Sunday, November 30, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.இந்த கம்ப்யூட்டரை அரசாங்க அலுவலகங்களில் வைக்க என்று புதுசா கண்டு பிடிச்சு இருக்காங்க...
அப்படி என்ன இதிலே இருக்கு
முதல்ல அதுக்கென சம்திங்க் தள்ளினாத்தான் மற்ற விவரங்களைச் சொல்லுமாம்.

2.என்னோட அடுத்த படம் இருவர் சம்பந்தப்பட்டது.சண்டை தீர்ற மாதிரி இருக்கும் ஆனா தீராது.இப்படி பல ஆண்டுகளாக நடக்கற கதை.படத்துக்கு பொருத்தமான ஒரு பெயரைச் சொல்லுங்க.
கர்நாடகா என்று வைக்கலாம்.

3.உன்னோட கணவர் இப்ப எல்லாம் உப்பு சப்பில்லா கதையா எழுதறாரே..ஏன்?
அவருக்கு இரத்த அழுத்தம் இருக்கறதாலே..டாக்டர் உப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

4.கதாசிரியர்-(பத்திரிகை ஆசிரியரிடம்)என்னோட புது கதையைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ஆசிரியர்-ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள்..ஆனால்.ஒரு கதை ஒருத்தர் சொந்த கற்பனையா?காப்பியடித்ததா?என்று கண்டுபிடிக்க எந்தக் கருவியையும் கண்டுபிடிக்கலையே

5.அலுவலகத்தில் உனக்கு மெமோ கொடுத்தார்களா? ஏன்?
தூங்கும்போது நான் குறட்டை விடுகிறேனாம்..அது மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்குதாம்..அதனால்தான்.

6.பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்..தான் புத்திசாலி என்பதை இப்படிக் கூறினார்
'முட்டாளாக முயன்று தோற்றவன் நான்'
அடுத்து வந்த எதிரணி பேச்சாளர் ..இதைக்குறிப்பிட்டு பேசும்போது..'ஆம்..அதிமுட்டாளான என் நண்பர் முட்டாளாக முயன்று தோற்றவர்'

Saturday, November 29, 2008

மும்பையில் அமைதி திரும்பியது

மும்பையில்..60 மணி நேர த்திற்கு பின்..அமைதி திரும்பியுள்ளது..தாஜ் ஓட்டல்.ஒபேராய் ஒட்டல் அனைத்தும் மீட்கப்பட்டன.

பயங்கரவாதிகளை பிடிக்க கமாண்டோ படை தில்லியிலிருந்து வந்தது.அவர்களுக்கு ராணுவ வீரர்களும்,கடற்கரை வீரர்களும் உதவினர்.

இத் தாக்குதலால் 183 பேர் பலியாயினர்..9 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.20 போலீசார்,மற்றும் 22 வெளிநாட்டவர் இறந்தவர்களில் அடக்கம்.ஒரு பயங்கரவாதி பிடிபட்டான்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் அதே நேரத்தில்...இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம்..

உயிரை பயணம் வைத்து போராடிய கமாண்டோ வீரர்கள்,ராணுவத்தினர்,கடற்படையினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறோம்..

இவர்களை அனைத்து இணைய பதிவினரும் தங்களது பதிவில் வாழ்த்த வேண்டுகிறேன்.

Friday, November 28, 2008

தமிழகத்தில் அன்பு எனப்படும் அரசியல்வாதி யார்?

1.இந்த உலகில் எங்கு சென்றாலும் காடு வெட்டியவன் தமிழன்,கழனியாகியவன் தமிழன்,பாடுபட்டவன் தமிழன்,பறிகொடுத்தவனும் தமிழன் என்பதைத்தான் காண்கிறோம்.தென்னாப்பிரிக்கா முதல் தென்னிலங்கை வரை இந்த அநியாயம் இருந்து வருகிறது.

2.நான் இந்திராகாந்தியைப்பார்த்த போது..எனக்கே புரியாத உந்துதலால்..ஏன்,எதற்கு என்றெல்லாம் சிந்திக்காமல்,அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.'no,no!Nofeet touching please'என்றார் பிரதமர் கனிவோடு...சொன்னவர் ஜெ.

3.ஓ..கிரேட் அண்ணா..அவர் சாதனை வீரர்.அண்ணாவை நீங்கள் இழந்தது துர்பாக்கியமே.அவருக்கு இருந்த சக்தியும்,மதிப்பும் தமிழ்நாட்டில் வேறோரு தலைவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! இதை சொன்னவர் பால் தாக்கரே, ஆனந்தவிகடன் 1973ல் அவரிடம் எடுத்த பேட்டியில்.

4.முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி,தயாநிதி தெரியும்..புகழ்,அன்பு என்ற மகன்களைத் தெரியுமா? கலாநிதிக்கு புகழ் என்றும்,தயாநிதிக்கு அன்பு என்றும் கலைஞர் பெயர் வைத்தார்.

5.பழைய ஜகன்மோகினி படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் வந்ததுமே..ஜெயமாலினி ரோலில் யாரை நடிக்க வைப்பது என்ற எண்ணம் வந்ததுமே எங்கள் ஞாபகத்தில் வந்தவர் நமிதா என்கிறார் இயக்குநர் விஸ்வநாதன்

6.அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் வீட்டிற்கு ஒரு முறை சென்றேன்.அவர் தன் 3 வயது பெண்ணைக்காட்டி,இவளுக்கு தமிழே வரவில்லை, இனிமேல் தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.அப்போது,அவரின் 1 வயது குழந்தை அழுதது.உடனே குட்டிப்பெண்..அப்பா லிட்டில் பிரதர் ஈஸ் கிரையிங்க் என்றாள்.நண்பர் தமிழில் சொல் என்றதும்,அவள் தட்டுத் தடுமாறி தம்பிக்கு தண்ணீலே கண்ணு என்றாள்.அனைவருக்கும் சிரிப்பு.

குண்டு வெடிப்புகளும்...இஸ்லாமியர்களும்...

கடந்த இரண்டு நாட்களில்..நான்..3 ஹிந்தி படங்கள் பார்த்தேன்..அந்த மூன்று படங்களுமே..மும்பையும்...குண்டுவெடிப்பு சம்பந்தபட்டதுதான்..

1.ஆமிர் - லண்டனிலிருந்து..திருப்பி அனுப்பப்பட்ட..டாக்டர் ஆமிர்..மும்பை ஏர்போர்ட்டில்..வந்ததுமே..அவனையும் அறியாமல்..ஒரு இஸ்லாம்..தீவிரவாத இயக்கத்தின் வலையில் வீழ்கிறான்..அவனது குடும்பத்தை தங்கள் கைவசம்..பிடித்து வைத்திருப்பவர்கள்..அவர்கள் விடுதலை ஆக வேண்டுமானால்..தாங்கள் சொல்படி..ஆமிர் கேட்க வேண்டும் என்கிறார்கள்.பேருந்தில்..தான் கொண்டுவந்து வைத்த பெட்டியில் வெடிகுண்டு இருக்கிறது என அறிந்து...அதை..தடுக்கும்..ஆமிர், அது வெடித்து இறக்கிறான்.

2.வெட்னஸ்டே- நஸ்ருடீன் ஷா,அனுபம் கீர்..நடித்த படம்..மும்பை வெடிகுண்டு..பல்வேறு..கட்டங்களில்..வைத்தவர்களை பழிவாங்கும் கதை..அருமையான..திரைக்கதை அமைப்பு.(இப்படத்தை.நான் பார்த்தது..புதன்கிழமை..படம் பெயர் புதன்கிழமை,மும்பையில் அன்று குண்டுவெடிப்பு)

3.மும்பை..மேரி ஜான்- மும்பை..ரயிலில் குண்டு வெடிப்பு...யார் வாழ்ந்தால் என்ன..யார் செத்தால் என்ன..வாழ்வு தொடர்கிறது..என்னும் கதை..

பொதுவாக பார்த்தால்..தீவிரவாதம்..என்றாலே..இஸ்லாமியர் சம்பந்தபட்டதாய் இருக்கிறது..இதையே..தினமலர்..சில தினங்களுக்குமுன்..தீவிரவாதம்..பற்றி எழுதும் போது..ஒரு இஸ்லாமியர் படத்தை போட்டதற்கு..பத்திரிகை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..நடந்தது..

ஆனால்..திரைப்படங்களில்..இவை..சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில்..இப்படி குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..

ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..

இவை தவிர்க்கப்பட வேண்டும்..

எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம்.

Thursday, November 27, 2008

மும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமானம்..

மும்பையில்..11இடங்களில் நடைப்பெற்றுள்ள..குண்டுவெடிப்பிற்கு..முஜாஹுதீன் இயக்கம்..பொறுப்பேற்றுள்ளது.கப்பலில் வந்த ,தீவிரவாதிகள்..போட் மூலமாக..குஜராத் வழியாக உள் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

பல மாதங்கள்..திட்டம் ..தீட்டப்பட்டு..இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக..செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை கிடைத்த தகவலின்படி 125பேர் இறந்ததாகவும்..327 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

நமது உளவுத்துறை என்ன செய்தது...

இப்பொதேல்லாம் இந்தியாவில்..ஏதெனும் ஒரு பகுதியில்..குண்டுவெடிப்புகள் நடந்துக்கொண்டுதான்..இருக்கிறது..

இதற்கு..பொறுப்பேற்று..மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படீல் பதவி விலகவேண்டும்..

தலைவர்கள்..இறந்தவர்கள் குடும்பத்திற்கும்..காயமடைந்தோர் குடும்பத்திற்கும்..வழக்கம் போல..அனுதாபத்தை தெரிவித்து விட்டு..நஷ்டஈடு..கொடுத்தால் மட்டும் போதாது.இனி வரும் நாட்களிலாவது இதுபோல் நடக்காது..முன்னெச்சறிக்கையுடன் நடக்க வேண்டும்..

அரசியல் கட்சிகள்..ஒருவர் மீது..ஒருவர்..குற்றம் சாட்டாமல்..ஒற்றுமையாய்..இருக்க வேண்டிய நேரம் இது.

உள்நாட்டு தமிழனும்...வெளிநாட்டு தமிழனும்...

தமிழன்..

அவன்..உள்நாட்டு தமிழனானாலும் சரி..வெளிநாட்டு தமிழனானாலும் சரி...இளிச்சவாயன் தான்...

காவிரியில்...நம் தமிழகப்பகுதிக்குள்..வரும் தண்ணீரில்..தர்மபுரி,கிருஷ்ணகிரி..மக்கள் தாகம் தீர்க்க..ஒகேனக்கல் திட்டம் தீட்டப்பட்டது.அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு..தெரிவித்து வருகிறது..கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்த சமயம்...இந்த பிரச்னையை..தள்ளிவைத்தார்..கலைஞர்.தேர்தல் முடிந்து..வந்த புது அரசும் இத் திட்டத்தை எதிர்த்தது.

சமீபத்தில்..இது பற்றி பேசிய..காங்கிரஸ் மூத்த தலைவருள் ஒருவரான..வீரப்ப மோய்லி பேசும்பொது...இந்த விஷயத்தில்..பிரதமர் தலையிடமுடியாது..என்றும்..இது..இரு மாநில பிரச்னை என்றும்..மாநிலங்கள்..தங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தித்தான்..தீர்த்துக் கொள்ள வேண்டும்..என்று கூறியுள்ளார்.

கேரளா..முல்லைப்பெரியார் ,ஆந்திரா..பாலாற்றில்..அணைகட்டும் திட்டம்..என எல்லாமே தமிழகத்திற்கு எதிராகவே நடந்து வருகின்றன.

