Saturday, September 29, 2012

பாவம்...கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்கள்...



ஆபிஸ் ஃபுல்லா ஏசி, தூசி படாத வாழ்க்கை, கை நிறைய சம்பளம், அவனுக்கு என்னப்பா ராஜ வாழ்க்கை என்று கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவரா நீங்கள். அவசரப்படவேண்டாம். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் 72 சதவிகித ஊழியர்களுக்கு இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.
உலக இதயதினத்தை ஒட்டி அபாயகரமான வேலைகள் பற்றியும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றியும் ASSOCHAM கணக்கெடுப்பு ஒன்று நடத்தியது. அதில் பகல்நேர வேலை பார்ப்பவர்களை விட இரவு நேர வேலை பார்ப்பவர்களுக்கு 52 சதவிகிதம் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாறுபாடான தூக்கம், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதுவது, சரியான உடற்பயிற்சியின்மை போன்றவையே என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், ஹைதராபாத், சண்டிகர், டெக்ராடூன் உள்ளி நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் டெல்லியில் பணிபுரிபவர்கள் இதயநோய் அதிகம் தாக்குவது தெரியவந்தது. அதில பெங்களூரு இரண்டாவது இடத்திலும் மும்பை 3 வது இடத்திலும் அகமதாபாத், சண்டிகர், ஹைதராபாத், பூனே போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.
இன்றைக்கு இந்தியாவின் நகர்புறங்களில் வசிக்கும் இளையதலைமுறையினர், இதயநோய், பக்கவாதம் போன்றவைகளினால் பாதிக்கப்படுகின்றனர் அதற்குக் காரணம் அவர்களின் பணிப்பளுதான். சரியான உணவின்மையும், உடற்பயிற்சியின்மையும் அவர்களுக்கு நோய் தாக்க காரணமாகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இரவு நேர ஷிப்ட் வேலை மனிதர்களின் வாழ்க்கைத் திறனையே மாற்றிப்பட்போட்டு விடுகிறது. அவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு போன்றவை ஏற்பட காரணமாகிறது என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் பி.கே. ராய்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஐடி, பிபிஒ, கட்டுமானத்துறை, எரிசக்தி, மனிதவளம் உள்ளிட்ட 18 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கைநிறைய சம்பளம் மட்டும் வாங்கவில்லை மனதில் அழுத்தத்தையும், போனசாக நோயையும் வாங்கிக்கொள்கின்றனர் என்று தெரியவந்தது. இதில் முதலிடத்தை இதயநோயும், பக்கவாதமும் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தை உடல்பருமனும், மனஅழுத்தம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இனிமேல் யாராவது அவனுக்கென்னப்பா கார்ப்பரேட் கம்பெனியில வேலை என்று மட்டும் அசால்டாக சொல்லி விடாதீர்கள்.

(நன்றி- தட்ஸ்தமிழ்

Friday, September 28, 2012

சாப்பாட்டுக்கடை - நெல்லை டீ ஸ்டால்




(நன்றி -மணிஜி)

சைதாபேட்டையில் ஒரு சந்து முனையில் இருக்கிறது நெல்லை டீ ஸ்டால்.. டோக்கன் சிஸ்டம் கிடையாது.. உங்கள் விருப்பப்படி லைட்டாகவோ, ஸ்ட்ராங்காகவோ . மீடியமாகவோ டீ கொடுப்பார்கள்.. நான் அவுன்ஸ் டீதான் குடிப்பேன். டீ மாஸ்டர் ஆரம்ப காலங்களில் லுங்கி கட்டிக்கொண்டிருப்பார்.. இப்போது ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டிக்கிருக்கிறார். சௌகரியமாக இருக்கிறது என்கிறார்.. என்ன...மூக்கு சிந்தினால் துடைக்கத்தான் கொஞ்சம் கஷ்டம் என்றார் . அவருக்கு சொந்த ஊர் கோயில்பட்டி.. அவருடன் கூடப்பிறந்தவர்கள் 6 பேர்.. அனவரும் டீக்கடைகளில்தான் வேலை செய்கிறார்கள்.. அவர்களும் ஷார்ட்ஸ்தானா என்ற என் நகைச்சுவையை ரசிக்க வில்லை.. 80:20 என்ற விகிதத்தில் டீ த்தூளுடன் புளியங்கொட்டையை கலக்கும் ரகசியத்தையும் என்னிடம் சொன்னார்..கடையின் மைனஸ் என்று பார்த்தால் டீ குடித்தால் காசு கேட்கிறார்கள்.. அதை தவிர வேறு எதுவும் குறிப்பாக இல்லை..

