Thursday, December 19, 2019

போராட்டத்தில்
ஈடுபட்ட
மகளை
லத்தியில் அடித்து
காயப்படுத்திய
காவலர்
காயத்திற்கு
கடையில்
கண்களில் நீருடன்
மருந்து வாங்கிச் சென்றார்.

Tuesday, December 17, 2019

கிறுக்கல் கவிதைகள்

விடியலில்
எங்கோ
ஒரு சேவல் கூவுகிறது
பால் கொணர்பவனைப்
பார்த்து
நாய் குரைக்கின்றது
கோலப்பொடியில் அமர்ந்து
காகம் கரைகிறது
கடமைகளை
மறப்பதில்லை இவை
படுக்கையில்
புரண்டபடியே
எண்ணுகின்றான் இவன்.

2
வீடுகளில்
இப்போதெல்லாம்
நிழல்கள்தான்
பேசுகின்றன..
நிஜங்களோ
வாய் மூடிக்
கேட்டுக்
கொண்டிருக்கின்றன

Monday, December 9, 2019

இருப்பதும்..இல்லாததும்

1)இருப்பது
இல்லை போலும்
இல்லாதது
இருப்பது போலும்
தோன்றுவது ஏன்?

2)இதயத்திற்கு
சிறகு முளைத்து
பறக்கின்றது

3)மண்ணுக்குள்
மண்ணாய்
மக்கச் செய்யும்
மண்தானே
சிறு விதையையும்
பிரசவித்து
மண்ணில்
மக்களுக்காக
அனுப்புகிறது