Tuesday, March 31, 2009

நான் அறிந்த எஸ்.வி. சேகர்...

எஸ்.வி.சேகர்..

அவரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகவே அறிவேன்..அவரைப் பற்றியும்..அவர் அரசியல் ஈடுபாடு பற்றியும்..பதிவுகள் எல்லாம் படித்தேன்..எனக்குத் தெரிந்த அவரை இத்தருணத்தில் சொல்ல வேண்டியது..என் கடமை என எண்ணுவதால் இப்பதிவு.

அவர்...எடிடிங், மிக்ஸிங் என்று பல தொழில் நுணுக்கங்களை அறிந்தவர்.வி.கோபாலகிருஷ்ணன் நாடகக் குழுவில் இருந்தவர்.பின்..தனக்கென ..நாடகப்பிரியா என்ற குழுவை ஆரம்பித்து..நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.தானும் வளர்ந்தார்..கூட நடித்தவர்கள், எழுத்தாளர்களையும் வளர்த்தார்.

கிரேஸி மோகன்..முதலில் இவருக்குத்தான் நாடகம் எழுதினார்..கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்...பின்னர் மோகன் தனிக் குழு ஆரம்பிக்க சேகரும் தனது ஒத்துழைப்பைத் தந்தார்.

கோபு-பாபு..இவருக்கு நாடகம் எழுதினப் பின்னரே..திரைஉலகிலும் கொடிகட்டி பறந்தனர்.சின்னத்திரையில் வலம் வந்துக் கொண்டிருக்கும் பிருந்தாதாஸ் முதலில் இவருடன் நாடகங்களிலும்...பின் பொதிகையில் வண்ணக்கோலங்கள் தொடரிலும் நடித்தவர்.

சரி..விஷயத்திற்கு வருகிறேன்...

யாருடைய சிபாரிசும் இல்லாமல்...தனக்கென தனிப்பாணியில் வளர்ந்தவர் இவர்.ஒரு முறை சட்டசபைக்கு சுயேச்சை வேட்பாளராக நின்று 1500க்கு மேல் வாக்குகள் பெற்றார்.அச்சமயம் தனிக்கட்சி ஆரம்பித்திருந்த நெடுன்செழியன் 450 ஓட்டுக்களே வாங்கி இருந்தார்.ஒரு நாடகத்தில் இவர் இதைச் சொல்ல..அன்று நாடகத்திற்கு வந்திருந்த ஜெ மிகவும் ரசித்தார்.

பின்..2006 தேர்தலில் மைலாப்பூர் தொகுதியில்..வேட்பாளராக மைத்ரேயன் பெயர் அடிபட கடைசியில் சேகர் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெ யின் குட்புக்ஸில் இவர் இருந்ததை சிலரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.தகராறு தி.நகர்.எம்.எல்.ஏ., கலைராஜன் ரூபத்தில் முதலில் ஆரம்பித்தது..

எல்லோருக்கும் வேண்டியவரான இவர் ...அனைத்துகட்சியினர் விசேஷங்களுக்கும் சென்றார்.தமிழக அரசியலில் மட்டும் அது மா பாதகம் ஆகும்.தன் மகள் திருமணத்திற்கு ஜெ வை அழைத்தும் வரவில்லை.(அழைப்பிதழில் ஜெ புகைப்படம் போடவில்லை..அதனால் அம்மாவிற்கு கோபம் என்றும் கூறப்பட்டது).பின் சத்யராஜ் வீட்டு திருமணத்தில் ஸ்டாலினுடன் புகைப்படத்தில் இருந்தார் சேகர்.தன் இல்லத்திருமணம் ஒன்றிற்கு கலைஞர் வர அவரை வரவேற்று மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தலைமை தன்னை விலக்குகிறது என தெரிந்ததும்...கலைஞரை வீட்டில் சந்தித்து..திரைப்படவிழா விற்கு 25 லட்சம் வாங்கி வந்தார்.

இந்நிலையில்..அ.தி.மு.க.,பொதுக்குழுவிற்கு இவருக்கு அழைப்பில்லை..தனது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியநிலையில் இருந்தவர்..பிராமணர்களுக்காக இட ஒதுக்கீடு என் ஆரம்பித்துள்
ளார் .

சேகரை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்...எம்.எல்.ஏ., பதவியில் திறம்பட செயல் பட்டவர் இவர்.தொகுதி மக்கள்..எந்த கட்சியை சேர்ந்தவராய் இருந்தாலும்..எளிதில் பார்க்க முடிந்தவர்.மாதம் ஒரு முறை மக்கள் குறைகளை அவர்களை சந்தித்து கேட்டவர். அ.தி.மு.க., கண்டிப்பாக ஒரு நல்லவரை இழக்கிறது.

ஆனால்...டோண்டு சொன்னது போல..இடஒதுக்கீடு விஷயத்தில்..இவருடன் எனக்கு உடன்பாடில்லை.

அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது..

புரட்சித் தலைவர் மறைந்ததும்..அச்செய்தியைக் கூட ஜெ யிடம் சொல்ல நாதி இல்லாத போது..எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில்..இன்றைய அந்த கட்சியின் முன்னாள் களும்..ஜெ விடம் சொல்லாத போது..என் மனைவியை அனுப்பி சொல்ல வைத்தேன்.

இதைச்சொன்னவர் யார் என இப்போது தெரிந்திருக்குமே! ஆம்..இப்படி சொன்னவர் நடராஜன் தான்...இப்போதும் தெரியவில்லையெனில் சசிகலாவின் கணவர். தெரிந்துவிட்டதா?

ஜெ..ஜா..அணிகள் இருந்தபோது..அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக காய்களை நகர்த்தி..நான் காட்டிய விவேகம், சாதுர்யம்..ஜெ வை நிமிர்த்தி மேலே கொண்டுவந்தது.ஆனால் நான் இதுவரை அதற்காக எதையும் எதிர்ப்பார்த்ததில்லை.ஜெ விற்காக உழைத்தேன்..பிரிவுபட்ட அணிகளை ஒன்று சேர்த்து...தில்லி சென்று 24 மணி நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுத்தேன்.இது வரலாற்று உண்மை.இதை அ.தி.மு.க., தலைமை இன்று மறந்துவிடலாம்..ஆனால் மனசாட்சியால்..மறக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.தமிழக அரசியல் வரலாற்றில் எனக்கு உள்ள இடத்தை எவரும் மறுக்க முடியாது.

நான் யாரிடமும் பதவியை கேட்டதில்லை...யாசிக்கவும் மாட்டேன்.

கேட்காமல் தரும் வள்ளலும் உண்டு.அந்த வள்ளல் எம்.ஜி.ஆர்., ஒருவர்தான்...ஆனால் இப்போது காலில் விழுந்து அழுது புரண்டால்தான் பதவி கிடைக்கிறது.

நான் உழைத்தேன்.ஜெ விற்காக பாடுபட்டேன்.உடைந்த கட்சிகளை ஒன்று சேர்த்தேன்.தில்லியில் பேசியதெல்லாம் நான்.இவரா அங்கு சென்று இரட்டை இலையை வாங்கினார்.

எல்லாரும் பணிந்திருக்கலாம்..ஆனால் இந்த நடராஜன் பணியமாட்டேன்.தமிழனுக்கு உரிய முதல் மரியாதை 'தன்மானம்'.

அதை நான் இழக்க மாட்டேன்....

(ஒரு பத்திரிகை பேட்டியில் நடராஜன் சசிகலா)

Monday, March 30, 2009

ஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா?

தி.மு.க.அணியில் இருந்த வைகோ போன தேர்தலில்..ஒன்றிரண்டு தொகுதிகள் அதிகமாகக் கிடைத்ததால்..கடைசி நிமிடங்களில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தார்.

ஆனால் இன்று..செஞ்சி ராமசந்திரன்,எல்.கணேசன்..ஆகியோர் விலகினர். பின் கடந்த சில நாட்களில், கண்ணப்பன்.கம்பம் ராமகிருஷ்ணன் ஆகிய எம்.எல்.ஏ.க்களும் விலகினர்.

இந்நிலையில்..பா.ம.க.வுடனும். கம்யூனிஸ்ட்களிடம்...தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் (மார்க்சிஸ்ட் 3 தொகுதி.. தொகுதி மட்டுமே நிச்சயமாகவில்லை) ம.தி.மு.க.உடன்
இழுபறி நீடிக்கிறது.

நேற்று 3 மணி நேரம் பேசியபின் வை.கோ.விற்கு 3 தொகுதிகள் கொடுப்பதாக ஜெ கூறினார்...கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறேன்..எனக்கு குறைத்து தருகிறீர்களே..என்றாராம் வைகோ.

அதற்கு ஜெ 'உங்கள் கட்சியில் எல்லோரும் போய் விட்டார்களே' என்றாராம்.

'போனவர்களால் பாதிப்பு இல்லை, தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள்' என்று வைகோ கூறியும்...ம்..ம்...முன்னேற்றம் இல்லை.

போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்புக்கு காத்திருக்கிறார்..இது வரை அழைப்பு இல்லை.

பொறுத்திருந்து பார்ப்போம்..

சரித்திரம் திரும்புகிறதா..என்று.

வாய் விட்டு சிரியுங்க...

1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?

Sunday, March 29, 2009

காங்கிரஸ் - பா.ம.க., ரகசிய கூட்டணி ?

தொகுதி பங்கீடுகள் இரு அணிகளுக்கிடையே முடிந்து விட்டன.

பா.ம.க., கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும்...தாங்கள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு தயார்..என்று கூறிவந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டு ஏற்படுவதற்கு முன்..அன்புமணி..தில்லி சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வந்தார்.தங்கபாலு..கடைசி விநாடி வரை பா.ம.க., கூட்டணியில் இருக்கிறது என்றார்.

பின்னரே..அ.தி.மு.க.,உடன் கூட்டணி என பா.ம.க., பொதுக்குழு தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப் பட்டது.7 தொகுதிகள் + 2010ல் ஒரு ராஜ்ய சபா சீட் என முடிவு செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,அரக்கோணம்,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,சிதம்பரம்(ரி),தர்மபுரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ப.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டன.

நேற்று..தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தது.காங்கிரஸ் 16 தொகுதிகள்..ஆனால் புதுச்சேரி விடுத்து..பா.ம.க., போட்டியிடும் எத்தொகுதியையும் காங்கிரஸ் வாங்கிக்கொள்ளவில்லை.அதனால் இரண்டு கட்சிகளிடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

மேலும்...கபில்சிபில் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்..தேர்தலுக்குப் பின் பா.ம.க., திரும்பி வந்துவிடும் என்று சொன்னதால் சந்தேகம் வலுக்கிறது.

லாலு.பாஸ்வான்,ராமதாஸ் ஆகியோர் காங்கிரஸ் அணியில் இல்லாமல்..தேர்தலுக்குப் பின் ஆதரிப்பார்கள் என்பது...நம் ஜனநாயகத்தை நம் அரசியல்வாதிகள் எவ்வளவு கேலிக்கூத்து ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறது.

மேலும் ஜெ விடம் தேர்தலுக்குப் பிறகு அணிகள் மாறுமா? என்று கேட்டதற்கு...தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். ஆகவே தேர்தல் முடிவிற்கு பின் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

அப்படி பா.ம.க., காங்கிரஸ் ரகசிய கூட்டணி இருக்குமேயானால்......பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.,விற்கு காங்கிரஸ் உண்மையாக வேலை செய்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

பார்த்திபனும்...வைகைப்புயல் வடிவேலுவும்...

பார்த்திபன் ஒரு கடை வைத்திருக்கிறார்...அந்த பக்கம் வடிவேலு போண்டா மணியுடன் வருகிறார்...அவரைப் பார்த்த பார்த்திபன்..

பார்த்திபன் - (தனக்குள்) அடடா..இவன் வந்துட்டானா? கொஞ்சம் லொள்ளு பண்ணுவோம் (வடிவேலுவை பார்த்து) வாங்க...வாங்க...

வடிவேலு - என்னையா? அடடா..இதுவரை யாரும் என்னை வாங்கன்னு மரியாதையா கூப்பிட்டதில்லை...இவன் இரண்டு வாட்டி வேற கூப்பிடரானே!! (உள்ளே நுழைகிறார்)

பார்த்திபன்-வாங்க..என்ன வேணும்..

வடிவேலு- (அப்போதுதான் அவரை நன்கு பார்க்கிறார்) அடடே..மவனே..இவனா..(போண்டாவை அடிக்கிறார்) ஏண்டா? முன்னமே இவன் இருக்கான்னு சொல்லக்கூடாது.. (வெளியேற நினைக்க)

பார்- டேய்..உள்ள வந்துட்டு எதையாவது வாங்காம எப்படி போவே

வடி- அண்ணே..நீங்க தானே வாங்க..வாங்க..னு சொன்னீங்க..

