Sunday, December 30, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 8



தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.

அம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.

தலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.

அதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.

திரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..

துரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.

அந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.

அதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா" என்றும் பாடல் உண்டு.

தூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.

அப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்

குறிஞ்சி- தோழிக்கூற்று

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

- திருப்புத்தேளார்

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.

இதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.


Saturday, December 29, 2012

தமிழ் பேசுபவர்கள் இந்தியர்கள் இல்லையாம்



(தினமணி விவாத மேடையில் இப்பகுதி பிடித்திருந்ததால்..உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
(நன்றி - தினமணி)

கூகுள் பல்வேறு சேவைகளை இணையத்தில் அளித்து வருகிறது. அதில், மொழிபெயர்ப்பு சேவையும் ஒன்று. பெரும்பாலானவர்களும் வார்த்தைகளுக்கான தேடலாக கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பல நேரங்களில் வாக்கியங்களாகக் கொடுத்தால் பொருள் வேறுபாடு வந்துவிடுகிறது என்பது பரவலான கருத்து. தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் இந்த மொழிபெயர்ப்பு சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் தமிழ் மொழிபெயர்ப்புப் பகுதி சிறப்பாக இயங்குவதாக பயனாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், கூகுள் மொழிபெயர்ப்பில் சில சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது...

எடுத்துக்காட்டாக,

tamil speaking peoples are indians என்று கொடுத்தால், "தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள் அல்ல” என்று மொழிபெயர்க்கிறது. இது நேர்மாறான பொருள் கொண்டது என்பதால், இது இயல்பானதா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர் பயனாளர்கள்.

ஏற்கெனவே "don't see idiots movie" என்பதை விஜய் படம் பார்க்க வேண்டாம் என்று மொழிபெயர்த்தது கூகுள். அது இன்னமும் சரி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில், கூகுள் மொழி பெயர்ப்பைப் பயன்படுத்துவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளதாகக் கூறுகின்றனர் அதன் நுணுக்கங்களை அறிந்தவர்கள். குறிப்பாக, நம் இந்தக் கருத்துக்கு தினமணி ஃபேஸ்புக் வாசகர்கள் சில பின்னூட்டங்களை இட்டுள்ளனர்.

அவற்றில் ஓரிரு கருத்துகள்:

1. மயில்ராஜ் சுப்ரமணியன்: (Mylraj Subramanian)

Tamil speaking peoples are Indians -  தமிழ் பேசும் மக்கள் இந்தியர்கள்

(when I type this, I get the right translation.. Please use the Capital I when you type Indians... is it not a mistake to type Indian as indian?)

(also: don't see idiot's movie - instead of : don't see idiots movie)

2. நவீன் கிரிஷ்: (Naveen Kris)

Tamil speaking peoples are Indians என்று கொடுத்துப் பாருங்கள் சரியாக வரும். அதாவது tamil-ku capital T-yum indians-ku capital I-yum கொடுத்தால் சரியாக இருக்கும் இல்லையேல் அது தவறு என்பதையே "அல்ல" என்று கூறுகிறது Google.



Friday, December 28, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் - 6



1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.

தவறு செய்பவரா நீங்கள்...உங்களுக்கான பதிவு..




மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.


Thursday, December 27, 2012

வாய் விட்டு சிரிங்க...


1.இங்க கணபதி ஸ்ரீனிவாச கோபால சுப்ரமணியன் வீடு எது?
பேரை இப்படி மொட்டையா சொன்னா..எப்படி..அவர் இனிஷியல் என்ன?

2.நான் காலையிலே ஆஃபீஸுக்கு லேட்டாப் போனா அதை சரிகட்ட சாயங்காலம் சீக்கிரம் போயிடுவேன்

3.உன் மனைவி இடது கை பழக்கம் உள்ளவரா?
எப்படி கண்டுபிடிச்சே
உன் வலது கன்னம் வீங்கியிருக்கே

4.நம்மோட தலைவர் சிறுகக் கட்டி பெருக வாழ்பவர்
அப்படியா
சின்னவீடு ஒன்னையும் வைச்சுண்டு..பெரிய வீட்டோட வாழ்ந்து கிட்டு இருக்கார்.

5.நிருபர்-(நடிகையிடம்) இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி நீங்கதான்
நடிகை-அந்த இளைஞர்கள் விலாசத்தையெல்லாம் சொல்லுங்க..அவங்க கனவில வர நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியமா இருக்கும்.

6.எனக்கு நகைச்சுவை உணர்ச்சியே இல்லை என்கிறார்கள் என் நண்பர்கள்
ஏன் அப்படி
எங்க முதலாளி சொல்ற எல்லா ஜோக்குகளையும் நான் ரசிக்கிறேனாம்

7.அந்த பேச்சாளருக்கு ஒரு கூட்டத்தில் பேச 10000 ரூபாயா?
ஆமாம்..ஆனா.. அவர் கூட்டத்திற்கு 2000 பேரை கூட்டிகிட்டு வந்துடுவாராம்.






Tuesday, December 25, 2012

2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 2




கலகலப்பு-

சி.சுந்தரின் படம்..பெயருக்கு ஏற்றார் போல கலகலப்பான படம்.தவிர்த்து இப்படம் எனக்குப் பிடிக்கக் காரணம் நண்பர் கேபிள் ஷங்கரின் பங்கும் இதில் இருந்ததால்.

ராட்டினம்-

படத்தின் முடிவில் சமூகத்திற்குத் தேவையான கருத்தை நாசுக்காக சொன்ன விதம்.புதுமுக நடிகர்களின் நடிப்பு.கிராமத்து காட்சிகள்.

தடையறத் தாக்க..-

அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பு.கதை அமைப்பு இவையே இப்படம் பிடிக்கக் காரணம்

நான் ஈ

இப்படம் வெற்றிக்கு,, முழுக்க முழுக்க அருமையான கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தான் காரணம்.மேலும் பங்கு பெற்ற அனைவரும் அருமையாய் செய்திருந்தனர்.குழந்தைகளையும் கவர்ந்தது ஈ.

மதுபானக் கடை-

பெரும் வெற்றி பெற்றிருக்க வேண்டிய படம்.இயக்குநர் இன்னும் சற்று திரைக்கதையமைப்பிலும்..இயக்கத்திலும் கவனம் செலுத்தியிருந்தால்.தைரியமான படைப்பாய் இருந்ததால் என்னைக் கவர்ந்தது

அட்டகத்தி...

பெரும் எதிர்ப்பார்ப்பின்றி போனதால் அட போட வைத்தது

சுந்திர பாண்டியன்

யதார்த்த நடிப்பு.கதையமைப்பு.கிராம வாசனை...சசிகுமாரின் திறன் இப்படம் பிடிக்கக் காரணம்

சாட்டை

சொல்ல வந்த விஷயத்தால் பிடித்தது.அருமையாய் சொல்லப்பட்டிருந்தாலும்..இன்றைய ஆசிரியர்கள் நிலை கம்பி மீது கழைக்கூத்தாடி நடப்பது போலத்தான்.10 வருடம் முன் வந்திருந்தால் வெற்றியடைந்திருக்கும்.சமுத்திரக்கனி நடிப்பு கிளாஸ்..

பீட்சா..

குறும்பட இயக்குநர் தன்னால் திறம்பட திரைப்படமும் தரமுடியும் என்பதை நிரூபித்த படம்.ஒன்றும் இல்லாமலேயே..படம் பார்ப்பவர்களை திகில் காட்சிகளில் இருக்கையின் நுனியில் அமர வைத்தது.விஜய் சேதுபதியின் நடிப்பு.

நீர்ப்பறவை-

இன்னும் சற்று ஆழத்துக்கு கதையில் போயிருந்தால் விலாங்கு மீனே கிடைத்திருக்கும்.தென் மேற்கு பருவக்காற்று சற்று லேசாகவே வீசியது.இருந்தாலும் கதைக்களன், இயக்குநரின் குறிக்கோள் இவையே இப்படம் என்னைக் கவரக் காரணம்

கும்கி..

தமிழ்த்திரைப்படங்களின் முற்றிலும் மாறுபட்ட கதைக்களன்.விக்ரம் பிரபுவின் நடிப்பு.குளுகுளு காட்சிகள்.கிராஃபிக்சில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

ந.கொ.ப.க.,

என்னை முழுதும் கவர்ந்த படம்.விஜய்சேதுபதி தன் மூன்று நண்பர்களுடன்..மக்களை கல கல என சிரிக்க வைத்த படம்.

ஏமாற்றிய படங்கள்..

முகமூடி,தாண்டவம்,மாற்றான், போடா போடி, நீதானே பொன் வசந்தம், அம்மாவின் கை பேசி

எஸ்..நீங்கள் எதிர்ப்பார்த்த படம்..

விஜய்யின்..துப்பாக்கி மாபெரும் வெற்றிக்கனியை அவருக்கு ஈட்டி தந்தது.பொழுதுபோக்கு, கதையம்சம், காமெடி, நடிப்பு என அனைத்தும் சம அளவில் கலந்து..என்னை மட்டுமின்றி..அனைவருக்கும் பிடித்ததாய் அமைந்த படம்.

மொத்தத்தில்..

இவ்வருடம்..பெரும் பொருட்செலவில் தயாரித்த படங்கள் (துப்பாக்கி நீங்கலாக ) தோல்வியடைந்தன. வசூலில் தோல்வியில்லை என்ற வாதம் சரியாய் இராது.

குறைந்த பட்ஜெட் படங்கள் பல நல்ல படங்களாய் அமைந்தன.

கிராமத்து மணத்துடன் வந்த படங்கள் சிறப்பாகவே இருந்தன.

புத்தாண்டில் படங்கள் சிறப்புற அமைய வாழ்த்துகள்.

2012ல் வெளியான ..எனக்குப் பிடித்த படங்கள்.. - 1




2012ல் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த படங்களும்...மாற்று கதைக்களங்களைக் கொண்ட படங்களும்..

நண்பன்-
விஜய், ஜீவா, மாதவன் நடிக்க ஷங்கர் தயாரிப்பு இயக்கத்தில் வந்த நண்பன்.இது ஹிந்தியில் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தை தழுவியிருந்தாலும்..தமிழுக்காக சில மாற்றங்களுடன்..ஒவ்வொரு ரசிகனும் விரும்பும் வகையில் இருந்தது.பல இடங்களில் லாஜிக் இடித்தாலும்.

அம்புலி 3 டி-

தமிழில் வந்த 3டி படம்..இன்னும் முயன்றிருந்தால் இப்படம் ஒரு வெற்றி படமாக ஆகியிருக்கும்.இருப்பினும்...வசூல் பரவாயில்லை ரகம்.

காதலில் சொதப்புவது எப்படி

ஒரு குறும்படத்தை..திரைப்படமும் ஆக்கி..வெற்றிபடமும் ஆக்கியுள்ளனர்.அனைத்து பிரிவினரும் ரசித்த படம்

அரவான்..

வசந்தபாலன் இம்முறையும் ஒரு வித்தியாசக் கதைக்களனில் இப்படத்தை அளித்துள்ளார்.ஆதியின் நடிப்பு அருமை.இன்னும் நன்றாக ஒடியிருக்க வேண்டிய படம்.

கழுகு..

இப்படம் உண்மையிலேயே..என்னை வியக்க வைத்தது.அருமையான படம்.பெற்ற வெற்றி போதாது.இது போன்ற படங்கள் தமிழில் நன்கு ஓட வேண்டும்.

ஒரு கல் ஒரு கண்ணாடி

இப்படம் பற்றி என்ன சொல்ல..ராஜேஷ் இயக்கத்தில்..உதயநிதி, சந்தானம் கூட்டணியில் வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம்.மன நிறைவைத் தந்த படம்.

வழக்கு எண் 18/9

பாலாஜி சக்திவேல் இயக்கம்.புது முகங்கள்.அருமையான படம்..இவ்வருடப் படங்களில் என்னை மிகவும் பாதித்த,ரசிக்க வைத்த படம்.

