Friday, June 29, 2012

சகுனி வெற்றி படமா..?




சகுனி படம் வெளியாவதற்கு முன் அதற்கு கொடுக்கப்பட்ட பில்டப் எவ்வளவு...

வழக்கம் போல விஜய் டிவி அதில் சம்பந்தப் பட்டவர்களை, தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கச் சொன்னது என்ன..அப்படி பங்கேற்ற கலைஞர்கள் படத்தை ஆகா..ஓகோ என்று சொன்னதென்ன..

கடைசில் படம்..பத்தோடு ..பதினொன்றாக....

ம்ஹூம்..பதினொன்று என்று சொல்லக் கூட மனமில்லை..

மிகவும் சராசரியான அரைவேக்காடு பணம்..

ரயில்வே மேம்பாலம் கட்ட தங்கள் வீடு இடிபடும் என அதைக்காக்க சென்னை வந்து அரசியல்வாதிகளை சந்திக்க மூயன்று, கடைசியில் தானே அரசியலில் நுழையும்  காட்சிகள்... தன் கல்யாண மண்டபம் மேம்பாலம் அமைக்க இடிக்கப்பட்ட ஒருவரை சுட்டிக்காட்டவில்லை என்பதை நம்ப வேண்டும்..

இப்படி..ஆங்காங்கே..நடைபெறும், நடைபெற்ற அரசியல் செய்திகளை திரட்டி கொடுக்க முயன்றுள்ளவருக்கு..முக்கியமாக மேயர் பதவி அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது என தெரியாமல் போனதேன்.

ஊருக்கே சாப்பாடு போட்டு தன் சொத்துகளை இழந்த குடும்பம், மக்களுக்கு உதவ வரும் மேம்பாலத்திற்கு தன் வீட்டைத் தர மறுக்குமா...வேறு இடமில்லை என வாதாடினாலும்..அரசு இழப்பீடு தொகை கொடுக்குமே..

அரசியலில் ஈடுபடுவது, அரசை பிடிப்பது என எல்லாம் இலகுவாக நடப்பதைப் பார்த்தால்...2001,2006,2011 ஆகிய ஆண்டுகளில் நான் தான் முதல்வர் என்று சொல்லிவந்த அரசியல் தலைவர்கள் 2016ல் முதல்வராக வேண்டும் என்றால் கமலை (கார்த்தி) பிடித்துக் கொள்ளுங்கள்.

எந்த லாஜிக்கும் இல்லாமல், படம் பார்ப்பவர் காதுகளிலெல்லாம் பூவை சுற்றி அனுப்பும் இப்படம் வெற்றி படமா..

1154 திரையரங்குகளில் வெளியாகி இன்னும் சில நாட்கள் ஓடப்போகும் இப்படம் வசூலில் வெற்றி அடைந்திருக்கும்..ஆனால்...தரத்தில்..

வழக்குஎண்..சென்னையில் மூன்றே திரையரங்குகளில் சில காட்சிகளே ஓடிக்கொண்டிருக்கிறது..அப்படியாயின்..அது தோல்வி படமா..கண்டிப்பாக இல்லை

படத்தின் வெற்றி வசூலை வைத்து கணக்கிடப்படுவதில்லை எனில் சகுனி ஒரு தோல்விப்படமே  



Thursday, June 28, 2012

பேருந்து ஓட்டுநர்கள்....




எனக்கு முற் பிறப்பு...அடுத்த பிறப்பு ஆகியவைகளில் நம்பிக்கையில்லை..ஆயினும் அப்படி ஒன்று இருந்தால்...(எனக்கு ஜாதகத்தில் நம்பிக்கையில்லை..இருந்தாலும் என் ஜாதகம் அப்படி..என கலைஞர் சொல்வது போல அல்ல நான் இப்படி சொல்வது..கமல், கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்பது போல)..சென்ற பிறவியில் அதிக பாவம் செய்தவர்களாய் இருந்தால்தான் இப்பிறவியில் பேருந்து ஓட்டுநர்களாக இருப்பார்கள் என்பேன்.