பார்-உன்னை சொல்லலைடா..ஏதாச்சும் வாங்க வாங்கன்னேன்

வடி-அண்ணே..நல்லா பேசறீங்க..எனக்கு ஆனா எதுவும் வாணாங்க

பார்-இன்னிக்கு நீ எதுவம் வாங்கலே..மவனே துபாய்ல நீ என்ன பண்ணினேன்னு ஊர்ல சொல்லிடுவேன்..

வடி- வேணாம்னே..(அங்கு உள்ள புத்தகங்களை பார்வையிடுகிறார் இருப்பதிலேயே..சின்னதாக ஒன்றை எடுக்கிறார்) அண்ணே இது விலை என்ன..

பார்-10 ரூபாய்...உனக்குன்னா 20 ரூபா

வடி-கொஞ்சம் சொல்லிக் கொடுங்க..அண்ணே

பார்- இங்க புத்தகம் விக்கறதுமட்டும் தான்..சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது

வடி- அது இல்லை..அண்ணே..குறைச்சுக் கொடுங்க..

பார்- லொள்..லொள்..லொள்..இந்தா 20 ரூபா கொடு

வடி- ஏன்ணே....நாய் மாதிரி குரைக்கரீங்க

பார்-நீ தானே குரைச்சு கொடுக்க சொன்னே

வடி- அய்யய்யோ..தெரியாத்தனமா..இந்த ஆள்கிட்ட மாட்டிக்கினோமே..வாடா போண்டா போலாம்

பார்- டேய்..காசை கொடுத்துட்டு போ...ஆமாம் எங்க போற..

வடி-இந்த ஊர்ல தங்க வீடு கிடைக்குமாண்ணே

பார்-தங்கவீடா..குடிசை வீடு,ஓட்டு வீடு, கல்லு வீடுதான் ஊர்ல இருக்கு..தங்கவீடெல்லாம் கிடையாது..

வடி- அண்ணே..என்னை விட்டுடு..(ஓட்டம் எடுக்கிறார்)

Saturday, March 28, 2009

எனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி

தனக்கு பதவி ஆசை எதுவும் இல்லை என்று கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எது செய்தாலும் அது நமக்கு நன்மை தருவதாகவும், கட்சியின் வெற்றிக்காகவுமாகவே இருக்கும் என்று கூறினார்.

பா.ம.க.பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியதாவது:

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொதுக்குழுக் கூட்டம் இது.நமது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எதை செய்தாலும் அது நமது நன்மைக்காகவும், கட்சியின் வெற்றிக்காகவும் தான் இருக்கும்.ராமதாஸ் எப்போதும் வெற்றிக்கூட்டணியில்தான் இருப்பார்.இது இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரியும்.

கடந்த 5 ஆண்டுகாலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளது.கடந்த 40 ஆண்டுகளில் எந்த சுகாதாரத்துறை அமைச்சரும் செய்யாததை கடந்த 4 ஆண்டுகளில் நான் செய்துக்காட்டியதாக பிரதமரே பாராட்டியுள்ளார்.

கிராமப்புறங்களில் தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.உலக நாடுகளும் இதனை பாராட்டியுள்ளன.

நான் எப்போதும் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை.30 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச்சேவைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் எந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்துக்கோ சட்டமன்றத்துக்கோ செல்லமாட்டேன் என்று சபதம் எடுத்து அதன்படி நடந்து வருகிறார்.

நான் அவரது வாரிசு, கடந்த முறை எனக்கு பதவி அளித்தபோது கூட வேண்டாம் என்று சொன்னேன்.ஆனால் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் வற்புறுத்தலால்தான் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.அதுவும், கட்சி நிறுவனர் ராமதாஸ் என்னிடம் கூறுகையில், "உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன்.அதை நன்றாக பயன்படுத்துகிறாயா என்று ஒரு வருடம் பார்ப்பேன். எனக்கு திருப்தியளிக்காவிட்டால் வீட்டுக்கு திரும்பி வந்துவிட வேண்டும்" என்று நிபந்தனை விதித்து தான் எனக்கு அமைச்சர் பதவி தந்தார்.

அவரது கட்டளையின்படி சிறப்பாக பணிபுரிந்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளேன். சுகாதார அமைச்சராக நான் சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு தந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையிலும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)

Friday, March 27, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -5

1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்


உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம்
பொம்மைக்கல்யாணம்
அன்னையின் ஆணை
சாரங்கதாரா
சபாஷ் மீனா
காத்தவராயன்
பொம்மல பெள்ளி (தெலுங்கு)

உத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி

பதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி

சம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.

பொம்மைக்கல்யாணம்..ஜமுனாவுடன் நடித்தார்...படம்..தோல்வி

அன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம்.

சாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.

சபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்

காத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்

இதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.

அடுத்த பதிவு 1959 படங்கள்.

ராமதாஸ் தன்மானம் இல்லாதவரா?

பா.ம.க., அ.தி.மு.க., வுடன் கூட்டணி என அறிவித்தப் பின்..கலைஞர் பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..

8-7-01 அன்று அ.தி.மு.க., அணியில் இருந்த ராமதாஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்...அதில்...தேர்தலுக்கு முன் என் ஆதரவு வேண்டிய அம்மா..தலைமைச்செயலகத்தில்..என்னை ஒரு மணி நேரம் காக்கவைத்தபின் அழைத்தார்.முதல்வர் என்ற மமதையில் ..நாற்காலியில் அமர்ந்தபடியே..என்னை சந்தித்தார்.என் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

கருணாநிதியுடன் நான் பேச நினைக்கும் போதெல்லாம்..விஷயம் கேள்விப்பட்டதும் கௌரவம் பார்க்காமல் அவரே லைனில் வந்து பேசுவார்.எனது சௌகரியத்தைக் கேட்டு நேரம் ஒதுக்குவார்.அந்த நாகரிகம் தெரியாத மனிஷியோடு இனியும் அரசியல் பண்ன எந்த தன்மான தலைவனும் முன்வரமாட்டார்.

இப்போது கலைஞர்...

நாகரிகம் தெரியாத மனிஷியுடன் அரசியல் பண்ண தன்மானம் உள்ளவன் முன்வரமாட்டான்..என்று பேட்டி கொடுத்த ராமதாஸ் இப்போது எங்கே இருக்கிறார். தன் மகனின் அமைச்சர் பதவி போய் விடக்கூடாது என்பதற்காக , காங்கிரஸோடு கூட்டணி என கடைசி வரை ஏமாற்றி வந்தது யார்?

இப்போது நாம்..

இதே ராமதாஸ் முன்னர் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வந்தபோது...'கலைஞரிடம் போனால் கோவணத்தைக் கூட கழட்டிக்கொண்டு விட்டு விடுவார் என்றாரே..அதைச் சொல்ல கலைஞர் ஏன் மறந்தார்?

கலைஞர் உள்பட...அரசியல்வாதிகள் கூட்டணிக்கு தகுந்தவாறு பேசக்கூடியவர்கள்தானே...

ஏமாறுபவன்...வழக்கம்போல..தமிழன்...அவ்வளவுதான்.

Thursday, March 26, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(27-3-09)

1.மெதுவாக நடப்பவனை ஆமை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..நத்தை வேகத்தில் நடக்கிறான் என்கிறோம்..உண்மையில் நத்தையின் வேகம் மணிக்கு 5.4 மீட்டர் தூரம். ஆமையின் வேகம் 7.2
மீட்டர் தூரம்..ஆமையுடன் போட்டிப் போட்ட முயலின் வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர்.

2.பசு, பெடை, மந்தி ...இந்த சொற்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது...அது என்ன..சரியான விடை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

3.111/
(1+1+1) = 37
222 /(2+2+2) = 37
333/ (3+3+3) = 37
444/ (4+4+4) = 37
555/ (5+5+5) = 37
666/ (6+6+6) =37
777 /(7+7+7) = 37
888/ (8+8+8) = 37
999 /(9+9+9) = 37

4.வாழ்க்கையில் முன்னேற நம்பிக்கையும் வைராக்கியமும் வேண்டும்.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய 'ஹில்லாரி'...வெற்றி அடையும் முன் பலதடவை சென்று எவரெஸ்டில் ஏறப்பார்த்தார்.ஒவ்வொருமுறையும் தோல்விதான்.பின் ஒரு நாள் அந்த மலையைப்பார்த்து சொன்னார் 'நீ பலமுறை என்னை தோல்வியடையச் செய்தாய்.ஆனால் நான் திரும்பி வருவேன்.நிச்சயம் உன்னை நான் தோல்வியடையச் செய்வேன்.ஏனெனில் இஹற்கு மேல் நீ வளர மாட்டாய்..நான் பல விதங்களில் வளர்ந்து மீண்டும் வருவேன்...என்றாராம்.

5. ஒரு சிறு தீப்பொறி பெரும் காட்டை அழித்து விடும்
ஒரு பெரிய மரத்தின் நிழலில் ஒரு சிறிய செடி வளர முடியாது
பெரிய பாறைன்னு நினைச்சா சிற்பி சிலை செதுக்க முடியாது.

6.ஒரு கவிதை..

பாட்டிக்கு மண்குடம்
அம்மாவுக்கு பித்தளைப் பானை
எனக்கோ பிளாஸ்டிக் குடம்
மகளுக்கு வாய்த்திருக்கிறது
வாட்டர் பாக்கெட்

- அ.வெண்ணிலா

7.ஒரு ஜோக்...

அரசியல்வாதி பையன்- அப்பா என்னை 8 ஆவதில் போட்டால்தான் பள்ளிக்குப் போவேன்
அரசியல்வாதி- நீ 7 ஆவது தானே படிக்கிற
அ.பை- அதனால் என்ன...நீ கூடத்தான்..போனதரம் உன் கூட்டணில 6 சீட் வாங்கினா..இப்போ 7க்கு பதிலா 8 கேட்கல..

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,இணைகிறது

பா.ம.க., வின் பொதுக்குழு கூடி..அ.தி.மு.க.உடன் கூட்டணியா..பா.ம.க.உடன் கூட்டணியா..என விவாதித்து..தி.மு.க.கூட்டணியுடன் இணைவது என்று முடிவெடுத்தனர்.

அ.தி.மு.க., இலங்கை தமிழர் நலத்திற்கு எதிரான கட்சி என்றும்...சாமான்ய மக்கள் பற்றி கவலைப் படாத கட்சி என்றும்..ராமதாஸ் தெரிவித்தார்.

என்ன..முரண்பாடான செய்தியாய் இருக்கிறது என்கிறீர்களா?

2011 சட்டசபை தேர்தலில்...ராமதாஸின் நடவடிக்கைதான் மேலே குறிப்பட்டுள்ளது.

சரி..இன்றைய நிலை என்ன..

இன்று..சென்னை வானகரத்தில்..வழக்கமாக அ.தி.மு.க., பொதுக்குழு கூடும் இடத்தில் பா.ம.க. பொதுக்குழு கூடியது.அதில்..நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 2453 வாக்குகள் அ.தி.ம.க., கூட்டணி வேண்டுமென்றும்..117 வாக்குகள் தி.மு.க., கூட்டணி வேண்டுமென்றும் 10 பேர் நடுனிலைமை வகித்ததாகவும் தெரிகிறது.

ஆகவே..நாடாளுமன்றதேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க.உடன் கூட்டணி இறுதியாகி(கோவி.உறுதி என்ற வார்த்தை தவிர்த்துள்ளேன்)விட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் பா.ம.க., மத்திய அமைச்சர்கள் பதவி விலகுவார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில்... பல மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து...மாநில கட்சிகள் விலகுவது குறித்து சோனியா..முக்கிய மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்ததாக தெரிகிறது.

Wednesday, March 25, 2009

கூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் தன் பிரசாரத்தை விஜய்காந்த் தொடங்கினார்.

அப்போது அவர் ..மீண்டும் கூறினார்...

மக்களுடனும்...கடவுளுடனும் தான் தான் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதாக. மூன்று சீட்டிற்கும் நான்கு சீட்டிற்கும் ஆசைப்பட்டு தான் கட்சி நடத்தவில்லை என்றும் ..அப்படி ஆசைப்பட்டிருந்தால்..பேரத்திற்கு பணிந்திருப்பேன் என்றும் கூறினார்.

செத்து மடியும் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும்..எடுக்கப்படவில்லை என்றும்..பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் பயன் எதையும் தரவில்லை என்றும் கூறினார்.

அவரது கட்சிக்கான..முதல் வேட்பாளர் பட்டியலை 9 தொகுதிகளுக்கு இன்று வெளியிட்டார்.

வாலி என்னும் வாலிப கவிஞன்

திரையுலக முடிசூடா கவிஞனாக கண்ணதாசன் இருந்த போது உள்ளே நுழைந்தவர் வாலி.

