Friday, November 22, 2019

ஆதி பகவன் முதற்று உலகு
இறைவனுக்கு
 அடுத்து..
இறைவனுக்கு அடுத்தா..?
ஆம்..
அடுத்தது
அது மழையாகும்
ஆகவேதான்
வள்ளுவன்
கடவுள் வாழ்த்தை
அடுத்து
வான் சிறப்பை
வைத்தான்

Monday, November 4, 2019

மழை
அடித்து ஓய்ந்ததும்
மழைத்துளிகள் மீது
கோபம் வரத்தான் செய்கிறது..
யார் அனுமதியுமில்லாமல்
மரத்தின் இலைகளையும்,
பூக்களின் இதழ்களையும்
அனுமதியின்றி
முத்தமிட்டுக் கொண்டிருப்பதைக்
காணுகையில்..