சென்னை போன்ற நகரில்..போக்குவரத்து நெரிசல், மெட்ரோ ரயிலுக்கான பணி என ஆங்காங்கே சுருங்கிய சாலைகள்..இதில்..கிட்டத்தட்ட 65 பயணிகள் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில்..100க்கும் மேல் பயணம்.. ஒரே டிரிப் என்றாலும் ஓகே..

ஆனால் காலை 5 மணி அளவில் துவங்கும் பணி..மாலை 2 மணி யளவில் முடிவு பெறுகிறது.(சில தடங்களில் முழு நாளும் வேல..அடுத்த நாள் ஓய்வு).உணவு ..கிடைக்கும் இடைவேளையில் முடித்துக் கொள்ளவேண்டும்.கொளுத்தும் வெயிலில் ..பேருந்தின் எஞ்சினிலிருந்து வெளியாகும் வெப்பம் வேறு...ஒரு டிரிப் என்றாலே தாவு தீர்ந்திடும்..ஆனால் இவர்கள் நாலு ஐந்து டிரிப்கள் அடிக்க வேண்டும்.

இடையில் பயணிகளுடன் சண்டையையும் சமாளிக்க வேண்டும்...

ஒருநாள் இப்படி பணி செய்தாலே..உலகே வெறுத்துவிடும்..

எல்லாமே ஒரு ஜான் வயிற்றுக்குத்தான்..

இதனிடையே..காலையில் வேலைக்குக் கிளம்பினால்..மாலை வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..

ஓட்டுநர்கள்..அலைபேசியில் பேசியதால் தான் விபத்து என..ஒரு விபத்து எனில் உடனே சொல்லப்படும் கருத்து..ஆனால் விசாரணையில் விபத்துக்கான காரணம் வேறாய் இருக்கும்.

அண்ணா மேம்பால விபத்தும்..காரணம் இதையேத்தான் சொல்கிறது..அதே நேரத்தில்..சௌகரியமாக அமர்ந்து வண்டியை ஓட்ட வேண்டியவர் இருக்கை ..நழுவிவிடாமல் இருக்க கயிறு போட்டு கட்டப்பட்டிருந்ததை மறந்துவிடுகிறோம்.

ஊழியர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா? அது முக்கியமில்லையா...

இதனால்..நான் ஓட்டுநர்களை ஆதரிப்பதாக எண்ண வேண்டாம்..

அவர்கள் பணிச்சுமையை உணர்ந்து...அவர்கள் மீதும் சிறிதேனும் பரிதாபப் படுங்கள்..

விபத்துகளுக்கான காரணத்தை..எடுத்தேன்..கவுத்தேன் பாணியில்...ஓட்டுநர்தான் விபத்துக்கான காரணம் என உடனடியாக பழியை அவர் மீது சுமத்துவதை தவிருங்கள்.

ஓட்டுநர்களும், வண்டியை எடுக்கையில்..பயணிக்கும் அனைத்து பயணிகள் உயிரும் அவர் கையில் உள்ளது என்பதை உணர வேண்டும்.

ஆமாம்..சமீபத்திய விபத்தில்..நடத்துனரை கைது செய்ய ..அவர் என்ன செய்தார்?


Thursday, June 21, 2012

காணாமல் போன அமைச்சர்கள்...




அம்மா கோட நாடு போனதும்..அமைச்சர்கள் 32 பேரை காணவில்லை.இவர்கள் எங்கு போய் இருப்பார்கள் என சரடு நாளிதழ் புலனாய்வுப் பிரிவு தேடுதலில் இறங்கியது.

அப்போது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அவர்கள் தில்லியில் முகாம் இட்டுள்ளதாகத் தெரிகிறது.

சரடு நிருபரிடம் ஒரு அமைச்சர் அகப்பட அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.அந்த அமைச்சர் கூறியதிலிருந்து....

'புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில்..எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் டிபாசிட் இழக்க வேண்டும் என விரும்பியதாகவும்..ஆனால் எதிர்த்த வேட்பாளர் டிபாசிட் பெற்றதால் அம்மாவிடம்..அங்கு முகாமிட்டிருந்த அனைத்து அமைச்சர்களும்..அர்ச்சனை பெற்றதாகவும் சொன்னார்.