குதப்ப கொஞ்சம் வெற்றிலை, சீவல் ..எழுத பேப்பர்..பேனா கிடைத்தால் போதும்...சுற்றுப்புறம் பற்றி கவலையில்லை.. கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன் என்பார் இவர்.ஒவியன் ஆகணும்னு சின்ன வயசிலே ஆசை..அப்போ விகடன்ல மாலின்னு ஒரு ஓவியர் இருந்தார்..அவர் மாதிரி புகழ் பெறணும்னு வாலி ன்னு என் நண்பன் எனக்கு புனைப்பெயர் வைச்சுட்டான்..என்கிறார்..ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட வாலி.

திருச்சி வானொலியில் வேலை செய்துக்கொண்டிருந்த இவரை..டி.எம்.எஸ்., சென்னைக்கு வந்துடு என்றாராம்.

எம்.ஜி.ஆருக்கு..ஓடும் மேகங்களே.வும்...நான் ஆணையிட்டால் எழுதும் போதே...மச்சானைப் பார்த்தீங்களா எழுதினேன்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு..சிக்கு புக்கு ரயிலே..எழுதினேன்..யுவனுக்கு தத்தை தத்தை
எழுதினேன்.என்னை கிராஸ் பண்ணாமல் எந்த புயலும்...தென்றலும் செல்லமுடியாது என்கிறார்.

என் பாட்டை தத்தா ரசித்தார்,அப்பா ரசித்தார்,மகன் ரசித்தான்..இப்போது பே
ரனும் ரசிக்கிறான் என்கிறார் 78 வயது இளைஞரான இவர்.

விருதுகளைப் பற்றிக் கூறுகையில்...எழுதுகிற பாட்டுக்கு ரெமெனரேஷன் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்,,ரெககனைசேஷன் எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார்.

அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.

இவர் ஆத்திகமா..நாத்திகமா என்றால்...'நான் நாத்திகன்னு எந்த இடத்திலும் வேஷம் போடலை.திராவிட இயக்கக் கொள்கைகள் பிடிக்கும்...கடவுள் இல்லை ங்கிற ஒரு கருத்தில் மட்டுமே பெரியாரிடத்தில் எனக்கு வேறுபாடு' என்கிறார் பளீச்சென்று.

அரசியல் ஈடுபாடு பற்றி கூறுகையில்..கண்ணதாசன்தான் இதிலும் எனக்கு குரு என்கிறார்...

அரசியலுக்குப் போனதால் என்னவெல்லாம் இழந்தேன் என்று அவர் எனக்கு பலவற்றைக் கூறியுள்ளார்.எனக்கு மூன்று அறிவுரை சொன்னார்..சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.

வாலி என்னும் இவ் வாலிப கவிஞரை கொள்ளுபேரனும் ரசிக்கட்டும்.

(வாலியின் பத்திரிகை பேட்டிகளின் தொகுப்பு)

கம்பனும்...தமிழும்...

ஒரு முறை கம்பனால் அவமானம் அடைந்த சோழ மன்னன்..பதிலுக்கு அவரை அவமானப்படுத்த காத்திருந்தார்.தன் எண்ணத்தை பொன்னி என்ற விலைமகளிடம் சொன்னார்.உடன் அவள் 'கம்பர் கையால்..அவர் எனக்கு அடிமை என எழுதி வாங்கி விடுகிறேன்' என்றாள்.

பின் தன் வேலைக்காரியை கம்பனிடம் அனுப்பி...உடன் அழைத்து வரும்படிக் கூறினாள்.கம்பரும்...என்னவோ..ஏதோ..என அங்கு சென்றாள்.

அவரை அன்புடன் வரவேற்றவள்..அவரை கட்டித் தழுவினாள். கம்பர் 'பெண்ணே..நீ அரசர்க்குரியவவள்..என்னை அணைப்பது குற்றம்" என்றார்.ஆனால் பொன்னி அதை செவிசாய்க்கவில்லை. 'இதைத் தவிர வேறு நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்' என்றார்.

அவ்வாறாயின்..தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை..என எழுதித் தாருங்கள்..என்றாள்.

கம்பனும்..அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வீடு சென்றார்.

பொன்னி அந்த ஓலையை மன்னரிடம்..தர..மன்னன் மகிழ்ந்தான்.

மறுநாள் கம்பனிடம் அவ்வோலையைக் காட்டி..இது நீர் எழுதியது தானே..என்றான் மன்னன்.

ஆமாம் என்றார் கம்பர்.

உடன் மன்னன் ஒரு பணியாளிடம் அதைக்கொடுத்து உரக்க படிக்கச் சொன்னான். பணியாளும் 'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை' என உரக்கப் படித்தான்.இதைப்பார்த்து கம்பன் அவமானத்தால் கூனிக் குறுகுவார் என எதிர்ப்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான்.

'கம்பரே..நீர் தாசி பொன்னிக்கு அடிமையா?' என்றான் மன்னன்.

ஆமாம்..அதில் என்ன ஐயம்...-கம்பர்.

"பார் புகழும் புலவன் நீர்..கேவலம்..ஒரு தாசிக்கு அடிமை என எழுதிக்கொடுத்துள்ளீர்களே' என ஏளனமாக மன்னன் வினவ..கம்பனோ...

'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்...அதற்காக பெருமை அல்லவா பட வேண்டும்...அதன் உண்மைப் பொருள் அறிவீரா?' என்றார்.

மன்னா! தா-தாயாகிய , சி- அழகிய. பொன்னிக்கு-திருமகளுக்கு ...அதாவது தாயாகிய அழகிய திருமகளுக்குக் கம்பனாகிய நான் அடிமை..என்று விளக்கம் தந்தார்.

கம்பனை..அவமானப் படுத்த நினைத்த மன்னன் தலை கவிழ்ந்தான்.

Tuesday, March 24, 2009

அதி புத்திசாலி அண்ணாசாமி கூட்டணியில் இணைகிறார்...

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததுமே..நமது அண்ணாசாமி...இம்முறை எப்படியும் நாடாளுமன்றத்தில் நுழைந்து விட வேண்டும் என தீர்மானித்தார்.அதற்கு..என்ன செய்வது என யோசித்தவர்
உடன்..அண்ணாசாமி என்ற திராவிட முன்னேற்ற கழகம்(அ.எ.தி.மு.க.) என்று கட்சிக்கு பெயரிட்டு..தன் கட்சி கூட்டணிக்கு தயார் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.உடன் மற்ற கட்சிகளில் நடந்த விவரங்கள்.

கலைஞர்...தன் கட்சியின் மூத்த தலைவர்களை அறிவாலயத்திற்கு கூப்பிட்டு அவசர ஆலோசனை நடத்தினார்.ஆற்காட்டார்..அண்ணாசாமியை கூட்டணியில் இழுத்துப் போட்டால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அவரது ஜாதி ஓட்டுகள் நமக்கு விழும் என்றும்..சில தொகுதிகளில் அது நமக்கு வெற்றிவாய்ப்பை அளிக்கும் என்றும் கூற..யார் எது கூறினாலும் ஆமோதிக்கும் அன்பழகனும் ஆமோதித்தார்.அண்ணாசாமிக்கு வேண்டுமானால்..ஒரு தொகுதி..குறிப்பாக..விழுப்புரம் கொடுத்து விடலாம்.தே.தி.மு.க.மற்றும் பா.ம.க.,விற்கு போட்டியாய் இருக்கும்.அந்த தொகுதி வெற்றிப்பற்றி நமக்கு கவலையில்லை..என பொன்முடி கூற,..விஷயம் அண்ணாசாமிக்கு தெரிவிக்கப்பட்டது.அண்ணாசாமிக்கு, மனைவியும்,3 மகனும், 2 மகளும் இருப்பதால் ,அவர் 7..தொகுதிகள் கேட்டார்.

இந்நிலையில்..அவரை அ.தி.மு.க., தொடர்பு கொண்டது...2 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறியது..ஆனால் அண்ணாசாமி..7 தொகுதியில் ஸ்ட்ராங்காய் இருந்ததால்..பேச்சு வார்த்தை தொடர்கிறது.தனது பிடிவாதத்தை சற்று தளர்த்திக் கொண்ட அண்ணாசாமி 6 தொகுதிகளும்...ராஜ்ய சபா 1 சீட்டிற்கும் ஒப்புக்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே...வாரம் இருமுறை வரும் தமிழ் புலனாய்வு பத்திரிகை ஒன்று...அண்ணாசாமி.அ.தி.முக.,கூட்டணியில் இணைந்து விட்டதாக தெரிவித்தது.மற்றொரு பத்திரிகை..தி.மு.க., கூட்டணியில் அண்ணாசாமி இணைவது உறுதி என எழுதியது.

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவோ..அண்ணாசாமி..தங்கள் கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார்.

அண்ணாசாமிக்கோ...வழக்கம் போல சந்தேகம் ஏற்பட்டுவிட்டது..நிஜமாகவே நாம ஏதாவது கூட்டணியில் இணைந்து விட்டோமோ என்று.

உறுமீன் வர காத்திருந்த தனித்து விடப்பட்ட பா.ஜ.க., சரத்குமாருக்கும்..ராதிகாவிற்கும் ஒதுக்கியது போக மீதம் உள்ள புதுச்சேரியையும் சேர்த்து 38 தொகுதியையும் அண்ணாசாமிக்கு கொடுப்பதாகக் கூறி அவருக்கு அழைப்பு விடுத்தது.

அண்ணாசாமியும்..தன் மனைவி..மக்கள் உள்ள பொதுக்குழுவைக் கூட்டி..நாளை முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

இந்திய அரசியல் தலைவர்கள் எல்லாம்..ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

Monday, March 23, 2009

அ.தி.மு.க.,வும்...நடிகர்களும்..

கலைஞர்கள் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்த பின்னரே அரசியலில் அதிகம் ஈடுபட ஆரம்பித்தார்கள்.

என்.எஸ்,கே., எம்.ஆர்.ராதா ஆகியோர் பெரியாரின் கொள்கைகளால் கவரப்பட்டவர்கள். பெரியாருக்குப் பின்...எம்.ஆர்.ராதா தி.க.வின் தலைவராக ஆகலாம் என்ற நிலை இருந்தும்...ராதாவால் கை காட்டப்பட்டவர் வீரமணி.

தி.மு.க.வில்...அண்ணா,கலைஞர்,சிவாஜி,கே.ஆர்.ராமசாமி,எஸ்.எஸ்.ஆர்.,ஆகியோர் இருந்தனர்.பின்னர் சிவாஜி விலகினார்...காங்கிரஸ் ஆதரவாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., உள்ளே வந்தார்.இன்றும் தி.மு.க.வில் திரை உலக சம்பந்தப்பட்டவர்கள் நிறைய உண்டு.ராம.நாராயணன்,நெப்போலியன்,சந்திர சேகர்,தியாகு,குமரி முத்து.(சமீபத்திய ராதாரவி)ஆகியோரை சொல்லலாம். இவர்களுக்கு கழகத்தில்
உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.,வில் எம்.ஜி.ஆர்., இருந்தவரை நடிகர்களுக்கு பதவியும் குடுத்து அழகு பார்த்தார். திருச்சி சௌந்தரராஜன்.ஐசரி வேலன் ஆகியோரை அமைச்சராகவே ஆக்கினார்.

ஆனால்..இன்று அ.தி.மு.க.,வில்..தேவைப்படும்போது நடிகர்களை பயன்படுத்திக்கொண்டு..பின் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.

அன்று ராமராஜன், நேற்று ராதா ரவி..நாளை எஸ்.வி.சேகர்...(சந்திரன் என்றோ தெரியாது)

இதற்கு காரணம்...நடிகர்கள்...என்று இல்லை...பொதுவாக கலைஞர்கள்..விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களது தன்மானம்..கேள்விக்குறி ஆகுமேயாயின் ..வெளியே தள்ளப்படுகிறார்கள்..அல்லது வெளியே வருகிறார்கள்.

தைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா?

அவனவன் எந்த கூட்டணியிலே சேர்ந்தா..சில தொகுதிகள் கிடைக்கும்...நம்ம கட்சியும் நாடாளுமன்றத்துக்கு போகும்னு நினைச்சுக்கிட்டிருக்கிற தமிழகத்தில் ..தைரியம் உள்ள கட்சிகளும் உண்டு.

இக்கட்சிகளுக்கு...தங்கள் பலம் தெரியுமா? என்று தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

கார்த்திக்..என்ற ஒரு நடிகர் இருந்தாரே..ஞாபகம் இருக்கிறதா...அவர் 3 தொகுதிகளில் போட்டி இடப் போகிறாராம்.

சரத்குமார் கட்சி..சமீபத்திய திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலில்..படு தோல்வி அடைந்தது.ஆனால்..அக்கட்சி..பா.ஜ.க.வுடன் கூட்டாம்..(பாவம் பா.ஜ.க.)

