Thursday, August 20, 2020

என்னுரை
-------------------

சங்கக்காலம் முதல் இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

மதம், இனம் கடந்து அனைத்துத் துறைகளிலும் சாதித்த, சாதித்துக் கொண்டு இருக்கும் பெண்கள் ஏராளம்.

                    "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
                       பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
                      எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
                       இளைப்பில்லை"

என்று சொல்லிச் சென்ற பாரதியின் கனவினை நனவாக்கும் பெண்கள் இன்று ஈடுபடாதத் துறைகள் இல்லை எனலாம்.அனைத்திலும்..நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், பல பெண்களின் திறமைகள் சரியாக பதிவிடப்படாமல் போய் இருப்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

தமிழ் இலக்கியம் என்று வந்தால் சென்ற  நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திலிருந்து,தங்களை கட்டி வைத்திருந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து..பல சமுதாய சீர்கேடுகளையும் தங்கள் எழுத்துகள் மூலம் ."சமுதாயத்தில் சாதாரண குடிமகனுக்கு இருக்கும் பொறுப்பைவிட ஒரு எழுத்தாளருக்கு பொறுப்பு அதிகம்' என உணர்ந்து சீறி எழுந்துள்ளார்கள் பல பெண் எழுத்தாளர்கள்.

அப்படி என்னைக் கவர்ந்த நாற்பதற்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் குறித்த நூலே இது.


இந்நூலை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும் என விரும்புவதுடன், இந்நூலில் குறிப்பிடப்ப்ட்டுள்ள எழுத்தாளர்களின் எழுத்துகளையும், தேடிச்சென்று படித்து இன்றைய வளரும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்


இந்நூல் உருவாக உறுதுணையாய் இருந்த நண்பர் வானதி ராமநாதனுக்கும்,பதிப்பக ஊழியர்களுக்கும்,முகப்பு அட்டையை வடிவமைத்த ஓவியருக்கும் என் நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.

Tuesday, August 4, 2020

மென்கொடியும் மெலிஇடையும்

தென்றல்
மலர்ந்தாடும்
மென் கொடி பூ ஒன்று
தன் தாயினும்
மெலிந்த இடையால்
தளிர் விரலில்
தாயிடமிருந்து
தன்னைப் பறிப்பதை
தடுக்க இயலாது
தவிக்கின்றது.