உள்நாட்டு பிரச்னையிலேயே..தமிழனின் உரிமைக்கு..பிரதமர் தலையிட முடியாது..என்னும் போது..வெளிநாட்டு..இலங்கை தமிழர்களுக்காக..பிரதமர் தலையிட முடியுமா..

இது...சிங்களர்களும்...இலங்கை தமிழர்களும்..தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்னை..என சொன்னாலும் சொல்வார்கள்...

தமிழா...நீ எங்கிருந்தாலும்..ஏமாளிதான்..இளிச்சவாயன்தான்.

Wednesday, November 26, 2008

கலைஞர்..s.vee.சேகர் சந்திப்பு...

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான சேகர்..சில மாதங்களாக..தலைமையால் புறக்கணிக்கப் பட்டு வந்தார்..கட்சியின்..பொதுக்குழு கூட்டத்திற்கும் அவருக்கு அழைப்பு இல்லை.அவரது..மகள் திருமண அழைப்பிதழில்...ஜெ யின்..புகைப்படம்..இல்லாததால்..திருமணத்திற்கு..ஜெ வரவில்லை..அதுமுதல் தலைமையால்..கவனிக்கப்பட்டார்..சேகர்.சமீபத்தில் நடந்த அவர் உறவினர் திருமணத்தில்..கலைஞர் கலந்துக் கொள்ள..அவருடன் சேகர்..புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.பின்..சத்யராஜ் இல்ல திருமணத்தில்..ஸ்டாலினுடன்..இருந்தார்..

அ.தி.மு.க.விலிருந்து..நீக்கப்படுவீர்களா? என்று கேட்டதற்கு..சங்கராச்சாரியார்..தன்னை..அ.தி.மு.க.வில்.சேரச்சொன்னதாகவும்...தான் நீக்கப்பட்டால்..மீண்டும் அவர் சொல்படி..நடப்பேன் என்றவர்..தனக்கு..தன் கட்சியின் கதவுகள் மூடினால்..திறக்க 5 கதவுகள் தயாராயிருக்கின்றன..என்றார்.

இப்போது ..கலைஞர்..சேகர் ..சந்திப்பு நிகழ்ந்து இருப்பது..மரியாதை நிமித்த சந்திப்பு..என சேகர் கூறினாலும்...சங்கராச்சாரியார்..ஒரு சமயம்..தி.மு.க.வில்.சேரச் சொல்லி இருப்பாரோ..என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது..

இந்த சமயத்தில்..காடுவெட்டி குரு மீதானா..வழக்கை..அரசு..வாபஸ் வாங்கி இருப்பதால்...பாண்டிச்சேரி ..நீதிமன்ற வழக்கும் வாபஸ் பெற ஏற்பாடுகள் நடக்குமா தெரியவில்லை.

தமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..

சாதாரணமாக நாம் இயக்குநர்கள் பற்றி பேசும் போது...ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,பாலு மஹேந்திரா,மணிரத்தினம்..என்றெல்லாம்..பேசுவோம்.ஆனால்..நாம் அனைவருமே மறந்து விட்ட..ஒரு இயக்குநர் இருக்கிறார்..குடும்பப் பாங்கான பல வெற்றிப்படங்களைத் தந்தவர்..

ஆம்..அவர்..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..

உருவில் குள்ளமானவர்..அவர் படைப்புகளோ..உச்சம்..

தெய்வப்பிறவி..படத்தின் கதை வசனகர்த்தா..

பணமா..பாசமா...இவர் தந்த மா பெரும் வெற்றிப்படம்..ஜெமினி,சரோஜா தேவி,பகவதி,எஸ்.வரலட்சுமி..நடித்தது...இப்படத்தின் தாக்கமே..பாலசந்தரின்..பூவா..தலையா..

கை கொடுத்த தெய்வத்தை ..மறந்து விட முடியுமா? நடிகையர் திலகம்..அப்பாவி பெண்..கோகிலாவாகவே மாறி..நடித்த அவர் நடிப்புலகின் ஒரு மைல்கல்படம்.நடிகர் திலகத்தையே இப்படத்தில்..சாப்பிட்டுவிட்ட நடிப்பு.

அடுத்து..ஆயிரம் ரூபாய்...இப்படத்திலும்..குறத்தியாக வந்து..நடிப்பில் நம்மை அசத்தியவர் சாவித்திரி.

இவரின் என்னதான் முடிவு என்ற படம்..ஜனாதிபதியின்..வெள்ளிப் பதக்கம் பெற்றது..எப்படிப்பட்ட கொடியவனாய் இருந்தாலும்...மனம் திருந்தி...நல்லவன் ஆனால்..அவனை மன்னிக்க வேண்டும்..என்ற கருத்தைக்கொண்ட படம்.பாலையாவின் அசத்தலான நடிப்புஇதில்.

அடுத்து..தெய்வத்தின் தெய்வம்...விதவை..மறுமணத்தை வலியுறுத்திய படம்.

சாரதா..குமுதம்.செல்வம்,கண் கண்ட தெய்வம்,பேசும் தெய்வம்,குலமா குணமா,குறத்தி மகன் என பட்டியல் நீளும்.

கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய கற்பகம்..இதுவும் மாபெரும் வெற்றிப்படம்..இப்படப் பெயராலேயே..இவர் பின்னர் ஸ்டூடியோவும் ஆரம்பித்தார்.

சுஜாதா நடித்த அடுக்குமல்லி...பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான படம்

நத்தையில் முத்து...தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ..ஒரு பெண்ணின் கதை..

ஆதி பராசக்தி..என்ற..பக்தி படமும் இவரது வெற்றிப்பட்டியலில் அடங்கும்...

இப்படிப்பட்ட ..ஒரு இயக்குநர்..ஏன்..தமிழ் பட உலகம் மறந்துவிட்டதூ?

Tuesday, November 25, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Monday, November 24, 2008

ஜாதிகள் இருக்குதடி பாப்பா...

பள்ளியில் ஆரம்ப காலங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடல்..

சாதிகள் இல்லையடி பாப்பா - குலம்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ஆனால்..அப்பள்ளியில் சேர..ஜாதி சான்றிதழ் வேண்டும்..

சிறு வயதில்..பள்ளி பருவம் முடியும் வரை..மாணவர்கள் மனதில்..சாதி விதைப்பதில்லை.

அவன் கல்லூரியில் கால் வைத்ததுமே..ஜாதி அடிப்படையில்தான்..சேர்க்கப்படுகிறான்..அது வேறு விஷயம்..அதைப் பற்றியதல்ல இப் பதிவு. அவனுக்கு..கல்லூரி தேர்தலில் நிற்பதற்குக் கூட இந்த ஜாதிப்பேய் துணை நிற்கிறது.நான் உயர்ந்த ஜாதி..இவன் தாழ்ந்த ஜாதி..என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்தி விடிகிறது.

அவன் படிப்பு முடித்து வந்ததும்..வேலை தேடும் படலம்..அவனுக்கு ஜாதி வெறி இருக்கிறதோ ..இல்லையோ..அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்..அவன் மனதில்..இந்த விஷத்தை தூவி விடுகிறார்கள்.

இளைஞர்கள் மனதில்..'உனக்கு வேண்டிய திறமை இருக்கிறது..இந்த வேலை..உன் திறமைக்கு கிடைத்த வேலை..'என்ற எண்ணம் ஏற்படவேண்டும்..

அப்படிப்பட்ட..நிலை..வரும்போதுதான்..ஜாதிப்பேய் ..சமூகத்தைவிட்டு ஓடும்...

இன்றைய சூழலில்..காதல் மட்டும் தான் ஜாதி பார்க்காமல் வருகிறது.ஆகவே தான்..கலப்புத் திருமணங்களுக்கு..அரசு ஆதரவு அளிக்கிறது..

கடைசியாக...பெரும்தலைகளே..உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

ஜாதி ஏற்றத்தாழ்வுகள்...உங்கள் தலைமுறையுடன் ..ஒழியட்டும்...

தேவையில்லாமல்...நம் சுயநலத்திற்காக..இளைஞர்கள் மத்தியில்..ஜாதி என்னும் நச்சு செடியை வளர்க்காதீர்கள்..

நடந்ததை மறப்போம்...நடப்பதை நினைப்போம்...இதுவே நம் தாரக மந்திரமாய் இருக்கட்டும்..

புதியதோர் உலகம் செய்வோம்....

Sunday, November 23, 2008

மாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...

மாசறு பொன்னே..வலம்புரி முத்தே..

அருமைக் கண்மணியே..அன்பு மாறனே..

உன்னுடைய மகன்களை

தத்தித் தவழ்ந்த பருவம்

தளிர்நடை போட்ட பருவம் முதல்

என் அரவணைப்பில் வளர்த்து..

சன் டிவி ஆரம்பிக்க உதவி

ஒருவனை மத்திய அமைச்சராக்கி..

என் சிந்தை குளிர்ந்து..

கண்களுக்கு ஆச்சரியக் குறியாய்..

அழகும்..அறிவும்

கலந்த மகன்களாய் ஆக்கினேன்

ஆயின் இன்றோ

தேளாய்..பாம்பாய்..நண்டாய்

கொட்டுகிறார் என்னை..

எதைச்சொல்லி மனதைத் தேற்றிக் கொள்வது

யாரை நினைத்து மனதை மாற்றிக் கொள்வது?

Saturday, November 22, 2008

வண்ணதாசன்..என்னும் கல்யாண்ஜியும்...நானும்..

வடகரை வேலனின்..கதம்பத்தில்..கல்யாண்ஜியின் கவிதைப் பற்றி எழுதி இருந்தார்..

அதைப்படித்ததும்...என் முன்னால்..ஒரு நீர்ச்சுழல்..(எவ்வளவுநாள்தான்..கொசுவத்தி..என்று எழுதுவது?)

கல்யாணசுந்தரமும்..நானும்..ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்கள்..அவரும்..நானும்..ஒன்றாக 3 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோம்.அந்த சமயங்களில் அவருடன் இலக்கியம்..கவிதைகள் உள்பட பல விஷயங்களை விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் படைப்புகள்..பத்திரிகைகளில் வருவதற்கு முன் கைப்பட எழுதியதை..எனக்கு படிக்க கொடுத்து..நான் படித்த பேறு பெற்றவன்..அந்த சமயங்களில்..என் கதைகள் பல கலைமகள் இதழில் வரும்...அதைப்படித்துவிட்டு..இப்படி எழுதியிருந்தால்..இன்னும் நன்றாக இருந்திருக்கும்..என..என் எழுத்துக்களை..பட்டை தீட்டியவர்.அதன் பயன்தான்..நான் எழுதிய 'பாரத ரத்னா' என்ற என் நாடக நூலுக்கு..2005க்கான சிறந்த நூல் என்று..இலக்கிய சிந்தனை பரிசைப் பெற்று தந்தது.

சாகித்ய அகாடமி..பரிசுக்காக..முதல்வரிசையில் உள்ளவர்..விரைவில் கிடைத்து விடும் என எண்ணுகிறேன்.

தமிழக அரசின்..கலைமாமணி விருது பெற்றவர்..

இன்றும்..அவ்வப்போது..திருநெல்வேலியில் உள்ள அவருடன்..தொலைபேசியில் உரையாடுவேன்..எங்கள் நட்பு தொடர்கிறது..

இந்த நிகழ்ச்சிகளை அசை போட உதவிய வேலனுக்கு நன்றி

Friday, November 21, 2008

அதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...

