Monday, October 21, 2013

வாய் விட்டு சிரிங்க...



1) இன்னிக்கு இன்டெர்வியூ போன கம்பெனியில என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருந்தாங்க...
   ஏன்..
   நேர்முகத்தேர்வாம்..

2)அரபு நாட்டிலே போய் ஃபோட்டோ எடுத்தியே..என்ன ஆச்சு?
  எல்லாம் ஷேக் காயிடுச்சு

3)எங்கப்பா 40 திருடர்களை அவர் சர்வீஸ்ல புடிச்சிருக்கார்?
 உங்கப்பா பேரு என்ன?
 அலிபாபா

4)வெயிட்டே இல்லாம கட்டப்பட்ட கட்டிடம் எது தெரியுமா?
  எது?
  லைட் ஹவுஸ்

5)சட்டை புதுசா இருக்கே! தீபாவளிக்கு எடுத்ததா?
  இல்லை....எனக்கு எடுத்தது

6)உங்க படத்துலே வசனம் எல்லாம் கிணத்திலே இருந்து பேசுகிறாப் போல இருக்கே...ஏன்?
  அவ்வளவு டீப் பான வசனங்கள்


Thursday, October 17, 2013

கொள்ளுத்தாத்தா வழியில் பேரன்....



சாதாரணமாக...தாத்தாக்குரிய சில குணாதிசியங்கள்..பேரனுக்கும் சில ஏற்படும் எனப்படுவது இயற்கையிலேயே அமைந்தது.

அப்படி ஒன்று, இன்று கொள்ளுத்தாத்தா வழியில் பேரனுக்கும் வந்துள்ளது.

பாரதப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்த போது, தி.மு.க., பற்றி நேரு ஒருசமயத்தில், "நான்சென்ஸ்" என்று கமெண்ட் அடித்தார்.

அதை அப்படியே கிண்டல் செய்து, கலைஞர் கதை வசனம் எழுதிய 'திரும்பிப்பார்' படத்தில், சிவாஜி கணேசன் பாத்திரம், நேருவைப்போல கறுப்புக்கண்ணாடி அணிந்து, 'நான்சென்ஸ்' என்று அடிக்கடி கூறுவது போல படைத்திருந்தார் கலைஞர்.

இன்று....

நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல், தன் கட்சி கொண்டுவர இருந்த அவசரச் சட்டத்தையே கடைசி நிமிடம் வரை வாளாயிருந்துவிட்டு, பின்.."நான்சென்ஸ்' என்றுள்ளார்.

இதை கலைஞர் எழுதிய அன்றைய வசனத்துடன் மனம் ஒப்பிடுகிறது.ஆனால் இன்று இதை நையாண்டி செய்பவர் யாருமில்லை.

தாத்தா வழியில் பேரன் சென்றது..சரியான வாரிசு அரசியல் என்பது இதுதான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, October 15, 2013

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா..கலைஞர் தலைமையில்..



சமீபத்தில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா..தமிழக அரசுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

ஆனால். இதில், பல பிரபலங்கள் கௌரவிக்கப் படவில்லை..என்று பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.தவிர்த்து, நடிகர்,நடிகைகள் கௌரவிக்கப்பட்டது போல, மற்ற திரைக்குப் பின் இயங்கும் கலைஞர்கள் கௌரவிக்கப்படவில்லை.

குறிப்பாக, கலைஞரை கௌரவிக்காதது பெரும் தவறென்றே தோன்றுகிறது.

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும்...1947 முதல், அறுபத்தி ஆறு ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் ஒன்றிணைந்தவர் கலைஞர்.கிட்டத்தட்ட 75 படங்களில், கதை,வசனகர்த்தாவாகவோ, படலாசிரியராகவோ,தயாரி[ப்பாளராகவோ...கலைஞர் செயல்பட்டிருக்கிறார்.வாழும் வரலாறான அவரை விடுத்து ஒரு தமிழ் சினிமா விழாவா?

தி.மு.க., கட்சியைச் சார்ந்தவராய் இல்லாதாரும்...கலைஞரின், திரையுலக சேவையை மனதாரப் பாராட்டுவர்.

அப்படிப்பட்டவர்கள் துயரப்பட வேண்டாம்...

தமிழின் முதல் சினிமா, "கீசகவதம்" 1916ஆண்டுதான் வெளியானது.அதை வைத்துப் பார்த்தால், 2016 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு.

அவ்விழா, கலைஞர் தலைமையில் கண்டிப்பாக நடைபெறும்.

விருப்பு, வெறுப்பு இன்று அவ்விழாவில், உண்மையில் கௌரவிக்கப் பட வேண்டிய அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்படுவர்.

Friday, October 11, 2013

மெகா பட்ஜெட் படங்களும், ஏமாற்றப்படும் ரசிகனும்...



சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்

'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'

இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..

ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 100 கோடிகளை தாண்டும் படங்கள்..

இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.ஒரு நாளில் 150 காட்சிகள் (சென்னையில் மட்டும்)திரையிடப் படுகின்றன.இது போலவே பிற மாவட்டங்களிலும்.

தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.

படத்தைப் பற்றி விமரிசனம் வரும் முன், ரசிகனை ஏமாற்றி வசூலை அடைந்து விடுகின்றன.

இது ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் தான் செத்துட்டான்..என்பது போல..(படம் வசூலாகிவிட்டது ஆனால் ஓடத்தான் இல்லை.)

போலிகளை விற்று வியாபாரம் செய்வதற்கும், இதற்கும் அதிக வித்தியாசமில்லை.

ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்.


Thursday, October 10, 2013

காதலாவது...கத்திரிக்காயாவது..(ஒரு பக்கக் கதை)



தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களுக்கு அவரவர்கள் எதிர்காலம்தான் முக்கியம்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளிச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

Wednesday, October 9, 2013

வாய் விட்டு சிரிங்க....



1)ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?

உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2)என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...

நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!


3)நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4)நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க

5.)தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய் காயின் ஒன்று கொடுத்தேனே!

மகன்-ஆமாம்..ஆனா..பஸ்ல கண்டக்டர்...ஐந்து ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.)கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..

அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.



Tuesday, October 8, 2013

அட்டை படும் பாடு...



அந்த வீட்டில் எல்லா முடிவையும் அம்மாதான் எடுப்பார்.ஆனால் அப்பா முடிவெடுப்பது போல தோன்றும்.அம்மாவும், ஊரில் அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்.தவிர்த்து, இக் குடும்பத்தில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் உச்ச முடிவு அப்பாவையேச் சேரும் என்றும் ஒரு மாயத் தோற்றம்.

அவர்களது மகனுக்கான அத்தியாவசிய செலவுகளில் ஏற்றம் காரணமாக அவனுக்கு விழும் பற்றாக்குறையை அம்மா தருவார்.திடீரென அம்மாவிற்கு, தான் கொடுக்கும் பற்றாக்குறையை மகன் நேரில் வாங்கக் கூடாது எனக் கருதி மகன் பெயருக்கு ஒரு அட்டையை வழங்கி, மகனிடம் அவ்வட்டையைக் காட்டி வங்கி ஒன்றில் கணக்கு ஆரம்பிக்கும் படியும், அவனது பற்றாக்குறை பணத்தை தான் நேரிடையாக வங்கியில் செலுத்தி விடுவதாகவும், இது கட்டாயம் என்றும் கூறினார்.

உடன், மகன் அப்பாவிடம் இதை எடுத்துச் சென்றார்.

அப்பா , அம்மாவிடம் சொன்னார், 'அவன் நம் மகன்.அவனுக்காகத் தான் நாம் இருக்கிறோம், அவனிடமிருந்தே பெற்ற அவன் பணத்தில், அவனுக்கு பற்றாக்குறை ஏற்படுகையில் நாம் கொடுக்க வேண்டியது கடமை.இதற்கு அட்டையெல்லாம் ஏன்? வீண் செலவு..தவிர்த்து, பணம் பெற வேண்டியது அவன் உரிமை..அதற்கு கண்டிஷன்ஸ் ஏன்? ஆகவே அட்டையே  தேவையில்லை என்றார்?'

மகனுக்கோ அப்பா இப்படி சொன்னது ஒரே சந்தோஷம்.

ஆனால், அம்மாவோ, இந்த வீட்டில் நான் வைத்ததுதான் சட்டம்..ஆகவே அட்டை அவசியம் என தனது வீடோ பவரை உபயோகித்தார்.

அப்பாவிற்கும், மகனுக்கும் வாய் பேச வார்த்தையில்லை.


Monday, October 7, 2013

தாமதமாய் ஒரு விமரிசனம்...



இந்த படத்திற்கு மிகவும் தாமதித்து விமரிசிக்கக் காரணம்..

ஒரு வாரப் பத்திரிகை மதிப்பெண் குறைவாகப் போட்டதால் அவ்விதழ் அலுவலகத்திற்கே போய் நீதி கேட்டதால் ,சற்றே இப்படத்தை என் வலைப்பூவில் விமரிசிக்க பயம்..

இனி..பல இடங்களில் படத்தைப் பார்த்து விட்டதாலும்..சில இடங்களில் படத்தை எடுத்து விட்டதாலும் , இனி எழுதலாம் என்று எழுதியுள்ளேன்.

மகள்..படிப்பில் சற்று திறமைக் குறைவு...அதற்குக் காரணம் ஆசிரியையும், பள்ளி நிர்வாகத்தின் அடாவடி செயல்களும் என்கிறார்கள், சரி .

