Saturday, December 31, 2011

2011 ம்..2012ம்..




இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

Friday, December 30, 2011

ஈரோடு விழா--சவால் போட்டி பரிசளிப்பு விழா..மற்றும் நான்



2011....ல்

பதிவுலகிலும்..சில பதிவர்கள் மீதும் ஏற்பட்ட மனக்கசப்பால்..அதிகமாக பதிவுகள் இடாது இருந்தேன்..

பின்னர் நான் பதிவுகள் இட்டாலும்...முன்னைப் போல் இல்லாமல் பதிவர்களிடமிருந்து சற்று விலகியே இருந்தேன்..

இந் நிலையில்...மீண்டும் தேவையில்லா சர்ச்சைகள் ஏற்படுமோ என்ற நிலையில்..அவசியம் உணர்ந்தே இப் பதிவு.

முதலில் ஈரோடு சங்கமம்..நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தும்..சில காரணங்களால் செல்ல இயலவில்லை.ஆனால் அது நடைபெறும் விதம் கண்டு மகிழ்ந்து முன்னர் பதிவுகள் இட்டுள்ளேன்.இந்த ஆண்டும் என்னால் செல்ல இயலவில்லை.

ஆனால்..மிகவும் விமரிசையாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.சாதாரணமாக...'வீட்டைக் கட்டிப்பாரு..கல்யாணம் பண்ணிப்பாரு' என்று சொல்வார்கள்.ஏனெனில்..வீடு கட்ட ஆரம்பித்தால் பல செலவுகள், தொல்லைகள் என கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.அதே போன்றதுதான் ஒரு கல்யாணத்தை நடத்துவதும்..சத்திரம் பார்ப்பது,நகை வாங்குவது, சாப்பாடு அரேஞ்ச் செய்வது என செலவு கட்டுக்கு அடங்காமல் இழுத்துக் கொண்டிருக்கும்.

கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்கள்..இந்த அறையை இங்கே வைத்திருக்கலாம், சமையலறை இருட்டாக இருக்கிறது..என்று தன்னால் வீடு கட்ட முடியா இயலாமையாலோ அல்லது சற்று பொறாமையாலோ.. ஏதேனும் சொல்லிவிட்டு செல்வார்கள்.ஆனால் பட்ட கஷ்டம் வீட்டைக் கட்டியவனுக்கேத் தெரியும்.

அதே போல் கல்யாணத்திற்கு வந்துவிட்டு..மாப்பிள்ளை கருப்பு, பொண்ணு குள்ளம், சாப்பாடு சரியில்லை என குறை சொல்வார்கள்.

இதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொண்டால் வீடும் கட்ட முடியாது..வீட்டில் கல்யாணத்தையும் நடத்த முடியாது.

ஈரோடு சங்கமமும் அப்படித்தான்.ஆனால் என்ன..அவர்கள் மூன்று கல்யாணத்தை நடத்திவிட்டார்கள்..அதற்கு அவர்களிடம் இருந்த ஒற்றுமை,கட்டுப்பாடு,பொருள் உதவி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்..அடேங்கப்பா...என ஆச்சரியப்படவே செய்யும்.

அப்படியே ஏதேனும் சிறு குறையிருந்தாலும்..நடப்பது நம்ம வீட்டு விழா..என்ற நினைப்பு இருந்தால் ஏதும் பெரிதாக தோன்றாது..

ஆகவே குறை சொல்வதை நிறுத்தி,நிறைகளை பாராட்டுங்கள்...

கதிர் குழுவினருக்கு பாராட்டுகள்..

அன்றே..சென்னையில் சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா..

வேண்டுமென்றே அந்த நாளை வைத்தார்கள்...என ஒரு வதந்தையைக் கிளப்பியுள்ளனர்.

இது என்ன நான் பெரியவனா..நீ பெரியவனா..என்று அண்ணன்..தம்பிகளிடையே நடக்கும் வாய்க்கால்..வரப்பு தகராறா..இவர்களுக்குள்...