ஏமாற்றிய சில படங்கள்..

3, சகுனி,பில்லா 2

 அடுத்த பதிவில்..பிடித்த மேலும் படங்களும்..ஏமாற்றிய படங்களும்.


Monday, December 24, 2012

மௌன ராகம்

                         


சம்மதத்திற்கும்

தர்க்கம் தவிர்க்கவும்

மௌனமே

மௌனமாய் அமர்கிறது


2) பெயரோ ஸ்ரீமதி

இன்னமும் அவள்

செல்வி


3)கர்ப்பிணிப் பெண்

மெதுவாக நடக்கிறாள்

வெண்மேகத்தின் வேகத்தை விட

சூல் கொண்ட

கார்மேகம் வேகம் குறைவுதானே!


4)என் இதயம் உன்னிடம்

என்றவளைக் காணவில்லை

இதயம் இல்லாதவள்

யாரையேனும் கண்டால்

தெரிவியுங்கள்

திரும்ப அனுப்பிவிடுகிறேன்


5)கடிகாரம்

நாட்காட்டி - இவை

காலம் காட்டினாலும்

காலனை நினைப்பதில்லை

கல் நெஞ்சர்கள்


Sunday, December 23, 2012

மூன்று பட விமரிசனங்கள் ஓரிரு வரிகளில்..




நான் பார்க்கும் படங்களில்..மற்றவர்களுக்கு பிடித்தும்..எனக்குப் பிடிக்காத படங்களை நான் விமரிசப்பதில்லை.அதே நேரம் சில படங்கள் எனக்கு பிடித்திருந்தால்..எவ்வளவு நாட்கள் கழித்து அப்படத்தைப் பார்த்திருந்தாலும்..நான் விமரிசிக்கத் தயங்கியதில்லை.

இப்பதிவில் நான் பார்த்த மூன்று படங்கள் பற்றிய சிறு விமரிசனம்.

ந.கொ.ப,கா..- தமிழ்திரைப்படம் இடைவிடாது சிரித்துப் பார்த்து நாளாகிவிட்டதே என்ற ஏக்கத்தை தீர்த்த படம்.ஆனாலும்..ஒருவருக்கு ஏற்படும் குறைபாட்டை வைத்து சிரிக்கிறோம்.உண்மையிலேயே இப்படிப்பட்ட மெமரி லாஸ் உள்ள நோயாளிகள் இல்லத்தில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்தால் நமக்கு சிரிப்பு வராது.ஆனாலும் நகைச்சுவை என்று இதை சீரியஸாக எடுக்காவிடின் படம் அருமை.படத்தின் நீளத்தை 40 நிமிடங்கள் குறைத்திருந்தால்...இன்னும் விறுவிறுப்பாய் இருந்திருக்கும்.
எனி வே...இப்படக் குழுவினருக்கு பாராட்டுகள்.விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல் பாராட்டு..(சுந்தர பாண்டியன், பீட்ஸா, ந.கொ.ப.கா...கலக்குங்க..

கும்கி- மைனாவிற்கு பின் பிரபு சாலமனிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை ஏமாற்றவில்லை இயக்குநர்.விக்ரம் பிரபு நன்கு நடித்துள்ளார்.புதிய கதைக்களன்..ஒளிப்பதிவு தரம்.ஒரே குறை...கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் நிறைவைத் தரவில்லை.தம்பி ராமய்யா அனுபவமிக்க நடிப்பு ரசிக்க வைக்கிறது.ஒன்றின் தோல்வி..மற்றதன் வெற்றி..என்று சொல்வர்.அப்படி ஒன்று நடந்து..இப்படத்திற்கு கிடைப்பதற்கு மேல் கிடைத்துள்ளது அதிர்ஷ்டமே..

நீதானே....= மீண்டும் ஏமாற்றிவிட்டார்..சில நேரங்களில் இயக்குநர்கள் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.அதனால் மக்கள் அதிகம் எதிர்ப்பார்க்க..அதில் சிறிது குறைந்தாலும் படம் வீழ்ந்து விடுகிறது.அந்த வகையில் இதுவும் ஒன்று.

இதைத் தவிர்த்து..அம்மாவின் கை பேசி, போடா போடி...

எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் படமெடுக்கும் தைரியம் வருகிறது.


Saturday, December 22, 2012

வீட்டிலெக்குள்ள வழி (veettilekkulla vazhi)- மலையாளப் பட விமரிசனம்.


(the way to home)

ஆகாயத்தின் நிறம் என்னும் மலையாளப் படம் பற்றிய என் பதிவைப் படித்து விட்டு அன்பு நண்பர் வடகரை வேலன் என்னைஇந்தப் படத்தையும் பார்க்கச் சொல்லியிருந்தார்.இப்படிப்பட்ட அருமையான படத்தைப் பார்க்கச் சொன்ன அவருக்கு நன்றி.இனி படம் பற்றி..

டாக்டர் பிஜூ இயக்கத்தில் வந்துள்ள படம் இது

ஒரு டாக்டர் தன் மனைவியையும், ஐந்து வயது மகனையும்..தில்லியில் வெடிகுண்டு விபத்து ஒன்றில்(தீவிரவாதி தாரிக்கால்) உயிரிழப்பதைப் பார்க்கிறார்.
பின் ஒருநால்..சிறைக்கைதிகளுக்கான மருத்துவமனை ஒன்றில் உயிருக்குப் போராடும் மனித குண்டு பெண்ணை சந்திக்கிறார்.அப்பெண்ணை அவர் முயன்றும் காப்பாற்ற இயலவில்லை.அப்பெண் இறக்கிறாள்.

இறப்பதற்கு முன் தன் ஐந்து வயது மகனை அவனது தந்தையிடம் சேர்க்கச் சொல்லி அவனிடம் வேண்டுகிறாள்.அப்பையனின் தந்தை தீவிரவாதிகளின் தலைவன்.
கேரளாவிலிருந்து, பையனை அழைத்துக் கொண்டு..பல மாநிலங்கள்..பல இடர்களைச் சந்தித்து அழைத்துச் செல்கிறார் மருத்துவர்.

அப்பையனை அவர் தந்தையிடம் ஒப்படைத்தாரா...அந்தக் காரியத்தை அவர் ஏன் ஏற்றுக் கொண்டார் என்பதை அருமையாக சொல்கிறது படம்.

இப்படம்..லடாக்,காஷ்மீர்,ஜய்சல்மார்,ஜோத்பூர்,தில்லி, கேரளா என பல இடங்களில் படமெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவராக பிருத்விராஜ் அருமையாக நடித்துள்ளார்.உயின் மதிப்பு...நீங்கள் இழக்கும் போதும்..ஒன்றை திரும்பப் பெறும்போதும்தான் தெரியும்..என்ற வசனம் அருமை.

அதுவே அப்பணியை அவரை ஏற்றுக் கொள்ளச்சொன்னது.

இனி இப்படம் கலந்துக் கொண்ட விழாக்களும், பெற்ற விருதுகளும்..

The film was screened at 28 international film festivals including:
12th Mumbai Film Festival (Mumbai, India; 2010) as the opening film in the Indian Frames section.
34th Cairo International Film Festival (Egypt; 2010) in the Out of Competition section.
15th International Film Festival of Kerala (Trivandrum, India; 2010)
3rd Jaipur International Film Festival (Jaipur, India; 2011)
5th Chennai International Film Festival (Chennai, India; 2011)
10th Imagine India International Film Festival (Madrid, Spain; 2011) in competition section.
11th New York Indian Film Festival (New York, USA; 2011) in competition section
Zanzibar International Film Festival (Zanzibar, Tanzania; 2011)
London Indian Film Festival (London, UK; 2011)
Bollywood and Beyond Film Festival (Germany; 2011)
38th Telluride Film Festival (Telluride, USA; 2011)
New Generation Film Festival (Frankfurt, Germany; 2011)
Third Eye Asian Film Festival (Mumbai, India; 2011)
Seattle Film Festival (Seattle, USA; 2011)
[edit]Accolades

Award Ceremony Category Recipients and nominees Outcome
Imagine India Film Festival[4][5] 10th Imagine India Film Festival
(2011; Spain)
Best Film Veettilekkulla Vazhi Won
Best Director Dr. Biju Won
Best Music Director Ramesh Narayan Won
International Film Festival of Kerala[6] 15th International Film Festival of Kerala
(2010; India)
NETPAC Award for Best Malayalam Film Veettilekkulla Vazhi Won
Kerala State Film Awards[7] Kerala State Film Awards
(2011; India)
Best Cinematography M. J. Radhakrishnan Won
Best Processing Lab Won
National Film Awards[8] 58th National Film Awards
(2011; India)
Best Feature Film in Malayalam Veettilekkulla Vazhi Won
Zanzibar International Film Festival[9][10] 14th Zanzibar International Film Festival
(2011; Tanzania)
Signis Award (Commendation) Dr. Biju Won
Industry Award for Best Cinematography M. J. Radhakrishnan Won



(விருது தகவல்கள் -விக்கிபீடியா)


Friday, December 21, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 7





நாம் உயிர்வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.

நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்தால்..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு பாகத்தை சும்மா விட்டு விட வேண்டும்.அப்போதுதான் உண்ட உணவு சரியாக செரிக்கும்.அரை வயிறு உண்பவன் ஆரோக்கியமானவன் என்ற சொலவடையே உண்டு.

சாப்பிடுகையில்..வேறு எந்த விஷயங்களையும் பற்றி சிந்திக்காமல்..யாருடனும் பேசாமல் சாப்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.அலுவலக தலைவலிகளைப் பற்றி வீட்டில் சிந்திக்க வேண்டாம்.

ஒவ்வொருவரின் செரிமான சக்தியும் வித்தியாசப் படும்.சிலருக்கு சுறுசுறுப்பாக இருக்கும்.சிலரின் குடல் சோம்பேறித்தனமாக அமையும்.அதற்கேற்றாற் போல சாப்பாட்டின் அளவை அமைத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தில் நாக்கை நம்பாமல் மூளையை மட்டுமே நம்ப வேண்டும்.அதாவது..நாக்குக்கு ருசி தெரியும்.'இது சுவையாக இருக்கிறது..இன்னும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்' என்று அது கேட்டுக் கொண்டே இருக்கும்.ஆனால் மூளையோ, 'அளவுக்கு மிஞ்சி சாப்பிடாதே..' என்று எச்சரிக்கும்.

நல்ல உணவுப் பழக்கத்திற்கு பழகிக் கொள்ளுவோம்.அறுசுவைகளும் சமமாக கலந்து உணவைச் சாப்பிட வேண்டும்.

குண்டாக இருப்பவர்கள் இளைக்க வேண்டும் என்றால் தடாலடியாக உணவுப் பழக்க முறையை மாற்றக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைக் குறைத்து..பழங்களைக் கூட்ட வேண்டும்.

உடற்பயிற்சி, சரியான உணவுமுறை,முறையான தூக்கம், மனநிலை மாற்றங்கள் இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் செய்வதன் மூலம் உடல்நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை உணருங்கள்.

ஆமாம்..இது என்ன அவ்வளவு முக்கியமான பதிவா..என்கிறீர்களா?

வள்ளுவரே இன்பத்துப் பாலில்

உணவிலும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

என்கிறார்.அதாவது தலைவன் தலைவியுடனான உடலுறவைக் காட்டிலும் ஊடல் கொள்வதில் ஒரு சுகம் உள்ளதாம்..அது எப்படிப்பட்ட சுகம் எனில்..உணவு அருந்துவதை விட அருந்திய உணவு செரிமானம் ஆகும் சுகம் போலவாம்.


Thursday, December 20, 2012

குஜராத் தேர்தலில் மோடி படு தோல்வி...




குஜராத் மாநிலத்திற்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் ..முதல்வர் மோடி தலைமையில் ஆன பாஜக படு தோல்வியடைந்துள்ளது.