இந்நிலையில் அம்மா ஊரில் இல்லாத நிலையில்..அம்மாவின் நன்மதிப்பைப் பெற 32 அமைச்சர்களும் தில்லியில் முகாமிட்டுள்ளதாகவும்..குடியரசுத் தேர்தலில் அம்மாவின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டிபாசிட் இழக்க வைத்து..அம்மாவிற்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அமைச்சர்கள் குழு அளிக்கப் போவதாகவும் கூறினார்.

அடடா...இவர்களின் கட்சியின் பற்று..தம்மை மெய்சிலிர்க்க வைத்ததாக சரடு நிருபர் தெரிவிக்கிறார்.

இதனிடையே கலைஞர் தான் ஆதரிக்கும் வேட்பாளர் தோற்றால்..அதற்கான காரணம் என்ன சொல்லலாம் என அறிய செயற்குழு கூட்டத்தைக் கூட்டுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஜய்காந்தோ..தேர்தலை தான் புறக்கணிக்கக் காரணம்..சோனியா தன்னை திராணி இருந்தால் தேர்தலில் நிற்கட்டும் எனக் கூறாததே காரணம் என்றார்.
   


Saturday, June 16, 2012

கலாம் என்றால் கலகக்காரரா.....





கலாம் என்றாம் கலகம் என்று பொருள் என்ற முறையில்..அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் செய்திகள் பற்றி கேட்ட போது கலைஞர் கூறியுள்ளார்.

கலகம் என்று சொன்னதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களும் வெகுண்டு எழுகின்றனர்.

ஆனால்..கலைஞர் சொன்னதன் பொருள்...இந்து இதிகாசம்,புராணங்களில் வரும் நாரதரை கலகக்காரர் என கூறுவதுண்டு.அதே சமயம் நாரதர் செய்யும் கலகம் அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்றும் கூறுவர்.

கலைஞரும் அந்த அர்த்தத்தில்தான் கலாம் என்றால் கலகம் என்று கூறியுள்ளார்..அதாவது அப்துல் கலாமால் நல்லதே நடக்கும் என மக்கள் உணரவேண்டும் என்பதே கலைஞரின் கருத்து..

எப்படி என் சமாளிப்பு....


Thursday, June 14, 2012

ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்த மாயாவதி





முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரவிதாஸ் மல்ஹோத்ரா முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிரமாண்ட பங்களா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில்,

மாயாவதி தான் முதல்வராக இருக்கையில் மால் அவென்யூவில் உள்ள பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார். அதிலும் எலக்ட்ரிக்கல் பணிக்கு மட்டும் ரூ.20.09 லட்சம் செலவு செய்துள்ளார். இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராததால் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.

5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)

டிஸ்கி - இதைப் போய் பிரமாதமா சொல்றாங்க..60 கோடி ஃபோபர்ஸ் ஊழலுக்கு 200 கோடி செலவு செஞ்சு விசாரணைக் கமிஷன் அமைச்சவங்க நாங்க..


Wednesday, June 13, 2012

எஸ்.எம்.எஸ் பரிசு: கொள்ளை லாபம் அடிக்கும் டிவி- செல்போன் நிறுவனங்கள்!




லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

நன்றி - தட்ஸ்தமிழ்

Sunday, June 10, 2012

வெளிநாட்டில் பதுக்கியுள்ளது அனைத்தும் கறுப்பு பணமல்ல...-நிதி அமைச்சர்..




சட்டத்துக்கு முரணான செல்வத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்தால், அது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு 37 நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடுகள் விவரங்களைத் தரட்டும். அதன் பின்னர் அது கறுப்புப் பணமா? இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

அந்த பணம் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியப் பணத்தின் மதிப்பை அளவிட சிறிது காலமாகும்.

மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களுக்கும் பெட்ரோல் பொருள்களுக்கும் மத்திய அரசு அதிக அளவில் மானியம் தர வேண்டியிருப்பதால், மாநில அரசுகள் கேட்கும் அளவுக்கெல்லாம் நிதிதர முடியவில்லை என்றார் அவர்.