இரண்டு விழாக்களுமே ..ஒருவர்..ஒருவருக்குத் தெரியாமல் ஒரே நாள் குறித்து விட்ட விழா...ஆகவே கடைசி நேரத்தில் எதையும் கேன்சல் பண்ண முடியாது...என்ற உண்மையை
ப் புரிந்துக் கொண்டு பேசுங்கள்.

ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது..சொல்லி விட்டேன்..அவ்வளவுதான்..

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

மழை.....






கடல் அரக்கனால்

மேகப் பெண்

சூல் கொண்டு

பிறந்தது மழை


Thursday, December 29, 2011

கடைசித் தமிழனும்..விஜய்காந்தும்..




சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசுகையில்..

'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார்.

ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில்
 தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?

'இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார்.

இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’
என்றல்லவா பொருள்!

என்று பேசியுள்ளார்.

நம் கேள்வி...விஜய்காந்தை கடைசித் தமிழன் என்கிறாரா?..அல்லது...கடைசித் தமிழனுக்கு அடுத்து நிற்பவர் விஜய்காந்த் என்கிறாரா?


Wednesday, December 28, 2011

விஜய் க்கு அதிர்ஷ்ட ஆண்டு 2012..??!!




விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த நிலையில் 'வேலாயுதம்" படம் வந்து வெற்றி பெற்று நல்ல கலக்க்ஷனுடன் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வரும் 2012 ஆம் ஆண்டு..பொங்கல் அன்று வரவிருக்கிறது அவர் நடித்து ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' திரைப்படம்.

சாதாரணமாக பண்டிகை காலங்களில், அதுவும் குறிப்பாக பொங்கல் சமயத்தில் நிறைய படங்கள் வந்து..ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் ..ஆனால் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்களே வருகின்றன.கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த சமயம் வெளிவரும் படங்கள் எதுவாயிமும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் இருக்கும்...ஆனால் இச் சமயம் போட்டியில்லாததால் அநேக திரையரங்குகளில் அதிகக் காட்சிகள் இப்படம் திரையிடப்படலாம்..வசூலில் சாதனையும் புரியும் வாய்ப்பு உண்டு.

அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவருகிறது 'வேட்டை' படம்.இதில் மாதவன், ஆர்யா நடித்துள்ளனர்.இப்படமும் வசூலில் வெற்றி படமாய் அமைய வாய்ப்புண்டு.

இது இப்படியிருக்க 2011ஆம் ஆண்டின் கடைசி வெள்ளியான நாளை 13 படங்கள் திரைக்கு வருகின்றன.இவை அனைத்தும் கிட்டத்தட்ட அரசு மானியம் கிடைக்கும் என எதிர்பார்த்து வெளிவருகின்றன.

அவை...

1) மதுவும் மைதிலியும்

2)பாவி

3)கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்

4)பதினெட்டான் குடி

5)வினாயகா

6)மகான் கணக்கு

7)வழிவிடு கண்ணே வழிவிடு

8)அபாயம்

9)வேட்டையாடு

10)மகாராஜா

இவை அனைத்தும் நேரடித் தமிழ் படங்கள்.இவை தயாரிப்பில் இருந்த போது கேள்விப்பட்டிருக்கிறோமா..?

தவிர்த்து...'வேட்டை நாயகன்", "புயல் வீரன்" ஸ்பீட் 2 ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் வருகின்றன.

அடுத்த ஆண்டு வெளிவரும் எதிர்பார்ப்பு படங்கள்...

கமலின், "விஸ்வரூபம்", ரஜினி, "கோச்சுடையான்".. அஜீத்தின், "பில்லா 2"., சூர்யாவின், "மாற்றான்'

Tuesday, December 27, 2011

அன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு





வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு
 நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம்.
 ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.

நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு
முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.
ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்
 இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் இவ்வாறு தனது இமெயில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

(தகவல்-தட்ஸ்தமிழ்)

தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!