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 182 இடங்கள் கொண்ட சட்டசபைக்கான தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 117 இடங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது.எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான காங்கிரஸ் 59 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால் நடந்து முடிந்த சமீபத்திய தேர்தலில் பாஜக அலை வீசுவதாகக் கருத்துக் கணிப்புகள் கூறினாலும்..பாஜக படுதோல்வியடைந்துள்ளது.அக்கட்சி 115 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதாவது கடந்த தேர்தலைவிட இரு இடங்கள் அதற்குக் குறைவாகவே கிடைத்துள்ளது. இது அம்மாநிலத்தில் பாஜகவின் வீழ்ச்சியையும்..மோடியின் தலைமையை மக்கள் புறக்கணிக்கப்பட்டதையே குறிக்கிறது.

அதே நேரத்தில் சென்ற முறை 59 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இம்முறை 61 தொகுதிகளில் வென்று அம்மாநிலத்தில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.

இவ்வீழ்ச்சிக்கு தன் ஆட்சியில் நடந்த தவறுகளே காரணம் என்றும்..அதனால் 6 கோடி மக்களிடம் தான் மன்னிப்புக் கேட்பதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டிஸ்கி - இப்பதிவு ஒரு காங்கிரஸ்காரர் பார்வையில்..(நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவும்.)


சிவாஜி ஒரு சகாப்தம் - 5




1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்


உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம்
பொம்மைக்கல்யாணம்
அன்னையின் ஆணை
சாரங்கதாரா
சபாஷ் மீனா
காத்தவராயன்
பொம்மல பெள்ளி (தெலுங்கு)

உத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி

பதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி

சம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.

பொம்மைக்கல்யாணம்..ஜமுனாவுடன் நடித்தார்...படம்..தோல்வி

அன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம்.

சாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.

சபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்

காத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்

இதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.

அடுத்த பதிவு 1959 படங்கள்.

அன்னையின் ஆணை - சாம்ராட் அசோகன் நாடகம் இடம் பெற்ற படம்

சாரங்கதாரா - வசந்த முல்லை போலே வந்து என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம்

Wednesday, December 19, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 7


ஒரு முறை கம்பனால் அவமானம் அடைந்த சோழ மன்னன்..பதிலுக்கு அவரை அவமானப்படுத்த காத்திருந்தார்.தன் எண்ணத்தை பொன்னி என்ற விலைமகளிடம் சொன்னார்.உடன் அவள் 'கம்பர் கையால்..அவர் எனக்கு அடிமை என எழுதி வாங்கி விடுகிறேன்' என்றாள்.

பின் தன் வேலைக்காரியை கம்பனிடம் அனுப்பி...உடன் அழைத்து வரும்படிக் கூறினாள்.கம்பரும்...என்னவோ..ஏதோ..என அங்கு சென்றாள்.

அவரை அன்புடன் வரவேற்றவள்..அவரை கட்டித் தழுவினாள். கம்பர் 'பெண்ணே..நீ அரசர்க்குரியவவள்..என்னை அணைப்பது குற்றம்" என்றார்.ஆனால் பொன்னி அதை செவிசாய்க்கவில்லை. 'இதைத் தவிர வேறு நீ எதைச் சொன்னாலும் கேட்கிறேன்' என்றார்.

அவ்வாறாயின்..தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை..என எழுதித் தாருங்கள்..என்றாள்.

கம்பனும்..அப்படியே எழுதிக் கொடுத்துவிட்டு வீடு சென்றார்.

பொன்னி அந்த ஓலையை மன்னரிடம்..தர..மன்னன் மகிழ்ந்தான்.

மறுநாள் கம்பனிடம் அவ்வோலையைக் காட்டி..இது நீர் எழுதியது தானே..என்றான் மன்னன்.

ஆமாம் என்றார் கம்பர்.

உடன் மன்னன் ஒரு பணியாளிடம் அதைக்கொடுத்து உரக்க படிக்கச் சொன்னான். பணியாளும் 'தாசி பொன்னிக்கு கம்பன் அடிமை' என உரக்கப் படித்தான்.இதைப்பார்த்து கம்பன் அவமானத்தால் கூனிக் குறுகுவார் என எதிர்ப்பார்த்த மன்னன் ஏமாற்றம் அடைந்தான்.

'கம்பரே..நீர் தாசி பொன்னிக்கு அடிமையா?' என்றான் மன்னன்.

ஆமாம்..அதில் என்ன ஐயம்...-கம்பர்.

"பார் புகழும் புலவன் நீர்..கேவலம்..ஒரு தாசிக்கு அடிமை என எழுதிக்கொடுத்துள்ளீர்களே' என ஏளனமாக மன்னன் வினவ..கம்பனோ...

'நான் ஏன் வெட்கப்பட வேண்டும்...அதற்காக பெருமை அல்லவா பட வேண்டும்...அதன் உண்மைப் பொருள் அறிவீரா?' என்றார்.

மன்னா! தா-தாயாகிய , சி- அழகிய. பொன்னிக்கு-திருமகளுக்கு ...அதாவது தாயாகிய அழகிய திருமகளுக்குக் கம்பனாகிய நான் அடிமை..என்று விளக்கம் தந்தார்.

கம்பனை..அவமானப் படுத்த நினைத்த மன்னன் தலை கவிழ்ந்தான்.


Tuesday, December 18, 2012

வாய் விட்டு சிரிங்க..

1.ரேப் ன்னு ஒரு படம் எடுத்தாரே அந்த தயாரிப்பாளரை ஏன் அரெஸ்ட் பண்ணிட்டாங்க?
படத்திலே நடிச்ச ஹீரோயினை ரேப் பண்ணிட்டாராம்..

2.call taxi ல call girl ஐ கூட்டிட்டுப் போனியே என்னாச்சு..
police பார்த்துட்டு காலை உடைச்ச்ட்டாங்க

3.அந்த ஜோக் எழுத்தாளரோட ஒரு ஜோக் இதுவரைக்கும் 500 முறைக்கு மேல் பிரசுரமாயிருக்கு
அது என்ன ஜோக்
கல்யாண வீட்ல செருப்பு திருடின ஜோக் தான்

4.அந்த பெண் சாமியாரை சுற்றி ஏன் இவ்வளவு கூட்டம்?
அவர் எல்லோரையும் கட்டிப்பிடிச்சு ஆசிர்வாதம் பண்றாராம்.

5.அதோ போறாரே அவர் யார் தெரியுமா?
யார்
நடிகை நளினாவோட சின்ன வீடாம்.

6.அந்த எம்.பி. தொகுதி பக்கம் போகலேன்னு யாரும் குறை சொல்லமுடியாது
ஏன்?
அவர் ராஜ்யசபா எம்.பி.ஆயிற்றே!

Monday, December 17, 2012

ஆகாசத்தின்டே நிறம் (மலையாளம்)- விமரிசனம்..


பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்கார் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட 282 படங்களில் , நெடுமுடி வேணு,இந்திரஜித் நடித்த..'ஆகாசத்திண்டே நிறம்' (ஆகாயத்தின் நிறம்) படமும் ஒன்று..

முழுக்க முழுக்க அந்தமான்..நிகோபார் தீவுகளில் எடுக்கப்பட்டுள்ள இப்பட..காட்சிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன.பக்கத்தில் இவ்வளவு அழகான...இயற்கை கொஞ்சும் இடத்தை வைத்துக் கொண்டு..நாம் ஏன் படபிடிப்புக்கு வெளிநாடு செல்கிறோம்??!! எம்.ஜே.ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு அற்புதம். வாழ்த்துகள் ஒளிப்பதிவாளருக்கு.

படத்தின் கதை என்று பார்த்தால்..ஒரே வரியில் சொல்லிவிடலாம்..

மனித வாழ்வில் இயற்கை எப்படி பின்னிக் கிடக்கிறது என்பதுதான்.

வயாதான நெடுமுடி வேணு..தான் இருக்குமிடத்திலிருந்து படகில் சென்று..தன் தயாரிப்பான கைவினைப் பொருட்களை விற்று..படகில் திரும்புகையில்..அப்பணத்தை கொள்ளையடிக்க இந்திரஜித் படகில் ஏறுகிறார்.அவரை தான் இருக்குமிடத்திற்கு அழைத்து வருகிறார் வேணு.அங்கு அவருடன் 7 வயது சிறுவன், வாய் பேசமுடியா அமலா பால், ஒரு திக்குவாய் உதவியாளர் வசித்து வருகின்றனர்.அருகாமையில்..வயதான..வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருப்போரை தன் பாராமரிப்பில்..சிற்சில வேலைகள் செய்யவித்து..மகிழ்வுடன் வைத்திருக்கிறார் வேணு,

இவற்றையெல்லாம் பார்த்த இந்திரஜித்..தானும் மனம் மாறுகிறான்.சொந்த உழைப்பில்தான் வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

வயதானவர்களை பரிசோதிக்க அவ்வப்போது வரும் மருத்துவராக சிறிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் வருகிறார்.அமலா பால் அவர்களுக்கும் சிறிய பாத்திரமே.

இனி இப்படங்கள் பெற்றுள்ள விருதுகள்..கலந்துக் கொண்டுள்ள திரை விழாக்கள்.

கேரள மாநில அரசு விருது..
8 ஆவது யூரோசிய சர்வதேச திரைப்பட விருது
தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
15 ஆவது ஹாங்காங் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
தவிர்த்து..மலையாளத் திரையுலகில் ஆஸ்காருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மலையாளப் படம் இது.

தயாரிப்பு - அனில்குமாr
கதை, இயக்கம்- டாக்டர் பிஜு
ஒளிப்பதிவு- எம்.ஜே.ராதாகிருஷ்ணன்
இசை- ரவீந்திர ஜெயின்
படத்தொகுப்பு- மனோஜ் கன்னோத்

திரைப்படக் குழுவினர்  அனைவருக்கும் வாழ்த்துகள்.














.

Saturday, December 15, 2012

அமெரிக்கா சுவர்க்கமும் இல்லை..இந்தியா நரகமும் இல்லை..




அமெரிக்காவில், கனக்டிகட் என்னும் மாநிலத்தில் நியூடவ்ன் என்னும் ஊரில்  27 பேர் பலியாகியுள்ளனர்.. ஒரு 20 வயதுப் பையனால்.. துப்பாக்கியுடன் ஒரு பள்ளிக்குச் சென்ற அவன் அம்மாவையும் (அவர் ஒரு ஆசிரியை), மற்றும் அந்தப்பள்ளியில் இருந்த சிறுவர் சிறுமியர் (மாணவ மாணவியரை) 20 பேர் மற்றும் 8 பேர் (சக ஆசிரியை போன்றவர்களை) சுட்டு கொன்று இருக்கிறான்!

இது செய்தி...

இறந்தவர்களில் 6முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகள் 20 பேர்..

கடந்த சில தினங்களுக்கு முன்தான்..அமெரிக்காவில் ஒரு மாலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பள்ளி துப்பாக்கிச் சூட்டில் சுட்டவன் 20 வயதே நிரம்பியவன்.ஏன் இப்படி..இங்குதான் அப்படி நடக்கிறதா...அதற்கான காரணம் என்ன...

துப்பாக்கி வைத்திருப்பவர் எண்ணிக்கை இங்கு அதிகம்...லைசன்ஸ் பெற்றுள்ளவர் அதிகம் என்றெல்லாம் சொல்வது..விவாதத்திற்கு வேண்டுமானால் சரியாய் இருக்கும்..

ஆனால்..உண்மையான காரணம்..மனநிலைதான் என்றே தோன்றுகிறது.