தாம்பரத்தில் இருந்து வருகிறவர்கள் ..சைதை பஸ் நிலையத்தில் இறங்கி போகலாம்.. மின்சார வண்டியிலும் போகலாம்.. பைக்கில் வருபவர்கள்.. கலைஞர் ஆர்ச் தாண்டி இடது புறம் திரும்பி போகலாம்.

Thursday, September 27, 2012

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்:


டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ்: அமெரிக்காவில் 'பெஞ்சில்' இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெஞ்சில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நாடுகளில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் புதிய திட்டங்கள், விரிவாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளன.

ஆனால், இந்த நிறுவனங்களின் திட்டங்களுக்காக அந்த நாடுகளில் ஏராளமான உள்ளூர் நபர்களை வேலைக்கு எடுத்த டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை, அதில் பலருக்கு எந்தப் பணியும் தர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதனால் இவர்கள் காத்திருக்கும் நிலையில் ('bench') உள்ளனர். இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் லாபத்தில் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
காண்ட்ராக்ட்களை எளிதாகப் பெறவும், வேலைவாய்ப்புகளை இந்தியா சுருட்டுகிறது என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும், அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவது போல காட்டிக் கொள்ளவும் பல இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களும் அந் நாடுகளைச் சேர்ந்தவர்களை ஏராளமான பணியில் சேர்த்தன.
முன்பு இவர்களில் கிட்டத்தட்ட 97 சதவீதம் பேர் முழு அளவில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இப்போது 90 சதவீதத்தினருக்கே உண்மையில் வேலை உள்ளது. இன்னும் சில சாப்ட்வேர் நிறுவனங்களில் 18 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் பெஞ்சில் உள்ளனர்.

இந்தியாவில் என்றால் ஏதாவது காரணத்தைச் சொல்லி வெளியே அனுப்புவது எளிது. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்களை வேலையை விட்டு நீக்கும்போது ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் இந்தியாவை விட பல மடங்கு பணத்தை இழப்பீடாகத் தர வேண்டும்.

வழக்கமாக இந்த நாடுகளில் பணியின் அளவு குறையும்போது சில ஊழியர்களை நீக்கிவிட்டு, மற்றவர்களை செலவு குறைந்த நாடுகளுக்கு (குறிப்பாக இந்தியா) அனுப்புவது சாப்ட்வேர் நிறுவனங்களின் வாடிக்கை.

ஆனால், இப்போது அமெரிக்கத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருப்பதால் அமெரிக்க ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவது, உள்ளூர் பணியாளர்களை வேறு நாடுகளுக்கு இடம் மாற்றுவது போன்ற வேலைகளை செய்ய முடியாத நிலைக்கு சாப்ட்வேர் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதைச் செய்யும் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் ஆளும் தரப்பும், எதிர்க் கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி ஓட்டு வேட்டைக்கு முயலக் கூடும். இதனால் இந்த நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை கூட எதிர்காலத்தில் பாயலாம்
.
மேலும் ஒரு அப்ளிகேஷனில் திறமையாக இருந்தார் என்பதற்காக ஒரு புராஜெக்டுக்காக எடுக்கப்பட்ட ஊழியரை வெறொரு அப்ளிகேஷன் பயன்படுத்தும் இன்னொரு திட்டத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையும் உள்ளது. குறிப்பாக கோடிங், மெயின்டெனென்ஸ் என்று இருந்த நிலை மாறி இப்போது enterprise mobility, cloud computing and data analytics ஆகிய பிரிவுகளுக்கே அதிக தேவைகள் உருவாகியுள்ளன.

ஆனால், இந்தத் திறமைகள் கொண்ட அமெரிக்க-ஐரோப்பிய ஊழியர்கள் மிக மிகக் குறைவு.
இந்தக் காரணங்களால் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பெஞ்சில் சும்மா காத்திருக்க வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை மொத்த ஊழியர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை 13,000 பேர் அமெரிக்காவில் மட்டும் பணியாற்றுகின்றனர். விப்ரோவில் 10,000 பேரும், எச்சிஎல் நிறுவனத்தில் 8,000 பேரும், டிசிஎஸ்சில் 6,000 பேரும் அந்த நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் நிலைமை சீராகாத வரை, அதிக செலவு வைக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு உள்ளூர் ஊழியர்கள் பெஞ்சிலிருந்து உண்மையான பணிக்குத் திரும்பாத வரை, இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பது சிரமமே.