 தனுஷின் கொலவெறி பாட்டு, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை
 எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு
 தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர்
. 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில்
தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை
 சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங்
நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து
 அழைப்பு வந்துள்ளது.

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில்
 திளைக்கிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது.
இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன.
இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும்
கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

(தகவல்-தட்ஸ் தமிழ்)


Monday, December 26, 2011

ரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்





 அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
 தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா
மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர்.

அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.
 டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும்,
ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.
அதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா
கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார்.  தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும்
ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகள் மோதுவதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது- கருணாநிதி




 ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு
அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர்
 கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.

சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை  இன்று காலை பிரதமரை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அப்போது ஒரு மனு ஒன்றை அவர் அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏதோ இரு நாடுகளுக்கு இடையிலான மோதலைப் போல தமிழகத்திலும்,
 கேரளாவிலும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு முக்கியக் காரணம் கேரள அரசுதான்.

இரு மாநில மக்களும் இரு நாட்டு மக்களைப் போல மோதிக் கொண்டுள்ளனர். இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும்.

கேரள அரசு தொடர்ந்து அணை குறித்தும், இரு மாநில மக்களுக்கிடையே பகைமையை அதிகரிக்கும் வகையில்
 பேசி வருகிறது, செயல்பட்டு வருகிறது. கேரளாவில் காலம் காலமாக வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து
வெளியேறச் செய்யும் நிலையை அது உருவாக்கி விட்டது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமான
கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. அதுதான் தற்போது போராட்டங்களாக அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை உடனடியாக மாறாவிட்டால், குறைக்கப்படாவிட்டால் நிரந்தர காயமாக அது இரு மாநில உறவிலும்
 படிந்து விடும் அபாயம் உள்ளது. இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு பெரிதாகி விடும் வாய்ப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. எனவே அணையின்
நீர்மட்ட அளவைக் குறைக்க கேரள அரசு எந்த நடவடிககை எடுத்தாலும் அது கோர்ட் அவமதிப்பாக அமையும்,
நீதித்துறைக்கு விடப்படும் மாபெரும் சவாலாக அமையும். தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமையும்.

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை பலவிதங்களிலும் பலப்படுத்திய பின்னரும், அணையின்
நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் தொடர்ந்து 136 அடியாகவே வைத்திருக்கிறது கேரள அரசு.
தற்போது அதை மேலும் குறைத்து 120 அடியாக குறைக்க முயற்சிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு சற்றும் சட்டை செய்யாமல் உள்ளது.

கேரள அரசு தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள்
வறட்சிப் பிரதேசமாக மாறும் அபாயம் உள்ளது. பாலைவனங்களாக அவை மாறி விடும்.

எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியபடி 142 அடியாக
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை
கேரளம் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.

(தகவல்-தட்ஸ்தமிழ்)

Sunday, December 25, 2011

கீப் யுவர் மொபைல்ஸ் இன்---------- -- மோட்...





கவர்னர் மாளிகையில் பிரதமரை சந்தித்து 16 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்..அவை..

1) உச்ச நீதி மன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடி உயர்த்துதல்

2)அணையின் பாதுகாப்பு கருதி மத்திய தொழில் பாதுகாப்பு படையை அங்கு நிறுத்த வேண்டும்

3)தேசிய பேரிடர் ஆணைய நிபுணர் குழுவை திரும்பிப் பெற வேண்டும்

4)தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவிலிருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

5) தமிழகத்திற்கு வழங்கப் படும் உணவு தானியங்கள் அதே போன்று வழங்க உறுதி செய்ய வேண்டும்,மண்ணெண்ணெய் அதே அளவு வழங்க வேண்டும்

6)தமிழக மீனவர் மீது நடத்தப் படும் தாக்குதலை தேசிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும்

7) தமிழக அரசின் கடன் சுமை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது போல நிதி உதவியை தமிழக அரசுக்கும் வழங்க வேண்டும்

8)மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும்

ஆமாம்...இதற்கு மன் மோஹன் சிங்கின் பதில் என்ன...