தே,மு.தி.க., இவர் கட்சி தனித்தே 40 தொகுதிகளிலும் போட்டியாம்..அதற்கு..ஒருநாள்..அந்த தலைவர் பேசிய கூட்டத்தில்..(ஆயிரம் பேர் வந்திருப்பார்களா? அந்த கூட்டத்திற்கு) மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்களாம்.

பீகார்..உ.பி., போன்ற மாநிலங்களில் அவமானப்பட்டாலும்...காங்கிரஸ் என்னும் தேசிய கட்சிக்கு..தமிழகத்தில்..தி.மு.க., கூட்டணியில்...கணிசமான அளவு தொகுதிகள் கிடைக்கலாம்.ஏனெனில்...இங்குள்ள பெரிய திராவிடக் கட்சிகளில்..ஏதேனும் ஒன்றுடன் சேர்ந்தால்தான்..அத் திராவிட கட்சிக்கும் சரி, காங்கிரஸிற்கும் சரி வெற்றி பெறலாம்.(லாலு போலோ பாஸ்வான் போலோ..தைரியமானவர்கள் இல்லை..இங்குள்ள திராவிட கட்சியினர்)

தமிழகத்தில் ஜெ தான் இரண்டாவது அணி..இரண்டு கம்யூனிஸ்ட் களுடனும்..வைகோ என்ற தனி நபர் கட்சியுடன் கூட்டு.

பா.ஜ.க., இங்கே மூன்றாவது அணி.பாவம்...இக்கட்சி இங்கு ஒரு தீண்டத் தகா கட்சி போலவே இருக்கிறது.

டெபாசிட் பறிபோகும் நிலையில்...தே.மு.தி.க., பா.ஜ.க.,..இதை இக் கட்சியினர் உணர்வார்களா தெரியாது.

திருமாவளவனை பொறுத்தவரை...தி.மு.க., கூட்டணியில்..ஒன்றோ, இரண்டோ தொகுதி வாங்கி விடுவார்.

பா.ம.க., ???? இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.

நாளை பார்ப்போம்.

Sunday, March 22, 2009

விஜய்காந்த் செய்வது சரியா....

விஜய்காந்த்..மக்களுடன்தான் கூட்டணி..என்று சொன்னதன் மூலம்...அவர்..தி.மு.க.,கூட்டணியிலோ..அ.தி.மு.க., கூட்டணியிலோ சேரப்போவதில்லை என்பதைக் கூறிவிட்டார்.மேலும்..நான் சொல்லும் நபருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறுகிறார்.

அப்படியெனில்...வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடாது என பொருள் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட முடிவை அவர் எடுத்ததால்..யாருக்குப் பயன்?

கண்டிப்பாக..தி.மு.க.,கூட்டணிக்குத்தான்.ஏனெனில்..சாதாரணமாக விஜய்காந்த்திற்கு விழும் வாக்குகள்..அ.தி.மு.க.விற்கு விழவேண்டிய வாக்குகள்...என அரசியல் வட்டத்தில் கூறுவதுண்டு.மேலும்..பா.ம.க.விற்கும்..விஜய்காந்திற்கும் என்றும் ஒத்துப்போகாது..ஆகவே விஜய்காந்த் வாங்கும் வாக்குகளில் கணிசமானவை பா.ம.க.வாக்குகளாகவும் இருக்கக்கூடும்.

இநிலையில் பா.ம.க.எடுக்கும் முடிவு முக்கியமானது.இச் சந்தர்ப்பத்தில்..பா.ம.க., தி.மு.க.கூட்டணியில் இருந்தால் தான்..சில தொகுதிகளில் ஆவது வெற்றி பெறலாம். இல்லையேல் அதன் கணக்கு பூஜ்யமாகத்தான் இருக்கும்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு..10000 முதல் 15000 வாக்குகள் வரை விஜய்காந்த் வாங்குவார் எனில்...ஒரு பாராளுமன்ற தொகுதியில் அவரால் கிட்டத்தட்ட 90000 வாக்குகள் வரை வாங்கமுடியும்.இது பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.முக்கியமாக பா.ம.க., போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளர்களை இது பாதிக்கும்.

விஜய்காந்தின்..இந்த முடிவு..அவருக்கும் பயன் தராது..அவர் சுட்டிக்காட்டி வாக்களிக்க சொல்லப் போகும் வேட்பாளருக்கும் பயன் தராது. அவரது கட்சிக்கு இருக்கும் உண்மையான ஆதரவை இது தெரிவிக்கும்.

இது ஒரு மாநிலக் கட்சிக்கு நல்லதல்ல என்றே தோன்றுகிறது. சட்டசபை தேர்தல் எனில் இம்முடிவை வரவேற்கலாம்.

இது நாடாளுமன்ற தேர்தல்...விஜய்காந்த் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

வாய் விட்டு சிரியுங்க

என்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்
அவ்வளவு பக்தியா?
அதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்
என்ன சொல்றீங்க
இப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே

3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க
ஏன்..அபாண்டமா பொய் சொல்றீங்க?..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.

4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா? ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா?
இல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.

5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா? எதைப்பற்றிப் பேசினே?
சுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு

6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா?
உண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்
உண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே

Saturday, March 21, 2009

மின்மினுக்கும் பட்டாம்பூச்சியும்...கலைமாமணியும்...


மண்ணில் பறக்கும் வானவில்

வானவில்லிலோ எழே நிறங்கள்.

ஆனால் கணக்கற்ற நிறங்களில் பட்டாம்பூச்சிகள்.

பட்டாம்பூச்சி என்றாலே..நினைவில் வருபவர் ரஜினி..மீனாவிடம்..அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க..அவர் பட்டாம்பூச்சியை கை காட்ட...அதைப் பிடிக்க அதன் பின்னாலேயே ஓடி..வேஷ்டி நழுவியதும் தெரியாமல்...வேடிக்கைப் பார்ப்பவர்களையும் சட்டை செய்யாது..சகதியில் விழுந்து..வெற்றிகரமாக அதைப் பிடிப்பது.

சிறு வயதில்..நானும் பட்டாம்பூச்சியைப் பிடித்து அதை இம்சை படுத்தியதுண்டு.அதன் இரு சிறகுகளையும் சேர்த்துப் பிடித்து வேடிக்கை பார்த்ததுண்டு.பின் ஒரு பக்க சிறகை விட்டுவிட்டு..அது மற்ற ஒன்றால் பட..பட..என அடிப்பதை ரசித்ததுண்டு.இப்போது நினைக்கிறேன்...நான் எப்படிப்பட்ட sadist என்று.

அந்த பட்டாம்பூச்சியை விட்டதும்..கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் நிறத்தை..முகர்ந்து பார்த்து..மகரந்த மணத்தை அனுபவித்ததுண்டு.

பெண்கள் கல்லூரியில்...கல்லூரி விட்டு...பல வண்ண ஆடைகளில்...ஆடியும்..பாடியும் வெளியே வரும்...மாணவிகள்..எனக்கு பட்டாம்பூச்சியை நினைவு படுத்துவர்..Play School பக்கம் போகும் போது..ஆடி..ஓடி..விளையாடும்..மழலைகள் எனக்கு பட்டாம்பூச்சியை நினைவுபடுத்தியதுண்டு.

பட்டாம்பூச்சி விருது எனக்கு அளித்த கோவி அவர்களுக்கு நன்றி.அவர் அதற்கு கூறிய காரணங்களில் ஒன்று..'அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்'

விவேக்கிற்கு பத்மஸ்ரீ யும்...ஐஷ்வர்யாவிற்கு கலைமாமணியும்..எனக்கு பட்டாம்பூச்சி விருது கிடைத்ததுபோலத்தான் கிடைத்திருக்கும் எனத் தோன்றுகிறது.

http://govikannan.blogspot.com/2009/03/blog-post_19.html">

Friday, March 20, 2009

Why INDIA is in trouble.....

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்

Population: 110 crore



9 crore retired


37 crore in state Govt;

20 crore in central Govt.

(Both categories don't work)



1 crore IT professional (don't work for India )



25 crore in school



1 crore are under 5 years





15 crore unemployed





1.2 crore u can find anytime in hospitals



Statistics says u find 79,99,998 people anytime in jail


The Balance two are U & Me.

U are busy " checking Mails .. "..!!
<



HOW CAN I HANDLE INDIA alone?


Let me 2 have a break ;-)

சீதாவாக மாறிய போயஸ் சகோதரி..

ராவணனை வதம் செய்துவிட்டு... சீதையுடன்..ராமேஸ்வரம் வந்தார் ராமர்.

ராவணன் உள்ளிட்டோரை கொன்றதால்...ஏற்பட்ட தோஷத்தைப் போக்க..கடல் மணலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து..பரிகார சங்கல்பம் செய்தாராம் சீதை.பின் ராமரையும் அந்த லிங்கத்தை வழிபடச் சொன்னாராம்.அதன் பின்னரே ராமர்..அயோத்தி மன்னாராக பதவி ஏற்றார்.

தன் எதிரிகளை ருத்ர குணம் கொண்டு ஒடுக்கிய ராமரை பதவியில் அமரச் செய்த தலமே ராமேஸ்வரமாகும்.

நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில்...எதிர்க் கட்சிகள் மண்ணைக் கவ்வவும்..அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெல்லவும்..மகாருத்ர யாகம்..பிரம்ம
முகூர்த்தத்தில் (அதிகாலை 4.30 க்கு)ராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டதாம்..ஜெ யின் நேரடி உத்தரவின் பெயரில். இந்த யாகத்தில் உடன்பிறவா சகோதரி கலந்துக் கொண்டாராம்.

இந்த யாகத்தில் அம்மாவால்..தெர்ந்தெடுக்கப்படப்போகும் வேட்பாளர்களின் ஜாதகங்களும் வைக்கப்பட்டதாம்...அதற்கும் விசேஷ பூஜைகள் நடந்ததாம்.

மேலும்...தனுஷ்கோடி..அரிச்சல் முனையில் சங்கல்பம்..பூஜைகள் நடந்த போது..சசிகலாவே தன் கைப்பட கடற்கரை மணலில் சிவலிங்க உருவத்தை செய்து..(சீதா) அந்த லிங்கத்திற்கு சிவாச்சார்யாக்களைக் கொண்டு பூஜைகள் செய்தாராம்.

தேர்தல் முடிந்து..ரிசல்ட் வரும்போது...யாகத்தின் சக்தியைப் பார்ப்போம்.

Thursday, March 19, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(20-3-09)

1962ல் இந்திய ஜனாதிபதியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.சிறந்த ஆற்றலும்..நிர்வாகத்திறமையும் உடைய அவர் பதவி ஏற்றதுமே தன் சம்பளத்தை கால் பங்காகக் குறைத்து புரட்சியை செய்தார்.பத்தாயிரம் சம்பளத்திற்கு பதில் 2500 தான் வாங்கினார்.வரிகள் போக அவருக்குக் கிடைத்த சம்பளம் 1900 தான்.

2.ஒரு சிறு பதிவர் புதிர்..
நர்ஸிம்மிற்கு கால் பந்து ஆடத்தெரியாது...ஹாக்கி ஆடத்தெரியும்
முரளிக்கண்ணனுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியாது..கால் பந்து ஆடத் தெரியும்
பரிசலுக்கு கிரிக்கெட் ஆடத்தெரியும்..ஹாக்கி ஆடத் தெரியாது
வால்பையனுக்கு ஹாக்கியும், கிரிக்கெட்டும் ஆடத்தெரியும்

வாலுடன் இரண்டு ஆட்டமாவது ஆடக் கூடியவர் யார்.

3.மூக்கறுந்த மூளி,அலங்காரி,நாக்கறுந்து தொங்கும் நரி,நாலாந்திரப் பெண்,மகுடம் பறி கொடுத்த மாயராணி,செப்படி வித்தை மாமி,மலம்,வேஷக்காரி,தெருப்பொறுக்கி,நாய்க் கொழுப்பு,பூதகி,நாய்,திமிங்கலம்..இவையெல்லாம் என்ன..என நீங்கள் சரியாக யூகித்தால்..நீங்கள் இடும்10 பதிவிற்கு பின்னூட்டம் தவறாது இடுவேன்.

4.உலகிலேயே மிகப் பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லம்தான் அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது.இந்தியாவில் பெரிய வீடு...ஜனாதிபதியுடையது.இதில் 343 அறைகள் உண்டு.

5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.

6.கடவுள்
நல்லவர்
நல்லவர்
நமது தேகத்தில்
எந்த உறுப்பிலும்
உபயம் என்று
தன் பெயரை
அவர் எழுதவில்லை
-நெல்லை கண்ணன்

7.கொசுறு..
ஒரு ஜோக்..