(couetesy - That's thamizh

Tuesday, September 25, 2012

சிரித்துச் சிரித்து... (கவிதை)







நெற்றி சுருக்கி

புருவம் உயர்த்தி

கண்கள் விரித்து

பற்கள் தெரியாது

உதடுகள் மடித்து

சிரிப்பது தெரியாது

சிரிக்கிறாய்

நான் குழந்தையாய்

தவழ்ந்த போது

எடுத்தெதென

புகைப்படம் ஒன்றைக்

காட்டியதும்

Sunday, September 23, 2012

பதிவர்கள் வாழ்க்கை- அறிந்த தகவல்கள்- ஒரு நேர்காணல்




நான் பார்த்த அந்த பதிவர் , மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார்.அதுவே அவரை நேர்காணல் எடுக்கத்தூண்டியது.

உங்கள் பெயர்..ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷங்களாக பதிவிடுகிறீர்கள்?

என் பெயர் வேண்டாமே! சொன்னால்..நான் பிரபல பதிவரா..இல்லையா..என பல பதிவுகள் வந்து படிப்பவர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.நான் கடந்த் சில மாதங்களாக பதிவிடுகிறேன்.சொந்த ஊர் எது எனில் 'யாதும் ஊரே" என்பேன்.நான் ஆணி பிடுங்குவேன்.

எப்படி பதிவுலகில் நுழைந்தீர்..

ஒரு நண்பர் என்னை இழுத்து விட்டு விட்டார்.பழையன பல கழிந்ததால்..புதியன ஆன என்னைப் போன்றோர் ஆர்வமுடன் நுழைந்துள்ளோம்.

ஆணி பிடுங்கி என்கிறீர்கள்..பதிவு இடும் முன் அனுபவம்..

நல்லா மொக்கை போடுவேன்.என் நண்பர்கள் நான் பேசினாலே 'பிளேடு' என்பார்கள்.இந்த் ஒரு தகுதி பதிவராக போதும் என்பதால்..இதுவே என் முன் அனுபவமானது

எப்போ பதிவு போடுவீங்க...என்னிக்கு லீவு

லீவுன்னு கிடையாது.பதிவு போட்டுக் கொண்டே இருப்பேன்.முக்கிய குறிக்கோள்..தமிழ் மணத்தில்..முதல் இருபது பதிவுக்குள் வார வாரம் வரவேண்டும் என்பதுதான்.தவிர்த்து ஏழு பதிவர்களுக்கு தவறாது வாக்களித்து..அதனால் அவர்களையும் என் பதிவிற்கு வாக்களிக்க வைத்து..ஒவ்வொரு பதிவையும் வாசகர் பரிந்துரையில் வரவழைப்பதுதான்.


கரெண்ட் பில்...

அது பற்றி எனக்கென்ன கவலை.ஆஃபீசில் தானே டைப் அடிக்கிறேன்

வாசகர் உங்க வலைப்பூவிற்கு வர ஏதேனும் யுக்தி கையாள்கிறீர்களா/

 ஆம்..பிரபல பதிவர்களைத் திட்டி பதிவிடுவேன்..சினிமா விமரிசனம் செய்வேன்..சில சமயம் படங்களைப் பார்க்காமலேயே!


எதிர்கால திட்டம்..

சில மாதங்கள் பதிவு இட்டுவிட்டு..ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துக் கொண்டுவிட்டு..பின் ..கூகுள் பிளஸ்சிற்கு தாவி விடுவேன்.

Saturday, September 22, 2012

மரத்தில் காய்க்கிறதா பணம்...




பிரதமர் யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை மக்களுக்கு சொல்லியுள்ளார்..

'பணம் மரத்திலா காய்க்கிறது" என்று..

சாமான்யனுக்குத் தெரியும்..காலையில் எழுந்து அவசர அவசரமாக கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு..பேருந்தைப் பிடித்து...ஓடி..ஓடி..வேலைக்குப் போய் நாள் முழுதும் பணியாற்றிவிட்டு இல்லம் திரும்பி..அடுத்த நாள் திரும்ப இதையே பின்பற்றி..இப்படி 30 நாட்கள் உழைத்தால்..அந்த மாத சம்பளம் வரும்..பணம் உழைப்பில் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

தினசரி ஊழியர்கள் கல்லையும், மண்ணையும், சரக்கு மூட்டைகளையும் தூக்கி வேர்த்து பெருக்கெடுக்க நாள் முழுதும் உழைத்தால் தான் அன்றைய கூலி கிடைக்கும்...அவன் சிந்தும் வேர்வையில்தான் பணம் காய்க்கிறது என அவனுக்குத் தெரியும்.

பணம் மரத்தில்தான் ஒரு விதத்தில் காய்க்கிறது..

மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம்தான் பணமாகவும் உருவாகிறது..

பணம் மரத்தில் காய்ப்பதில்லை என அவர் யாருக்குச் சொன்னார்...ஒரு வேளை..

..நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் கேம் போன்றவை மட்டுமல்ல..அரசியல்வாதிகளே மரத்திலும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்கலாம்..கோடிக்கணக்கில்..தேக்கு, செம்மரம் என கண்முன் கொட்டிக் கிடக்கிறது..அதைப்பாருங்கள்..என தன் அமைச்சர்களுக்கு மறைமுகமாக சொல்கிறாரோ என்னவோ பிரதமர்.

Friday, September 21, 2012

இந்துமதத்திற்கு சகிப்புத் தன்மை அதிகமா..?!




நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது..இன்றைய நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்கையில்..இந்து மதத்தில் சகிப்புத் தன்மை அதிகம் என்றார்.

அவர் சொன்னது உண்மையா? என யோசித்தேன்..

இந்துக்கள் என்பவர்கள் பற்றி நான் ஆழமாக உள்ளே செல்ல விரும்பவில்லை.ஆனால் பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.ஆனால் மற்ற இரு பெரு மதங்கள் உலகளவில் பரவியுள்ளன.ஆகவே எந்த நாட்டில் அவர்களுக்கு அநீதியோ, அச்சமோ ஏற்பட்டால் மற்ற நாட்டில் உள்ள அம்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

ஆனால்...இந்துக்களோ..அப்படியில்லை..

இங்கு என்ன பிரச்னை என்றாலும்..அதற்கு அரசியல், ஜாதி, இனம்,பகுத்தறிவு , என வண்ணம் பூசப்படுகிறது.ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களும்..ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

ஆயிரம் உண்டு இங்கு சாதி..இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி..என்று பாடினாலும்..நம்மை நாமே ஒருவருக்கு ஒருவர்..அந்நியராய் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.என்று சொன்னால் அதில் தப்பில்லை.

மேலும்...

மத்திய பிரதேசத்தில்..ராஜபக்சே வருவதைக் கண்டித்து மறியல் செய்யும் வைகோ விற்கு..நம் நாட்டு கட்சியினர் எத்தனை பேர் உடன் சேர்ந்தார்கள்.வாளாய் இருந்தார்கள்..
இதன் பெயர் சகிப்புத் தன்மையா?

இலங்கை தமிழர், தமிழக மீனவர்கள்..என நம் நாட்டினரைக்கூட பிரித்து சொல்பவர்கள் தானே நாம்.

பெயருக்கும், புகழுக்கும் ,பதவிக்கும் ஆசைப்பட்டு..அதை மற்றவன் அடைந்து விடுவானோ என்ற எண்ணம் நம்மில் இருக்கும் வரை நமக்கு விடிவு ஏது?




Thursday, September 20, 2012

பிரதமர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த முதல்வர்.




காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும்..என்றும் அதில் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும் அதுவரை 2டிஎம்சி நீர் தினசரி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியதால் கூட்டப்பட்டது ஆணைய கூட்டம்.

ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கேரளா சார்பில், முதல்வர்உம்மன் சாண்டிக்குப் பதில், நீர்ப்பாசன அமைச்சர் கலந்து கொண்டார். இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, "சம்பா சாகுபடியை காப்பாற்ற, வறட்சி காலத்தில் தண்ணீரை பகிர்ந்து கொள்வது குறித்து, நடுவர் மன்றம் கூறிய முறையை பின்பற்ற கர்நாடகா முன்வர வேண்டும், கர்நாடக அரசின் செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்திற்கு 24 நாட்களுக்கு தினசரி இரண்டு டி.எம்.சி., வீதம் 48 டி.எம்.சி., நீரை கர்நாடகா தரவேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ஆனால், கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், தொடர்ந்து வறட்சி நிலவி வருவதாகவும், பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கே தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறி, தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் மறுத்தார்.தவிர்த்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்தார்.

இதில் பிரதமர் குறைந்த பட்ச தண்ணீரை அளிக்கும்படி கூறியும்..கர்நாடகா மறுத்துவிட்டது.இதையடுத்து, இந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.தொடர்ந்து, இந்த விஷயத்தில் தமிழகம் இனி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழகம், சுப்ரீம் கோர்ட்டை அணுகும் என்று கூறப்படுகிறது.

நம் பிரதமரைப் பார்த்தால் யாருக்குத்தான் பயம் வரும்.