பிளீஸ்..கீப் யுவர் மொபைல் இன் மன் மோகன் சிங் மோட்.....  இதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்தால்... பிரதமரின் பதில் என்ன என்பதும் தெரிந்திருக்கும்..

டிஸ்கி-..பிரதமர் அலுவலகத்தில் மனுக்களாக வரும் காகிதங்கள் எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்குபவர் யாருக்கெனும் போடப்படுகிறதா..அதன் வருமானம் என்ன...இதைத் தெரிந்து கொள்ள யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முயல்வார்களா?

Saturday, December 24, 2011

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்




யூதர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களைச் சாத்தானின் மக்கள் என்றும் எண்ணி இருந்தார்கள்.யூத மதத்திலிருந்து பிரிந்த சமாரியர்களையும் அவர்கள் வெறுத்தார்கள்.

ஆனால் இயேசுநாதர் அவர்களோ எல்லா மக்களையும் இறைவனின் குழந்தைகளாக எண்ணி அன்பு காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார்.

அவரின் இந்த அறிவுரை யூத மத குருக்களுக்குப் பிடிக்கவில்லை

வேத நூலை நன்கு அறிந்த மதகுரு ஒருவர் இயேசுநாதர் அவர்களிடம் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கில், 'சொர்க்கம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார்.

'இது குறித்து வேத நூலில் என்ன சொல்லி இருக்கிறது' என்று அவரிடம் பதில் கேள்வி கேட்டார் இயேசுநாதர்.

'உன் இறைவனாகிய கடவுளை உன் உள்ளத்தாலும், உடலாலும் முழுமையாக நேசிப்பாயாக.உன்னை நேசிப்பதைப் போலவே உன் அண்டை அயலானையும் நேசிப்பாயாக என்று எழுதியுள்ளது..என்றார் அவர்.

'நன்கு சொன்னீர்.இவற்றையே தொடர்ந்து செய்து வாரும்.உமக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்றார் இயேசுநாதர்.

'யூதனுக்கு யூதனே அண்டை அயலான்.மற்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்' என்ற எண்ணம் கொண்டிருந்த வர், 'என் அண்டை அயலான் யார்?' என்று கேட்டார்.

இதற்கு விளக்கம் தர நினைத்த இயேசு, ஒரு கதை சொல்லத் தொடங்கினார்."யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்குச் சென்றுக் கொண்டிருந்தான்.வழியில் திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவனிடமிருந்த பொருளைக் கொள்ளை அடித்ததுடன் அவனையும் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் அவன்.

அந்த வழியாக யூதகுரு ஒருவர் வந்தார்.அவனைப் பார்த்த அவர் எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டார்.

அடுத்ததாக யூதர் கோவில் பணியாள் ஒருவன் அங்கு வந்தான்.அவன் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதவன் போல அங்கிருந்து சென்று விட்டான்.

கழுதையின் மேல் சமாரிய வணிகன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த யூதன் அருகே சென்றான்.காயங்களை எல்லா, கழுவிக் கட்டுப் போட்டான்.பிறகு அவனைத் தன் கழுதையின் மீது ஏற்றிக் கோண்டு ஒரு சத்திரத்தை அடைந்தான்.ஒருநாள் முழுதும் அங்கேயே தங்கி இருந்து கவனித்தான்.அவனுக்கு இன்னமும் உணர்வு திரும்பவில்லை.

தனக்கு அவசர வேலை இருப்பதை உணர்ந்த சமாரியன், 'சத்தரத்துக்காரரே..இவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.செலவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.இந்த இரண்டு பொற்காசுகளை வைத்துக் கோள்ளுங்கள்.அதிகம் செலவானால் நான் திரும்பி வந்து தருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்றான்.என்ற இயேசுநாதர் அவர்கள்,'இப்போது சொல்லுங்கள்..திருடர்களிடம் சிக்கிய அந்த யூதனுக்கு அயலானாய் நடந்து கொண்டவன் யார்?' என்று கேட்டார்.