அண்ணாசாமிக்கு...திடீரென..தான் ஒரு கோடீஸ்வரன் ஆக வேண்டும்..என்று ஆசை ஏற்பட்டது..

அதற்கான வழிமுறைகளை ..யோசித்தார்...

எங்காவது வேலைக்குப் போனால்...காலம் முழுதும் வேலை செய்து...ஓய்வு பெறும்போது..அதிக பட்சம் மொத்தமாக 10 லட்சம் கிடைக்கும்....மேலும்..அதற்கு..உடலுழைப்பும் தேவை..அதனால் அது வேண்டாம்..

சினிமாவில் நடிக்கப்போகலாம்...அதற்கு நடிக்கத்தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..கதை..வசனம் கூட எழுதலாம்...ஆனால்..சிறிது காலம் கழித்து...ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..ஏதாவது தொலைக்காட்சி பங்குகளை..வாங்கிப்போட்டால்..அவர்களுடன் மோதல் ஏற்படும் சமயத்தில்...அவர்களுக்கே அவர்கள் பங்குகளை விற்றால் ..கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...ஆகவே கோடீஸ்வரன் ஆக ..இதுவே சிறந்த வழி என தீர்மானித்தார்..

இப்போது..ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ..நடிக்கவோ..கதை..வசனம் எழுதவோ..சான்ஸ் கேட்டு அலைய தொடங்கி இருக்கிறார்

பூனை அல்ல..புலி..

பூனையைப்போல்..இருப்பவர்களை நம்ப முடியாது..என சொலவடை ஒன்று உண்டு...

இது ஏன் வந்தது என்றால்...நாம்..சாதுவாக இருக்கும் ஒருவரை..பூனைக்கு ஒப்பிட்டு சொல்வோம்..ஆனால் அதே பூனை..சீறும்போது..கால்களில் நகங்கள் வெளியே வர..கிழித்து எடுத்து விடும்.

அதே போல புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாம்..என்றும் சொல்வர்...இதற்கு..காரணம்..பூனையை துச்சமாக..மதிப்பதைப் பார்த்து...தன்னைப்போலவே உள்ள..பெரிய உருவில் உள்ள புலிக்கு பயப்படுபவர்..தனக்கு பயப்படவில்லை..என பூனை அப்படி நடந்துக்கொண்டிருக்கலாம்..

ஆனால்...உருவு சிறுத்தாலும்...கடுகு சிறியதுதான்...காரம் போகாது...
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...

பூனையுடன் ஒருவரை ஒப்பிடும்போது..இவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்..

உண்மை கசக்கும் என்பதால்..உண்மை..உண்மை அல்லாமல் போகிவிடுமா...

டாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)

ஏதேச்சையாக அந்த பக்கம் போன..சோமுவின் பார்வை..டாஸ்மாக்..கடையைப் பார்த்தது...

அங்கு நின்றுக் கொண்டு..ஷைட் டிஷ்..சகிதம்...தண்ணீ அடித்துக்கொண்டிருக்கும்...17 வயதுதான் இருக்கும்..அந்த சிறுவனைப் பார்த்தார்..

அது...அவரிடம் டிரைவராக வேலைப் பார்க்கும்...முனுசாமியின் மகனல்லவா?

தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும்...அவன் நன்கு படித்து..ஏதேனும்..அலுவலகத்தில் நல்ல வேலைக்குப் போக வேண்டும்...தன்னைப்போன்ற வேலை..தன்னுடன் போக வேண்டும்..என்று எப்போதும் தன்னிடம் புலம்பிக்கொண்டிருக்கும்...முனுசாமியின்..மகன்தான் அது..

கோபம் தலைக்கேற..வீடு வந்து சேர்ந்தவர்...போர்டிகோவில்..காரை..துடைத்துக் கொண்டிருந்த ..முனுசாமியைக் கூப்பிட்டார்.

'முனுசாமி..உன் மகனை..இன்று..மந்தவெளி..டாஸ்மாக் கடையில் பார்த்தேன்..தண்ணி அடித்துக்கொண்டிருந்தான்..அவனை கண்டித்து வை' என்றார்..

விஷயம் கேள்விப்பட்ட..முனுசாமிக்கோ வருத்தம் மேலிட்டது..'நான் எவ்வளோ தரம் சொல்லிட்டேன்..எங்க வீடு இருக்கும்..அஷோக்நகர்ல இல்லாத கடையா...அநாவசியமா பணம் செலவு பண்ணி..இதுக்காக மந்தவெளி வரணுமா?நான் இன்னிக்கு கண்டிப்பா கண்டிக்கிறேன்'என்றான்..

வாயடைத்துப் போய் நின்றார் சோமு..

Thursday, November 20, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந்திப்பும்...

அண்ணாசாமிக்கு சனிக்கிழமை மெரினாவில்..நடைபெறும்..பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ள ஆசை...ஆனால்...அவருக்கு யாரையும் தெரியாது...என்ன செய்யலாம்..என யோசித்தவர் ஒரு அசட்டு தைர்யத்தில் கிளம்பிவிட்டார்..

கலங்கரைவிளக்கம் அருகே..ஒரு மர நிழலில்..பேந்த..பேந்த..பாண்டியராஜன் போல...முழித்துக்கொண்டு..நின்றவரிடம்..வந்த ரோந்து போலீஸ் கான்ஸ்டபிள் கந்தசாமி..'ஏன் இங்க நிக்கறிங்க..நீங்க யார்....யாரைப்பார்க்கணும்' னு அடுக்கடுக்காய் கேள்வி..கேட்க..

சிறுவயது முதலே..போலீஸ் என்றதுமே பேண்ட் ஈரமாகிவிடும்..அண்ணாசாமிக்கு..இப்போதோ..போலீஸ் வந்து..கேள்வி கேட்கவே..பயத்தில்..நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள..'வெண்பூ..அத்திரி,தாமிரா..அதிஷா..'என்று சொல்ல ஆரம்பிக்க..உடனே..கந்தசாமி...தன் மொபைலில்...இன்ஸ்பெக்டருக்கு தகவல் தந்தார்..அடுத்த ஐந்தாவது நிமிடம்..இருபது
போலீஸ்காரர்கள்..படை சூழ..இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

'ஸார்..இந்த ஆளைப்பார்த்தா சந்தேகமா..இருக்கு...கேட்டா...வெண்பூ..அத்திரின்னு..ஏதேதோ சொல்றான்..எல்லாம்..code words மாதிரி இருக்கு..'என்றார் கந்தசாமி..

ஆஹா..இன்னிக்கு ஒரு அருமையான கேஸ் மாட்டி இருக்கு...லா காலேஜ் பிரச்னையிலே..பெயர் கெட்டு இருக்கும்...நமக்கு..இந்த சமயத்திலே..இவன் மாட்டி இருக்கான்..பக்குவமா டீல் செய்து..பெயர் வாங்கிடணும்னு நினைச்ச..போலீஸ் அதிகாரி..'யாருய்யா..நீ? எங்கிருந்து வர்றே?'என்று அண்ணாசமியை அதட்டினார்.

அண்ணாசமிக்கு உடனே பரிசல்காரர் ஞாபகம் வர.."அது வந்து..ஸார்..பரிசல்.."என இழுத்தார்..

ஓஹோ..பரிசல்ல வந்தியா...கள்ளத்தோணியா..என்று கேட்டபடியே..தன் புத்திசாலித்தனத்தை..கந்தசாமி பாராட்ட வேண்டும்..என்ற எண்ணத்தில்...ஜனகராஜ் பார்வையை..அவர் மீது வீசினார்.

அண்ணாசாமிக்கு..அடுத்து ஞாபகத்தில் வந்தவர்..கேபிள் சங்கர்.. 'அது வந்து..சார்..இந்த கேபிள் சங்கர்...'என இழுத்தார்.கேபிள் என்ற பெயரைக் கேட்டதுமே அதிகாரி...'ஓஹோ..நீ மதுரைக்காரனா..உன்னைப்பார்த்தா அஞ்சா நெஞ்சன் மாதிரி தெரியலையே..'என்றார்.

அண்ணாசாமி..'குட்டிப்பிசாசு..கும்க்கி..' என்றார்..

'சார்..நீங்க குட்டிப்பிசாசாம்..கும்க்கி..எடுத்துடுவாராம்..'என்றார் கந்தசாமி..

அப்படியா...என்ற அதிகாரி..கந்தசாமி கையிலிருந்த லட்டியை..வாங்கி..அண்ணாசாமி..கால்களில் அடிக்க ஆரம்பித்தார்....இரு லாடம் கட்டறேன் என்றபடியே....

அண்ணாசாமிக்கு இப்போது ஞாபகத்தில் வந்தவர்..டோண்டு...உடனே..'சார்..டோன்ட் டூ'என்றார்..

'அடிக்காதேன்னு..அதிகாரம் பண்றியா'என்றவாறு ..மேலும்..நாலு விளாசு..விளாசினார்.

உடன் வந்த..அத்தனை போலீஸ்காரர்களும் ..இந்த நிகழ்ச்சிகளை..வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

பதிவர் சந்திப்புக்கு வந்துக்கொண்டிருந்த லக்கிலுக்கின் லக்கி லுக்..அண்ணாசாமி மீது ..பட..அவர்..அதிகாரியிடம்..பேசி..அண்ணாசாமியைக் காப்பாற்றினார்..

'இதை முன்னமேயே..சொல்லி இருக்கலாம்..இல்ல..'எண்ரார்..நர்சிம் போல இருந்த அந்த போலீஸ் அதிகாரி.

சந்திப்பின் இடத்துக்கு வந்த..அண்ணாசாமிக்கு டாக்டர் புருனோ..முதல் உதவி செய்ய...அடிவாங்கியதால்...அண்ணாசாமியின் கால்கள்...அங்கங்கே..போண்டா போல வீங்கி இருந்ததைப் பார்த்த பாலபாரதிக்கு..போண்டா...இன்னும்..வழங்கப்படவில்லை...என்ற ஞாபகம் வர..அனைவரையும் அழைத்துக் கொண்டு...எதிரே இருந்த டீக்கடைக்கு விரைந்தார்..அப்துல்லா,ரமேஷ் வைத்யா,முரளி கண்ணன்,சந்தோஷ்,ஸ்ரீ..ஆகியோர் முன்னமேயே அங்கு காத்திருந்தனர்..அவர்களுக்காக.

2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்த் ..போடும் கணக்கு...

முதல்வர் பதவியைப் பிடிக்க..கட்சித் தலைவர்கள்..இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டனர்...

அ.தி.மு.க.வில் இளைஞர்கள் பாசறைகள் அமைக்கப்படுகின்றன.சுமார் 70000 பாசறைகள் அமைக்கப்பட்டு..அவற்றின் செயலாளர்களுக்கு ஜெ..கடிதம் எழுதி உள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் சுமார்..1000ஓட்டு வித்தியாசத்திலும்...30தொகுதிகளில் ..சுமார்..3000 முதல் 5000 ஓட்டு வித்தியாசத்திலும்...கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.(1000 முதல்.5000 ஒட்டுகளுக்குள் வெற்றி பெற்ற தொகுதிகளை ஜெ கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை போலிருக்கிறது)இந்த பாசறைகள் மூலம்...தொகுதிக்கு 5000புதிய வாக்காளர்கள் கிடைத்தால் போதும்...எளிதாக முதல்வர் ஆகிவிடலாம்...என்பது ஜெ யின் கணக்கு.பாசறை உறுப்பினர்களுக்கு..கணினி,டிரைவிங்,தையல் போன்றவை இலவசமாய் சொல்லிக்கொடுக்கப்படும்

விஜய்காந்தைப் பொறுத்தவரை..அவர் நடத்திய பேரணிக்கு...5 லட்சம் தொண்டர்கள்..வந்ததாகவும்...ஒரு தொண்டன்..100 வாக்குகள் பெற்று தந்தாலும்..5 கோடி வாக்குகள் கிடைத்துவிடும்..பின் தானே முதல்வர் என்று கணக்கு போடுகிறார்.(தமிழக மொத்த வாக்காளர்களே 4.58கோடிதான்)

தி.மு.க., மீண்டும் பா.ம.க.வை இணைத்துக் கொண்டால் போதும்...வெற்றி நிச்சயம்..