குழந்தைகளை..6 வயதிலேயே..பெற்றோர்கள் தங்களிடமிருந்து பிரிக்கின்றனர்.அந்தக் குழந்தைக்கு தனி படுக்கையறை..அவன் அந்த வயதிலேயே..பெற்றோர்களின் பாசத்தைக் கொஞ்சம்..கொஞ்சமாய் இழந்து விடுகிறான்.இது முக்கியமாக அவன் மனதில்..ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.நாளாவட்டத்தில்..அவன் ஒரு வெறுமையை உணர்கிறான்.மேலும்..பள்ளி படிப்பை முடித்து..அதாவது..15 வயதிற்கு மேல்..அவன்..தனித்துவப் படுத்தப்படுகிறான்.

சுருங்கச் சொன்னால்...6 வயதிற்கு மேல்..பெற்றோர் கவனிப்பு, அன்பு, பாசம் இதெல்லாம் அவனுக்கு முழுதுமாய்க் கிடைப்பதில்லை.இதுதான் முக்கியக் காரணமாய் நான் நினைக்கிறேன்.

ஆனால்...நம் நாட்டில்..பெற்றோர்கள்..குழந்தைகள் திருமணமாகும் வரை..பாசத்தைக் கொட்டி வளர்க்கின்றனர்.(இப்போது மெல்ல மெல்ல..அமெரிக்கக் கலாச்சாரம் நம்மிடமும் பெருகி வருவது..வேதனையைத்தான் தருகிறது)

அமெரிக்கா சுவர்க்கப் பூமியாய் தெரிந்தாலும்..உண்மையில் சொர்க்க பூமி நம் நாடுதான்.இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் புரிந்துக் கொண்டுவருகிறார்கள்
.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்..

அமெரிக்க வாழ் இந்தியனின் மன மாற்றங்கள் ..சிறிது..சிறிதாக ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது..குறைந்தது..அவர்கள் குழந்தைகம் எதிர்கால நன்மைக்காக.



Friday, December 14, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -4



1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பத்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பேசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

1958 படங்கள் அடுத்த பதிவில்.

Thursday, December 13, 2012

வாய் விட்டு சிரிங்க...





அதிகாரி- நேற்று வலது கைல கட்டுப்போட்டு லீவ் கேட்ட..இன்னிக்கு இடது கைல கட்டு போட்டுண்டு இருக்கே?
அலுவலர்- ஆஃபீஸிற்கு கிளம்பற அவசரத்தில..நேற்று எந்த கைல கட்டுப்போட்டேன்னு மறந்து போச்சு சார்..

2.கதை,வசனம்,டைரக்ஷன்,பாடல்,ஹீரோ பாத்திரம் என எல்லாப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு..ஒரு படம் பண்ண ஆசை..யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாங்களா?
அவ்வளவு ஈஸியா ஒரு ஏமாளி கிடைக்க மாட்டாங்களே!

3.அந்த கோவில்ல ஒரு உண்டியல்ல ஏன் லஞ்சம்னு போட்டிருக்கு
தங்களுக்கு எந்த காரியத்தையாவது சாதித்துதர வேண்டிகிட்டு..அதுக்கு பக்தர்கள் போட்ட லஞ்ச உண்டியல் அது.

4.டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்

5. கொடுத்த கடனை மூணு தரம் கேட்டும்...திரும்ப கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்களே
நான் அஞ்சுதரம் கேட்டப்பிறகு தானே கடன் கொடுத்தீங்க

6.என்னோட அதிகாரி..அவர் துணிகளை நான் துவைச்சுத் தர முடியுமான்னு கேட்கிறார்
ஏன் அப்படி கேட்கிறார்
நான் நல்லா சோப் போடறேனாம்.


Wednesday, December 12, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 6




யானையின் பலம் எதிலே
தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே
நம்பிக்கையிலே

இப்படி ஒரு சினிமா பாடல் உண்டு.மனிதனுக்கு நம்பிக்கை மிகவும் அவசியம்..அப்போதுதான் அவனால் வாழ்வில் முன்னேற முடியும்.எந்த காரியத்தையும் செய்ய என்னால் முடியும் என்ற எண்ணம் வேண்டும்.ஒரு சின்னக் கதை

இரண்டு தவளைகள்..ஒரு பெரிய அடுக்கில் இருந்த பாலில் விழுந்து விட்டன.பால் என்று தெரிந்ததும் தன்னால் பிழைக்கமுடியாது என்று நம்பியது ஒரு தவளை.இது அவ நம்பிக்கை கொண்ட தவளை.
பாலில் அடிப்பாகம் சென்று அங்கேயே செத்து மடிந்தது.

ஆனால் அடுத்த தவளையோ நம்பிக்கை உள்ளது.

பால் என்று தெரிந்தும் கால்களைப் போட்டு இங்கும் அங்கும் அடித்தது.உதைத்தது.நீச்சல் போட்டது.உந்தி உந்தி கலக்கியது.பால் கலங்க ஆரம்பித்து ஆடை படர்ந்தது.மேலும் மேலும் நீந்தியது.சிறிது சிறிதாகத் திரண்ட வெண்ணெய் பாலில் மிதந்தது.

நம்பிக்கை இழக்கா தவளை வெண்ணெய் மீது அமர்ந்துக் கொண்டது.வெளியே தாவி பாய்ந்து தப்ப சிறிது ஓய்வு கிடைத்தது.

பால் பாத்திரத்தை விட்டு தாவி குதித்து ஓடியது..இது நம்பிக்கை.

பாலின் அடியில் சென்றது செத்து மடிந்தது அவநம்பிக்கை.

நம்மை ஒரு துன்பம் சூழும் போது துவண்டுவிடாமல்..அதிலிருந்து வெளிவரும் நம்பிக்கை இருந்தால் வாழ்வில் நமக்கு வெற்றியே கிடைக்கும்.

இதையே வள்ளுவர்..

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்

என்கிறார்..

துன்பம் சூழும் போது துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்


Tuesday, December 11, 2012

ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி! சிவாஜி 3D, எப்படி? - ஏவி.எம். சரவணன்




ரஜினிகாந்த் பல்லக்கிலிருந்து இறங்கி நின்று ஸ்ரேயாவைப் பார்த்து "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி' என்று பாடியபடி திரையில் தன் தொடையைத் தட்டும்போது பறந்து வரும் தூசி நம் கண்களில் விழுந்து விடுமோ என்று நாம் கண்களை ஒரு வினாடி மூடிக் கொள்கிறோம்; ஸ்ரேயா நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தும்போது தெறிக்கும் தண்ணீர் நம் மீது பட்டுவிட்டதோ என்று நாம் நம் உடையை தொட்டுப பார்த்துக் கொள்கிறோம்; தீ தீ என்று ரஜினி பாடும்போது அவர் கையிலிருக்கும் துப்பாக்கி பறந்து நம் அருகில் வந்து நின்று ஒருவனை சுட்டுவிட்டு திரும்பவும் ரஜினியின் கையில் போய் சேருகிறது; ஒரு காட்சியில் ரஜினி சுண்டி விடும் நாணயம் நம்மை நோக்கி வேகமாக வர நாம் நம் முகத்தில் அது மோதிவிடாமலிருக்க தலையை குனிந்து கொள்கிறோம்.

÷இந்த அனுபவமெல்லாம் 3D தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட ஏவி.எம்மின் "சிவாஜி' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தபோது நமக்கு ஏற்பட்டவைதான். ஏற்கெனவே பார்த்த படம்தான்; பார்த்த காட்சிகள்தான். ஆனாலும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் 3D நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலம் பிரமிக்க வைக்கிறது. இது 3Dயாக மாற்றம் செய்யப்பட்ட படம் என்பதை நம்ப முடியவில்லை. 3Dயாகவே எடுக்கப்பட்ட படம் என்கிற எண்ணம்தான் உண்டாகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த மேஜிக்?

÷""உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த "சிவாஜி' படத்தை 3Dயாக மாற்றலாம் என்கிற ஐடியா முதலில் தோன்றியது எங்களுக்கு அல்ல. பிரசாத் ஸ்டுடியோ அதிபர் சாய் பிரசாத்துக்குத்தான்'' என்று "சிவாஜி' முப்பரிமாணதன் காரணத்தை விளக்கினார் படத்தின் தயாரிப்பாளரான ஏவி.எம். சரவணன்.

÷அவருடைய தாத்தா எல்.வி. பிரசாத் காலத்திலிருந்தே அவர்கள் குடும்பத்திற்கும் ஏவிஎம்முக்கும் ஒரு நெருக்கமான உறவு உண்டு. அவர்கள் ஸ்டுடியோவில் இருக்கும் இஎப்எக்ஸ் என்கிற தொழில்நுட்பப் பிரிவு படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகவும் புகழ்பெற்றது. பொதுவாக படங்களில் ஒரு சில காட்சிகளிலோ அல்லது பாடல் காட்சியிலோ இத்தகைய கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இடம்பெறும்.

÷இப்படி அவர்கள் உருவாக்குகிற கிராபிக்ஸ் காட்சிகள் அகில இந்திய அளவில் பெரிய பாராட்டைப் பெற்றிருந்தாலும் ஒரு முழு படத்தையும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்ற வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருந்தது. அதற்கு ஏற்ற படமாக சிவாஜி இருப்பதால் அப்படத்தை 3Dயில் மாற்றலாம் என்கிற யோசனையை சாய் பிரசாத் எங்களிடம் தெரிவித்தார். எங்களுக்கும் அது நல்ல யோசனையாகப் படவே உடனே சம்மதம் தெரிவித்தோம்.

÷"சிவாஜி' படம் மூன்று மணி பத்து நிமிடம் ஓடக் கூடியது. அதை இரண்டு மணி நேரமாகக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று சாய் பிரசாத் கூறினார். ஆனால் நாங்கள் எவ்வளவோ குறைத்தும் எங்களால் நாற்பது நிமிடத்திற்கு மேல் குறைக்க முடியவில்லை. எனவே இப்போது சிவாஜி 3D படத்தின் நேரம் 2 மணி 32 நிமிடம்.

÷"சிவாஜி' படம் வெளிவந்து இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே அப்படம் ரீலிஸானபோது விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்ட 5 வருட உரிமை முடிவடைந்து உரிமை மீண்டும் எங்களுக்கே வருகிறது. அதனை கணக்கிட்டு 3D வேலைகளுக்கு எட்டு மாதம் ஆகலாம் என எண்ணி கடந்த ஆண்டு நவம்பரில் 3D தொழில்நுட்ப பணிகளை பிரசாத்தில் தொடங்கினார்கள்.

÷நானூறு தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு பகலாக வேலை செய்தும் 3D பணிகள் முடிவடைய ஒரு வருடம் ஆகிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது இது மற்ற 3D படங்கள் போல் அல்ல. புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாரானது. இரண்டாவது இப்படி முழு படமும் ஒவ்வொரு பிரேமும் 3Dயில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாவது இந்தியாவிலேயே இது முதல்முறை. எனவே இந்த தொழில்நுட்பம் பிடிபடுவதற்கே சில மாதங்கள் ஆயிற்று.

÷முதலில் இரண்டு பாடல் காட்சிகளையும் மற்றும் சில காட்சிகளையும் மட்டும் 3D தொழில்நுட்பத்தில் மாற்றி எங்களுக்குக் காட்டினார்கள். அதைப் பார்த்த நாங்கள் அசந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. உடனே ரஜினிக்கு போன் செய்து இந்த விஷயத்தைக் கூறினேன். அவருக்கு சிவாஜி படம் 3Dல் மாற்றப்படுகிற விஷயமே அப்போதுதான் தெரியும். இந்த டெக்னாலஜி முழு படத்திற்கும் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை என்பதால் நாங்கள் யாரிடமும் இதுபற்றி முன்கூட்டியே கூறவில்லை.

÷ரஜினி வந்தார். ஆர்வமாக படத்தைப் பார்த்தார். படம் ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு ரசிகரைப் போல் உற்சாகமாக சிரித்து ரசித்துப் பார்த்தார். படம் பார்த்து முடித்ததும் வியந்து பாராட்டினார். எப்படி எப்படி என்று எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

÷ரஜினியிடம் "கோச்சடையான் படம் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடுமா' என்று நான் கேட்டேன். அவர் "இல்லை அந்தப் பட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன' என்று கூறினார். "அப்படியானால் உங்கள் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி சிவாஜி 3D ரிலீஸ்' என்று நான் கூறினேன். அவர் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். "சூப்பர்' என்னோட ரசிகர்களுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும், ரொம்ப நன்றி' என்று ரொம்ப மகிழ்ச்சியாக சொன்னார்.