Wednesday, September 19, 2012

காங்கிரஸ் ஆளாத மாநில அரசுகளிடம் மத்ய அரசு பாராபட்சம்





காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியுள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே இனி மானிய விலைக்கு தரப்படும். அதற்கு மேல் வாங்கும்போது முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும் என்று மக்கள் தலையில் சிலிண்டரைத் தூக்கிப் போட்டது மத்திய அரசு.
நாடு முழுவதும் இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. இதையடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், தனது மாநிலத்தில் வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் மானிய விலைக்குத் தரப்படும் என்று சமீ்பத்தில் அறிவித்தார். தற்போது இந்த திட்டத்தை காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லியில் வருடத்திற்கு 9 சிலிண்டர்களை மானிய விலைக்கு வழங்க அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதேபோல காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இவ்வளவு நாட்கள் வேறு கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்..மத்திய அரசு பாராபட்சமாக நடந்துவருகிறது என்று கூறிவருவது..உண்மை என தெரிகிறது.
இப்படி சொல்வதால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கனவு காணுகிறதோ??!!

Tuesday, September 18, 2012

கர்நாடகாவும்..தமிழ்நாடும்




 காவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கிருஷ்ணா முதல்வராய் இருந்த போது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழகத்திலோ...

20ஆம் தேதி  எதிர்க்கட்சிகள் மத்ய அரசுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் அன்று பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.ஆனால்..பந்திற்கு தி.மு.க. ஆதரவு என்றதும், அறிவிக்கப்பட்ட விடுமுறையை அரசு ரத்து செய்து விட்டது.அந்த அளவு ஒற்றுமை.

Saturday, September 15, 2012

அறிமுகம்..(அரை பக்கக் கதை)


காலை அலுவலகம் கிளம்பும் வரை குழந்தை அனு எழுந்திருக்கவில்லை .
குழந்தைக்குத் தேவையான பால்,டயப்பர்,மாற்று உடை எல்லாம் எடுத்து வைத்தாள் கீதா.
சேகர்..அவளையையும், தூங்கும் அனுவையும் காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
கிரச் சில் குழந்தையை விட்டு விட்டு..வந்த கீதாவை அவள் அலுவலகத்தில் இறக்கிவிட்டு தன் அலுவலகம் சென்றான் சேகர்
மாலை தான் அலுவலகத்திலிருந்து திரும்ப நேரம் ஆகும் என்ப
தால்..கீதாவை மாலை ஒரு ஆட்டோ பிடித்து கிரச் சிற்குப் போய் அனுவையும் தூக்கிக் கொண்டு வீடு செல்லச் சொல்லிவிட்டான்.
அனுவும்..மாலை கிரச் சில் ஆட்டோவை நிறுத்திவிட்டு..குழந்தையை அழைத்துவரச் சென்றாள்.
குழந்தை ஆயாவின் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்தது.இவள் கூப்பிட்ட போது வர மறுத்து அழுதது.
"அனுகுட்டி..இது உன் அம்மாடா..சமர்த்தா அம்மா கிட்ட போ' என கொஞ்சினாள் ஆயா..
கீதாவிற்கு விழியோரம் நீர்..
'அப்பாவையே..அம்மாதான் குழந்தைக்கு அறிமுகம் செய்கிறாள்..என்பார்கள்..ஆனால்..இன்று கிரச் ஆயா குழந்தைக்கு அதன் அம்மாவை அறிமுகப் படுத்துகிறாளே'என்று மனதிற்குள் விம்மினாள்

Friday, September 14, 2012

டீசல் விலை உயர்வு...தலைவர்கள் கருத்து...(நகைச்சுவை)




மன்மோகன் சிங்- இது குறித்து நான் மௌனமாய் இருப்பதற்குக் காரணம்..என் மௌனம் ஆயிரம் பதிலுக்கு சமம் என்பதால் தான்.

சிதம்பரம் - மக்கள் ஐஸ்கிரீம் விலை உயர்ந்தால் மௌனமாய் உள்ளனர்.பிஸ்ஸா விலை உயர்ந்தால் மௌனமாய் ஏற்றுக் கொள்கின்றனர்.டீசல் உயர்ந்தால் ஏன் கத்துகிறார்கள்? என்றே புரியவில்லை.

கலைஞர்- தி.மு.க., இந்த உயர்வை வன்மையாகக் கண்டிக்கிறது.ஆனால் இது விஷயமாக மைய அரசைக் கண்டிக்காது

ஜெயலலிதா- டீசல் விலை உயர்வை நான் முதலிலேயே கண்டித்தேன்.கருணாநிதி இப்போது கண்டிப்பது போல கபட நாடகம் ஆடுகிறார்.