பா.ம.க..இன்னும் இது பற்றி பேசவில்லை..

2011 வேண்டாம்...2016ல் பார்த்துக்கொள்ளலாம்..என்கிறார் விஜய்.

ரஜினி ..வழக்கம் போல...எல்லாம் ஆண்டவன் செயல் என்கிறார்..

காங்கிரஸ் ..யார் முதுகில் ஏறும் என்றும் தெரியாது.

Wednesday, November 19, 2008

இலங்கை தமிழர் நிவாரண நிதி-இலங்கை அரசு முடக்கம்

கொழும்பு: இலங்கைத் தமிழர் நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 7 கோடி ரூபாயை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடைபெற்று வருகிறது. இதில், லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து 7 கோடியே பத்து லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு அங்கு அனுப்பப்பட்டது. அந்த நிதி, இலங்கை மத்திய வங்கியில், தமிழர் மறுவாழ்வு அமைப்பின் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் பணத்தை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக அந்த வங்கியின் புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் கொழும்பு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி குமுதம்

எப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,

நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..

அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..

பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..

அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.

Tuesday, November 18, 2008

விவசாயிகளும்...தமிழ் திரைப்படங்களும்...

இப்போதெல்லாம்...விவசாயிகள் பற்றியும்...விவசாயம் குறித்தும்..தமிழ்படங்கள் வருவதில்லை...

அப்படியே ..கிராமத்து படம் என்றாலும்...நாட்டாமையும்...கொடுமை நிறைந்த மிராசுதார்..பண்ணையார் ..ஆகியவர்களையும்..அவர்களது..பணம்..பதவி..திமிர் பற்றியுமே கூறி வருகின்றன.இப்போது நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு...நெற்பயிர் ..எப்படி இருக்கும் என்று கூட தெரியாது..

சென்னையில் ஆரம்பித்து..தெற்கே..செங்கல்பட்டு வரையிலும்...மேற்கே..கிட்டத்தட்ட அரக்கோணம் வரை..விளை நிலங்கள் எல்லாம்...வீடுகளாகவும்..தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன.திருச்சியில்..சமயபுரம் வரை..நகரம் வீங்கி விட்டது.

அந்த நாட்களில்..மக்களைப் பெற்ற மகராசி,தை பிறந்தால் வழி பிறக்கும்..போன்ற படங்கள் ...அவற்றின் பாடல்கள்..விவசாயியின் பெருமைகளை உணர்த்தும்.உதாரணத்துக்கு அப்படிப்பட்ட பாடல்களின் சிலவரிகள்.

நெத்தி வேர்வை சிந்தினோமே...முத்து முத்தாக.._அது
நெல்மணியா காச்சிருக்கு கொத்து..கொத்தாக

இது பிள்ளைக்கனியமுது .....படப்பாடல்.

காடு விளையட்டும் பெண்ணே -நமக்கு
காலம் இருக்குது பின்னே

காடு விளஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் ..காலும் தானே மிச்சம்..

இது..விவசாயிகளின் அவல நிலை குறிக்கும்..தாய்க்கு பின் தாரம் பாடல்...

போட்டது மொளைச்சதடி
கை நிறைய கேட்டது கெடச்சதடி

இது நவராத்திரி பாடல்

எல்லாப்பாடல்களையும் விட மறக்கமுடியா பாடல்.மக்களைப் பெற்ற மகராசியில் பட்டுக்கோட்டையாருடையது.

மணப்பாறை..மாடுகட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு ..செல்லக்கண்ணு
பசும் தழியைப்போட்டு பாடுபடு சின்னக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சு
நாத்தை பிடுங்கி நட்டுப்போடு செல்லக்கண்ணு
தண்ணிய ஏத்தம் பிடுச்சி
எறைச்சுப்போடு சின்னக்கண்ணு

கதிர நல்லா வெளயவச்சு
மருத ஜில்லா..ஆளைவைச்சி
அறுத்துப்போடு களத்துமேட்டில செல்லக்கண்ணு
சும்மா..அடிச்சு தூத்தி
அளந்து போடு சின்னக்கண்ணு

பொதி ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தயிலே
விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு
வித்துப்போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு

சேத்த பணத்தை சிக்கனமா
செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு

(பாடல்வரிகள் என் ஞாபகத்திலிருந்து எழுதியவை..ஆங்காங்கே..சில வார்த்தைகள் மாறியிருக்கக்கூடும்)

விவசாயி படத்தில்..மருதகாசி பாடல்...

கடவுள் எனும் முதலாளி..
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயீ....விவசாயீ

முன்னேற்றபாதையில் மனசை வைச்சி
முழுமூச்சாய் அதற்காக உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து - பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன்
விவசாயீ

இனி இது போன்ற பாடல்களை திரைப்படங்களில் பார்க்க முடியுமா?

Monday, November 17, 2008

இவர்கள் பொழுது போகவில்லை என்றால் என்ன செய்வார்கள்...

ஜெயலலிதா- தமிழகத்தில்..வரும் நாட்களில் எந்த எந்த..ஊர்களில்..தெருக்களில் ..என்ன என்ன..சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யலாம்னு..உடன் பிறவா சகோதரியுடன் ..பையனூரிலோ..கோடை எஸ்டேட்டிலோ பேசிக்கொண்டிருப்பார்..

ராமதாஸ்-தி.மு.க. அரசின் மீது..வேறு ஏதேனும் குறை கண்டுபிடிக்க முடியுமா?..என்று யோசித்துக்கொண்டிருப்பார்...

விஜய்காந்த்-மக்கள் தொகையை எடுத்துக் கொண்டு...ஏதாவது ஒரு எண்ணினால் பெருக்கிக் கொண்டோ..வகுத்துக் கொண்டோ இருப்பார்...பின்னர் ஏதேனும் கூட்டத்தில் புள்ளி விவரம் சொல்ல.

வைகோ-வரும் தேர்தல்களில் ..அம்மாவுடன் கூட்டணி வருமா...இல்லை..திரும்ப..பழையபடியாகுமா...பம்பரம் நிலைக்குமா..என யோசித்துக் கொண்டிருப்பார்.

தயாநிதி மாறன்-தி.மு.க.விலிருந்து விலக்கிவிட்டால்...ஜெ உடன் சேர்வதா...இல்லை..விஜய்காந்த் உடன் சேர்வதா என்ற நினைப்பில் இருப்பார்.

ஆற்காட்டார்_அடுத்தமுறை மின்சாரம் வேண்டாம் என கலைஞரிடம் எப்படி கூறுவது என எண்ணிக்கோண்டிருப்பார்.

அன்பழகன்- எப்பாடுபட்டாவது இரண்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுவார்..

ரஜினி-எந்திரன் வந்ததும்..ரசிகர்களிடம் என்ன சால்ஜாப்பு சொல்வது என யோசிப்பார்.

சோ-பழைய துக்ளக் இதழ்களை புரட்டி...நான் அன்றே சொன்னேன்..என்பதற்கு..ஏதேனும் செய்தி கிடைக்குமா என எண்ணுவார்..

கலைஞர்-பொழுதா..போகவில்லையா...அந்த நேரத்தை எல்லாம்..எனக்கு கொடுங்க...எனக்கு..கவிதை எழுத..அரசு நடத்த..அழகிரி பற்றி யோசிக்க..கனிமொழி பற்றி யோசிக்க...ராமதாசிற்கு பதில் சொல்ல...இதெற்கெல்லாம் நேரம் போதவில்லை என்பார்.

Sunday, November 16, 2008

வானரம் ஆயிரம்...(ஒரு விமரிசனம்)

இது பதிவர்கள் வாரணம் ஆயிரம்..பற்றி விமரிசிக்கும் நேரம்...படம் பார்க்காத நாம் ..நம் பங்குக்கு ஏதாவது பதிவிட வேண்டிய கட்டாயம்..அப்போதுதானே..நம் பதிவுக்கும்..சிலர் வருவார்கள்..பின்னூட்டம் இடுவார்கள்.
ஆகவே.. வானரம் ஆயிரம் பற்றி..எழுதுகிறேன்...

இந்த வானரங்களின் சேவை..மறக்க முடியாதவை..பல..ஆண்டுகளாக..கட்டி முடிக்கப்பப்படாத பாலங்கள்..இன்று உள்ளன..ஆனால்..ராமருக்கு..இந்த வானரங்கள் ..சேது பாலத்தை எவ்வளவு விரைவாக கட்டி முடித்தன?.இன்றும்..அப்பாலம் பற்றி ....அரசியல்வாதிகளிடம் ஆரம்பித்து..உச்ச நீதிமன்றம் வரை பேச்சுஉள்ளதே!!

இலங்கை பிரச்னை..இன்னும்..தீர்ந்த பாடில்லை...விடுதலைப் புலிகளுக்கும்..சிங்கள ராணுவத்திற்கும் இடையே..40 ஆண்டுகளாக..போர் நடந்து வருவதுடன்...பல உலக நாடுகள்..தலையிடு செய்யாமால்...வாய் அளவில் பேசிவருகின்றனவே..

ஆனால்..இதே வானரங்கள்..ராமனுக்கு..போர்வீரர்களாக செயல்பட்டு...இலங்கை அரசன் ராவணனை வீழ்த்தின..

வானரம் ஆயிரங்களின் சேவை பாராட்டத்தக்கதா..இல்லையா?

(அப்பாடா..நம் பங்குக்கு...வாரணம் ஆயிரம்..பற்றி முடியவிட்டாலும்..வானரம் ஆயிரம் பற்றி விமரிசனம் செய்து விட்டோம்)

Saturday, November 15, 2008

தமிழக கட்சிகளும்...கூட்டணியும்..

இப்போதெல்லாம்..தனியாக ஒரு கட்சி அரசியலில் நின்று அறுதிபெரும்பான்மை வெற்றி பெறுவதென்பது இயலாத காரியம்..அதற்கான காரணம் இரண்டு..

1.கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகப்போனது
2.எந்த ஒருதொகுதியிலும் 100% ஓட்டுகள் பதிவாகாதது..ராமன் ஆண்டால் என்ன ராவணண் ஆண்டால் என்ன? யார் வந்தாலும் நமக்கு ஒன்றுதான் என்ற எண்ணத்தில்..கிட்டத்தட்ட 30% மேல் ஓட்டு போடுவதில்லை..இவர்கள்தான் முதலில் கடமை தவறியவர்கள்.

சரி தலைப்புக்கு வருவோம்..

தமிழகத்திலும்..கூட்டணி என்பது..தவிர்க்க முடியாததாகி விட்டது..தி.மு.க., அ.தி.மு.க., இக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகளைப் பொறுத்து வெற்றிக் கனியை பறிக்க முடிகிறது.