÷படத்தின் டைரக்டர் ஷங்கர் இந்த 3D மாற்றத்தைப் பார்த்துவிட்டு, "நான் 3Dல் மாற்றப்பட்ட பல ஹாலிவுட் படங்களை பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் விட சூப்பர் குவாலிட்டி இந்தப் படத்தில்தான்' அப்படின்னு சொன்னார்.

÷படத்தோட கேமராமேன் கே.வி. ஆனந்த் "நாற்பது நிமிடப் படம் குறைஞ்சதே தெரியல. அதே விறுவிறுப்பு அதே கலகலப்பு... மறுபடியும் பாக்கணும்போல இருக்கு' அப்படின்னார்.

÷கவிஞர் வைரமுத்து படத்தைப் பாத்துட்டு "இந்தப் படம் ரஜினியை ரசிகர்களுக்கு அருகில் கொண்டு செல்லும்' அப்படின்னு பாராட்டினார்.

÷இந்தப் படத்தோட ஒலியமைப்புல "டால்பி அட்மோஸ்'ங்கற புது தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கு.

÷சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்துல இருக்கிற செரின் தியேட்டர்ல இந்தப் படத்துக்காகவே புதிதாக 20 லட்ச ரூபாய் செலவுல "அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' பொருத்தியிருக்காங்க.

இந்த "டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டம்' உலகத்திலேயே நூறு தியேட்டர்களில்தான் இருக்கு. அதில இந்தியாவில இருக்கற ஒரே தியேட்டர் செரின். இந்த சவுண்ட் சிஸ்டத்தில படம் பாக்கறது ஒரு புது அனுபவமா இருக்கும்.

ரசிகர்களைப் போலவே நாங்களும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருக்கிறோம்,  12.12.12க்காக.

ஏவி.எம். சரவணனின் முகத்தில் இன்னொரு மாபெரும் சாதனை படைத்து முடித்திருக்கும் பெருமிதம்!

(நன்றி-தினமணி)

Monday, December 10, 2012

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும்..கலைஞரும்




கலைஞர் ஒரு அறிக்கையில் சொல்லியுள்ளது..
கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், 'வால்மார்ட்' நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: வானகரத்தில் 'வால்மார்ட்' நிறுவனத்தின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகை கடைக்காரர்களை அணுகி குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்களை விநியோகிக்கிறோம் என்று கூறி, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறதாம்.

இந்த செய்திகள் உண்மையாக இருக்குமேயானால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் நுழைந்துவிடக்கூடும். சம்பந்தப்பட்டவர்களின் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது, நாங்கள் சில்லறை வர்த்தகம் செய்யவில்லை, கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகிறார்களாம். எனவே தமிழக அரசு இந்த செய்தி உண்மையா என்பதை அறிந்து உடனடியாக அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டிஸ்கி-
மகன்-அப்பா...குழந்தையையும் கிள்ளி விட்டு..தொட்டிலையும் ஆட்டுவது என்று ஏன் சொல்கிறார்கள்?
அப்பா-ஏதேனும் ஒன்றிற்கு ஆதரவாகவும்...அடுத்த நிமிடமே மறுப்பாகவும் பேசுவதற்கு என்ன சொல்வது...தெரியுமா?
மகன்-தெரியாது
அப்பா-சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே நல்லது..
மகன்-நீ என்ன சொல்றேன்னும் புரியல
அப்பா-உனக்குமட்டுமா புரியலை..புரியாது மாதிரி நடிபவங்களுக்குக் கூட புரியலை


Sunday, December 9, 2012

பட்டையை கிளப்பப்போகும் விஸ்வரூபம்


தசாவதாரக் கமலின் விஸ்வரூபம்

கமலின் விஸ்வரூபம் படம் ஜனவரி 11ஆம் நாள் வெளியாகிறது.பொங்கலை ஒட்டி முக்கிய நடிகர்கள் படங்கள் சிலவும் வெளியாவதால்...தியேட்டர் பிரச்னைகள் கண்டிப்பாக ஏற்படும்.எதிர்ப்பார்த்த தியேட்டர்கள், காட்சிகள் ஆகியவை குறையக் கூடும்.
தவிர்த்து...இப்போதெல்லாம்..எவ்வளவு முடியுமோ..அவ்வளவு காட்சிகளை படம் வெளியாகி..விமரிசனங்கள் வருவதற்குள்..நடத்தி வசூலைப் பெறுவதே நோக்கமாகி உள்ளது.

இந்நிலையில்..தியேட்டர் எண்ணிக்கை..பொங்கல் வெளியீடு படங்களுக்கு குறையும்.தவிர்த்து.100 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள்.. ஒருவேளை சரியாய் இல்லையெனில்..தயாரிப்பாளர்..விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடையக்கூடும்.

அதற்கு என்ன வழி..என எண்ணியே கமல்..தன் படம் வெளியாகும் முதல் நாள் ஒரு காட்சியை டிடிஎச் சில் ஒளிபரப்ப ஏற்பாடுசெய்துள்ளார்.இதற்காக 50 கோடிகள் விலை பேசியுள்ளதாகத் தகவல்.(ஒரு இணைப்பிற்கு 1000 ரூபாய் என்பது வேறு விஷயம்..)

இப்போது..படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர்..செலவில் கணிசமான தொகை கிடைத்து விடுகிறது.

இப்போது..இப்படம்...பொங்கல் விடுமுறை காலத்தில்...அதாவது..வெளியான நாளிலிருந்து 15ஆம் நாள் வரை..அதாவது ஐந்து நாட்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறும்.அப்போது..மீண்டும் கணிசமான வசூல் கிடைக்கும்.மேலும்..வெளிநாடுகளில் வசூல்...இவையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்..படம் ஹிட் ஆகாவிடினும்..தயாரிப்பாளர் நஷ்டத்திலிருந்து தப்பிவிடுவார்.

இதுபோல..இனி வரும் நாட்களிலும்..லோ பட்ஜெட் படங்களும்..வெளியிடும் முன் சேனல்களுக்கு விற்கப்படலாம்

இது எல்லாப் படங்களுக்கும்..அதன் அதன் செலவிற்கேற்ப வசூல் ஆகும் நிலையை உருவாக்கும்.

கமலின் இந்த முடிவு..கண்டிப்பாக வரவேற்க வேண்டிய ஒன்று..

திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வரலாம்..ஆனால் காலப் போக்கில்..எல்லா படங்களுக்கும் இனி திரையரங்குகள் கிடைக்கும் நிலை வரும்.மேலும் திரையரங்கில் படம் பார்ப்பவர்கள் அரங்கிற்குத் தான் வருவர்.

துப்பாக்கி படம் .திருட்டு டிவிடியில் வந்தும் ..திரையரங்கிற்கு மக்கள் வரவில்லையா..

மாற்றான்..வெளியானதுமே..விமரிசனங்கள் வந்தும்..முதல் சில நாட்கள் வசூலில் பட்டையைக் கிளப்பவில்லையா..

ஆகவே..இப்படி யாகுமோ...அப்படியாகுமோ என மைதாசாக எண்ணாமல்..கமலின் இந்த முடிவு...திரையுலகை அடுத்த ஒரு புது பாதைக்கு அழித்து செல்லும் என நம்புவோமாக.

Friday, December 7, 2012

உங்களுக்குத் தெரியுமா?





1.பணத்தால் வாங்க முடியாதவை இவை

1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்கலாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது


2.உலகத்திலேயே அருமையானவர்கள்

1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.

3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன.


Wednesday, December 5, 2012

சிவாஜி ஒரு சகாப்தம் -3



 
1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி

மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.

நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.

மேலும் நண்பர் ஜோ தரும் அதிகத் தகவல்கள்

வருடம் - 1954 & 1955

1. முதன் முதலாக தமிழில் ஒரே நடிகரின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான்.

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

2. முதன் முதலாக மதுரையில் ஒரே படம் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டது நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

திரையிடப்பட்ட அரங்குகள் - தங்கம் & நியூசினிமா.

3. அதே நாளில் அந்த நாள் படமும் மதுரை - ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில் வெளியானது. ஆக முதன் முதலாக மதுரையில் ஒரே நடிகரின் படங்கள் மூன்று திரை அரங்குகளில் வெளியானதும் நடிகர் திலகத்திற்கு தான்

4. முதன் முதலாக ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரு வருடத்தில் ஒரே நாளில் வெளியிட்ட சாதனை மட்டுமல்லாது அதே வருடத்தில் மீண்டும் ஒரு முறை ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானதும் நடிகர் திலகம் மட்டுமே செய்த சாதனைகளாகும். அவை பின்வருமாறு

படங்கள் - அந்த நாள் & கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி.

வெளியான நாள் - 13.04.1954.

படங்கள் - கூண்டுக்கிளி & தூக்கு தூக்கி.

வெளியான நாள் - 26.08.1954

5. முதன் முதலாக சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான தமிழ் படம் - எதிர்பாராதது.

6. முதன் முதலாக சென்னையில் 5 திரையரங்குகளில் 80 நாட்களை கடந்து ஓடிய தமிழ் படம் - எதிர்பாராதது.

அரங்குகள் - சித்ரா,காமதேனு, பிராட்வே, மகாலக்ஷ்மி, பாரத்.

7. முதன் முதலாக ஒரே வருடத்தில் ஒரு தமிழ் பட கதாநாயகன் நடித்த அதிகமான படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான். நடிகர் திலகம் நடித்த 10 படங்கள், 1954-ல் வெளியானது.

8. இதில் மூன்று படங்கள் 100 நாட்களை கடந்தன.

மனோகரா

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி -

[சென்னை - காசினோ, சேலம் - நியூ சினிமா, திருச்சி -பிரபாத்.]

எதிர்பாராதது

9. முதன் முதலாக பந்துலுவும் நடிகர் திலகமும் ஒரு முழு நீள படத்திற்கு இணைந்தது இந்த படத்தில் தான். படம் - முதல் தேதி.

10. முதன் முதலாக படம் முழுவதும் கனவு காட்சியாகவே திரைக்கதை அமைக்கப்பட்ட படம் - முதல் தேதி.

11. முதன் முதலாக தமிழ் திரை உலகில் நடிக்க வந்த மூன்றே வருடங்களில் 25 படங்கள் அதுவும் நாயகனாகவே நடித்தவர் நமது நடிகர் திலகம் மட்டும் தான். [1952 -1955]
March 6, 2009 12:53:00 AM PST
 ஜோ / Joe said...
வருடம் - 1956

1.இரண்டு வருடங்களுக்கு முன் நடந்தது போல் மீண்டும் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியானது இந்த வருடத்தில் தான்.

படங்கள் - நான் பெற்ற செல்வம் & நல்ல வீடு

வெளியான நாள் - 14.01.1956

2. முதன் முதலாக 43 நாட்கள் வித்யாசத்தில் ஒரு கதாநாயகனின் 6 படங்கள் வெளியானது நடிகர் திலகத்திற்கு தான். அவை

நான் பெற்ற செல்வம் - 14.01.1956

நல்ல வீடு - 14.01.1956

நானே ராஜா - 25.01.1956

தெனாலி ராமன் - 03.02.1956

பெண்ணின் பெருமை - 17.02.1956

ராஜா ராணி - 25.02.1956

3. எதிர்பாராதது படத்தை தொடர்ந்து சென்னையில் 6 திரையரங்குகளில் வெளியான படம் நானே ராஜா.

