Tuesday, April 7, 2009

இலங்கையில் போரை நிறுத்த கலைஞர் தலைமையில் பேரணி..


நாளை கலைஞர் தலைமையில் பேரணி நடக்கிறது.

இலங்கையில் உச்சக்கட்டத்தில் போர் நடக்கிறது.20 சதுர கிலோமீட்டருக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுள்ளனர்.2லட்சத்திற்கும் மேல் அப்பாவி தமிழர்களும் சிக்கியுள்ளனர்.இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்..அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற உடனடி (!!) நடவடிக்கை எடுக்கக்கூறி கலைஞர் தலைமையில் நாளை பேரணிக்கு ஏர்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு தொடங்கி..மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் வரை நடைபெறுகிறது.இப்பேரணியில் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள தி.மு.க., வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனிடையே..பிரதமர்..சோனியா, சிதம்பரம்,பிரணாப் ஆகியோருக்கு கலஞர் அவசர தந்தி அனுப்பியுள்ளார்..அதில்..

இலங்கையில் தமிழ் இனம் அழிந்துக் கொண்டிருக்கிறது.அதைக்காப்பாற்றவேண்டும்.இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சு நடத்துவதை மத்திய அரசு உரூதிப்படுத்த வேண்டும்..என்று கூறப்பட்டுள்ளது.

இனி நாம்...

இந்த நடவடிக்கை...தேர்தலை முன்னிட்டோ...இல்லை எப்படியோ நடந்தாலும்...அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டு...இதை பொது பிரச்னையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இது அனைத்துப் பிரிவினருக்கும் இரு வழியில் உதவும்.

1.தி.மு.க., மட்டும் இதற்கான ஏற்பாட்டை நடத்தியது என தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.

2.இது ஒட்டுமொத்த தமிழின பிரச்னை...இதில் நாங்கள் கட்சி பிரிவினை பார்க்க மாட்டோம்...என நம்மை விமரிசிப்பவர்களுக்கும்...உலகுக்கும் தெரிவிக்கலாம்...

கட்சித்தலைவர்கள் நல்ல முடிவு எடுக்கட்டும்.

7 comments:

சவுக்கடி said...

போரை நிறுத்த உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்காமல்-

எலும்பை நாய் கவ்விக் கொண்டிருப்பதைப் போல் பதவியை விடாது பற்றிக்கொண்டு -

இப்போது, தேர்தலில் மக்களை எப்படியாவது ஏமாற்றி ஒப்போலைகளைப் பெற்று விடுவதற்காக -

ஊர் உலகை ஏமாற்ற பலவகையான கரவு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற இவர் -

இன இரண்டகனாகி ஏமாற்றுவதை உலகெங்கணுமுள்ள தமிழர் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டனர்.

VSK said...
This comment has been removed by the author.
VSK said...

ஓட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் இந்த அரசியல்வாதிகளை நினைத்தால் அடிவயிற்றிலிருந்து பற்றிக் கொண்டு வருகிறது!


காங்கிரஸோடு கூட்டை முறிக்கத் தைரியம் இருக்கிறதா இவருக்கு?

LKritina said...

MK Kurunanidhi,DMK Chief is a third rated, self-centerted, inferior motive, sub-standard Traitor to Tamils !! World Tamils will never forgive, forget this fox-cunning, older man!! I can not just wait any more for his demise !! Another rogue is Veeramani, he is a strong supporter of Karunanidhi!! veeramani is the fittest person for the punishment of hanging for his tacid support to DMK regime !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
savuccu
VSK
LKritina

kuyil said...

KARUNANITHI MUST INVITE MAHINDHA RAJAPAKSE TO TAKE PART IN THIS RALLY!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kuyil