1996-01ல் கலைஞர் ஆட்சி..திறம்பட இருந்தது..மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்..ஆகவே 2001 தேர்தலில் வெற்றிபேறுவோம் என கலைஞர் நினைத்
தார்..ஆனால்..சூடுபட்ட பூனையான ஜெ..மற்றக் கட்சிகளுடன் சேர்ந்து..ஒரு பலமான கூட்டணி அமைத்தார்...வெற்றி பெற்றார்..

அடுத்த தேர்தலில்..அதாவது..பார்லிமென்ட் தேர்தலில்..கலைஞர் பல கட்சிகளை அரவணைத்துக் கொண்டார்..40 தொகுதியும்(39+1)வென்றார்.அதே கூட்டணியை க்காப்பாற்றி 2006 சட்டசபை தேர்தல்...கட்சிகள் அதிகம் என்பதால்..தொகுதி ஒதுக்கீடு..தி.மு.க.போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை குறைத்தது.இதனால் கூட்டணி வெற்றி பெற்றாலும்..தி.மு.க.அறுதி பெரும்பான்மை பெறவில்லை.இச்சமயம் விஜய்காந்த் வேறு..கட்சி ஆரம்பித்து..அதனால்..வோட்டுகள் சிதறின.

இன்றைய நிலையில்..பா.ம.க.,கம்யூனிஸ்ட்கள்..தி.மு.க.கூட்டணியில் இல்லை.

அடுத்த வருடம் வரும்..பாராளுமன்ற தேர்தலில்..தி,மு,க.,கூட்டணி வெல்ல வேண்டுமானால்..காங்கிரஸ் தவிர்த்து..பா.ம.க போன்ற கட்சிகளும் உடன் இருக்க வேண்டும்..அதனால் தான் அதை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன..

அ.தி.மு.க., வும்..சில கட்சிகளுக்கு வலை விரித்து வருகிறது.(தற்போது வைகோ மட்டுமே உடன் உள்ளார்)

இடையே..விஜய்காந்த்துடன்..கம்யூனிஸ்ட்..பாமக..சேர்ந்தாலும் ஆச்சர்யப்ப்படத் தேவையில்லை..

காங்கிரஸை இது போன்ற சமயங்களில் நம்ப முடியாது..விஜய்காந்த்தையும் சில காங்கிரஸ் தலைவர்கள் சந்த்தித்துள்ளனர்.

அனுபவசாலி கலைஞருக்கு ..காங்கிரஸ் பற்றித் தெரியும்..மேலும் இன்று தமிழகத்தில்..மக்கள்..மின்வெட்டு..விலைவாசி..என்றெல்லாம் அதிருப்தியில் உள்ள நிலையில் காங்கிரஸ் உடன் இல்லை எனில்..முடிவு என்ன ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு..பார்த்ததால் தான் கலைஞர்..இலங்கை பிரச்னையில்..மத்ய அரசின் நிலை திருப்தியாய் இல்லை என்றாலும்..கடுமையாக அவர்களை கண்டிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

அதே சமயம்..சாமான்யனுக்கும்..இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்..கலைஞர் தலைமைதான் வேண்டும்..

பார்ப்போம்...என்ன நடக்கிறது..என்று.

Friday, November 14, 2008

கதையான போதிலும்....கருத்துள்ள பாடமே...

ஒரு ஊரில் ஒரு சிறிய ஆட்டுக்குட்டி இருந்தது...அதைப்பார்த்த ஓநாய் ஒன்று அதை இரையாக்கிக்கொள்ள தீர்மானித்தது.

ஒரு நாள் அந்த ஆட்டுக்குட்டி..ஓடிவரும் ஆறின் சரிவில் நீர் அருந்திக் கொண்டிருந்தது.மேல் பகுதியில் வந்து தண்ணீர் அருந்துவது போல பாவனை செய்த ஓநாய்..திடீரென ஆட்டைப் பார்த்து 'ஏன்..இப்படி தண்ணீரை கலக்குகிறாய்"என்று அதட்டிக் கேட்டது.

ஓநாயைப்பார்த்து பயந்த ஆடு..'நான் எப்படி தண்ணீரை கலக்க முடியும்..நீங்கள் குடித்த பின்னர் தானே நீர் எனக்கு வருகிறது?" என்றது.

ஆட்டின் பதிலைக்கேட்டதும்..ஓநாய்..'நீ கலக்கா விட்டால் என்ன?..முன்னர் உன் அப்பன் கலக்கி இருப்பான்...அதற்கும் முன்னால் உன் பாட்டன் கலக்கி இருப்பான்..உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது'என்றபடியே ஆட்டின் மேல் பாய்ந்து, அதை அடித்துக் கொன்றது.

நம் நியாயம்..எடுபடாது..என்ற நிலையில்..ஒதுங்கி செல்வதே..நல்லது.

Thursday, November 13, 2008

சாதி ஒழிப்பு மகாநாடு.

ஆனந்தக் கோனார் முன்னிலையில்
சந்தோச நாடார் தலைமையில்
ஷண்முக முதலியார் வரவேற்பு வழங்க
சிவனேச செட்டியார் வாழ்த்து மடல் வாசிக்க
நாயகம்பிள்ளை விரிவுரை நிகழ்த்த
சாம்பசிவ ஐயர்..ரங்காச்சாரி..கருப்பு தேவர்
ஆகியோர் கலந்துக்கொள்ள
இனிதே நடந்தது
சாதி ஒழிப்பு மகாநாடு.

Wednesday, November 12, 2008

மென்பொருள் தொழில் வல்லு னர்களே இவருக்கு உதவுங்கள்

ABOUT SHANKAR விவரங்கள் இட்லி வடை பதிவில்
http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_12.html

Mr. D. Shankar is suffering from Acute Myeloid Leukemia (AML M4 RELAPSE - Blood Cancer). Shankar is an engineering graduate, completed his Graduation in the year 2006 in RMK Engineering college. After Graduation, he started his career as a Software Engineer in Congruvent Info Tech Pvt Ltd Company in Thiruvanmiyur – Chennai. But unfortunately, he was diagnosed with blood cancer in October 2007, and admitted in Apollo Speciality Hospitals for the Induction Chemotherapy. After that he had a relapse on June 15th 2008 and again admitted in Apollo Speciality Hospitals for Salvage Chemotherapy which costs Rs. 1200000/- (Twelve Lakhs) under Dr. JOSE EASOW, Consultant in Medical Oncology, Hematology.

Shankar hails from economically backward family, his family's monthly income is hardly enough to meet their basic amenities. It was with at most difficulty and financial help from various philanthropist and good hearted people, his first treatment was done. Now, we are helpless to proceed with the next set of treatment. We need help in saving life of our FRIEND.


DONATE


Once he attains remission, immediately he needs to undergo BMT (Bone Marrow Transplantation). BMT has very good cure rates. Kindly extend your helping hand to save our friends life. Consider this as a request from patient. The family is unable to cope with this high expenditure despite mobilizing all their resources any financial assistance can be provided in form of Cheque/Demand Drafts to “APOLLO SPECIALITY HOSPITALS – D. SHANKAR – REF NO: 122493”.

Address:APOLLO SPECIALITY HOSPITAL
Padma Complex,
320, Anna Salai,
Chennai - 600035,
Tamilnadu, India
Phone: 91-44-24331740 / 1741 / 6119
Fax No. 91-44-24363646

Or you can donate to his personal account and we will provide the receipt for the same from the Apollo Hospitals – Teynampet – Chennai. If you are donating to his personal account pls provide your mail Id or your address to our Mail Id to send you a receipt copy.
Account Holder Name: D. Shankar
Bank: ICICI Bank
Account Number: 000101565338
Branch: Teynampet branch, Chennai.
IFSC Code: ICIC0000001 (For Online Transfers)

வாய் விட்டு சிரியுங்க...

1.விண்ணில் பறக்கும் விமானத்தில் பயணி-டிக்கட் வாங்காமல் ஏறியது தப்புதான்..அதுக்காக உடனே இறங்குன்னு சொன்னா எப்படி?

2.அதிகாரி-ஏன் இன்னிக்கு இவ்வளவு தாமதமா வர்றீங்க?
சிப்பந்தி-காலைல எழுந்துக்க கொஞ்சம் தாமதமாயிடுச்சு
அதிகாரி-ஆச்சர்யமா இருக்கே! வீட்ல கூட உங்களுக்கு தூக்கம் வருமா?

3.சித்திரகுப்தன்-(தான் அழைத்து வந்திருப்பவரை எமனிடம் காட்டி)இவர் பூலோகத்தில் பல்லாயிரக்கணக்கோரின் பல மணி நேரங்களை..வீணாக ஆக்கியிருக்கிறார்...ஆகவே இவரை நரகத்தி
ல் தள்ள வேண்டுகிறேன்..
எமன்- அப்படி என்ன செய்தார்?
சித்திரகுப்தன்-டி.வி.,யில் மெகா சீரியல்கள் எடுத்தார்

4.உங்க ஃப்ளாட்ல பாராசூட் ல இறங்கற பயிற்சி கொடுக்கறாங்களா..எதுக்கு
ஃப்ளாட்ல திடீர்னு தீப்பிடிச்சா..மாடியிலே இருக்கிறவங்க ..கீழே எப்படி இறங்கறதுன்னு கத்துக்கத்தான்

5.தலைவரே...நீங்க உங்க தொகுதியிலே புறம்போக்கு நிலத்தை எல்லாம் வளைச்சுப் போட்டது தப்பாயிடுச்சு..
ஏன்?
நீங்க வரும்போது..புறம்போக்கு தலைவர் வர்றார்னு சொல்றாங்க

6.பருமனாக இருப்பவைப் பார்த்து நண்பர்-நீ ரேஷன் கடைல வேலை செய்யறேன்னு தெரியும்..அதுக்காக உன் எடையைக் கூட 45 கிலோன்னு கூரைச்சு சொன்னா எப்படி?

Tuesday, November 11, 2008

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல..ஒரு நிகழ்ச்சி சமீபத்தய படம் ஒன்றில் வந்துள்ளது.

வேலையில்லாத ஒருவனுக்கு மென்பொருள் தொழில் வல்லுநராக வேலைகிடைக்கிறது.முதல் வருடம்..நண்பர்களுக்கு இனிப்பு வழங்கும்..அவன்..அடுத்த ஆண்டு 5000 ரூபாய் வரை செலவழித்து ஒரு பார்ட்டி கொடுக்கிறான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்குகிறானாம்..

இப்போது அவன் மாத சம்பளம் 85000 ரூபாய்.இப்படி வந்த படம் அறை எண் 305ல் கடவுள்..

ரஜினி நடித்த சிவாஜியில் 20ஆண்டுகள் ஆர்கிடெக்சல் இஞ்சினீயர் ..அமெரிக்காவில் 200கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக வருகிறது.

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.

அவனே பாவம்...உலக பொருளாதார வீழ்ச்சியால்...தினம் செத்து..பிழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனை ..திரை உலகமே..பத்திரிகை துறையே..தயவு செய்து விட்டு விடுங்கள்.

தீபாவளி படங்கள் என் பார்வையில்....

லக்கிலுக் ஒரு பதிவில் தீபாவளிக்கு வந்த படங்கள் பற்றி எழுதி இருந்தார்.அவர் முன்னர் தீபாவளிக்கு 18 படங்கள் கூட வந்தது உண்டு..என்றும் ..ஆனால் இந்த தீபாவளிக்கு 3 படங்கள்தான் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்..