'அவனுக்கு இரங்கி உதவி செய்த சமாரியனே நல்ல அயலான்' என்றார் மத குரு.

நீரும் சென்று அப்படியே நடந்து கொள்ளும் என்றார் இயேசுநாதர் அவர்கள்..

டிஸ்கி -  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.



அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!



 





ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அ
டுத்தசூப்பர் ஸ்டார்
நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை
 செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத். 


அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக
 பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும்

 இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து
அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான
வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி
 நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

Friday, December 23, 2011

மத்திய அரசைக் குறை கூறக்கூடாதாம்...




முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.

செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியது:÷முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் நிலை.

எனவே, மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காணவில்லை என்று குறை கூறுவது சரியல்ல. இரு மாநிலங்களும் கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசு தலையிட முடியும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்காத கேரள மாநில அரசு, சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால், இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அணையை ஆய்வு செய்ய உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை கேரள அரசால் குறைக்க முடியாது. அணையை உடைக்க எந்தவிதமான ஆயத்தப் பணிகளையும் கேரளம் மேற்கொள்ளவில்லை. அதனால் அணையை உடைக்கவும் வாய்ப்பில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை குறைகூறி அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஸ்கி- இந்நிலையில் டிசம்பர் 25ஆம் நாள் மெரினாவில் ஒன்று கூடுவோம்


Thursday, December 22, 2011

பொய் சொல்வது யார், மத்திய காங்கிரஸ் அமைச்சரா? கேரள முதல்வரா?




முல்லைப் பெரியாறு தொடர்பாக மைய அரசு போடும் இரட்டை வேடத்தை மீண்டும் தினமணி தன் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

இனி தலையங்கம்...

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் அளித்த பேட்டியில், புதிய அணைக்கான கருத்துரு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவிடம் செப்டம்பர் 29-ம் தேதி அளிக்கப்படும் என்று (செப்.20-ம் தேதி ) முன்பு அளித்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.
தற்போது அமைச்சரின் பேட்டி குறித்து கேரள பத்திரிகைகள், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது அவரும், "ஆய்வு குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ஆய்வு நடத்திய பிறகுதானே, புதிய அணைக்கான கருத்துருவே தயாரிக்க முடிந்தது' என்று கூறியுள்ளார். புதிய அணை அமையவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கே எந்தவொரு பணியை மேற்கொள்வதாக இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் நடத்த முடியாது.
"வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு நடத்த முடியும்? ஆய்வு நடத்தாமல் எப்படி டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜக்ட் ரிபோர்ட்) தயாரிக்க முடியும்? 2010-ம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) செய்யாமல் அனுமதி அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பிறகு இந்த மதிப்பீட்டைச் செய்யும் பணியை கேரள வனஆராய்ச்சிக் கழகத்திடம் அளித்தோம். அவர்களால் செய்ய இயலவில்லை. அதனால் இதைச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுபற்றி மத்திய அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று கேரள நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் வெளிப்படையாகப் பேட்டியளிக்கிறார்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகித்த காலத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக கேரள எம்.பி.க்கள் சொல்கின்றனர்.
ஜனவரி 2010-ல் வெளியான செய்திகளில், கேரள நீர்ப்பாசனத் துறை புதிய அணைக்கான சர்வே நடத்தி, தற்போதுள்ள அணைக்குக் கீழே 426 மீ, 627 மீ, 650 மீ அணைகள் கட்டும் ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், இந்த இடங்களில் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து அறிய இதன் மாதிரிகளை ஆய்வுக்காக லால்பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது இரண்டு கேள்விகளைத்தான் நாம் மத்திய அரசிடம் கேட்க வேண்டியிருக்கிறது.
புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இத்தனை பணிகளும் நடந்திருக்க முடியுமா? அனுமதியின்றி நடந்திருக்குமேயானால், அதற்காக மத்திய வனத்துறை என்ன நடவடிக்கையை இந்த மாநில அரசின் மீது மேற்கொள்ளப் போகிறது?
இதைவிட முக்கியமாக இன்னொரு கேள்வி இருக்கிறது.
மத்திய வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இத்தகைய புதிய அணையைக் கட்டுவதால் பல்லுயிர் பெருக்கத்துக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாதா?
அணையின் நீரை 142 அடிக்கு உயர்த்தினால் அதனால் தேங்கும் அணை நீர்ப் பரப்பு பல ஆயிரம் ஏக்கர் அதிகரிக்கும். அப்போது பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டாகிலும் அணை நீரை 136 அடிக்கு மேலாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறையிட்டிருக்கும்போது, புதிய அணை கட்டுவதால் மட்டும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாதா? இதற்குக் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதிலளிக்கட்டும்.
புவிவெப்ப மாநாட்டு ஒப்பந்தத்தில், வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமா? அதற்கு மத்திய அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.
அந்த இடத்தில் புதிதாக அணை கட்டும் விவகாரத்தை கைவிடும் கோரிக்கையைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. புதிய அணையை ரூ.650 கோடிசெலவில் கட்டுவதற்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள். புதிய அணையைக் கட்டும்போது, முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியாக அளிக்கிறார்கள். உடைக்கப்படும் அணையிலிருந்து எந்தெந்தப் பகுதியை புது அணைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் பேசுகிறார்கள்.
இவ்வளவு நடக்கிறதே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பதில் என்ன? அணை கட்ட அனுமதி தருவாரா, மாட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும்!
பொய் சொல்வது யார், ஜெயந்தி நடராஜனா, உம்மன் சாண்டியா?