4. நடிகர் திலகத்தின் காரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பொது மக்கள் ஏற்று கொண்டதால் தமிழகத்தில் 5 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது பெண்ணின் பெருமை. அவை

சென்னை - காசினோ, பிராட்வே, மகாலெட்சுமி.

சேலம் - நியூ சினிமா

திருச்சி - ஜுபிடர்

5. சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகத்தில் கலைஞரின் 16 பக்க வசனத்தை ஒரே டேக்-ல் நடிகர் திலகம் பேசி நடித்த படம் ராஜா ராணி.

6. முதன் முதலாக சிவாஜி பிலிம்ஸ் விநியோகித்த தமிழ் படம் - அமர தீபம்.

7. முதன் முதலாக ஒரு தமிழ் படம் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக (continous 100 House full shows) ஓடிய சாதனையை நிகழ்த்தியதும் நடிகர் திலகத்தின் படம் தான்.

படம் - அமர தீபம்

அரங்கு - காசினோ

8. முதன் முதலாக தன்னை விட வயதான ஒருவருக்கு தந்தையாக நடிகர் திலகம் நடித்த படம் - வாழ்விலே ஒரு நாள்.

9. முதன் முதலாக அண்ணா கதை எழுத, கலைஞர் திரைக்கதை வசனம் தீட்ட, நடிகர் திலகம் நடித்த படம் ரங்கோன் ராதா

தமிழுக்கு அமுதென்று பெயர் - 5




இன்றைய பதிவில் காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாட்டைப் பார்க்கலாம்.

பாம்பையும், வழைப்பழத்தையும் சிலேடையாகக் கையாண்டப் பாடல்..

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்

 பாம்பைப் பொறுத்தவரை நஞ்சு இருக்கிறது.
தோல் இருக்கிறது. காலத்திற்குக் காலம் தன்தோலை உரிக்கும் வழக்கம்
இருக்கிறது. சிவனின் முடியிலே அமர்ந்திருக்கிறது கோபத்திலே அதன்
பற்கள் பட்டுவிட்டால் யாரும் உயிர் தப்பமுடியாது.

அதேபோல, வாழைப்பழம்,
நஞ்சிருக்கும் (நன்கு கனிந்து நைந்து இருக்கும். )எ
அதற்கு வெளித் தோல் இருக்கிறது. உண்பதென்றால் அந்தத் தோலை உரிக்கவேண்டும்.
சிவனின் முடிக்கு அபிஷேகம் செய்யப்படும் பழங்களில்
ஒன்றாக இருக்கிறது. (-வெஞ்சினத்தில் -
 துணைஉணவாக இருக்கும்போது என்று பொருள்படும்).
துணையுணவாக உட்கொள்ளும்போது நமது பற்கள் பட்டுவிட்டால் மீளாது,
வயிற்றினுள்ளே சென்றுவிடும். ஆகவே வாழைப்பழமு; பாம்புக்கு நிகராகின்றது
என்பது பாடலின் கருத்தாகின்றது.

அடுத்த பதிவில் மற்றொரு பாடலுடன் சந்திப்போம்.


Tuesday, December 4, 2012

தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ வும், தினமணி தலையங்கமும்




இது மட்டுமே போதாது!
By தினமணி

சிவசேனை நிறுவனர் தலைவர் பால் தாக்கரே மறைவின்போது, முகநூலில் கருத்துத்  தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டதாலும், ஊடகங்கள் கேள்வி எழுப்பியதாலும் தற்போது மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

 இதன்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-ன் கீழ் பெறப்படும் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்வதாக இருந்தால், ஐ.ஜி. அல்லது டி.ஜி.பி. போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் அனுமதிக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருக்கிறார்.

 இது இப்பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்க உதவுமே தவிர, பிரச்னைக்குத் தீர்வு என்று எடுத்துக்கொள்வதற்கில்லை. ஏனெனில் இந்தச் சட்டத்தின் மூலம், கருத்துச் சுதந்திரத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டது என்று யாரும் சொல்லிவிட முடியாது.  கருத்துச் சுதந்திரத்தை தீர்மானிக்கும் சக்தி, ஒரு காவல்நிலையத்தின் கையிலிருந்து, காவல்துறை உயர் அதிகாரியின் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆகவே இந்த வழிகாட்டு நெறிமுறை மூலம் வழக்குப் பதிவுகள் மேலிடத்துத் தீர்மானமாக இருக்குமேயொழிய, இப்போதும் சில கருத்துகளை வெளிப்படையாகப் பேசிவிட முடியாது என்பதே உண்மைநிலை.

 ஒரு அரசியல் தலைவர் அல்லது ஒரு முதல்வர் அல்லது ஒரு அமைச்சர் தொடர்பான விமர்சனத்தை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை அரசு மற்றும் அரசியல் நெருக்குதல் காரணமாக ஒரு காவல்துறை உயர் அதிகாரி வழக்குப் பதிவு செய்ய அனுமதி தராமல் இருப்பாரா என்ன?

 "வதேராவைக் காட்டிலும் கார்த்தி சிதம்பரம் அதிக சொத்து சேர்த்திருக்கிறார்' என்ற ட்விட்டர் தகவலுக்காகத்தான் ரவி சீனிவாசன் என்பவர் மீது பிரிவு 66ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகச் சாதாரண தகவல். இப்போது வழிகாட்டு நெறிமுறை கூறப்பட்டுள்ள நிலையில் இதே ட்விட்டர் தகவலில் தற்போது வேறொரு அரசியல் புள்ளியின் மகன் அல்லது மகள் பெயரை மாற்றி அனுப்பினால், அப்போதும் அனுப்பியவர் கைது செய்யப்படுவார். ஏனென்றால் அந்தத் தகவல் மெய்யா பொய்யா என்பதல்ல பிரச்னை. அந்தப் பெயருக்குரியவர் அரசியல் சக்தியாக இருக்கிறார் என்பதுதான். முன்பு, காவல் நிலையத்துக்குக் கொடுக்கப்பட்ட நெருக்குதலை, இனிமேல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கொடுப்பார்கள், அவ்வளவுதான்.

 பிரிவு 66ஏ சொல்வது என்ன? 1. புண்படுத்துகிற அல்லது தொல்லைதருவதான தகவல்களை அனுப்புதல்; 2. ஒரு தகவல் பொய்யென்று தெரிந்திருந்தும், அச்சம், மனச் சங்கடம், ஆபத்து, இடையூறு, அவமானம், பொய்க்குற்றச்சாட்டு, பகை, வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அனுப்புதல்; 3.போலியான முகவரிகளுடன், அல்லது முகவரி இல்லாமல் மோசடியான, மனச்சங்கடம் தருகிற, அச்சமூட்டுகிற தகவல்களை, புகைப்படங்களை, விடியோக்களை இணைத்து அனுப்புதல் ஆகியவை குற்றச் செயல். இதற்கு 3 ஆண்டுகள் அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கலாம்.

 பொய்யான ஒரு தகவலை, அது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பும் என்று தெரிந்திருந்தும் மற்றவர்களுக்கு அனுப்புவது குற்றம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அண்மையில் வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அச்சமூட்டும் குறுந்தகவல்கள், மின்அஞ்சல்கள் பரப்பப்பட்டு, அதனால் அம்மாநில மக்கள் அடைந்த பீதி அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்களை இந்தச் சட்டத்தின்கீழ் கைது செய்வதில் யாருக்கும் ஆட்சேபணை கிடையாது. அதேபோன்று, "லாட்டரியில் இத்தனை லட்சம் விழுந்தது' என்பது போன்ற பொய்யான முகவரியிலிருந்து தகவல் அனுப்புவோரைக் கைது செய்வதிலும் யாருக்கும் ஆட்சேபணை இல்லை.

  ஆனால், இந்தச் சட்டத்தில் முதலில் இடம்பெற்றுள்ள "புண்படுத்துகிற' (அபன்ஸீவ்) "தொல்லையான' (மெனாசிங்) என்பதற்கு என்ன பொருள் என்பது இந்திய சட்டத்தில் சரியாக வரையறுக்கப்படவில்லை; இது அவரவர் மனக் கருதுகோளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்பதுதான் தற்போது இந்தச் சட்டத்தின் மீது அனைவரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

 அடுத்ததாக, "ஒரு பத்திரிகையில் வெளியாகும் கருத்து அல்லது விமர்சனம் குற்றமாகாதபோது, ஒரு ட்விட்டர் அல்லது மின்அஞ்சல், குறுந்தகவலில் சொல்லப்படும் கருத்துக்கு ஏன் கைது செய்யப்பட வேண்டும்?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

 அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில், வாக்கெடுப்பு நடத்தினால் மத்திய அரசை திமுக ஆதரிக்கும் எனும் கருத்தைப் பத்திரிகைகள் விமர்சனம் செய்ய முடியும். "திமுக பல்டி' என்றுகூட தலைப்பு போட முடியும். ஆனால், இதையே ஒரு குறுந்தகவலாக, இணைய தளத்தில் அனுப்பினால் மட்டும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66ஏ-ன் கீழ் குற்றமாகப் பார்க்கப்படும். இது என்ன வேடிக்கையான கருத்துச் சுதந்திரம்?

 அரசியல் மேடைகளில் ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் ஒருவரை மற்றவர் தரக்குறைவாக விமர்சித்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆட்சி அதிகாரமும், சட்டத்தைத் தங்களது ஏவலாளாகப் பயன்படுத்தும் சாமர்த்தியமும் இருப்பதால் பொதுமக்கள் இவர்களை விமர்சித்தால், கருத்துத் தெரிவித்தால் குரல்வளையை நெரிக்க முற்படுகிறார்கள். நன்றாக இருக்கிறது இவர்களது ஜனநாயகப் பண்பு!

 மத்திய அரசு, இத்தகைய விவகாரங்களில், சட்டத்தின் நுட்பங்களில் தெளிவு காண முயற்சி செய்ய வேண்டும். "வழிகாட்டு நெறிமுறை' என்ற பெயரில், "யார் வழக்கைத் தீர்மானிப்பது' என்கின்ற அதிகார மையம்தான் மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமே போதாது.

(நன்றி - தினமணி)


Monday, December 3, 2012

வாய் விட்டு சிரிங்க..

 


1.ஆசிரியர்- திரவ பொருளுக்கு ஒரு உதாரணம் சொல்
மாணவன்- இருட்டு சார்...இராத்திரியிலே கரண்ட் கட்டாச்சுன்னா அடுத்த நாள் பேப்பர்ல'ஊரே இருளில் மூழ்கியது'
என்று போடறாங்களே!!

2.நான் ஒரு திரில்லான கதை எழுதி இருக்கேன்..ஆனா அதை முடிக்கத்தான் முடியலை
ஏன்?
குற்றவாளி யார்னு என்னாலே கூட கண்டுபிடிக்க முடியலை.

3.அதோ போறாரே..அவர் தீவிர காங்கிரஸ்காரர்னு நினைக்கிறேன்.
எப்படி சொல்ற
அவர் பொண்ணு சோனியா இருக்கு..கேட்டா என் தலைவி ஞாபகமா அப்பிடியே இருக்கட்டும்னு சொல்றார்

4.தமிழ் டீச்சரை லவ் பண்ணினது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினா.. அதில் எழுத்துப் பிழை,சந்திப்பிழைன்னு ஏதாவது தப்பு கண்டுபிடிச்சுக்கொண்டே
இருக்கா..

5.அப்பா-நேற்று கணக்கு ஹோம் ஒர்க்கை என்னை போடச்சொன்னே..இன்னிக்கு நீயே போடறே
மகன்- யார் போட்டா என்ன..இரண்டு பேரும் தப்பாத்தானே போடப்போறோம்.

6.என் மனைவி ஒரு தேவதை
நீ அதிர்ஷ்டக்காரன்..என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கா

'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..


'ஹயத்' Hayat (ஈரானியன் மூவி.) விமரிசனம்..