அது உண்மைதான்..ஆனால்..அப்போது எல்லாம் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையாக..விமரிசையாக கொண்டாடப்பட்டது..குடும்பத் தலைவர்களுக்கு தீபாவளி போனஸ் வரும்..குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் புத்தாடை..பட்டாசு..என அமர்க்களப்படும்.விடியற்காலை 3 மணிக்கே..எழுந்திருந்து...எண்ணெய் குளியல் முடித்து..புத்தாடை அணிந்து..பட்டாசு கொளுத்துவது
என கோலாகலமாய் இருக்கும்..பிறகு..உறவினர்கள் வருவதும்..நாம் போவதும்...என அமர்க்களப்படும்..வரும் திரைப்படங்கள் எதாவது பார்த்துவிடும் துடிப்பு இருக்கும்.

ஆனால்...இன்று..தீபாவளி ஒரு சாதாரண நாள்போல ஆகிவிட்டது...

பட்டாசுகள் கூட காலை 6 மணிக்கு மேல் தான் வெடிக்க வேண்டும் என்ற அரசு ஆணை வேறு..எண்ணெய் விற்கும் விலையில் எண்ணெய் குளியல் ஏது..பெரும்பாலோருக்கு போனஸும் கிடையாது..அதற்கேற்றார் போல திரைபடத் துறையினரும்..இப்போது அந்த நாளை..சாதாரணமாக வெள்ளிக்கிழமை படம் வரும் நாளாக நினைத்து விட்டனர்போலும்.

அப்போது..தீபாவளி அன்று சிவாஜி படங்கள்..சில சமயம் இரண்டு கூட வெளிவரும்.நவராத்திரியும்..முரடன் முத்து வும் ஒரு தீபாவளிக்கு வந்தது..
எங்கிருந்தோ வந்தாள்..சொர்க்கம் ஒரு தீபாவளிக்கு வந்தது.ஆனால் அப்போதும் யார் நடித்த படமாய் இருந்தாலும்..மக்களுக்கு எத்ர்பார்த்தது இல்லை எனில் படம் தோல்விதான்..பாசமலர் எடுத்த தயாரிப்பாளர்களின் அடுத்த படம் குங்குமம் ஒரு தீபாவளிக்கு வந்தது..படம் ஃப்ளாப் (பிறகு செகண்ட் ரன்..தேர்ட் ரன் படம் சுமாராக போயிற்று)

இனி அப்படிப்பட்ட தீபாவளி என்று வருகிறதோ ..அன்று..நிறைய படங்களும் வரக்கூடும்.

Monday, November 10, 2008

நான் யார்...நான் யார்...(கவிதை)

நான்
உடல் வலிமையுள்ளவன் என்கிறாயே
உன் அன்னைக்கு நன்றி சொல்
உதிரத்தை பாலாய் கொடுத்தவள்
அவர்

நான்
பண்புள்ளவன் என்கிறாயே
உன் தந்தையை வணங்கு
உன்னை ஆக்கியவர்
அவர்

நான்
அறிவாளி என்பவனே
உன் ஆசிரியரை நினை
உன் அறிவை வளர்த்தவர்
அவர்

நான்
நல்ல கணவன் என்கிறாயே
உன் மனைவியைக் கேள்
உனக்கு அப்பெயர் வரக் காரணம்
அவள்

நான்
நல்ல தந்தை என்பவனே
உன் வாரிசுகளைக் கேள்
உன் கடமையைசெய்ததை உரைப்பவர்
அவர்

நான்
நல்லவன் என பெருமையுறுபவனே
உன் உடல் சுமக்கப்படும் போது
உன் சுற்றமும்..நட்பும் சொல்லட்டும்
அதை

மறக்க முடியாத சிறுகதைகள்...

முன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..

ஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.

பல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..

ஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...

அக்கினிப்பிரவேசம்..

ஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
கோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..

இக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோ?கதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..

அகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோ?அந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.

தமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளீத்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே?

பதிவர்கள்..இதை ஒரு தொடர் பதிவாய் எண்ணி...தங்களுக்கு மறக்க முடியா கதைகளை சொல்லலாமே...

Sunday, November 9, 2008

இலங்கை பிரச்னை..கலைஞருக்கு வெற்றி...

இலங்கை பிரச்னையில்...அனைத்து கட்சிகள் கூட்டத்தில்..முதலில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியது..

இதை அடுத்து..பல பிரிவினர்..பல போராட்டங்களை மேற்கொண்டனர்.

நேற்று இதைப்பற்றி கலைஞர் கூறுகையில்..போர் நிறுத்தம் என்பது..இரு சாராருக்கும் பொருந்தும் என்றும்..இலங்கை ராணுவம் மட்டும் ..போரை நிறுத்தினால் என்ன பயன்? என்றும் கேட்டிருந்தார்.

இந்நிலையில்..பல இடங்களில் இலங்கை ராணுவம் முந்தி வருவதாகவும்..போரால் பல அப்பaவி தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் பற்றியும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

இன்று..புலிகளின்..அரசியல் பிரிவு தலைவர்பி.நடேசன்..போர் நிறுத்தத்திற்கு புலிகள் தயார்..என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.,

விடிவெள்ளி பிறக்குமா பார்ப்போம்..

ஆனால்..அவரின் அறிவிப்பு கலைஞருக்கு (அவர் அனுபவத்திற்கு)கிடைத்த வெற்றி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கணவர் லஞ்சம் வாங்குபவரா? மனைவிக்கும் தண்டனை உண்டு

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பாஸ்கர் வாஹா.இவர் மாத வருமானம் 1630ரூபாய்.இவர் 1984முதல் 1989 வரை லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.இவரிடம் உள்ள கார்களின் மதிப்பு மட்டுமே20லட்ச ரூபாய்.
தவிர மனைவி பெயரிலும் நிறைய அசையா சொத்துக்கள்.இவரை லஞ்ச ஒழிப்புத் துறை கைது செய்து விசாரித்தது.
பின் நீதி மன்றம் இவருக்கு 7 ஆண்டு சிறையும் 3லட்சம் அபராதமும் விதித்தது.அவரது மனைவிக்கு 2ஆண்டு சிறையும்2லட்சம் அபராதமும் விதித்தது.
நீதிபதி தன் தீர்ப்பில்..
அரசு ஊழியர் வாங்கிய லஞ்ச பணத்தை மனைவியும் அனுபவித்துள்ளார்.அதனால் கணவனுக்கு உடந்தையாய் இருந்த குற்றத்துக்காக அவருக்கும் தண்டனை விதிக்கப்படுகிறது..என்று கூறியுள்ளார்.இனி மனைவி பெயரில் சொத்து இருந்தால் தொடமுடியாது என்ற காலம் போய் விட்டது

Saturday, November 8, 2008

ராமரும்...கிருஷ்ணரும்..அரசியல்வாதிகளும்...

சேது சமுத்திர சட்டம் பற்றிய விவகாரத்தில்...அந்த பாலம் ராமர் கட்டியது என்று சொல்லப்போக..ராமர் என்ன இஞ்சினீயரா..என்பது போன்ற நக்கலான கேள்விகளை அரசியல்வாதிகள்(பகுத்தறிவாளர்கள்)கேட்டார்கள்..அதற்கு காரணம்..ராமர் பற்றி பேசியது...VHP.,RSS., போன்ற அமைப்புகள் என்பதால்.

ஆனால்..இப்போது..ரஜினி..'கடமையைச் செய்..பலனை எதிர்ப்பார்' என ரஜினி சொல்லப்போக..பகவத் கீதையில்..'கடமையைச் செய் பலனை எதிப்பார்க்காதே' என கண்ணன் சொன்னதற்கு மாறாக ரஜினி பேசிவிட்டார்..என யாதவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே...

இதற்கு அதே அரசியல்வாதிகள்..'கிருஷ்ணன் என்ன..கல்லூரி விரிவுரையாளரா..அல்லது மதப் போதகரா..போதிக்க' என்று ஏன் கேள்வியை எழுப்பவில்லை...

சமீப காலமாக ரஜினி எது பேசினாலும்..பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்?

Friday, November 7, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!

3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க
பிழைச்சுடுவீங்க

5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே
மகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..
அப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.

ஒகேனக்கல் பிரச்னையும்..தமிழனும்...

தர்மபுரி..கிருஷ்ணகிரி மக்களுக்கு குடி தண்ணீர் பிரச்னையை ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தீர்த்து வைக்கும் என்றிருந்தால்..காவிரி பிரச்னையைப் போல இதுவும் தீராது போலிருக்கிறது...நம் பங்கு நீரை பயன்படுத்தக்கூட கர்நாடகா மாநிலம் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறது.

மத்திய அரசு தலையிட வேண்டும்..என்ற கோரிக்கை வைக்கும் கர்நாடகா அரசு...இத் திட்டத்திற்கு நமக்கு நிதி வழங்குவதாகக் கூறியுள்ள ஜப்பான் வங்கிக்கு..கடன் வழங்காதீர்கள் என கடிதம் எழுதப்போகிறதாம்..

மஹாராஷ்டிரா ராஜ்தாக்கரே பரவாயில்லை போலிருக்கிறது..

மத்திய அரசு..உடனே தலையிட்டு..வெளிநாட்டு வங்கிக்கு..கடிதம் எழுதக்கூடாது என கர்நாடகாவை வலியுறுத்த வேண்டும்.நம் நாட்டு பங்காளி சண்டை நம்மிடையே இருக்கட்டும்.

ஆமாம்...இலங்கை தமிழர் பற்றி கூவும் நாம்...சிங்கள அரசை கண்டிக்கிறோம்..

நம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா அரசு...சிங்கள அரசைவிட கொடூர எண்ணத்தில் சற்றும் குறைந்தது இல்லை.

நான் படித்த சில அருமையான வரிகள்..

1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...

Thursday, November 6, 2008

கலைஞர் ராஜிநாமா ?

இலங்கை தமிழர் பிரச்னையில்..எதிர்பார்த்த அளவு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை என கலைஞர் மன வருத்தத்தில் இருக்கிறார்..

ஆட்சியில் இருப்பதால் மட்டுமே..தன்னால் இப்பிரச்னையை..தீர்த்து வைக்கமுடியாது..என்றும்..எதிக்கட்சியினர்...ராமதாஸ் உட்பட பலர் தன்னை குற்றம் சாட்டி வருவதால்..வேதனை அடந்த அவர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வர..அனைத்து அமைச்சர்களும் கோட்டைக்கு விரந்து..அவர் ராஜிநாமாவை விலக்கிக் கொள்ள சொன்னதாகவும்..கூறப்படுகிறது.
(நன்றி-தினமணி)

டோண்டு சாரும்..மூன்று லட்சமும்..

நான் மரத்தடி,தமிழ்மணம் ஆகியவற்றை படித்து வந்த நேரம்...

தமிழ்மணத்தில்..தமிழச்சியின் எழுத்துகளும்...அவரின் பிரச்னைகளை எதிகொள்ளும் பாங்கும் எனக்குப் பிடிக்கும்...பெரியாரின் கொள்கைகளில்..அவரின் பங்கு டைபிஸ்ட் பங்குதான்..என்றாலும்..மற்ற அவர் சொந்தமாக இடும் பதிவுகளும் சிந்தனையை தூண்டுபவையாகும்..

அடுத்து..கோவிசாரின் பதிவுகள்..மிக அருமையான பல பதிவுகள் ..என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.

மூன்றாவதாக..டோண்டுவின் பதிவுகள்..

சாதாரணமாக ஒரு பதிவு சிறிதாய் இருந்தாலே படிக்கத்தோன்றும்..(அதனால்தான்..பத்திரிகைகளும் ஒரு பக்க கதைகளை விடுவதில்லை)..ஆனால்..டோண்டுவின் பதிவுகள்..நீளமானவை..இருப்பினும்...விஷயம் இருப்பதால் படிக்கத் தோன்றும்..அதனால்தான்..அவர் ஹிட் கவுண்டர் 3லட்சம் வருகையாளரை நெருங்கப்போகிறது.