ராமதாஸ்- இந்த விலை உயர்வுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்.அடுத்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணியின்றி பா.ம.க., ஆட்சியைப் பிடிக்கும்

விஜய்காந்த்- ஜெ வும் கலைஞரும் தமிழகத்தைக் கெடுத்ததோடு இல்லாமல்..இப்போது பாரதத்தையே கெடுக்க சூழ்ச்சி செய்கிறார்கள்.இதை நான் முறியெடுப்பேன்.திமுக, அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தேமுதிக புறக்கணிக்கும்

அத்வானி - இந்த விலை உயர்வால் பாராளுமன்றத்திற்கு முன்னதாக தேர்தல் வர வாய்ப்பிருக்கு.

சுப்ரமணியசுவாமி- இந்த உயர்வுக்கு காரணம் சோனியாவும் சிதம்பரமும் தான்.அதற்கான ஆதாரங்களைத் திரட்டிவருகிறேன்.கூடிய விரைவில் இவர்கள் மீது வழக்குத் தொடர்வேன்.

வைகோ- கன்யாகுமரியிலிருந்து..தூத்துக்குடி வரை இந்த உயர்வைக் கண்டித்து மதிமுக போராட்டம் நடத்தும்.

கம்யூனிஸ்ட்கள்- இந்த உயர்வை கண்டிக்கிறோம்.முதல்வரை மரியாதை நிமித்தம் சந்திக்க உள்ளோம்.


Thursday, September 13, 2012

வாக்குகள் என்று வந்தாலே கள்ளம் வந்துவிடுகிறேதே??!!




தேர்தலில் வெற்றி தோல்விகளை வேட்பாளர்கள் பெறும்வாக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

வேட்பாளர்களின் திறமையையோ..தகுதியையோ யாரும் கணக்கெடுத்து வாக்களிப்பதில்லை.அப்படி அளித்தாலும் அந்த வேட்பாளர் டிபாசிட் இழக்கும் அளவே வாக்குகள் பெற முடியும்.

பல தேர்தல்கள் முடிவகளை கள்ள ஓட்டுகளும்..ஏற்கனவே அடக்கமானவர்கள் மீண்டு வந்து போடும் வாக்குகளும் தீர்மானித்துவிடும்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..வாக்குகள்...என்ற பெயர் எங்கு வந்தாலும்..அங்கு ஊழல், கள்ள வாக்கு  ஆகியவற்றை தவிர்க்க முடியாது.

அதே தான் தமிழ்மணத்திலும் நடைபெறுகிறது..

இங்கு தரமான பதிவுகள் ..குறைந்த பட்ச வாக்குகளைக் கூட பெறாது..பரிந்துரையில் வரமுடியாது டிபாசிட் இழக்கின்றன.

சில பதிவுகள் குறைந்த பட்ச வாக்குகளை..நண்பர்கள் மூலம் பெற்று..பதிவரின்..டிபாசிட்டை தக்க வைத்துக் கொள்கின்றன.

சில கள்ள வாக்குகள் ..இங்கு..ராங்க் ஐடி கள் மூலம் விழுகின்றன.இதற்கு குறிப்பிட்ட பதிவரை குற்றம் சாட்டி பயனில்லை.

முடிந்தால்..குற்றம் சாட்டுபவரும்..தன் பதிவிற்கு இதே போல் வாக்குகள் அளித்து மகுடம் சூட்டிக் கொள்ளட்டும்.

இதற்கு..இம்முறையை ஒழிக்க வழியே இல்லையா??

இருக்கிறது..வாசகர் பரிந்துரையை ஒருமுறை..இதே போன்ற நிலை வந்ததால்..தமிழ்மணம் சில காலம் நிறுத்தி வைத்தது.அது போல மீண்டும் செய்ய வேண்டும்..அல்லது..அதிக வாக்குகள் பெறும் பதிவுகள் என்பதை மாற்றி வேறு முறை ஏதேனும் கொண்டுவர வேண்டும்..

ஏனெனில்..வாக்குகள் என்றாலே..மக்களுக்கு..கூடவே கள்ளத்தனமும் கூடுவது இந்திய ஜனநாயகத்தின் வாடிக்கைதானே!

Wednesday, September 12, 2012

அப்பா........(சிறுகதை)






'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.

'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி இரண்டாயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு..ஸ்கேன் எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக அறுபதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

Tuesday, September 11, 2012

மெகா சீரியல்களும்..பதிவர்களும்..




மெகா சீரியல்கள் ஒரே மாதிரி..பெண்களை அழ வைக்க வேண்டும் என்னும் நோக்கிலேயே எடுக்கப்படுகின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும்..