Wednesday, December 21, 2011

முல்லை பெரியாறு....கேரளாவிற்கு ஆதரவா மைய அரசு..




இரண்டு மாநிலங்களிடையே மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும் வரும் நிலையிலும் மைய அரசு அளவிற்கு அதிகமாக மௌனம் சாதித்து வருகிறது.

தமிழக விவகாரங்கள் விஷயத்தில்..இலங்கை தமிழர் பிரச்னையில் மைய அரசு மௌனமாய் இருந்தது போலவே இப்போதும் இருந்து வருகிறது.ஒருவேளை தமிழகம் இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதை மறந்துவிட்டார்களா..எனத் தெரியவில்லை..

அதே சமயம் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்தால்..மத்திய அரசு கேரளா வைக்கும் கோரிக்கைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி வருவதாகவேத் தெரிகிறது.

2006ல் உச்ச நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்..என தீர்ப்பு வழங்கிய போதும்...அதை சுட்டிக்காட்டாத மைய அரசு..சுற்றுச் சூழல் அமைச்சர் கேரளாவில் புது அணைக்கட்ட இடம் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளதை அறிந்தும் மௌனம் சாதித்தது.தமிழர்களால் வெறும் வறட்டுத் தவளைகளாய் கத்தத்தான் முடிந்தது.

இந்நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு..பல சோதனைகளை நடத்தி வருகிறது.இவர்களின் அறிக்கை ஃபெப்ருவரி மாதம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த சட்ட நடைமுறைகளை மீறும் வகையில்..பேரழிவு ஏற்படும் என, அவசரக் கால திட்டம் ஒன்றைத் தயாரிக்க பிரதமரைஅணுகியுள்ளது கேரளா .பிரதமர் தேசிய இயற்கை பேரழிவு நிர்வாகம் என்ற அமைப்பிற்குத் தலைவர்.அந்த பொறுப்பில் நிபுணர் குழுவை பிரதமர் நியமித்துள்ளார்.இது பிரதமரின் ஒரு கண்ணில் வெண்ணெய்..மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது ..ஒவ்வொரு தமிழனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

காவிரி பிரச்னையிலும் உச்ச நீதி மன்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை..மைய அரசு கண்டுக் கொள்ளவில்லை.
அதே நிலைதான் இப்போதும்.