தலைவர் வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
வேட்பு மனு என்று ..தான் வாங்கிய முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்

வாய் விட்டு சிரியுங்க..தங்கமணி ஸ்பெஷல்...

1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..
அவ பேர் என்ன
'சுலோ 'சனா

2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..

3.சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..

4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே

5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா?
அம்மா- ஆமாம்..அதுக்கென்ன இப்ப
மகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...

6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..
ஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.

Wednesday, March 18, 2009

விஜய்யும்...ரஜினியும்...கோபமும்..

விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோபமாக பேசியது...நமது பதிவர்கள் பதிவுமேல் பதிவு போட்டு..விஜய்யை திட்டியும்...பாராட்டியும் தங்கள் பதிவை சூடாக்கிவிட்டார்கள்.

விஜய்யோ..ரஜினியோ...அவர்கள் சூபர் ஸ்டாராக இருந்தாலும்...மனிதர்கள்..அவர்கள் வாழ்விலும்...கோப,தாபங்கள்...இன்ப..துன்பங்கள் உண்டு என்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம்.இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அன்று ரஜினியும்...கன்னட மக்களை திட்டப்போக.பின் நடந்தவற்றை நாம் அறிவோம்.

சேர்ந்தாற்போல்...தோல்வி படங்களாக தரும் விஜய்..எப்பேர்ப்பட்ட மன உளைச்சலில் இருப்பார்..என சற்று எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்யாத ஒரு தவற்றிற்காக..உங்களை மேலதிகாரி கோபித்தால்..வெளியே வந்ததும்...கிடைப்பவர்களை நீங்கள் காய்ச்சி எடுக்க மாட்டீர்களா?..அப்படி விஜய் என்ன சொல்லி விட்டார்...பேசும்பொது..கத்தியதற்கு..'டேய்..கத்தாதே..சைலன்ஸ்..பேசறேன் இல்ல" இதுதான் அவர் சொன்னது.அதுவும் யாரைச் சொன்னார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

இந்த சமயத்தில்..வேறொன்றும் கூற ஆசைப்படுகிறேன்..

ஊடகங்கள் சற்று பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்ள வேண்டும்..ரஜினி..எந்திரனுக்கு 25 கோடி வாங்குகிறார்..கமலின் ரேட் 10 கோடி..என்றெல்லாம் மோட்டுவலையைப் பார்த்தபடி எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

அவர்கள் வாங்கும் சம்பளம் ஓரளவு யூகம்தான்..தயாரிப்பாளர்கள் கொடுக்கத் தயார் எனில்..இவர்கள் வாங்காமல் என்ன செய்வார்கள்.இது படத் தயாரிப்பாளர்கள் தவறு.எல்லாம் ஒன்றாய் சேர்ந்து...எங்களால் இதற்குமேல் தரமுடியாது என்றால்..இவர்களும் கிடைத்தது சரி என நடிப்பர்.ஆகவே நடிகர்களை குறை சொல்லாதீர்கள்.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறார்கள்..அவ்வளவுதான்.

கடைசியாக...விஜய் நிகழ்ச்சியில்...விஜய்..எல்லோரிடமும்..நண்பனாய் நடந்து கொள்பவர்..அவர் கோபத்தில் கூறியவற்றிற்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்.விஷயம் அத்துடன் முடிந்தது..அவ்வளவுதான்.
இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சிவாஜி ஒரு சகாப்தம் -4

1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பட்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பெசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

1958 படங்கள் அடுத்த பதிவில்..

Tuesday, March 17, 2009

லல்லூவும்...கலைஞரும்...காங்கிரஸும்...

இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் வரிசையில் முதலில் இருந்தவர் லல்லூவின் தர்மபத்தினி ராஃப்ரி தான்.,நம் கலைஞருக்கு பணக்கார முதல்வர் வரிசையில் இரண்டாம் இடமே கிடைத்தது.

சாமர்த்தியசாலிகள் என்று பார்த்தாலும்...கலைஞர் இரண்டாம் இடமே வருவார் போலயிருக்கிறது.

பீகாரில் வரும் நாடாளுமன்ற தேர்தலில்...தொகுதி ஒதிக்கீடு எப்படி செய்யப்பட்டுள்ளது தெரியுமா?

மொத்த இடங்கள் 40.லல்லுவிற்கு 25 இடங்கள்...பாஸ்வான் கட்சி 12 இடங்கள்..காங்கிரஸிற்கு 3 (!!) இடங்கள். இந்த காங்கிரஸ் தான்...பழம் பெருமையை பேசிக்கொண்டு..நூற்றாண்டுகண்ட..அகில இந்திய கட்சி. லல்லுவால் 3 இடங்கள் பிச்சை போடப்பட்டுள்ளது.

பெரிய மாநிலமான உ.பி.யில் கூட தேர்தல் உடன்பாடு எட்டா நிலையில்..மாயாவதியுடனும்,முலாயுடனும்..போட்டி போடவேண்டிய நிலை.ஆகவே இங்கும் காங்கிரஸ் வெற்றி பெரும் இடங்கள் இம்முறை கணிசமாக குறையும்.

லல்லுவின் தைரியம் கலைஞருக்கு வராது..அப்படி வருமேயாயின்..காங்கிரஸிற்கு வெற்றிலைப் பாக்குடன் காத்திருக்கிறது அ.தி.மு.க.,ஆகவே இங்கு பெரும்பாலான இடங்கள் காங்கிரஸிற்கு தி.மு.க.வால் ஒதுக்கப்படும்.

ஒரு வேளை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி...தேர்தலுக்குப் பின் அமையுமேயாயின்...கட்சிக்கு 3 இடங்களே (இதில் எவ்வளவு வெற்றி பெறுமோ) கொடுத்த லல்லுவிற்கு பரிசாக ரயில்வே மீண்டும் கொடுக்கப் படும்.

இப்படியெல்லாம் ஆகும்..என்று தெரிந்துதான் அன்றே கட்சியை கலைத்துவிட காந்தி சொன்னாரோ?

Monday, March 16, 2009

கட்சிக்கு ஒரு தேர்தல் ஜோக்..

1. ஜெ-(தனக்குள்) தப்பித்தவறி மூணாவது அணி ஆட்சிக்கு வந்தா...6மாதத்திற்கு ஒரு பிரதமர்னு சொல்லி...தேவகவுடா,மாயாவதிக்கு முன்னாலே முதல்லே நாம இருந்திடணும்..ஏன்னா..ஆட்சி எவ்வளவுநாள் நீடிக்கும்னு சொல்லமுடியாதே..

2.அன்புமணி-(ராமதாஸிடம்) அப்பா...கூட்டணி பற்றி சீக்கிரம் முடிவெடுங்க
ராமாதாஸ்-நீ ஏன் கவலைப்படறே..உனக்கு வேண்டிய எம்.பி.,பதவியை...தேர்தல்ல ஜெயிச்சாலும்..ஜெயிக்காட்டியும்..ஆட்சிக்கு வரும் கட்சிகிட்டே..ராஜ்யசபா சீட்டா வாங்கிடலாம்.

3.பண்ருட்டி-(விஜய்காந்திடம்) அண்ணே..சிக்கிரம் ஒரு முடிவெடுத்தா...நானும் பார்லிமெண்டு பார்த்துடுவேன்

4.இல.கணேசன்- முடிவு நமக்குத் தெரியும்...ஆனா..கடைசி வரைக்கும்..நாமதான்னு பேசிக்கிட்டே இருக்கணும்.

5.இரு கம்யூனிஸ்ட்கள்-நம்ம தலைஎழுத்து...காங்கிரஸை விரொதிச்சுட்டு துக்கடா பார்ட்டிக்கிட்ட எல்லாம் ஜால்ரா அடிக்க வேண்டியிருக்கு

6.வைகோ-அம்மா..ஒன்னு தருவாங்களோ...இரண்டு தருவாங்களோ..தெரியலை...அதுக்கும் மேலதந்தா..வேணாம்னு சொல்லிடணும்..நம்மகிட்ட அதுக்கான ஆள் இல்லைன்னு சொல்லக்கூடாது

7.காங்கிரஸ் தமிழக தலைவர்கள்- சீக்கிரம் தொகுதி தெரிந்தால்' யார் வேட்பாளர்னு நமக்குள்ள அடிச்சிக்க கொஞ்ச நாட்கள் கிடைக்கும்

8.தி.மு.க.தலைவர்-அழகிரி,மாறன்,பாலு,கனிமொழி..ம்ம்ம்..டெல்லி தாங்குமா?

9.வாக்காளர்- இந்த தேர்தல்லயாவது..ஓட்டுப்போட விருப்பமில்லைங்கற பட்டன்.. இருக்குமா தெரியலையே!

தமிழக அரசியலின் குழப்பவாதி..ராமதாஸ்

தினமும் ஒன்று பேசுகிறார் என கலைஞரை விமரிசிக்கும்..இவர்..அவ்வப்போது என்ன பேசுகிறார்.. ஏன் இப்படி இப்படி பேசுகிறார் என்பதே புரியாது.

ஆட்சி போய்விடும் என்பதால்...அவருக்கு பயம் வந்துவிட்டது என கலைஞரை ராமதாஸ் சொல்வதும்...அதற்கு பதிலாக கலைஞர்..'மத்திய மாநில அரசுகளுக்கிடையே மோதலை உண்டாக்கி ஆதாயம் அடையப்பார்க்கிறார் ராமதாஸ்' எனக் கூறுவதும்...இவர்களிடையே நடக்கும் வார்த்தை பரிமாற்றம்..வராத நாட்களே இல்லை எனலாம்.

இலங்கையில் போர் நிறுத்தம் வரவேண்டும்..அதனால் அதற்காக ஆட்சியை கவிழ விட மாட்டோம்..என்கிறார் ராமதாஸ்.

பா.ம.க., விஷயத்தில்..2001 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து...அவர்கள் பலத்தை தப்புக் கணக்கு போட்ட கலைஞர்..சென்ற சட்டசபை தேர்தலில் 31 இடங்களை இவர்களுக்கு ஒதுக்கினார்.ஆனால் இவர்கள் வெற்றி பெற்றதோ 18 இடங்களே..

விஜய்காந்த் பல இடங்களில் ஓட்டுகளை பிரித்தார்..அவர்கள் கோட்டையிலேயே..அவர் வெற்றி பெற்று காண்பித்தார்.இதனால் பா.ம.க.,காங்கிரஸ்.,அ.தி.மு.க., கட்சிகள் சில இடங்களில் தோற்றன.

தி.மு.க., கூட்டணியில் இருந்துக் கொண்டே..கலைஞரின் இரண்டாண்டு ஆட்சிக்கு '0' மதிப்பெண் தந்தார் ராமதாஸ்.

காடுவெட்டி விவகாரத்தில்..பா.ம.க.,வை கூட்டணியிலிருந்து விலக்கினார் கலைஞர்.ஆனாலும் பா.ம.க., விலகாததுபோல் செயல்பட்டது.ஒரு கட்டத்தில்..குருவும் விடுவிக்கப்பட்டார். கலைஞருக்கு இது காலத்தின் கட்டாயமாக அமைந்தது.

ஆனால்..பா.ம.க.வோ..இனி வரும் தேர்தல்களில்..தி.மு.க.வின் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றதுடன்...காங்கிரஸ் கூட்டணியில் இருப்போம் என்றது.

இன்று...திருமாவளவன்..கலைஞரை சந்தித்தார்...பா.ம.க.,வின் பிரதிநிதிபோல பா.ம.க.வும்..கூட்டணியில் நீடிப்பதாகக் கூறினார்.(ஒரு வேளை..இதுவும் அவர்கள் ஏற்பாடோ)

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம்...

பா.ம.க.வும்...ஏதேனும்..திராவிட கட்சியின் முதுகில் சவாரி செய்தால் மட்டுமே..சில தொகுதிகளில் வெற்றிபெற முடியும்.

இது அவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.

Sunday, March 15, 2009

பூவா...தலையா...(சிறுகதை)

தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல்.

அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு முதலில் விளையாடுவது என்பதைத் தீர்மானித்தான்.

இரு சிறுவர்கள் நடுவர்களாக நிறுத்தி வைக்கப் பட்டனர்.பூவா தலையாவில் வென்ற குழுத்தலைவரான சிறுவன் மற்றவனிடம்..'டேய்..நீ சச்சின்..நான் சேவாக், நாம தான் ஆரம்ப ஆட்டக்காரர்கள்' என்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உமாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் தன் பையனும் இடம்பெறும் நாள் வராதா...அவன் மனம் ஏங்கியது.

கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன.இந்தக் கேள்வி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது.

உமா...அந்த நாளை நினைத்தாள்.

நந்திதா மகப்பேறு மருத்துவ நிலையம்

'பாராட்டுக்கள்...'உமாவை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் கூறினார்..'இரண்டு மாதம் முடிந்துவிட்டது.'