அந்தத் தொடர்களில்..பெண்ணே பெண்ணுக்கு எதிரியாய் ..கதாநாயகியை கொடுமைப் படுத்துவதும்..அடியாட்களை வைத்து கொலை செய்வதும் போன்ற அநியாயத்திற்கு லாஜிக்குடன் காட்சிகள் அமைந்திருக்கும்.

இதற்கிடையே, தொடர்களை எப்படி வளர்ப்பது எனத் தெரியாமல்...

வேறு ஒரு தொடரில்..யாருக்கேனும் பக்கவாதம் வருவதாய் இருந்தால்..அதேபோன்று அடுத்தவாரம் வேறு ஒரு தொடரில் ஒரு கதாபாத்திரத்திற்கு அந்த நோய் வந்திருக்கும்..

கணவன் மனைவிக்குத் தெரியாமல்..வேறொரு பெண்ணுடன் வாழ்வது போல வந்தால்....வேறு தொடர்களிலும் அதே போன்ற காட்சிகளை எதிர்பார்க்கலாம்..

இதெல்லாம் கற்பனை வளம் குறைவதால் என்று கூற முடியாது..சீரியலை சேனல்கள் வளர்க்கச் சொன்னால் ..கதாசிரியர்தான் என்ன செய்வார்..இயக்குநர்தான் என்ன செய்வார்..தயாரிப்பாளர்தான் என்ன செய்வார்.நடிகர்களும் மீட்டர் விழுந்தால் போதும் என்பவர்கள்..

அது போகட்டும்..பதிவர்களுக்கும்..இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா..?

இங்கும் கிட்டத்தட்ட அதுதான் நடைபெறுகிறது..

ஒரு பதிவரின்..பதிவு அதிக கமெண்டுகளையும், ஓட்டுகளையும், வருவோர் எண்ணிக்கையையும் அதிகரித்தால்..

அந்த பதிவை முன்மாதிரியாகக் கொண்டே..பல பதிவர்களின் பதிவுகள்...

உதாரணத்திற்கு..பதிவர் சந்திப்பு பற்றிய அநேக பதிவுகள்..

பிறகு....

இன்னும் சொல்லுவேன்..ஆனால்..

நான் யாரைப்பார்த்தாவது..பொறாமைக் கொண்டு..இப்பதிவை எழுதியுள்ளதாக சிலர் நினைத்துவிடக் கூடும்.ஆகவே இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.


Sunday, September 9, 2012

நான் அறிந்த மணிஜி...





மணிஜி...

அனைத்து பதிவர்களும் அறிந்துள்ள பதிவர்..இல்லை..இல்லை..இனிய நண்பர்..

ஆம்..இவர் பதிவராக நமக்கு அறிமுகமானாலும்...சிறந்த நண்பர் என்பதே சிறந்தது.

இவர் தன்னைத்தானே..ஒரு குடிகாரராய்..சித்தரித்துக் கொண்டாலும்..

மது அருந்துவதால்..அவரது தொழில் பாதிக்கப்படாமல் இருக்கிறது.அவர் வேலையில் ஈடுபடும் போது அவரது உழைப்பையும், திறமையையும் நேரில் பார்த்தவன் என்ற முறையில் இதை சொல்கிறேன்.

நட்பு பெரிதென நினைப்பவர்..எல்லா விஷயங்களையும் ஈசியாக எடுத்துக் கொள்பவர்.ஆகவெதான்..மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என எண்ணி அவர்களை கலாய்ப்பதும்..அவர்களை கிண்டலடிப்பதையும் செய்பவர்.

இவரைப் புரிந்து கொண்டவர்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்..

புரிந்துக் கொள்ளாதவர்கள்..புரிந்துக் கொண்டதும்தான்..நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியும்..

மணிஜியும்...தனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர்களை கலாய்க்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.என் கூற்றில் உள்ள உண்மையை மணிஜி புரிந்துக் கொள்வார் என்றே எண்ணுகிறேன்.



Wednesday, September 5, 2012

சாய்பாபாவின் 40,000 கோடி சொத்துக்கள் யாருக்கு?



மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.
ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.

இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய் பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.

எனது பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.

தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் 165 நாடுகளில் இந்த அறக்கட்டளைக்கு ஆசிரமங்கள் உள்ளன. இன்னும் அதற்கு உலகம் முழுவதும் இருந்தும் நன்கொடைகள் வங்கிகள் மூலமாக வந்து கொண்டு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 (தட்ஸ்தமிழ்)

Sunday, September 2, 2012

விகடனும்..ராஜுமுருகனும்...