கேரளா ..புது அணை கட்டும் விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள நிலையில்..இரு மாநில முதல்வர்களும் சேர்ந்து பேச வேண்டும்..என்ற கோரிக்கை வீண்தான்..

தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்..ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்..தமிழர்கள்..கட்சி வித்தியாசத்தை மறந்து ஒன்று பட்டு நிற்க வேண்டிய நேரம் இது.

மாநிலத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில்..தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று பட வேண்டும்..இல்லையேல் வரலாறு அவர்களை மன்னிக்காது.

முடிந்தால்..அனைத்து தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா என்ற முடிவை எடுக்கலாம்.

பல்வேறு காரணங்களுக்காக தமிழக நலனை மையமாகக் கருதி ராஜினாமா செய்த சி.எஸ்., அழகேசன், வாழப்பாடி அவர்களை இத் தருணத்தில் நினைவில் கொள்வோம்.



Tuesday, December 20, 2011

சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க எதிர்ப்பு...





கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பாரத் ரத்னா பட்டம் வழங்குவது, அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதியரசருமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். அவர்கள் ஒன்றும் சமூக சேவகர்கள் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தயான் சந்த் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருது பற்றி முன்னாள் நீதியரசரும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு சிக்கலான தருணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நபர்கள் நமக்குத் தேவை என்று தெரிவித்தார். அதுபோன்ற நபர்கள் மறைந்து விட்டிருந்தாலும், அவர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உண்மையான கதாநாயகர்களை மறந்துவிட்டு, மற்றவர்களை போற்றுவதாகவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று கூறிய அவர், அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு என்றும் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

டிஸ்கி- நேர்மையான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

காவல் தெய்வம்...




ஊரைக் காக்கும்

எல்லை அம்மன் கோயிலின்

உண்டியலைக் காணோமாம்..

திருடனைப் பிடிக்க

சிறப்பு பூஜையாம்....



Monday, December 19, 2011

படிக்க வேண்டிய தலையங்கம்..




தினமணியில் வெளியாகும் பல செய்திகளில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..'விரயம்' என்ற தலைப்பில் வந்துள்ள இந்த தலையங்கம்..நேர்மையாகவே எழுதப்பட்டதாகத் தோன்றுவதாலும்..அனைவரும் இதை படிக்க வேண்டும் என நான் நினைப்பதாலும்..அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

"உழலை அகற்ற வலுவான லோக்பால் மசோதா தேவை என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
 உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
 ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன. இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.
 அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
 முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.
 ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.
 மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப்போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.
 கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
 இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
 வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.
 வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.
 மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து. இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?
 மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!"


அ.இ.அ.தி.மு.க., விலிருந்து உடன் பிறவா சகோதரி திடீர் நீக்கம்




அ.இ.அ.தி.மு.க., விலிருந்து ஜெ யின் உடன் பிறவா சகோதரி, சசிகலா,அவர் கணவர் எம்.நடராஜன்,திவாகர்,தினகரன்,பாஸ்கரன்,வளர்ப்பு மகனாய் இருந்த சுதாகர்,டாக்டர் வெங்கடேஷ்,மோகன்,குலோத்துங்கன்,ராஜ ராஜன்,ராமசந்திரன்,ராவணன் ஆகியோர் கூண்டோடு கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா தலைமைச் செயற்குழு உறுப்பினராய் இருந்தவர்.

இவர்களுடன் அ.இ.அ.தி.மு.க.வினர் இனி எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கழக பொதுச் செயலாளரும்..முதல்வருமான  'ஜெ' திடீரென அறிவித்துள்ளார்.
For more   details
http://tamil.oneindia.in/news/2011/12/19/tamilnadu-why-jayalalitha-sacked-sasikala-aid0091.html

Sunday, December 18, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் - 27




உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.