந்தேகப்படுவார்.கடைசியில் சந்தேகம் தவறென உணர்வார்.அப்போது அவருக்கு நீதிபதி நியமனம் வரும்.வீட்டில்..என் மனைவியை சந்தேகப்பட்டு நியாயம்
தவறிய எனக்கு நீதிபதியாகும் தகுதியில்லை என அப்பதவி ஏர்க மறுத்து..பைத்தியம் பிடித்தாற்போல் ஆவார்.படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்,திருப்பங்கள் வரும்.