ஹயத் என்னும் ஈரானியன் படத்தை சமீபத்தில் பார்த்தேன்.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

குழந்தைகள் What is determination and struggle என்பதை அறிய இப்படம் பார்க்க வேண்டியது அவசியம்

ஹயத் என்னும் பத்து..அல்லது பன்னிரெண்டு வயது இருக்கும் பெண்ணிற்கு..மேலே படிக்க எழுத வேண்டிய ஸ்காலர்ஷிப்பிறகான பரீட்சை அன்று காலை.

மின்சாரமும்..கட்..(மின்சாரம் வரும்போது...இயக்குநரின் அருமையான இயக்க டச்..)

காலையில் எழுந்ததுமே..தந்தை நினைவின்றி  படுக்கையில்...ஹயத்தின் தாயார் , அவள் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்லி விட்டு...தந்தையை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறார்.

ஹயத்..வீட்டு மாட்டிற்குத் தீவனம் வைத்து விட்டு..தங்கை பாப்பாவை...தம்பியை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு..வேலைகளை கவனிக்கிறாள்.அடடா..ஒரு வறுமை நிலையில் உள்ள வீட்டு குழந்தைகள் படும் பாட்டை பட இயக்குநர் எவ்வளவு அருமையாக சொல்லியிருக்கிறார்...

பரீட்சைக்கு நேரமாகிறது.தம்பி பள்ளிக்கு செல்கிறான்.ஹயத்..தங்கை பாப்பாவை எடுத்துக் கொண்டு யார் வீட்டிலாவது விட்டு விட்டு பரீட்சைக்கு செல்ல பார்க்கிறாள்.சரிபடவில்லை.

அந்த பெண் குழந்தையை வைத்துக்கொண்டு...பாடங்களையும் மனதில் சொல்லிக் கொண்டு..கவலையுடன் அலைவது..பார்க்கும் போது சோகம் நம்மை தொற்றிக் கொள்கிறது.(valume of milk to calculate maths,physics to bend a lock...இப்படி பாட ஞாபகங்கள்)

அந்தப் பெண்ணின் நடிப்பு.அவளது தம்பி அக்பரின் நடிப்பு..இவற்றை பாராட்டி சொல்லிக் கொண்டே போகலாம்..

அவளால் பரீட்சை எழுத முடிந்ததா..? குழந்தையை எங்கே விட்டுச் சென்றாள்...படத்தை பாருங்களேன்..


Directed by
Gholam Reza Ramezani (as Gholamreza Ramezani)

Writing credits
(in alphabetical order)
Mojtaba Khoshkdaman
Gholam Reza Ramezani

Cast (in alphabetical order)
Mohammad Sa'eed Babakhanlo ... Nabat
Mehrdad Hassani ... Akbar
Ghazaleh Parsafar ... Ghazaleh

Produced by
Mohammed Bagher Ashtiani .... producer

Original Music by
Hamidreza Sadri

Cinematography by
Saed Nikzat

Film Editing by
Saeed Shahsavar





Sunday, December 2, 2012

மணம் வீசும் எண்ணங்கள்

               
                       

     

உன்னைப் பற்றிய
எண்ணங்களை
மனதில் விதைத்தேன்
நினைவென்னும்
நீர் பாய்ச்சினேன்
இப்போது
அவ்வெண்ணங்கள்
செடியாகி..
அரும்புவிட்டு..
மலர்ந்து..
மனமெங்கும்..
மணம் வீசிக் கொண்டிருக்கின்றன.

Friday, November 30, 2012

ஆய கலைகள் 64...அவை என்ன என்ன..?




விகடனில் கவிஞர் வைரமுத்துவின் பதில்கள் பகுதியில் "ஆய கலைகள் அறுபத்தி நான்கு எவை?' என கூறியுள்ளார்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1) ஆடல்
2)இசைக்கருவி மீட்டல்
3)ஒப்பனை செய்தல்
4)சிற்பம் வடித்தல்
5)பூத் தொடுத்தல்
6)சூதாடல்
7)சுரதம் அறிதல்
8)தேனும், கள்ளும் சேகரித்தல்
9)நரம்பு மருத்துவம்
10)சமைத்தல்
11)கனி உற்பத்தி செய்தல்
12)கல்லும் பொன்னும் பிளத்தல்
13)கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14)உலோகங்களில் மூலிகை கலத்தல்
15)கலவை உலோகம் பிரித்தல்
16)உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
17)உப்பு உண்டாக்குதல்
18)வாள் எறிதல்
19)மற்போர் புரிதல்
20)அம்பு தொடுத்தல்
21)படை அணி வகுத்தல்
22)முப்படைகளை முறைப்படுத்தல்
23)தெய்வங்களை மகிழ்வித்தல்
24)தேரோட்டம்
25)மட்கலம் செய்தல்
26)மரக்கலம் செய்தல்
27)பொற்கலம் செய்தல்
28)வெள்ளிக்கலம் செய்தல்
29)ஓவியம் வரைதல்
30)நிலச் சமன் செய்தல்
31)காலக் கருவி செய்தல்
32)ஆடைக்கு நிறமூட்டல்
33)எந்திரம் இயற்றல்
34)தோணி கட்டல்
35)நூல் நூற்றல்
36)ஆடை நெய்தல்
37)சாணை பிடித்தல்
38)பொன்னின் மாற்று அறிதல்
39)செயற்கை பொன் செய்தல்
40)பொன்னாபரணம் செய்தல்
41)தோல் பதனிடுதல்
42)மிருகத் தோல் உரித்தல்
43)பால் கறந்து நெய்யுருக்கல்
44)பொன் முலாமிடுதல்
45) தையல்
46)நீச்சல்
47)இல்லத் தூய்மையுறுத்தல்
48)துவைத்தல்
49)மயிர் களைதல்
50)எள்ளில் இறைச்சியில் நெய் எடுத்தல்
51)உழுதல்
52)மரம் ஏறுதல்
53)பணிவிடை செய்தல்
54)மூங்கில் முடைதல்
55)பாத்திரம் வார்த்தல்
56)நீர் கொணர்தல், நீர் தெளித்தல்
57)இருபாயுதம் செய்தல்
58)மிருக வாகனங்களுக்குத்  தவிசு அமைத்தல்
59)குழந்தை வளர்ப்பு
60)தவறினை தண்டித்தல்
61)பிற மொழி எழுத்தறிவு பெறுதல்
62)வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63)மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64)வெளிப்படுத்தும் நிதானம்

சுக்கிர நீதி சொல்லும் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் இவைதான்.

(டிஸ்கி- வெறும் ஏட்டுப் படிப்பு மட்டுமே கலை அல்ல.நம்மை விட பெண்கள் அதிகம் அறிந்தவர்கள்)



Thursday, November 29, 2012

காவிரி நதி நீர்..(தினமணி தலையங்கம்) கண்டிப்பாக படிக்கவும்





பேச்சுவார்த்தை அல்ல, பிச்சை!
By ஆசிரியர்

சாட்சிக்காரன் காலில் விழுவதைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்'. இது நீதிமன்ற நடவடிக்கை மற்றும் காலதாமதத்தால் சலிப்புற்ற மக்களின் சொலவடை. அதை நீதிமன்றமே சொல்லத் தொடங்கினால் எப்படி?

ஒரு பிரச்னை முதல்முறையாக நீதிமன்றத்தின் படியேறும்போது இத்தகைய ஆலோசனை சரியானது. நியாயமும்கூட. ஆனால், காவிரிப் பிரச்னை அப்படியல்ல. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு. காவிரி நடுவர் மன்றம், நதிநீர் ஆணையம், பிரதமர் முன்னிலையில் சமரசம் என்று எதுவுமே தீர்மானமான முடிவைத் தராத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தால், நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்களேன் என்று சொன்னால் எப்படி? கர்நாடகத்தைத் தமிழகமும், தமிழகத்தைக் கர்நாடகமும் பல வகையிலும் விமர்சனங்களை அள்ளி வீசிய பிறகு பேசித் தீர்த்துக் கொள்வது எப்படி சாத்தியம் என்று உச்ச நீதிமன்றம் யோசிக்க வேண்டாமா?

காவிரி நீர்ப் பங்கீட்டில் கர்நாடகம் யாருக்குமே கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்கிவருவதால்தான் இன்றைய சிக்கல் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது இந்தியா முழுமைக்கும் தெரியும். கர்நாடக மாநிலம் தமிழகத்துக்குத் தர வேண்டிய 52.8 டிஎம்சி தண்ணீரை வழங்கவும், பருவம் (ஸீசன்) என்றால் என்ன என்பதை வரையறை செய்யவும் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர். இதன்படியே, தமிழக முதல்வர் ஜெயலலிதா நவம்பர் 29}இல் பெங்களூர் சென்று பேசவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தையில் முடியாமல்தான் மத்திய அரசிடம் போய் நின்றோம். மத்திய அரசு நியமித்த நடுவர்மன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்கவே இல்லை. இடைக்காலத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டதும் கிடையாது. காவிரி நதிநீர் ஆணையத்துக்கும் பிரதமரின் உத்தரவுக்கும்கூட மறுப்பு தெரிவித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்றத் தவறியதால், நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளான மாநிலம் கர்நாடகம். இந்நிலையில்தான், அதாவது பேசித் தீரவில்லை என்ற நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகுகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் சொல்கிறது, ""இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வுகாண வேண்டும்'' என்று.

இதைச் சொன்னதற்குப் பதிலாக, "நாங்கள் சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறார்கள். எங்கள் தீர்ப்புக்கு மரியாதையே கிடையாது. ஆகவே நீங்களே முடிந்தால் பேசிப் பாருங்கள்' என்று நீதிபதிகள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம். அத்தகைய மெய்யான வார்த்தைகள், இந்திய அரசையும், மற்ற மாநிலங்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். ஆனால் நீதிபதிகள் அதைச் சொல்லாமல், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண்பது முடியாதது ஒன்றுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்கே 3 நாள் மாநில எல்லையில் பஸ்கள் ஓடவில்லை. நடிக நடிகையர்களும் பங்குகொண்ட எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது. இந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், அணையின் பொறுப்பை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்ற அச்சத்தின் காரணமாகவே கர்நாடகம் பணிந்தது. இந்நிலையில் கர்நாடக முதல்வர், தமிழகம் கேட்கும் நியாயமான அளவு தண்ணீரை வழங்க முன்வருவாரா?

இது ஒருபுறம் இருக்க, காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் கர்நாடக முதல்வர் வெளிநடப்பு செய்தபோது இந்தியாவில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால், பெங்களூரில் தமிழக முதல்வருக்கு - அது யாராக இருந்தாலும் - அவமானம் நேர்ந்தது என்றால், தமிழ்நாடு கொந்தளித்து விடாதா? அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் ஏற்படக்கூடிய எதிர்போராட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இதைப் பற்றியெல்லாம் உச்ச நீதிமன்றம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்திருந்தால், இத்தகைய ஆலோசனையைச் சொல்லியிருக்காது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும்கூட, தமிழக அரசின் கோரிக்கைகளை ஏற்கக் கேரளம் மறுக்கிறது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. இதிலும்கூட, இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றால், தமிழக முதல்வர் திருவனந்தபுரம் சென்று அவமானப்பட வேண்டுமா?

இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்குத் தொடுத்தால், அந்த வழக்கிலும்கூட, "தமிழக முதல்வர் இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் பேசித் தீர்வுகாண வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லுமா?

இதுவரை பல முறைக்கு மேல் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவரும் கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராதது காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை. மத்திய அரசு நடுவர்மன்றம் அமைத்தும் பயனளிக்காத பிரச்னை இது. அதனால்தானே உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தால் எப்படி?