உமாவிற்கும்..அவள் கணவன் சிவாவிற்கும் பகீரென்றது.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை உதட்டில் விரலை வைத்து 'சூ...சப்தம் போடாதீர்கள்' என்றது.

எதை வேண்டாம்...வேண்டாம் என கல்யாணமாகி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார்களோ அது நடந்துவிட்டது.

'மாதம் தவறாமல் பரிசோதனைக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்க' என்ற மருத்துவரிடம் 'சரி' என்பது போல தலையை அசைத்தான் சிவா.

பின் உமாவிடம் சில ஆலோசனைகளைக் கூறினார் மருத்துவர்.

அவர்கள் திரும்பிவரும்போது வழக்கத்துக்கு விரோதமாக எதுவுமே பேசாமல் வந்தனர்.

வீட்டை அடைந்ததும்..உமாவை இறக்கிவிட்டுவிட்டு 'நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்' என அவள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்..

வீட்டுக்குள் சென்று..சோர்வுடன் அமர்ந்த உமாவின் கைகள் அனிச்சையாகத் தொலைக்காட்சியை இயக்கியது.

'பொதிகை' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் மகப்பேறு பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

'இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டமாகத்தான் இருக்கும்' அவர் சொன்ன இந்த வரிகளைத் தவிர வேறு ஏதும் அவள் காதுகளில் விழவில்லை.

சிவா வண்டி திரும்பும் ஓசை கேட்டது.

அவள் எழுந்து விளக்குகளைப் போட்டாள்.குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காபி போடத் தயாரானாள்.சிவா எப்போதும் வெளியே சென்று வந்தால் காபி சாப்பிடுவது வழக்கம்.

நேரே சமையலறைக்கு வந்தவன் 'உமா..இப்போது நமக்குத் தேவையா?' என்றான்.

இன்னும் இரண்டு வருடங்களாவது தள்ளிப் போடணும்னு நினைச்சோம்...என்றவளின் குரல் தழுதழுத்தது.

'நான் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே..' என்றான். 'கலைச்சுடலாம்' என்றான்.பின்னர் மெதுவாக 'என்னுடைய மருத்துவ நண்பன் ஒருவனிடம் சொல்லி இந்த மாத்திரைகளை வாங்கி வந்தேன்.மூன்று வேளை சாப்பிட்டால் போதும்...'

இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டம் தானே என அவளும் இதற்கு சம்மதித்தாள்.

எட்டு மாதங்கள் கழித்து...கைகளையும்..கால்களையும் ஆட்டி...அழுது..சிரித்து.. பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டிய அந்த உயிர் சிதைந்தது.

பத்து வருடங்கள் பறந்துவிட்டன..

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

'அன்று அப்படி சம்மதித்தது தவறோ...?' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எந்தக் குழந்தையும் தவழ்ந்து விளையாடாத காலி மைதானமாகவா ஆகவேண்டும் வீடு..

நீண்ட நேரம் யோசித்தாள்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒரு விளம்பரம்..

'சென்னை அருகே இருந்த குழந்தைகள் குருகுலம் ஒன்று பற்றிச் சொல்லிவிட்டு...வர இருக்கும் பண்டிகையை நாம் இவர்களுடன் கொண்டாடுவோம்' என்றார் அந்தப் பிரபல நடிகர்.

அவர் நடுவில் இருக்க..அவரது வலப்புறமும்..இடப்புறமும் நிற்கும் குழந்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தது ஒளிக்கருவி.

திடீரென..இதில் ஒரு முகம் உமாவிற்கு பிடித்துப் போயிற்று.எவ்வளவு அகன்ற கண்கள்...தான் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் கைகளை...இங்கும்..அங்கும் வீசிக்கொண்டு அவன் என்ன செய்கிறான்..?

கிரிக்கெட்டா விளையாடுகிறான்?

ஓங்கி அவன் பந்தை அடிப்பதுபோல இருந்தது உமாவிற்கு.

உமா ஒரு முடிவிற்கு வந்தாள்.

பூவா...தலையா...போட்டாயிற்று..

அவளது வீட்டில் விளையாட..தொடக்க ஆட்டக்காரன் ஒருவனைத் தேர்வு செய்துவிட்டாள்

Friday, March 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(14-3-09)

1.திராவிட கட்சிகளின் மீது ஏறி அமர்ந்து சிலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளைப் பெற்றுத்தரும் தரகு நிறுவனமாக காங்கிரஸ் தன்னிலை தாழ்ந்து விட்டது.

2.நம்மால் கீழ்தாடையை மட்டுமே அசைக்க முடியும்..மேல் தாடையை அசைக்க முடியாது.தாடை எலும்புகள் மிக உறுதியானவை.இவற்றால் 279 கிலோவிற்கு மேற்பட்ட எடையுள்ள பொருள்களை கடித்து தூக்கமுடியுமாம்.

3.உலகிலேயே பெரிய வீடு புரூனே நாட்டில் தான் உள்ளது.புரூனே சுல்தானின் இல்லமே அது.அதில் 1788 அறைகள் உள்ளன.இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இம்மாளிகை அமைந்துள்ளது.இந்தியாவில் பெரிய வீடு ஜனாதிபதியினுடையது.இதில் 343 அறைகள் உண்டு.

4.எந்த கோடீஸ்வரனும்..யோக்யமாக சம்பாதித்தது இல்லை.பார்ட்னரை ஏமாற்றியிருப்பான்.கஸ்டமரை ஏமாற்றியிருப்பான்..அரசாங்கத்தை ஏமாற்றியிருப்பான்..குறைந்தது தன் மனசாட்சியையாவது ஏமாற்றியிருப்பான்.

5.ஒரு முறை கடலில் மூழ்கிவிட்டு..முத்தெடுக்காமல் திரும்பினால்..கடலில் முத்துக்கள் இல்லை என்றில்லை.நமது முயற்சி போதவில்லை என்று அர்த்தம்.

6.கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா? ஒரு சேவல் கூப்பிட்டால்(கூவினால்)எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்பிடு தூரம்.

7.ஒரு ஜோக்

தொண்டன்1 - தலைவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை சென்றதால்...தீர்க்க முடியா பிரச்னை ஒன்று தீர்ந்தது
தொண்டன்2-என்ன சொல்கிறாய்
தொண்டன்1- பெரிய வீடும்...சின்ன வீடும்..ராசியாயிட்டாங்க..

எனது ஆஸ்பத்திரி டயரி குறிப்பு...

7-3-09 சனியன்று...இரவு 10 மணி...திடீரென...எனக்கு தலைவலி..

அதற்கு முந்தய தினம்..என்..தாய் தமிழில் வந்த..இலக்கியச்சுவை மிக்க நாவல் ஒன்றை விடாமல் 5 மணி நேரம் படித்ததால் இருக்குமோ? என எண்ணினேன்.நேரம் ஆக ஆக..வலியால் துடிக்க தொடங்கினேன்.என் வேதனையை உணர்ந்துக் கொண்ட..எங்க வீட்டு அம்மா... என் தம்பிக்கு தகவல் தர..நள்ளிரவு என்றும் பாராது ஓடோடி வந்தான் என் தம்பி.தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..என்று என் அண்ணா அடிக்கடி கூறும் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன...எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.அதற்குள் ஆம்புலன்சும் வர..நான் நகரின் மையத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன்.

8-3-09 ஞாயிறு...01-30...டூடி மருத்துவர் வந்து என்னை பார்வையிட்டார். என்ன நினைத்தாரோ...உடனே ஒரு நர்ஸைக் கூப்பிட்டு..உடனடியாக பி.பி., பிளட், சுகர் டெஸ்ட் எடுக்கச்சொன்னார்.நான் தலைவலி தாங்காமல் 'ஐய்யோ' எனகத்தினேன்.

உடன் எனக்கு ஒரு பெயின் கில்லர் ஊசி போடப்பட்டது..நான் உறங்கிப்போனேன்.

காலை 7 மணி...சீஃப் டாக்டர் ஒருவர் ..ஒரு தலைவன் தொண்டர்கள் சூழ வருவது போல ஒரு கூட்டத்துடன் வந்தார்..எல்லோரும் ..தமிழர்கள்..என்னைப் பற்றியும்...என் தலைவலிப் பற்றியும் தங்களுக்குள் ஏதோதோ ஆங்கிலத்தில் பேசினர்.

உடன்..என்னை..ஸ்கேன் பண்ண அழைத்துப் போயினர்.வலி தாங்காமல் கூக்குரலிட்டேன்.ஸ்கேன் மிஷினில் சென்றேன்..

தில்லியில் இருந்து..
தங்கம் என் உடல்நிலை விசாரித்தார்.சில மருந்துகள் தர..என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

கண் விழித்த போது..என்னைச் சுற்றி உறவினர் கூட்டம்.ஏதோ ஆபரேஷன் செய்யப் போகிறார்களாம்...பயப்படாதீர்கள் என பயந்த படியே கூறினார்கள்.ஆனால் தலைவலிக்கு..ஏன் கார்டியாலிஜிஸ்ட்,நெப்ராலிஜிஸ்ட்,நியூராலிஜிஸ்ட்,ஆர்த்தோ,எல்லாம் வந்தார்கள் என தெரியவில்லை.

பின்..ஒரு பிரபல மருத்துவர் வரவழைக்கப்பட்டார்..அவர் என்னை ஆராய்ந்தார்.,பின்...இது வெறும் தலைவலிதான்...எனக்கூறி சில மருந்துகள் கொடுத்தார்.

9-3-09 காலை 7 மணி...அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை இரண்டுநாளாக என் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்த என் மகள் எழுப்பி...இன்று மாலை டிஸ்சார்ஜ் என மருத்துவர் கூறியதாகக் கூறினார்.

மாலை நான் வீடு திரும்பினேன்.

(டிஸ்கி...இந்த பதிவு ..யாரையும் குறிப்பிடுவது அல்ல..என தெரிவித்துக் கொள்கிறேன்)

Wednesday, March 11, 2009

பதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..

1.இன்னிக்கு ஒரு பதிவு போடலாமா?

2.எந்த மேட்டரைப் பற்றி எழுதினா...நிறைய ஹிட்ஸ் வரும்

3.பின்னூட்டம் 11ஆவது வருமா...இல்லை 6 வந்தாக்கூட...நன்றி சொல்லி 12 ஆக்கிடலாம்.

4.நம்ம பதிவைவிட மொக்கை பதிவுங்க போடறவங்களுக்கு எப்படி இவ்வளவு பின்னூட்டம் வருது..

5.பதிவின் தரத்துக்கும்...ஹிட்ஸூக்கும் சம்பந்தம் உண்டா

6.பிரபல பதிவர் பெயரை பதிவின் தலைப்பில் போடலாமா?

7.சூடான இடுகைல வரணும்னா..பதிவின் தலைப்பு சூடா இருக்கணுமா

8.தமிழ்மணம் முகப்புல ரொம்ப நேரம் இருக்கணும்னா..எத்தனை மணிக்கு பதிவை இணைக்கணும்

9.ஒருவேளை...தமிலிஷில் இந்த பதிவை இணைக்கலைன்னா..தமிழ்மணத்திலேயே அவங்களும் பார்ப்பாங்களா

10.இந்த பதிவுக்காவது..அந்த பிரபல பதிவர் பின்னூட்டம் இடுவாரா?

11.இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு பதிவை தமிழ்மணத்தில இணைக்க முடியாமல்...டெக்னிக்கல் ப்ராப்ளம் வந்துட்டா என்ன பண்ணுவது?

(அப்பா...11 வைச்சு நாமும் ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

அற்புதமான ஒரு நடிகர் டி.எஸ்.பாலையா..

எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என தமிழ் சினிமா உலகமே வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள்.அதிலும் ராதாவும்,பாலையாவும் வில்லனாகவும்...நகைச்சுவையிலும் கொடிகட்டி பறந்தவர்கள்.

பாலையா...1935 ஆம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார்.இவர் கதானாயகனாக நடித்த படம்'வெறும் பேச்சல்ல"

பின்..வில்லன் பாத்திரங்களும்..நகைச்சுவை பாத்திரங்களுமே இவரைத் தேடி வந்தன.மணமகள் படத்தில் பத்மினிக்கு பாட்டு வாத்தியாராக வந்து..'சின்னஞ்சிறு கிளியே' பாடலை அழுதுக் கொண்டே பாடி..தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியில்..அவர் அழுது அற்புதமாக நடிக்கும் போது...நாம் அடக்கமுடியாமல் சிரிப்போம்.

தூக்கு தூக்கி படத்தில்...சேட்ஜியாக வந்து...நம்மள்...நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார்.இதற்குப் பின்னரே..இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும்...நாடகங்களிலும் பேசப்பட்டது எனலாம்.