சில சமயங்களில்..இணையப்பக்கங்களில் பதிவிடுவோர்..பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவே இருக்க வேண்டும்..என விதி உள்ளதோ..என எண்ணத்தோன்றியுள்ளது.ஆனால்...டோண்டுவின் சாதனையைப் பார்க்கும் போது ..அது தவறு என்றே தோன்றுகிறது.டோண்டு பதிவிடாத தலைப்புகளே இல்லை எனலாம்.,

மதர் இந்தியா..என்று..ஒரு ஆங்கில பத்திரிகை வரும்..அதன் ஆசிரியர் 'பாபு ராவ் படேல்'..அவரின் கேள்வி பதில்கள்..அந்த நாட்களில் பிரசித்தம்...கிட்டத்தட்ட அதே பாணி..டோண்டுவுடையது.சுவாரஸ்யமான் பதில்கள்.

அவரைப்பற்றி..சொல்லும்போது..ஒரு குறையையும் சொல்ல ஆசைப்படுகிறேன்..தன்னைப் பற்றி தானே சற்று அதிகமாக சொல்லிக்கொள்வது...

ஆமாம்..இன்று எல்லோரிடமும்தான் அது உள்ளது..என்கிறீர்களா? அது
வும் சரிதான்..

தன்னால் அறிவிக்கப்பட்ட விருதை தானே வாங்கிக்கொள்வது இல்லையா ..அதுபோலத்தானே இதுவும்.

டோண்டு சார்..மேன்மேலும்..பல மைல் கற்களை கடக்க வாழ்த்துகள்.

Wednesday, November 5, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகமும்...அமெரிக்க அதிபர் தேர்தலும்...

அண்ணாசாமிக்கு...அமெரிக்க அதிபர் தேர்தலில்..எப்படி எப்படி ஊழல் நடந்திருக்கும் என்று அறிய ஆவலாம்...

நம்ம ஊர்ன்னா...லட்டுக்குள்ள மூக்கூத்தி வைச்சு தருவாங்க..ஆனா..அமெரிக்க பெண்கள் மூக்கூத்தி போடுவாங்களா...போடலேன்னா..மூக்கூத்திக்கு பதில் என்ன குடுத்திருப்பாங்க..
தண்ணீ கஷ்டம் இருக்கும்னா...குடம் கொடுத்திருக்கலாம்...அதுவும் இல்லை...அப்போ பெண்கள் ஓட்டை எப்படி வாங்கி இருப்பாங்க?

ஒரு ஓட்டுக்கு.. நம்ம ஊருன்னா..150...200..ரூபாய் கொடுத்திருப்பாங்க..அங்கே எவ்வளவு டாலர் கொடுத்திருப்பாங்க?

ஆண்களுக்கு...சாராயம் வாங்கி..கொடுத்திருப்பாங்களா? அப்படி கொடுத்திருந்தால்..கூட கடிச்சுக்க நம்ம ஊர்ல..ஊறுகாய் இருக்கும்..அங்கே என்ன இருந்திருக்கும்?

பிரியாணி கொடுத்திருப்பாங்களா... மட்டனா ,சிக்கனா ,எவ்வளவு எலும்பு துண்டு இருந்திருக்கும்?

கள்ள ஓட்டு போட்டிருப்பாங்களா?

Booth Capturing இருந்திருக்குமா? அங்கே எல்லாம் மறு தேர்தல் நடக்குமா?

தேர்தல் செல்லாதுன்னு ..யாராவது கேஸ் போடுவாங்களா?

எத்தனைப் பேருக்கு...கைகலப்பு நடந்து ..காயம் ஏற்பட்டிருக்கும்...

ஓட்டு எண்ணிக்கை நியாயமா நடந்திருக்குமா?

(அப்பாடா...நாமும் அமெரிக்க தேர்தல் பற்றி ஒரு பதிவு போட்டுட்டோம் இல்ல)

நான் படித்த சில அருமையான வரிகள்...

1.தப்பு செய்யற யாருக்குமே பலம் கிடையாது..எப்பவும் அப்படிப்பட்டவர்களை முறியடிக்க சாதுர்யம்தான் முக்கியம்.

2.பெண்களுக்கு சம அந்தஸ்து இருக்கா..அவளுக்குன்னு ஒரு மனசு இருக்குன்னு கூட சிலர் நினைக்கறதில்ல

3.பேனாவில்..மையும்..திமிரும் இருந்தா..எதை வேண்டுமானாலும் எழுதிடறதா?

4.பணம்..பெண்..இரண்டுமே போதையானது..அது நல்ல வழியில் வந்தா நிலைக்கும்...கெட்ட வழியில் வந்தால் விட்டு ஓடிடும்..

5.you can erase some one from your mind..getting them out of your heart is another story.

6.winners never quit...quitters never win

7.வண்டிக்கு வருத்தம் ஏது...அதை இழுக்கற மாட்டுக்குத்தான் வலி தெரியும்.

8.படிப்பறிவு என்பது வேறு..கல்வி அறிவு என்பது வேறு..படிப்பறிவு என்றால் ..அடுத்தவரின் அறிவை உள்வாங்குகிறோம்..கல்வி அறிவு என்றால் உள்ளே இருக்கும் ஆற்றல் வெளியே வருவது.

9.தந்தை...ஒரு நண்பனைப்போல உன்னைக்கவனிக்கிறார்..வேலைக்காரனைப்போல உனக்கு பணிந்து போகிறார்..குருவைப்போல வழி காட்டுகிறார்..

10.அழுக்கிலே நெருப்பு பத்தி எரிஞ்சாலும்..நெருப்பில அழுக்கு கொஞ்சம் கூட ஒட்டறதில்ல...

11.உலகில் இன்று எது வேண்டுமானாலும் விலைக்கு கிடைக்கும்...விலைக்கு கிடைக்காத ஒன்றே ஒன்று..தாயின் அன்பு மட்டுமே..

இவற்றை எல்லாம்..எழுதியவர்கள் யார் என தெரியவில்லை...எழுதியவர்களுக்கு நன்றி.

Tuesday, November 4, 2008

இலங்கையில் பாதிக்கப் பட்டோருக்கு உதவி போய் சேருமா?

இலங்கையிலிருந்து பல தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக வந்த வண்ணம் உள்ளன.,

எது உண்மை? எது பொய்? என தெரியவில்லை.

'கிளிநொச்சி'யை நெருங்கி விட்டோம்..கூடிய விரைவில் கைபப்ற்றி விடுவோம்' என்கிறது சிங்கள ராணுவம்.ஆனால் அங்கிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள்..இடம் பெயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

கடும் யுத்த சமயங்களில் கூட..பாதிக்கபட்டவர்களுக்கு உதவும் ..தன்னார்வ தொண்டு நிறுவனங்களும்..நடுனிலை செய்தி தரும் செய்தி தரும் செய்தி நிறுவன நிருபர்களும் அனுமதிக்கப்படுவர்.ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்னமேயே..இலங்கை ராணுவம்..சர்வதேச தோண்டு நிறுவனங்களை வெளியேற்றி விட்டது..ராணுவ நிருபர்களும் வேவு பார்க்க முடியா நிலை.

இந்நிலையில் நாம் அனுப்பும் மருந்து,உணவு பொருள்கள் பாதிக்கப்பட்டோருக்கு போய் சேருமா?

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அரசு இதை கண்காணிக்க வேண்டும்..இல்லாவிட்டால்..எவ்வளவு டன் பொருள்கள் நாம் அனுப்பி உள்ளோம் என்பது புள்ளிவிவரங்களுக்கு மட்டுமே பயன்படும்.

வாய் விட்டு சிரியுங்க...

1.டெலிஃபோன்ல வேலை செய்யற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்ன ஆச்சு?
all the lines are engaged..please try after some yearsனு சொல்லிட்டா.

2.அந்த மெகாசீரியல் இயக்குநர் தன்னைச்சுற்றி வீடியோ கேசட்களோட ...தலையை பிச்சுக்கிட்டு இருக்காரே..ஏன்?
எந்தெந்த கேரக்டரை எந்தெந்த இடத்திலே விட்டோம்னு தெரியலையாம்...தேடிக்கிட்டு இருக்கார்.

3.தலைவர் ஏன் எப்பவும் கையில் scaleஐ வைச்சுக்கிட்டு பேசறார்
எதையும் அவர் அளந்துதான் பேசுவாராம்..

4.அந்த கட்சித்தலைவரை ஏன் pota சட்டத்தில கைது பண்ணினாங்க?
அவர் முதல்வரை போடா ன்னு சொன்னாராம்...அதனால் தான்...

5.காதலன்-நமக்கு கல்யாணம் ஆன பிறகும் ..இதுபோல ஒருவர் மேல ஒருவர் அன்பா இருப்போமா?
காதலி-அது..எனக்கு வரப்போற கணவனையும்...உங்களுக்கு வரப்போற மனைவியையும் பொறுத்தது.

6.மெகா சீரியல்...கதாசிரியர் ஆகணுமா? அதுக்கு உன் கிட்ட என்ன தகுதி இருக்கு?
முன்னாலே ஓட்டல்ல யாராவது அரைச்சு வைச்சுட்டுப்போன மாவை நான் மறுபடியும் அரைச்சிருக்கேன்

Monday, November 3, 2008

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..

காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்.

( மீள்பதிவு )

நானும்..ஹிந்தியும்...

ஹிந்தி படித்திருக்க வேண்டிய அவசியத்தை நான் வாழ்க்கையில் பல சமயங்களில் நினைத்து வருந்தியிருக்கிறேன்..,இது எல்லாம் ...இப்படியாகும்னு தெரிந்திருந்தால்..அப்போது நானும் சேர்ந்து 'ஹிந்தி ஒழிக' குரல் கொடுத்திருக்க மாட்டேன்.,

நான் பள்ளியில் படிக்கும் போது..ஹிந்தி தேர்ட் லேங்க்வேஜ்..படிக்க வேண்டும்...பரீட்சையும் எழுத வேண்டும்..ஆனால் அதில் பாஸ் மார்க் வாங்க வேண்டும் என்பதில்லை..மொத்த மதிப்பெண்களில் அது சேராது...அதனால் அவசியமில்லை.

மேலும்..அந்த சமயங்களில்..தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் ஹிந்தியை எதிர்த்ததாலும்...தினத்தந்தி போன்ற பத்திரிகைகள்..கார்ட்டூனில்...ஒரு தடியான பெண்ணை..கொம்புகளுடன் வரைந்து..ராட்சசி போல உடை அணிவித்து..கையில் ஆயுதத்துடன் ..காட்சி அளிக்க வைத்து..என்னைப் போன்ற இளைஞர்கள் மத்தியில் 'இதுதான் ஹிந்தி'என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டன.

இளரத்தம்...பின் கேட்கவா வேண்டும்.."ஹிந்தி ஒழிக" கோஷங்களும்...'உடல் மண்ணுக்கு..உயிர் தமிழுக்கு'போன்ற கோஷங்களும் போட்டு...எங்கள் ஹிந்தி புத்தகங்களை கொளுத்தினோம்.

அப்போது எங்களுக்கு ஹிந்தி வாத்தியார்..ஒரு மேடம்...அதனால் எங்கள் அட்டூழியம் அதிகமாகவே இருக்கும்.