கர்நாடக மாநிலம் காவிரியின் மேல்பகுதியில் இருக்கிறது. அவர்கள் அணையைத் திறந்தால்தான் தமிழகத்துக்குக் காவிரி நீர். இந்தப் புவியியல் காரணங்களால், கர்நாடகம் "கொடுப்பவன்' நிலையில் இருக்கிறது. தமிழகம் "கொள்பவன்' நிலையில் இருக்கிறது. கர்நாடகம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தமிழகத்தை ஒருநாளும் அழைக்கப்போவதில்லை. அவர்களுக்கு அது தேவையில்லாத வேலை. ஆனால், தமிழகம்தான் பேச்சுவார்த்தைக்கு அவர்களிடம் செல்ல வேண்டும், வாசலில் நிற்க வேண்டும், அவர்கள் சொல்லும் மறுதேதிக்கெல்லாம் போயாக வேண்டும், அவர்கள் கொடுப்பதைப் பெற்றாக வேண்டும். இதற்குப் பெயர் பேச்சுவார்த்தையாக இருக்க முடியாது. பிச்சை கேட்பதாகத்தான் இருக்க முடியும்!

தமிழுக்கு அமுதென்று பெயர் - 4




தமிழில் பல அற்புதங்கள் உண்டு..

முன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக்கின்றன .
அடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான "ஆ" வில் ஆரம்பம்
அடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.

அத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்

'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்

'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்

'எ' எழுச்சி வார்த்தைகள்..எடுத்தல்,எட்டுதல்,எய்தல்,எழுதல்

இனி தமிழ் சிலேடை-

இம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.

துணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று

இவள் வீட்டுப் பாத்திரத்தில்
சிலநாளே சுடுசோறு
என்றாலும் நடிக்கிறாள்
திரைப்படத்தில் பலவாறு

2) வயிற்றுக்கு மிகநெருங்கி
வருகின்ற காமெராவில்
தெரியாது இவள் பசியும்
தெய்வத்தின் வஞ்சகமும்


Wednesday, November 28, 2012

உறவுகளும்..நாமும்...




உறவுகள்....

இதில்தான் எத்தனை வகை..

தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்..

வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள்.

நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது.

நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது.உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது.நமக்கு கோபம் வருவது போல..உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

சற்று யோசனை செய்தால்..இவை புரியும்..

நம் வீட்டில் வேலை செய்யும்..நபர்கள் கூட..தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை.அதனால்...அவர்களையும்..நமக்கு சமமாக...நம்மில் ஒருவராக..எண்ணி பழகினால்..எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்

உறவுகள்..தொடர..யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.

உறவுக்கு ஆதாரம் அன்புதான்..ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்.வெறுப்பை..வெறுத்து ஒதுக்குவோம்.

உறவுப்பூக்கள் மலரும்..

கடைசியாக ஒரு ஜோக்..

நண்பன்-ஏன்..காலையிலிருந்து வருத்தமாய் இருக்கீங்க?
இவர்- என் மனையுடன் சண்டை..ஒரு மாசம் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
நண்பன்-இது சந்தோஷ விசயம் தானே...ஏன் வருந்த வேண்டும்
இவர்-அந்த ஒரு மாசம்..இன்னியோட முடியுதே!


"மின்சாரத் தாக்குதல்"



தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,

(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?

நன்றி- ஆனந்தவிகடன்

Tuesday, November 27, 2012

வாய் விட்டு சிரிங்க..


1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.



2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா



3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே



4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு



5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே



6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Monday, November 26, 2012

இருந்தால் நன்றாயிருக்கும்

தன் பழைய மாணவன் வந்து சொன்னதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டுப் போனார் பேராசிரியர் அனுமந்த ராவ்.
கிருஷ்ணகுமார்..அவரிடம் படித்த மாணவன்.புத்திசாலி.அதனால்தான் பல ஆண்டுகள் ஆகியும் அவன் அவர்
ஞாபகத்தில் இருந்தான்.அவன் முதுநிலை படிப்பு படித்து முடிந்ததுமே..ஏதேனும் ஒரு தலைப்பில் ஆராய்ச்சி
செய்து..டாக்டர் பட்டம் வாங்கச் சொன்னார்.ஆனால்..அன்று அவன் மறுத்து விட்டான்.ஆனால் ஏழெட்டு
ஆண்டுகள் கழிந்து அவனே வலிய வந்து கேட்கிறான் என்றால்...அதுக்கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.
அவன் ஆராய்ச்சி செய்ய தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு..'கடவுள் இருக்கிறாரா..இல்லையா'
'குமார்..இப்படிப்பட்ட தலைப்பை பல்கலைக்கழகம் அங்கீரித்து இருக்க வேண்டும்.நான் கேட்டுப் பார்க்கின்றேன்.
பிறகு நீ உன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்'
ஒரு நிமிடம்..யோசித்தவன்'சார்,இந்த தலைப்பில்..ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றாலும்..நான்
ஆராய்ச்சி செய்யத்தான் போறேன்..என்றான் பிடிவாதமாக.
'சரி..உன் ஆசையைக் கெடுப்பானேன்..நீ முயற்சி செய்..ஆனால் பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடம் இருந்து வரும்
நம்பிக்கை கடவுள் பக்தி.எந்த ஒரு காரியத்திற்கும்..அது முதல் நம்பிக்கை ஆகும்'
'இல்லை சார்..நீங்கள் சொல்லும் அந்த நூற்றாண்டுகளில்..அதைப்பற்றி அபிப்ராயபேதங்களும்..இருந்திருக்கின்றன'
'குமார்..எனக்குத் தெரிந்தவரை..சிவன் பெரியதா..சக்தி பெரியதா..சைவம் பெரியதா..வைஷ்ணவம் பெரியதா..இப்படித்தான்
அபிப்பிராய பேதங்கள் இருந்திருக்கின்றன.நீ சொல்லும்..அந்த அடிப்படையிலேயே மறுப்பு சென்ற நூற்றாண்டில்தான்
ஏற்பட்டிருக்கிறது என நினைக்கின்றேன்'
'சார்..இது சம்பந்தமாக அனேக புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன்.கடவுளை மறுத்த பெரியாரின்
சிந்தனைகளையும் படித்து வருகின்றேன்..நாயன்மார்கள்..ஆழ்வார்கள் சொன்னதை படிக்கிறேன்..'
பேச்சை..திசைதிருப்ப எண்ணிய பேராசிரியர்'சரி..இப்போ உன்னைப் பற்றி சொல்.உனக்கு திருமணமாகிவிட்டதா,
குழந்தைகள் உண்டா?'
'சார்..எனக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஓடி விட்டன.இது நாள் வரை குழந்தைகள் இல்லை..இப்போதுதான் என் மனைவி
7 மாத கர்ப்பம்'என்றான்.
'பாராட்டுகள்' என்றார் பேராசிரியர்.
'ஏன் சார்..நீங்கள் சொல்லும் கடவுள் இருந்திருந்தால்..அந்த ராமர் கடவுள்தானே..அவர் ஏன் சிவ பக்தனான ராவணனை
அழிக்க வேண்டும்.சிவ பக்தனான ராவணனுக்கு சிவன் ஏன் முதலிலேயே அறிவுறித்தி பிறன் மனை விழையாமையை
உணர்த்தி..அவனை சீதை மேல் ஆசை வராமல் தடுத்திருக்கலாமே'
'அது இதிகாசம்..மேலும்..ராமர்..சீதை இவர்கள் பூமியில் அவதரித்ததுமே மனிதர்கள்.இறைவன் இல்லை'
'சரி அது போகட்டும்.தன் மாமன் கம்சனைக்கொல்ல ..கிருஷ்ணன் அவதரித்தான்..பின் அவனே பாண்டவர்களுடன்
சேர்ந்து கௌரவர்களை அழித்தான்..திரௌபதியை துகில் உரித்தபோது உடன் காப்பாற்றவரவில்லை.நீ என்னை முற்றிலும்
நம்பாமல் கைகளால் மறைத்திக்கொண்டிருந்தாய்.எப்போது என்னை நம்பி..கைகளை உயர்த்தினாயோ அப்போது உதவிக்கு வந்தேன்
என்பது..நீங்கள் சொல்லும் அந்த கடவுள் ஒரு sadist என்று ஆகவில்லையா?'
'கடவுளை முழுவதுமாக நம்ப வேண்டும் என்பதற்காக அப்படி கூறப்பட்டது'
ஏன் சார்..தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்..என்பதற்காக திரௌபதி அப்படி
செய்திருக்கலாம்..இல்லையா?'
பேராசிரியர் இதற்கு பதில் கூற வாயைத்திறந்த போது ..குமாரின் அலைபேசி ஒலித்தது.
அதை இயக்கினான் குமார்'என்ன..அப்படியா?..இப்போதே வருகிறேன்' என்றவன்..'சார் என் மனைவிக்கு திடீரென உடல்னலம்
சரியில்லை..அவள் வயிற்றில் கரு அசையவே இல்லையாம்..உடன் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.பிறகு சந்திக்கிறேன்'என
விரைந்தான்.
பேராசிரியர் தலை ஆட்டினார்.
**** **** **** ****
இரண்டு..மூன்று மாதங்கள் ஓடி விட்டன
திரும்ப ..ஒரு நாள் கிருஷ்ணகுமார் அவரைப் பார்க்க வந்தான்.தன் ஆராய்ச்சித் தலைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என
அறிந்துக்கொள்ள.
'அது இருக்கட்டும்..உன் மனைவி எப்படி இருக்கிறாள்?குழந்தை பிறந்து விட்டதா?'
'அந்த ஆச்சர்யத்தை ஏன் கேட்கிறீர்கள்?உங்களிடம் வந்த அன்று அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றேன்.
வயிற்றில் இருந்த சிசுவிற்கு மூச்சே இல்லை.மருத்துவர்கள் இறந்துவிட்டது என்றனர்.ஆனாலும் ஒரிரு நாட்கள் பார்க்கலாம் என்றனர்
மருத்துவர்கள்.அழுதபடியே வீட்டிற்கு வந்தவள்..இளையராஜாவின் திருவாசகத்தை வி.சி.டி.யில் ஓட விட்டாள்.அது ஒலிக்க..ஒலிக்க..
சிசு அசையத்தொடங்கியது.மருத்துவருக்கு விஷயத்தைச் சொல்ல..ஆச்சர்யப்பட்ட அவர்..தினமும் என் மனைவியை அதைக்
கேட்கச் சொன்னார்.போன வாரம் சுகப்பிரசவம்.பையன்'என்றான் உற்சாகத்துடன்.
ஆச்சரியம் அடைந்தார்..பேராசிரியர்..'ஏம்ப்பா இது எதனால் என்று நினைக்கிறாய்?''இது கடவுளின் அருள் என்று உனக்குத்
தோன்றவில்லையா?கடவுள் காப்பாத்திட்டாரு'என்றார்.
'அப்போ அதற்கு முன்னால்..அந்த சிசுவிற்கு..அந்த நிலை ஏற்பட்டது யாராலே?'பதில் கேள்விக் கேட்டான்.
'குமார்..பிரபஞ்சம் தான் கடவுள்.நேற்று அறியாததை இன்று அறியலாம்.இன்று அறியாததை நாளை அறியலாம்.
ஆனால்..எப்போதுமே அறிய முடியாதது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்..அது பிரபஞ்ச ரகசியம்.புரிந்துக் கொள்'
என்றார்.சற்றே குழம்பியவன்..'சரி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..இறைவன் என்று ஒருவன் தானே இருக்க
முடியும்..நீங்கள் பல கடவுள்களை சொல்கிறீர்களே?'
'குமார்..நீ..ஒருவன்..ஆனால் உன் பேற்றோருக்கு நீ மகன்..மனைவிக்கு கணவன்..தம்பிக்கு அண்ணன்..அண்ணனுக்கு
தம்பி..இப்படி இருக்கும்போது..அந்த கடவுள் பலருக்கு பல பெயரில் இருப்பது என்ன தப்பு'
சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல்..யோசித்தான் அவன்.
அதை பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர்'இப்ப நீ கடவுள் இருக்கிறதை நம்புகிறாய் இல்லையா'என்றார்.
'இருந்தால்..நன்றாயிருக்கும்'என்றான்.