Sunday, April 19, 2009

ஒற்றுமையாய் இருங்கள்..காங்கிரஸிற்கு தி.மு.க.அமைச்சர் அறிவுரை..

தமிழக காங்கிரஸ் தலைவரும்...சேலம் நாடாளுமன்றத்திற்கான வேட்பாளருமான தங்கபாலு நேற்று சேலத்தில்...கூட்டணி கட்சி உறுப்பினர்கள்...மற்றும் கட்சி ஊழியர்களுடன் பேசினார்.

அப்போது காங்கிரஸ் ஊழியர்கள் அவரை பேசவிடாது தடுத்தனர்.அவருக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.

கூட்டத்திற்கு...தி.மு.க., அமைச்சரும், சேலம் மாவட்ட தி.மு.க., தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் வந்திருந்தார்.நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட அவர்...'இது தனிப்பட்ட மனிதருக்கான எதிர்ப்பை காட்டும் நேரமில்லை என்றும்..அனைவரும் தங்கபாலு வெற்றிக்கு பாடுபடவேண்டும்'என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஊழியர்களை சமாதானப் படுத்திய அவர்...மேலும் கூறுகையில்..'வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை..யார் வேட்பாளராயிருந்தாலும்..அவர் சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டவர்.அவர் வெற்றிக்கு நாம் பாடுபட வேண்டும்.காங்கிரஸ்காரர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்.அதுதான் முதலில் அவசியம்...அப்போதுதான்...நம்முடன் 5 ஆண்டுகள் இருந்து பதவி அனுபவித்துப் போனவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.

ஒரு மாநில தேசிய கட்சியின் தலைவரால்..தன் கட்சி ஊழியர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை...வேறு கூட்டணிக் கட்சி தலைவரால்தான் அது முடிகிறது..என்றால்...ஒரு திறமையற்றவரை தலைவராக்கியது யார் குற்றம்.

காங்கிரஸின் முதல் தோல்வி சேலத்தில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

4 comments:

mraja1961 said...

காங்கிரஸின் முதல் தோல்வி சேலத்தில் ஆரம்பிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

100/100 unmai unmai.

anpudan
maharaja

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

Suresh said...

நல்ல பதிவு மச்சான் திருந்த மாடிங்கிறாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சுரேஷ்