எங்கள் தலைமை ஆசிரியர்.திரு சி.ஆர்.ராமனாதன்..மலையாளி..அவருக்கும் ஹிந்தி தெரியாது..மிகவும் கண்டிப்பானவர்.

எங்களைப் பற்றி தெரிந்துக்கொண்டு..ஹிந்தி வகுப்பின் போது ..வகுப்பறையில் நுழைவார்..ஹிந்தி மேடத்தைப் பார்த்து'என்னம்மா..ஒழுங்கா படிக்கிறாங்களா?'என்பார்.,

உண்மையை சொல்ல பயந்துக்கொண்டு..அந்த மேடமும் 'ஓ' என தலையாட்டுவார்கள்..உடனே அவர் என்னை கைகாட்டி..'இவனை ஒரு கேள்வி கேளுங்கோ'என்பார்.

உடனே மேடம் என்னிடம் 'துமாரா நாம் கியா ஹை?'என்பார்..

எனக்கு வாயில் வந்தவற்றை..உதாரணமாக 'கலம் குர்சி பர் ஹை'என பதில் சொல்வேன்..

'சரியாச் சொல்றானோ' என்பார்..

மேடமும் ..எங்கே..இல்லை என்று சொன்னால்..தனக்கு சரியாக சொல்லித்தர தெரியவில்லை..என ..திட்டு கிடைக்குமோ..என பயந்து..'சரியாகச் சொல்கிறான்' என்பார்..தலைமை ஆசிரியரும்..என்னைப்பார்த்து 'குட்"என சொல்லிவிட்டு..அடுத்த பையனைக் கைகாட்டுவார்..அவன் தன் பெயரை 'மேஜ்'என சொல்லி நல்லப் பெயரை எடுப்பான்..

இப்படியாக நாங்கள் ஹிந்தி படித்தோம்...பின்னர் பொறுப்புணர்ந்ததும்..அவசியமும் உணர்ந்து ..ஹிந்தியை தனியாகக்கற்று 'ராஷ்ட்ரபாஷா'வரை படித்தேன்.

ஆனாலும்...பேசுவதை புரிந்துக்கொள்ளும் என்னால்..திரும்பி சரளமாக பேசமுடியாது.

Sunday, November 2, 2008

மௌலியும்,விசுவும் மற்றும் நானும்..

காஃபி வித் அனு நிகழ்ச்சியில் சோ வும் மௌலியும் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி பார்த்திருப்பீர்கள்..அது சம்பந்தமாக வந்த டோண்டுவின் பதிவும் படித்திருப்பீர்கள்.,


விஷயம் இப்போது அதைப் பற்றியல்ல.. அந்த நிகழ்ச்சியால் என் முன் கொசுவத்தி சுருள்...தோன்ற அதன் பதிவு.

மௌலி என் நண்பர் ..நான்,மௌலி,விசு,ராஜாமணி,கிஷ்மூ மற்றும் அட்லாண்டா கணேஷ் அகிய ஐவரும் சேர்ந்து..எங்க டீன் ஏஜில் 'யங்க்ஸ்டர்ஸ் கல்சுரல் அஸ்ஸோஸியேஷன்' என்ற குழுவை தொடங்கினோம்.

சிவாஜி கணேசனுக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்தபோது..அவரை முதலில் பாராட்டியது...நாங்கள்தான்..அதுவும் அம்பத்தூரில்.ரஞ்சன் தலைமையில் பாராட்டு விழா

பின்..முதன் முதலாக மௌலி எழுதிய..'லவ் ஈஸ் பிளைண்ட்"நாடகம் நடத்தினோம்..இரவு..10 மணிக்கு கிளம்பி ..நாங்களே இரவு முழுதும் அம்பத்தூரை சுற்றி நாடகத்திற்கான சுவரொட்டி ஒட்டியிருக்கிறோம்.,அதுபோன்ற சமயங்களில் ..இரவு..யாராவது ஒருவர் வீட்டில்..அவரவர் தாயார் ..அளிக்கும் உண்வை சாப்பிட்டிருக்கிறோம்.
பின் அவரது "BON VOYAGE" என்ற நாடகம்..தி.நகர்..வாணிமஹாலில் நடத்தினோம்.,அப்போது மௌலி..பி.டெக்., படித்துக் கொண்டிருந்தார்.பின் அந்த நாடகம் மூலம் ..மௌலி,விசு ஆகியவர்கள் y.g.p.,நாடகக் குழுவில் ஐக்யமாயினர்.,Y.G.மஹேந்திரனும்..மௌலியும் கல்லூரி தோழர்கள்.

மௌலியும்,விசுவும்..தைர்யமாக ..சினிமா உலகில் நுழைய...வங்கி வேலையில் இருந்த நான் அவர்களுடன் ஓட்டத்தில் கலந்துக் கொள்ள இயலவில்லை.வெறும் நாடகங்களுடன் நிறுத்திக் கொண்டேன்.

Saturday, November 1, 2008

எச்சில் இலை

நமக்கு கோபம் வந்தால் 'போடா எச்சக்கலை' என திட்டுபவர்கள் ஏராளம்.

ஆனால் ராமகிருஷ்ண பரகம்சருக்கு 'எச்சில் இலை' என்பது எப்படி இருக்கிறது பாருங்கள்.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்
மனிதன் எச்சில் இலை போல் வாழணும் என்றார்.

வாழி இலை யை துண்டாக்கி உணவு உண்ண போடுகிறோம் .பசித்தோர் முகம்
பார்க்கும் பாக்யம் அதற்கு கிடைக்கிறது. அது சாப்பாட்டு இலை ஆகவில்லை
எனில் ,ஏதோ விழாவில் வீட்டு வாசலில் கட்டப்படும். எல்லோரையும் பார்க்கும் சாதாரண நிலை அதற்கு ஏற்பட்டிருக்கும்.

விழா முடிந்ததும் குப்பை மேட்டிற்கு த்தான் அது போகும். ஆனால் எச்சில் இலைக்கு ஒரு பெரிய திருப்தி இருக்கிறது. அது மக்களுக்கு முழுவதுமாக பயன்பட்ட பின்னே அழிகிறது.

என்னே அவரது மனம்.

ஆகவே நண்பர்களே நம்மை அறியாமல் நாம் திட்டுவதாக நினைத்துக் கொண்டு

"எச்சி இலை "என திட்டுவதாக எண்ணி பாராட்டி வருகிறோம்.

அரசியல்வாதிகளும்...சினிமா கலைஞர்களும்...

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்..கலைஞர்கள் ..அரசியலில் பங்கு கொள்வது என்பது அதிக மாகிவிட்டது.

ஆரம்ப காலங்களில்..வாசன்,மெய்யப்பன் போன்றோர் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுடன் இருந்தனர்.எம்.ஆர்.ராதா..பெரியாரின் பிரதம சீடராகவே இருந்தார்..பின் அண்ணாவின் வழியில்...கலைவாணர்,கே.ஆர்.ராமாசாமி,கண்ணதாசன்,கலைஞர்,சிவாஜி ஆகியோர்..தி.மு.க.வில் அங்கத்தினர்களாகவும்..ஒரு சிலர் ஆதரவாளராகவும் இருந்தனர்.ஒரு நடிகர்..தீவிர அரசியலில் புகுந்து எம்.எல்.ஏ., ஆனது..எனக்குத் தெரிந்தவரை முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான்.பின்..காங்கிரஸ்ஸிலிருந்து எம்.ஜி.ஆர்.,தி.மு.க.விற்கும்...சிவாஜி..காங்கிரஸ்ஸிற்கும் வந்தனர்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்.,மா பெரும் சக்தியாக திகழ்ந்தார்.,அண்ணாவே ஒரு சமயம்...நாம் கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேசினாலும் ஏற்படும் பயனைவிட..தம்பி..எம்.ஜி.ஆர்.,தன் முகத்தை ஒரு முறை மக்களுக்கு காட்டினால் ஏற்படும் பயன் அதிகம்..என்றார்.

அ.தி.மு.க., தோன்றிய பின்னர்...திரை உலகினர் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்தது..,எம்.ஜி.ஆர்.,ஆட்சியின் போது..சிரிப்பு நடிகர் ஐசரி வேலன்,திருச்சி சௌந்தரராஜன் ஆகிய நடிகர்கள் அமைச்சர்களாகவே இருந்தனர்.புரட்சி நடிகருக்குப்பின் ஜெ முதல்வர் ஆனதும்..ராதாரவி,,எஸ்.வீ.சேகர் ஆகியவர்கள் எம்.எல்.ஏ.,(எஸ்.எஸ்.சந்திரன்,ராஜ்யசபா எம்.பி.,)ஆகினர்.
தி.மு.க.தரப்பில் நெப்போலியன் எம்.எல்.ஏ.,ஆனார்.,சரத்குமார்.ராஜ்ய சபா எம்.பி.ஆனார்.இயக்குநர் ராமனாராயணன் எம்.எல்.ஏ.,ஆனார்.

பல நடிகர்கள்..குமரி முத்து,தியாகு,சந்திரசேகர் போன்றவர்கள் தி.மு.க.வின் பேச்சாளர் ஆயினர்.,தேர்தல் சமயத்தில்..ராதிகா..சிம்ரன்..சௌந்தர்யா,மனோரமா போன்றோர்..ஏதோ ஒரு கட்சிக்கு பிரசாரம் செய்தனர்.

சிவாஜி,பாக்யராஜ்,ஆகியோர் கட்சி ஆரம்பித்து அரசியலில் தோற்றனர்.

டி.ராஜேந்தர்..தி.மு.க.தரப்பில்..சட்டசபை உறுப்பினர் ஆகி..பின்னர்..ஒரு தனி கட்சி ஆரம்பித்து நடத்தி(?!) வருகிறார்.

விஜய்காந்த்,சரத்குமார்..ஆகியவர்களும் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளனர்.கார்த்திக்..ஃபார்வேர்ட் பிளாக் கின் தமிழக தலைவராகி..பின் விடுவிக்கப்பட்டு..இப்போது பதவிக்கு கனவு கண்டுகொண்டு இருக்கிறார்.,

ஆமாம்...இப்படி நடிகர்கள்..அரசியலில் ஈடுபடலாமா? என்று கேட்டால்...

அவர்களும் இந்தியக் குடிமகன்கள்தானே...ஒவ்வொருவருக்கும் அதற்கான உரிமை உண்டு...இன்னும் சொல்லப்போனால் ..இன்றைய அரசியல்வாதிகளைவிட...மக்களிடம் திரைஉலகினருக்கே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள்..அவர்களின் ரசிகர்கள்...அவர்களுக்காக எதையும் செய்வார்கள்...

ஆனால்...திரை உலகத்தினரே..உங்களின் அரசியல் பிரவேசம்..ஆரோக்யமானதாய் இருக்கட்டும்..சுயநலமில்லா உழைப்பிருந்தால்...கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்..

ஆமாம்...இவ்வளவு சொல்லிவிட்டு முக்யமானவரை விட்டுவிட்டேனே என்கிறிர்களா?

உண்மையில்...இன்று அரசியலுக்கு வர முழு தகுதியும் உள்ளவர் அவர்தான்..அவர் கண்டிப்பாக வருவார்..என்றே தோன்றுகிறது..சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

எம்.ஜி.ஆரும்..60 வயது தாண்டிய பின்னரே..தனிக்கட்சி ஆரம்பித்தார்...

இவரும் அதற்காகத்தான் காத்திருக்கிறாரோ?

(இப்பதிவில்..யார் பெயரேனும் ..விட்டுப்போயிருந்தால்...என் கவனக்குறைவே தவிர...வேறு காரணம் இல்லை)