கறுப்புப் பணம் தொடர்பாக அண்மையில் மக்களவையில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். 97 பக்கம் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் எதுவும் குறிக்கப்படவில்லை.

டிஸ்கி - ஜனாதிபதிக்கான வேட்பாளர் தயார்..சிங்க்..சாங்க்..


Thursday, June 7, 2012

காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!


தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)?
இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.


தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும்.

(தகவல் தட்ஸ்தமிழ்)



Wednesday, May 30, 2012

நான் வண்ணதாசன் அல்ல...




அழகிய கற்பனை ஒன்று

மனதில் தோன்ற

தாளை எடுத்து..வடித்தால்..

நினைத்ததில் பாதியைக் கூட

எழுத்தில் கொணர இயலவில்லை

ஆமாம்! நினைத்ததை

நினைத்தபடி எழுத

நான் வண்ணதாசனா..!!!

Monday, May 28, 2012

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யா (ஜூன் 1-7) இதழில் பாக்யாராஜின் கேள்வி பதில் பகுதியில் என்னைக் கவர்ந்த அவரது பதில்..

கேள்வி - தங்களைக் கவர்ந்த ஒரு தத்துவம்..?

பதில் - ஒரு நல்ல மனுஷன் எப்பவும் எல்லார்க்கும் இல்லேன்னு சொல்லாம எல்லா உதவியும் செய்வாரு.அவர் திடீர்னு ஒருநாள் நோய்வாய்ப் பட்டு இறந்து போனாரு.அப்ப அந்த ஊர்ல இருந்த ஒரு குருகிட்ட ஊரே போய் 'அவருக்கு எப்படி இப்படி நடக்கலாம்னு காரணம் கேட்டாங்க. அதுக்கு குரு சிரிச்சுகிட்டே ஒரு பூத்தொட்டியக் காட்டினாரு.அது விரிசல் விட்டு உடைஞ்சிருந்தது.தான் வளரக் காரணமாயிருந்த தொட்டியவே அந்த பூஞ்செடி உடைச்சிருச்சு.

அதாவது அது வளர போதுமானதா தொட்டி இல்லை.இப்ப செடியை எடுத்து வேற இடத்துல நடணும்.அதாவது இறந்தவர் உடல் பூந்தொட்டி மாதிரி.இறந்தவர் சேவை செடி மாதிரி.அதனால அந்த உடலிலிருந்து கடவுள் அவரை அப்புறப்படுத்தி வேறு விதமாக பிறக்க வைக்கப் போகிறார்னு அர்த்தம்.கூடிய சீக்கிரம் இது நடக்கும்' னாரு.ஜனங்களுக்கு இந்த விளக்கம் நியாயமாப்பட்டது.



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது- நாராயணசா‌‌‌மி





''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.


டிஸ்கி- நல்லா சொன்னீங்க..இதைக் கேட்டும்.. தமிழக அரசை மைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியவில்லையா..? மக்களே..

Friday, May 25, 2012

ஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..




ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிக் காலம் முடிகிறது.

அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார்? என முடிவெடுக்க முடியாத நிலையில் இன்னமும் காங்கிரஸ் உள்ளது.

அனைத்து கட்சிகளும் ஏற் று கொள்ளும் வகையில் வேட்பாளர் இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

ஜனாதிபதியாக வி.வி.கிரி இருந்த சமயம்..அந்த பதவி ரப்பர் ஸ்டேம்ப் என்ற பெயர் பெற்றது.

இன்றுள்ள நிலையில் அந்த பதவிக்கு ஏற்ற நபராக மன் மோஹன் சிங் மட்டுமே தெரிகிறார்.மைய அரசுடன் ஒத்து போவார்..அதே சமயம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய் வரவும் தயங்க மாட்டார்.

பேசாமல் காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை (எனக்கு ஹிந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என ஒரு சமயம் புலம்பியவர் இவர்) பிரதமர் ஆக்கி விட்டு..மன் மோகனை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்.