பள்ளியில் பணத்தைக் கட்ட, தந்தை தயாராய் இருந்தும், அப்பணத்தை வாங்க மறுக்கும் நாயகன்..மகளின் மீது அதீத பாசம் கொண்டவனா?

சம்பளம் கிடைக்கவில்லை என்பதால்...குடும்பத்தை விரோதித்துக் கொண்டு அண்டை மாநிலம் சென்று அங்கு வேலை செய்கிறானாம்...மகள்..ஆசைப்பட்டுக் கேட்ட நாய்குட்டிக்காக..ரைன்மேகர்..என்னும் ஆதிமக்கள் பயன்படுத்தும் கருவி தேடி..நாய் வாங்க 25000 ரூபாய்க்காக (??!!)  செல்கிறானாம்.அவர்கள் அதைக் கொடுக்க மறுக்க ..அந்த ஆதிவாசியின் காலில் விழுகிறானாம்.

தந்தையிடம் போலி கௌரவம், பள்ளி முதல்வரிடம் போலிகௌரவம், ஆசிரியரிடம் போலி கௌரவம்...ஆனால்..சற்றும் தேவையில்லாத நாய்குட்டிக்கு தகுதிக்கு மீறி செலவு செய்வது என்ன நியாயம்.அதுவும் முன்பின் தெரியாதவர் காலில் விழுந்து கௌரவத்தை இழப்பானேன்.அதுதான் மகள் மீது பாசம் என்றால், அந்த தப்பான பாசம் தேவையில்லையே.

கடைசியில்...செய்தி சொல்ல வேண்டும் என்பதற்காக....அரசு பள்ளியில் படித்தாலேயே சிறக்கலாம்...எனகிறார்.இந்த ஞானோதயத்தை முதலிலேயே செயல் படுத்தியிருந்தால் பல அவமானங்களைத் தவிர்த்திருக்கலாமே.

ஒன்றே ஒன்று எனக்கு புரிந்தது...

வண்ணதாசன் மீது அளவற்ற பற்று கொண்டதால் நாயகனுக்கு படத்தில் 'கல்யாணி;' என்ற பெயர் என்று.

(பி.கு. படத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்றால்..என் வீட்டிற்கு வந்து விமரிசனத்திற்கு தகராறு செய்தால் என்ன செய்வது? எளியோன் தாங்க மாட்டேன். அதனால்தான்.)  

மிஷ்கினும்...ராஜாவும்..

               

ஓநாயும்..ஆட்டுக்குட்டியும்..

இந்த படத்தைப் பற்றி விமரிசிக்க என்ன இருக்கிறது.

தமிழ்ப் படங்களின் தரம் மாஸ் ஹீரோக்களால் மாறாமலேயே இருக்கிறதே என வருந்தும் ரசிகர்களுக்கு ஆறுதலாக பல லோ பட்ஜெட் படங்கள் மிகவும் தரத்துடன் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..

'முகமூடி' போடாமல் வந்திருக்கிறது மிஷ்கினின் படம்...

இப்படத்தைப் பற்றி என்னத்த சொல்ல..?

மிஷ்கின் சார்..உங்களுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் சார்பில்..ஒரு பெரிய சல்யூட்...

உலகத் தரத்தில் ஒரு படம்..

ஆரம்பக் காட்சியிலே இருந்தே..நாற்காலியில் ரசிகனைக் கட்டிப் போட்டு விட்டு...கடைசியில் தான் அவிழ்த்து விடுகிறீர்கள்..

படத்தில், ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அளவில் யாரும் இல்லை, கதாநாயகி இல்லை, டூயட் இல்லை...இது தமிழ்ப்படமா? வியக்கவைக்கிரது.

ஆனால்...இவர்கள் யாரும் தேவையில்லை..

நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, யதார்த்தம் ..இவை இருந்தால் போதும்..அது வெற்றிப்பட ஃபார்முலா..என உணரவைத்து விட்டீர்கள்.

அதே சமயம் சில லாஜிக் மீறல்களும் உண்டு, சில காம்பரமைஸ்களும் உண்டு.

ஆனால் எல்லவற்ரையும் மறக்க வைத்து விடுகிறது படம்.

அட..அட..அட..இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

அட்டகாசம் மிஸ்கின்...

அதே சமயம் இளையராஜா...

என்ன சொல்ல... ஒரே வார்த்தை...

ராஜா ராஜா தான்.. (இது போதும் என எண்ணுகிறேன்). படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு ராஜாவிற்கு.

மிஷ்கின்...ரொம்பவே வுல்ஃப் வேடத்திற்கு பொருந்துகிறார்.இரட்டைநாடியாயும் இருப்பதால்.

ஸ்ரீ யும் பாத்திரம் உணர்ந்து அசத்தியுள்ளார்.

திருட்டி டிவிடி யில் பார்க்காமல், மக்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்தால்..படம் இமாலய வெற்றி அடையும்.

மக்கள் செய்வார்களா?