பின்...வேலைக்காரி,மதுரை வீரன்,புதுமைப்பித்தன்,தாய்க்குப்பின் தாரம்,அன்பு, காத்தவராயன் என பல படங்களிலும் அவர் நடித்தார்.

கே.ஆர்.ராமசாமி,டி.ஆர்.மஹாலிங்கம்,ஜெமினி,எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.,சிவாஜி என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர்.

பாகப்பிரிவினையில்..இவர் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட்டது.பாமா விஜயம் காமெடி தூள் கிளப்பி இருப்பார்..இவரைப் பற்றி எழுதும் போது...நம்மால் மறக்கமுடியாத இரண்டு படங்கள்..காதலிக்க நேரமில்லை,தில்லானா மோகனாம்பாள்.

தி.மோ.வில் நாதஸ்வர கலைஞராக வந்து..ரயிலில்..சி.கே.சரஸ்வதியுடன் இவர் செய்யும் குறும்புகள்....இருங்கள்..சிரித்து விட்டு வருகிறேன்..

காதலிக்க நேரமில்லை படத்தில்...நாகேஷுடன் இவர் கதைக் கேட்கும் காட்சி..சிரித்து..சிரித்து..வயிறு புண்ணாகும் காட்சியாகும்.

திருவிளையாடலில்...ஹேமாநாத பாகவதராய் வந்து..அலட்சியத்துடன்...இவர் பாடும்'ஒரு நாள் போதுமா" இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

டி.எஸ்.பாலையா..என்ற அற்புதநடிகர்..1976ல் காலமானார்.

எந்த ஒரு கலைஞனும் அவர்கள் வாழ்நாளில் போற்றப்படுவதில்லை...பாலையாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

Tuesday, March 10, 2009

தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..

நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.

குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,

மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடி

வெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது..இது பொருளாதார நிலையில் பின்தங்கியவர் ஆதரவை பெருக்கும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் பா.ம.க., எப்போதும் வெற்றி பெறும் கூட்டணியையே விரும்பும்...ஆகவே கடைசி நேரத்தில்..அவர்களும் இந்த அணியிலேயே தொடர்வர்..விஜய்காந்தையும் இந்த அணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.

மேலும் ..இன்று அனைத்துக் கட்சிகளுமே...இதை வைத்து அரசியல் செய்துக்கொண்டிருக்கும் நிலையில்...கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.

இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை.

Monday, March 9, 2009

நான் இன்று ஓய்வு பெறுகிறேன்..

இன்றோடு நான் வேலையிலிருந்து ஓய்வு பெறுகிறேன்.கிட்டத்தட்ட 35 வருஷங்கள்...நான் உழைத்திருக்கிறேன்.காலம் எவ்வளவு வேகமாக சிறகடித்து பறந்துக் கொண்டிருக்கிறது.

என்னால்...என் வேலையால் பயனடைந்தவர்கள்..இதுநாள் வரை கோடானுகோடி நபர்கள் இருக்கும்.ஆனால் இது நாள்வரை யாரும் என் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்த்ததில்லை.

அலுவலகத்தில்...வேண்டாம்..என்று சொன்னாலும்..பிரிவுபசார விழாவிற்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.நான் பேச வேண்டுமாம்.சாதாரணமாகவே நான் அதிகம் பேசாதவன்.அதிலும் கூட்டத்தில் பேசுவதென்றால்...

மாலை போட்டார்கள்.பொன்னாடை போர்த்தினார்கள்.கையில்..அன்பளிப்பு என்ற பெயரில்...பள..பள..என சரிகைத்தாள் சுற்றிய ஒரு ஸூட்கேஸ் கொடுத்தார்கள்.என்னைத் தெரியாத அதிகாரிகளும்..என் பெயர் என்னவென்று கேட்டுவிட்டு..என்னைப் பாராட்டிப் பேசினார்கள்.

கடைசியாக ஏற்புரையை வழங்கச் சொன்னார்கள்.

நான் எழுந்துக் கொண்டேன்..கை கால்கள் சற்றே நடுங்கின...சரிதான்..இப்போது உளறப்போகிறோம் என நினைத்தேன்.

'வணக்கம் நண்பர்களே! நாம் செய்யும் வேலையில் நமக்கு எத்தனைப் பேரிடம் நமக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது?..எத்தனை ஆயிரம் பேர்களை அவர்கள் லட்சிய ஊர் நோக்கி அழைத்துப் போய் இருப்போம்.ஒரு வாடகைக்கார் ஓட்டுநர் கூட..பயணியை குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால்...அந்த ஓட்டுநரை பாராட்டுகிறோமே...ஆனால் நம்மை யாராவது அப்படி பாராடியிருப்பார்களா?

அவர்களை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்த நம்மிடம் பயணிகளுக்கு ஒரு உறவு, ஒட்டு, மனிதத்தன்மை இருக்கிறதா?குறித்த நேரத்தில் நாம் அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தாலும்..இன்று ரயில்
சரியான நேரத்திற்கு வந்து விட்டது என்றுதானே கூறுகிறார்கள்.

நான் இப்பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்..இந்த நெருடல் என் மனதில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.ஒரு விதத்தில் மக்கள் பணி புரியும் நம்மை மக்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள்.ரயில் இஞ்சின் ஓட்டுநரான நான் இதைத்தவிர வேறு என்ன பேச முடியும்?' என்று பேச்சை முடித்ததும் கிடைத்த கை தட்டல்கள்..அனைவரின் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது.

(எங்கேயோ படித்தது)

Sunday, March 8, 2009

ஜெ.யின் உண்ணாவிரதம்...

உண்ணாவிரதம்...சுதந்திரத்திற்கு முன் ..இதன் அர்த்தமே வேறு. அந்த நாட்களில்..தலைவரின் உண்ணாவிரதங்கள் பல சாதனைகளை படைத்துள்ளன.ஆனால் இந்த அடையாள உண்ணாவிரதம் என்பது...உண்ணாவிரதம் என்பதையே கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது.

இப்போதெல்லாம்...இந்த வார்த்தையைக் கேட்டாலே..எனக்கு..தங்கவேலுவும்...பாசமலர் படமுமே ஞாபகத்தில் வருகிறது.எம்.சரோஜாவை மணக்க தங்கவேலு..அவரது வீட்டு முன் இருக்கும் உண்ணாவிரதமிருப்பார்.அதைப்பார்த்து..விட்டு...எம்.ஆர்.சந்தானம்..பெண்ணை அவருக்குக் கொடுப்பதாகக்கூற ..தங்கவேலு உண்ணாவிரதத்தை கை விடுவார்.பின் அவரது சகாக்களான பொடியன்கள் ..சாப்பிட்டப்பொருள்களின் காலி தட்டுக்களை எடுத்துப் போவார்கள்.இதைக்கண்டதும் சந்தானம் அதிர்ச்சி அடைவார்.

(டேய்..மசால்வடை வாசனை வருதுடா.,
அண்ணே பக்கத்துகடைல போடறாங்க
கொஞ்சம் மாவை எடுத்து வைக்க சொல்லு...சாயங்காலம் 6 மணிக்கு மேல் நமக்கு போடச்சொல்லு...
இதுதான் தங்கவேலு உண்ணாவிரதம்)

அரசியல் உண்ணாவிரதங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான்...காலை 10 மணிக்கு..உண்ணாவிரதம் ஆரம்பித்து..மாலை 5 அல்லது 6 மணிக்கு முடிப்பர்.இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைக்க ..யாரேனும் தலைவர் வந்து..பழ ஜூஸ் கொடுத்து முடித்து வைப்பார்.(???!!!!!)

அரசியல் சம்பந்தப்பட்ட ஒருவர்..ஒருமுறை சொன்னார்..'காலைல..உண்ணாவிரதத்திற்கு கிளம்பறப்போ..உப்புமாவையோ..பொங்கலையோ ஒரு பிடி பிடிச்சுட்டா...அது வயிற்றில் பொத பொதன்னு ஊறிடும்..சாயங்காலம் வரை பசி எடுக்காது.சாயங்காலம் போய் விட்டில பிரியாணி ஒரு பிடி பிடிச்சுடுவோம்' என்றார்.

சரி தலைப்புக்கு வருவோம்...

இலங்கை பிரச்னையில்..சமீப காலமாக..உண்ணாவிரதம்..போராட்டம்..மனிதச்சங்கிலி..என பல பார்த்துவருகிறோம்..இந்த நிலையில்...நேற்றுவரை...இலங்கை ராணுவத்தை தப்பு சொல்லமுடியாது என சொன்னவர்..தேர்தல் அறிவிப்பு வந்ததும் ..காங்கிரஸ்சிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தார்.அது நடக்காது..என்றதும்...எதைத்தின்றால்...தேர்தல் பித்தம் தெளியும்..என்று உண்ணாவிரதத்தை கையில் எடுத்துக் கொண்டார்.

இலங்கை தமிழர் பிரச்னையில்...தமிழர்கள் அனைவருக்கும்..அனுதாபம் இருந்தாலும்...அது தேர்தலில் பிரதிபலிக்கும் என நான் எண்ணவில்லை.ஏனெனில்..தமிழர்களுக்கும்..இக்கட்சிகளைவிட்டால் வேறு வழி இல்லை.

வலுவான..கூட்டணியான..தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக...இந்த முறையும் மா பெரும் வெற்றி பெறும்.வேண்டுமானால்... காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் வெற்றிப் பெரும் வாக்குகள் வித்தியாசம் குறைவாய் இருக்கலாம்.ஆனால் எவ்வழியிலும்..அ.தி.மு.க.,வெற்றிப் பெற வாய்ப்பிருப்பதாக நான் எண்ணவில்லை.

உண்ணாவிரதம்..எதையும் சாதிக்காது...

(உண்ணாவிரதம் எதையும் சாதிக்காது என்பவர்கள்..தமிழ்மணம் தம்ஸ் அப்பிலும்...தமிலிஷிலும் வாக்களிக்கவும்)

Saturday, March 7, 2009

வாய் விட்டு சிரியுங்க

டாக்டர்- ஒரு மணி நேரம் முன்னால வந்திருந்தா நோயாளியை காப்பாத்தி இருக்கலாம்
வந்தவர்-டாக்டர் ஆக்ஸிடண்ட் ஆகியே அரை மணி நேரம் தானே ஆச்சு..

2.மகன்- அப்பா நாளையிலிருந்து நாம பணக்காரனா ஆகிடலாம்
அப்பா- எப்படி
மகன்-எங்க கணக்கு வாத்தியார்...பைசாவை ரூபாவா மாத்தறது எப்படின்னு சொல்லித்தரப் போறார்

3.வேலைல சேர்ற இந்த மாசம் 10000 ரூபாய் சம்பளம்...6 மாசம் கழிச்சு 15000 தர்றேன்
அப்போ நான் ஆறு மாசம் கழிச்சே வேலைல சேர்ந்துக்கறேன்

4.பாட்டி- (பேரனுக்கு கதை சொல்கிறார்) ஒரு ஊர்ல ஒரு வயசான தாத்தா இருந்தார்
பேரன்-போ பாட்டி...ஒரு வயசுன்னா ..அது தாத்தா இல்ல...குழந்தை

5.ஆசிரியர்- உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல்ல எல்லாவற்றிலும் ஃபர்ஸ்டா இருந்தார்
மாணவன்- உங்க வயசுல ஹிட்லர் கூடத்தான் தற்கொலை பண்ணிண்டார்

6.மாணவன்- ஆண்டவா..தயவு செஞ்சு நியூயார்க்கை பஞ்சாபின் தலைநகரமாக்கு
அப்பா-ஏண்டா..அப்படி வேண்டிக்கற
மாணவன்-பரிட்சையில அப்படித்தான் எழுதிட்டு வந்திருக்கேன்.

Friday, March 6, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(7-3-09)

1.அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சனின் தந்தை ஒரு சர்ச் பாதிரியாராக இருந்தார்.ஒரு நாள் அவர் மாதாகோவில்ல உபன்யாசம் முடிச்சுட்டு..வீடு திரும்பிக்கொண்டிருந்தார் குதிரை மீது.அந்த கிராமத்திலிருந்த ஒரு கருமி அவரை நிறுத்தி..'உங்க குதிரை இவ்வளவு கொழு கொழுன்னு இருக்கிறது.நீங்கள் மட்டும்...எலும்பும்..தோலுமாய் இருக்கிறீர்களே' என்றார்.
வில்சன் அசரவில்லை...'குதிரைக்கு சாப்பாடு நான் போடுகிறேன்..எனக்கு சாப்பாடு நீங்கள் போடுகிறீர்கள்' என்றாராம்.