Thursday, May 24, 2012

'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..






உயிர் நீ என்றான்

உயிரே நீ என்றாள்

கற்கண்டு நீ

கற்கண்டே நீ

வாழ்வு நீ

வாழ்வே நீ

'ஏ' காரங்கள்

"ஏ"ற்றமே தரும்

'ஏ" ஞ்சலே

Wednesday, May 23, 2012

+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..




+2 முடிவுகள் வெளியாகி...மதிப்பெண்கள் தெரிந்து விட்டன.மேற்கொண்டு படிக்க மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டாலும்..அது ஒன்றே நம் வாழ்நாளைத் தீர்மானிப்பதில்லை என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு..மனம் தளராது இருக்க வேண்டும்..
அவர்களுக்காக கீழே ஒரு வாசகத்தைக் கொடுத்துள்ளேன்..






Friday, May 18, 2012

மதனும்..விகடனின் குசும்பும்..




காலில் விழும் சமாச்சாரத்தில் மதனுக்கும், விகடனுக்கும் சர்ச்சை ஏற்பட்டு விகடனில் இனி மதனின் கேள்வி பதில் பகுதியும், கார்ட்டூனும் இடம் பெறாது விகடன் அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக விகடன் எழுதுகையில்..'தற்போது மதன் இருக்கின்ற சூழ்நிலையில் 'ஹாய் மதன்" பகுதியை மட்டுமல்ல..கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்கு சாத்தியம் ஆகாது என முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.குறிப்பிட்ட ஒரு தரப்பை பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டு..செய்திகளையும் கருத்துகளையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என விகடன் கருதுகிறான்' என்றுள்ளது.

இப்படி எழுதும் விகடனும்..நமக்கேன் வம்பு..என்றவகையில் ரகசியமாக ஒரு வேலை செய்துள்ளது..

'த்னது பொக்கிஷம்' பக்கங்களில் (பக்கம் 67) தலைவனின் ஆசி..என்று போட்டு..1999ல் பா.ஜ.க. மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்..கருணாநிதியிடம் ஆசி பெறும் டி.ஆர்.பாலு..என பாலு கலைஞரின் காலில் விழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.




Thursday, May 17, 2012

விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!


 ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

(நன்றி தட்ஸ்தமிழ்)

Wednesday, May 16, 2012

உங்களில் யாருக்கு நோமோபோபியா ?



உலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..?

ரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...

உங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

ஒரு நிமிடம் யோசித்து பாருங்க...

ஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...

இன்னும் சொல்லனும்னா...
அய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள் புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...

இதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.

இதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.

இந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.

அதாவது நோ மொபைல் போன் போபியா.

இந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.

* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.
* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்
* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்
* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்

இந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

தற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா இருப்பதாக அறிய முடிகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்
அதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.

இதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.

இதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல் தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.

தனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு உள்ளது. அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.

இது இங்கிலாந்து நிலவரம்...
நம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....?

தகவல் வெப்துனியா


பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி






இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.

இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.

திமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.


Tuesday, May 15, 2012

அவ்வை சண்முகம் நூற்றாண்டும்...நானும்..





திருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.
சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்.
"நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன். வேஷம், பேச்சு, நடையுடை பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம். நடிப்போ அபாரம். அவ்வையாரின் முகத் தோற்றங்கள் நடிப்புக் கலையின் உன்னத சிகரமாக விளங்கின..'' இப்படிப் பாராட்டியவர் எழுத்தாளர் கல்கி.
நாடக அரங்கம் தவிர, வெள்ளித் திரையிலும் முத்திரை பதித்தார் அவ்வை. 1935-ஆம் ஆண்டு வெளிவந்த "மேனகா' முதல் சமூகத் திரைப்படம். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப் பட்டது. இதுதவிர, மனிதன், பில்ஹணன், ஓர் இரவு, பெண் மனம், பாலாமணி, பூலோக ரம்பை, கப்பலோட்டிய தமிழன் போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார் அவ்வை.
நடிப்பு மேதையான அவ்வை, சிறந்த பாடகர், நல்ல கவிஞர். அண்ணாவின் "ஓர் இரவு' திரைப்படத்தில் ஜமீன்தாராக நடித்ததுடன், ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
"எங்க நாடு - இது எங்க நாடு
எங்கும் புகழ் தங்கும் நாடு'
- என்று தொடங்கும் அந்தப் பாடல்.
ஒருசமயம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டமொன்றில், திடீரென்று அவ்வையை மேடைக்கு அழைத்து, "ஜெய பேரிகை கொட்டடா' என்ற பாரதியார் பாடலைப் பாடச் செய்து மகிழ்ந்தார். அன்றைய முதலமைச்சர். அவர்
காமராஜர்.
தன் முதல் மனைவி நோயுற்று திடீரென இறந்துபோக, அந்த உடலை வைப்பதற்குக் கூட இடம் கிடைக்காமல் தவித்தார் சண்முகம். அப்போது காலியாக இருந்த தன் புதிய வீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு பிரமுகர். அவர் தந்தை பெரியார்.
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார் அவ்வை.
இயக்குநர் ஸ்ரீதர் எழுதித் தந்த "ரத்த பாசம்' நாடக எழுத்துப் பிரதியை ஒரே மூச்சில் படித்து முடித்து, அதை நாடகமாகத் தயாரித்தார் அவ்வை. அதுமட்டுமல்ல.. மேடையிலேயே ஸ்ரீதரை நிற்க வைத்து, "இந்த நாடகத்தின் எழுத்தாளர் இவர்தான்' என்று அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் அவ்வை.
"சிவலீலா' நாடகத்தில் பாண்டியனாக நடித்தார் அவ்வை. அப்போது தன் குழுவில் புதியதாக இணைந்த நடிகர் ஒருவர் விரும்பிக் கேட்டதற்காக, தனது வேடத்தை அவருக்குக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் புதிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.
பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நாடகத்தில் ஆர்வம் கொண்டார். அவரை "முள்ளில் ரோஜா' நாடகம் எழுதவைத்து, மக்களிடையே பிரபலமாக்கினார் அவ்வை. நாடகம் எழுதியவர் பின்னாளில் பிரபல இயக்குநர் ஆனார். அவர் ப.நீலகண்டன்.
கதர், கைத்தறி தவிர வேறு எந்த வகை ஆடைகளையும் அவர் அணிந்ததில்லை. சிவப்புக் கறை போட்ட கதர் வேட்டிதான் அவர் எப்போதும் அணிந்தார்.
நாடக விழாக்களுக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டால், அழைப்பிதழ் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்தால், கிழித்துவிட்டு "விழாவுக்கு வர இயலாது' என்று விழா அமைப்பாளருக்குத் தகவல் தெரிவித்து விடுவார். அந்த அளவிற்கு தமிழ்ப் பற்று அவ்வைக்கு.
அவரது மணிவிழாவின் போது அன்பளிப்புத் தொகையாகச் சுமார் ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகை மூலம் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கினார் டி.கே.எஸ்.
அவ்வை சண்முகம் அவர்களுக்கு வாரிசுகளாக நான்கு புதல்வர்கள். ஒரு புதல்வி. இவர்களில் மூத்தவர் டி.கே.எஸ்.கலைவாணன்.

15-2-73 அன்று அவ்வை சண்முகம்.காலமானார். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவ்வை சண்முகம் சாலை என்றே பெயர் சூட்டப்பெற்று, இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. (தகவல்- தினமணி)




அவ்வை சண்முகம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-5-12 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.டி.கே.எஸ்., கலைவாணன் அவர்கள்..நாடகமேடையில் இன்று உள்ள பிரபலங்களை அன்று கௌரவித்தார்.நாடகம் எழுதி, தயாரித்து, இயக்கி,நடித்து வரும் நானும் கௌரவிக்கப்பட்டதை பெரும் பேறாக எண்ணுகிறேன்.



Monday, May 14, 2012

2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்!




விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

தகவல் தட்ஸ்தமிழ்