ஆனந்தவிகடனில்..சுஜாதா (கற்றதும் பெற்றதும்), வண்ணதாசன் (அகமும் புறமும்),நாஞ்சில் நாடன் (தீதும் நன்றும்), எஸ்.ராமகிருஷ்ணன் (துணையெழுத்து) வரிசையில் ராஜூமுருகனின் வட்டியும் முதலும்..பெரும்பான்மையினர் படித்து வருவது தெரியும்.ஆயினும்..ஏதேனும் பரவச நிகழ்ச்சி நடந்தால்..அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லையா?  அப்படி ஒரு எண்ணமே..இப்பதிவு..

ஒவ்வொரு வாரமும் அருமையாக எழுதி வரும்..ராஜூமுருகன்..இவ்வாரம் பயணத்தைப் பற்ரி எழுதியுள்ளார்.கரும்பின் சுவை.இருப்பினும் அடிக்கரும்பாய் சுவையைத் தரும் பகுதி கீழே..

"என் வாழ்க்கையில் சரிபாதிப் பொழுதுகள் பயணங்களுடந்தான் கழிந்திருக்கின்றன.வித விதமான பஸ்களும் ரயில்களும் ஒலிகளும், ஒளிகளும் வார்த்தைகளைக் கடந்த காட்சிப் படிமங்களாக மனதில் படிந்துகிடக்கின்றன.மூணாறு மலையில் போய் பஸ் திரும்புகிற நொடியில் ஒரு பெரிய அன்னாசி தோட்டமும் நடுவில் நிற்கிற ஒற்ரை மனுஷியும் பொசுக்கென்று எல்லாவற்றையும் வெளித்தள்ளி மனதில் நிரம்பிவிடுகிறார்கள்.தடதடத்துப் போகும் பெரும் தேயிலைக்காடு, திருச்சியைத் தொடும்போது வரும் ரசாயனத் தொழிற்சாலையின் துர்நாற்றம், வேலூர் மண்ணுக்குள் நுழையும் போது அடிக்கும் தோல் பதனிடும் நாற்றம், நீடாமங்கலத்தைத் தாண்டியதும் ஒரு பாழ் மண்டபச் சுவரில் கடக்கும் 'கோல்ட் ஸ்பாட்" விளம்பரம்,கரிசல் அறுந்து சடாரெனச் செம்மண் விரியும் ஒரு புள்ளி, பளையங்கோட்டையை கடக்கும் போதெல்லாம் பாதி உதிர்ந்த பைபிள் வாசகங்களோடு கடக்கும் மேரி மாதா, கோயம்பத்தூர் எல்லை வந்ததுமே பாஜாஜ் எம் 80யில்  பஞ்சு மூட்டை கட்டிக் கொண்டு கடக்கும் ஒருவர், ராத்திரி எப்போது கடக்கும் போதும் இட்லிப் பானை மூடியைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆத்தா பேசிக் கொண்டிருக்கிற மதுரை டவுன் ஹால் ரோடு, அதிகாலையில் 'சரவணப் பொய்கையில்' பாடல் ஒலிக்கும் மினி பஸ்சில் பச்சைப் பசேலெனக் கறிவேப்பிலை வாசம் தூக்க வாழை இலைக்கட்டுகளுக்கு நடுவே உட்கார்ந்து இருக்கும் நாஞ்சிக் கோட்டை ரோடு, 'சூடா சமோசே..சூடா சமோசே..' என ஒருவர் ராகம் பாட ஒவ்வொருமுறை மின்சார ரயில் கடக்கும்போதும் புதிதாக வரும் செங்கல்பட்டு ஏரி, மூட்டைப் பூச்சிகள் மண்டிய மரப்படுக்கையும் காரை உதிர்ந்த சுவர்களும்.."ஆந்திரா மால் சார்..நருவுசு சார்..போலீஸ் பிராப்ளம்லாம் இல்ல..வேணுமா?' என்கிற சித்தூர் லாட்ஜ், கொல்லை முற்றத்தில் குளமும் பேரழகு இருளில் பொசுக்கென்று விளக்கெரியும் கோயில் கொண்ட திருச்சூர் என வெயிலும் மழையும் ஒளியும் இருளும் ஒவ்வொரு பயணத்துக்கும் புதிது புதிதாக இருக்கின்றன"

அடடா...என்ன ஒரு ரசனை..

நான் தொடர்ந்து இவரை படித்து வியந்து வருகிறேன்..ஆனால் இந்த வாரம்..என் வியப்பு எல்லை மீறியதால்..உடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

படிக்காதவர்கள் கண்டிப்பாய் படிக்கவும்...