2.சொர்க்கத்தில் இறைவனை தரிசிக்க ஒரு நீண்ட வரிசை காத்திருந்தது.அப்போது..கடைசியில் நின்றுக் கொண்டிருந்த ஒருவனை முதலில் அழைத்தனர்.வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மற்றவர்கள் அதற்கான காரணம் கேட்டபோது..இறைவன் சொன்ன பதில்..'கடைசியாக வந்தவர்..பூலோகத்தில் ஆட்டோக்காரர்.அவர் வண்டியில் யார் ஏறினாலும்..அவர்களை என்னைப் பற்றி எண்ண வைத்தவர்.இவரால் எனக்கு பக்திமான்கள் அதிகம் உண்டாகியுள்ளனர்' என்றாராம்.

3.வகுப்பிற்கு புது ஆசிரியர் வந்தார்..மாணவர்களிடம் 'இங்கே..யாரெல்லாம் முட்டாள்கள்? எழுந்து நில்லுங்கள்' என்றார்.யாரும் எழுந்து நிற்கவில்லை.சிறிது நேரம் கழித்து ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
ஆசிரியர்..'நீ உன்னை முட்டாளாக நினைக்கிறாயா?' என்றார்.அதற்கு அந்த மாணவன்'இல்லை...நீங்கள் மட்டும் தனியாக நின்றுக்கொண்டிருக்கிறீர்களே...அதனால் உங்களுக்கு துணையாக இருக்கட்டுமே என எழுந்து நின்றேன்' என்றான்.

4.எல்லாச் செடிகளும்...பூத்துத்தான் காய்க்கும்...பூசணிச்செடி மட்டும் காய்த்துத்தான் பூக்கும்.

5.ஒரு பொன்மொழி...ஒரு ஜாதி தாழ்ந்தது என்பது எவ்வளவு பொய்யோ..அவ்வளவு பொய் இன்னொரு ஜாதி உயர்ந்தது என்பதும்....சொன்னவர்-ஜெயகாந்தன்

6.ஒரு கவிதை-

சில
கவிஞர்களை
சிலுவையில் அறைந்துவிடலாம்!
மரங்கள்
வருத்தப்படும்
மன்னித்துவிடலாம்

- நெல்லை ஜெயந்தா

7.ஒரு ஜோக்...

தலைவர் ஏன் பயந்துக் கொண்டிருக்கிறார்..
யாரோ..அவரை அஞ்சானெஞ்சன் என்று கூறிவிட்டார்களாம்..அதனால்தான்.

Thursday, March 5, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 3

1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி

மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.

நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.

கலைஞர் சாத்தான் என யாரை சொல்கிறார்....

கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்று ஜெ..சொன்னாலும் சொன்னார்..கலைஞர் அதற்கான பதிலில்..

13 வயதிலிருந்து...இன்று 85 வயது வரையில் தினமும் களைப்பென்பதே இல்லாமல் அரசியல் களப்பணி புரிந்து, சட்டமன்றப் பொன்விழா கொண்டாடியுள்ளேன்.70 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில்..பெரியாரின் தொண்டனாக...அண்ணாவின் தம்பியாய்..இந்திய திருநாட்டின் மூத்த தலைவர்களுக்கும் முன்னோடிகளுக்கும் உடன் பிறப்பாய் விளங்கி வருகிறேன்.

பட்டியலிடமுடியாத அளவிற்கு சாதனைகள் நிறைவேற்றி வருகிறேன்.இவைகளையெல்லாம் என் சாதனைகளுக்கு சான்றுகளாக தமிழ்நாட்டில் விட்டுச் செல்வதென்றால்..அந்த ஓய்வு கிடைத்தால் எனக்கு உற்சாகம்தான்.

எனெனும் இத்தனை சாதனைகளையும் சாத்தானாம் ஒரு பெண்மணியை தமிழகத்தை மேயவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்றுதான் ஏங்குகிறேன்.ஆனாலும்...ஆயிரம், லட்சம், கோடியென உடன்பிறப்புகள் இருக்கும்வரை நான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும்..அதன் காரணமாக இந்த நீலி மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் நடக்கவே நடக்காது, என்றும் கூறியுள்ளார்.

இதில் எனக்குள்ள சந்தேகம்

எதையும் நேரிடையாக சொல்லும் கலைஞர்..சாத்தான் என்றும்..நீலி என்றும் யாரைக் கூறுகிறார்.

பகுத்தறிவுவாதிகள் சாத்தான் இருப்பதை நம்புகிறார்களா?

Wednesday, March 4, 2009

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Tuesday, March 3, 2009

தங்கமணிகளும்...தங்கமும்...

தங்கத்தின் மீது ஆசை கொள்ளாத தங்கமணிகள் இருக்க முடியாது.தங்கமான மனது என்கிறோம்.பெண்ணுக்கு புன்னகை மட்டும் அழகில்லை...அவள் அணியும் பொன் நகையும் அவர்கள் அழகைக் கூட்டுகிறது.பெண்களின் பெயர்கள் கூட..தங்கம்,சொர்ணம்,பொன்னு..என்றெல்லாம் வைக்கப்படுகிறது. தமிழ்க்கவிஞர்களும்..நிலவைக்கூட தங்கநிலவு என்று வர்ணிக்கிறார்கள்.தங்கம்..நம் தினசரி வாழ்வில்..நுழைந்து விட்டது.

தங்கம் ...சமீப காலங்களில்..நமக்கு எட்டாக்கனியாக ஆகிக்கொண்டிருக்கிறது.உலகளவில் உயர்ந்துக்கொண்டிருக்கிறது.உலகில் என்ன மாறுதல் நடந்தாலும்..அது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கிறது.

முன்பெல்லாம்..ஒரு நாட்டின் உள்ள தங்க இருப்பை வைத்துத்தான் அந்நாட்டு பொருளாதாரமே மதிப்பிடப்பட்டது. இப்பழக்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சன் மாற்றினார்.

அப்போதுதான்...தங்கத்தின் மதிப்பீடு பின்னுக்குப் போய். கரன்ஸி மதிப்பீடே நாட்டின் பொருளாதார மதிப்பீடாக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியாவில் கூட..அதற்குப் பின்னர்தான் 'எவ்வளவு சதவிகிதம் கரன்ஸி நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதோ..அதில் குறிப்பிட்ட சதவிகிதம்..தங்கம் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டும்' என்ற முறை வந்தது.

தங்க நகைகளை வாங்கும்... சாமான்யர்கள்...ஒரு முதலீடாகத்தான் நினைத்து வாங்குகிறார்கள்.அதனால்தான் பெண்கள் கல்யாணமாகிப் போகும்போதும்.. ஏற்படப்போகும் எதிர்பாராத செலவுகளுக்காக ..பாதுகாப்பாக நகைகளை..முடிந்த அளவிற்கு கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.ஆனால்...அதுவே..கல்யாணம் என்றால் நகைகள் என்பது கட்டாயம் ஆகி விட்டது.

இன்றைக்கு...உங்க கோல்டு கவுன்சில் கூற்றுப்படி ..தங்க உபயோகத்தில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது.

ஆம்...இன்றைய நிலையில் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமா?

இல்லை என்கிறது ஒரு தரப்பு.இவர்கள் தங்களிடம் உள்ள நகைகளில் ஒரு பகுதியை விற்று..லாபம் பார்க்கிறார்கள் இன்று.

இன்னொரு தரப்போ..என்ன விலை விற்றால் என்ன? சேதாரம் எவ்வளவு சதவிகிதம் இருந்தால் என்ன? தயாரிப்பு விலை என்னவானால் என்ன? என்றெல்லாம் எண்ணாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த சேதார விஷயத்தைப் பாருங்கள்...

இன்று சவரன் விலை 1400 என வைத்துக்கொண்டால்..அதை நகையாக வாங்கும் போது 20 சதவிகிதம் சேதாரம் என்கிறார்கள்..விலையிடும்போது.அதாவது 280 ரூபாய்., அப்போது..சந்தை விலை 1400 என்றாலும் ..நாம் கொடுப்பது 1680 ரூபாய் என்பதை மறக்கக்கூடாது.

Monday, March 2, 2009

பெண்களும்...அந்த மூன்று நாட்களும்...

ஆன்மீக காரியங்கள் செய்யும் போது... வீட்டுவிலக்கு ஆன பெண்கள் கலந்துக் கொள்ளக்கூடாது என்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஒரு முறை ஜக்கி வாசுதேவிடம் ஒரு அன்பர் கேட்டார்...அதற்கு ஜக்கி அளித்த பதில்....

'ஆணும்..பெண்ணும்..ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டவர்களின் முட்டாள்தனம் இது..

ஆதிகாலத்தில் உடல் வலுவாக இருந்த காரணத்தால்..ஆணின் ஆதிக்கம் ஓங்கி இருந்தது..ஆனாலும் ..ஒவ்வொரு கணமும் தன் எண்ணத்தை பெண் ஆக்கிரமிப்பதை அவன் கவனித்தான்.

உடல்ரீதியாக பலம் கொண்டவனாக இருந்த போதிலும்...மன ரீதியாகப் பெண்ணிடம் அடிமைப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் அவனை ஆட்டிப்படைத்தது.கொஞ்சம் விட்டால்..அதிகாரத்தைப் பெண் எடுத்துக் கொண்டுவிடுவாளோ..என்று..அரசர்கள்,மதகுருமார்கள் என அனைவரும் கலங்கினார்கள்.அதனால் பெண்ணுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.அதில் ஒன்றுதான் இந்த மாதவிலக்கும்.

மாதம் ஒருமுறை..பெண் அசுத்தமாகிறாள்..என்று சொல்பவர்கள்..வசதியாக ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.

நீங்கள் உங்கள் அன்னையின் கருவில் இருந்த பத்து மாதங்களும்..அவளுடைய அசுத்தங்கள் வெளியேறவில்லை.அப்படியானால்...அந்த அசுத்தங்கள்தானே நீங்கள்? படிப்படியாக உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள்.உங்கள் உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும்,நரம்பும்,தசையும்,எலும்பும்..அந்த அசுத்தத்தால்தானே உருவாயிருக்க முடியும்?

ஒரு பெண்ணை அசுத்தம் என்றால்...அவளிடமிருந்து உருவான நாம்..அவளைக்காட்டிலும் அசுத்தமானவர்கள்.....என்றார்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...

வாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.
1.நல்ல உணவு
2.நல்லதூக்கம்
3.அன்பான வாழ்க்கைத்துணை.

முதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.

இரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..

உணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.

தூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.

ஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.

மனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.

இரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..

மேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.

தூக்கம் பற்றி பதிவு போட காரணமாய் இருந்த பரிசலுக்கும்..தாமிராவிற்கும் நன்றி..

Sunday, March 1, 2009

மட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு

(எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல்)

திகதி: 02.03.2009 // தமிழீழம் // [விடியல்]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது.


இதன்போது வெல்லாவெளியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த 14 வயது சிறுமியை கதறக் கதற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். அச்சிறுமியின் தாயை கட்டிப்போட்டபின் தாயின் முன்னாலேயே இச்சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது. சம்பவத்தன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி- வெல்லாவெளிப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர். வீடுகளிலிருந்த ஆண்கள் அனைவரையும் ஆலயம் ஒன்றுக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர்.


பின்னர் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீட்டிலுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் வீட்டிலிருக்கின்ற பெண்களின் விபரங்களையும் அவர்களின் வயதுகளையும் கேட்டு குறித்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தயைக் கட்டிப்போட்டபின்னர் ஏனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். 14 வயதுடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


இவர் பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருப்பதாக இவரது தாயார் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்ப பொது வைத்தியசாலைக்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸார் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இச்சிறுமியை விசாரணை செய்துள்ளனர்.


எனினும் சம்பவத்தன்று குறைந்தது 5 வீடுகளிலாவது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்களை தர வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர். ஆனால் சுற்றிவளைப்பின்போது சில வீடுகளில் இருந்து பெண்களின் கூக்குரல் சத்தங்கள் கேட்டதாகவும் உடனே அவ்விடத்திற்குச் சென்று தம்மால் பார்க்கமுடியாமல் விசேட அதிரடிப் படையினர் நிறுத்திவைக்கப் பட்டிருந்ததாகவும் வெல்லாவெளி பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக துணை இராணுவக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானை நேரில் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் இச்சம்பவம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பிள்ளையான் " இதற்காகத்தான் நான் சிவில் பாதுகாப்பை கேட்டிருந்தேன். கருணாதான் எல்லாவற்றையும் குழப்பினார். இப்பொழுது எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. கருணாவின் அடுத்த கூட்டத்தில் போய் கேளுங்கள்" என கூறி நைசாக நழுவிவிட்டாராம். இச் சம்பவம் மட்டக்களப்பு மக்களிடையே பெரும்பீதியை தோற்றுவித்துள்ளது.


அண்மையில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் பெண்களை சிங்கள இராணுவத்தினர் விருந்தாக்கி கொள்ளுமாறு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

--
அன்புடன்,

தமிழன்.