Tuesday, February 3, 2009

தமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..

சந்திரபாபு...ஒரு படத்தில் பாடுவார்..

சிரிப்பு வருது...சிரிப்பு வருது
சின்ன மனுஷன்..பெரிய மனுஷன்
செயலை பார்க்க..பார்க்க
சிரிப்பு வருது..சிரிப்பு வருது..

இப்பொழுது இந்த பாடல் எதற்கு என்கிறீர்களா?

தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் நேற்று எடுத்த முடிவு குறித்துதான்.

இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத்தரவும்...போர் நிறுத்தம் ஏற்பட்டுஅமைதி தோன்றவும்..ஒத்த கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ் சான்றோர்கள்..அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்ற அமைப்பு பெயரால்...(அப்பாடா..குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு இந்த அமைப்பு தலைவர் பதவி கொடுத்து விடலாம்)தமிழக பட்டி..தொட்டி எங்கும்..விளக்கக் கூட்டங்கள்,பேரணிகள்,மனித சங்கிலி..போன்ற அறப்போராட்டங்கள் நடத்தி..தமிழ் நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை மத்திய அரசுக்கும்..இலங்கை அரசுக்கும் எட்டுமாறு செய்யப்படும்.ஃபிப்ரவரி 7ம் நாள் சென்னையிலும்,8,9..தேதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் நடத்துவதென்று செயற்குழு தீர்மானிக்கிறது.

இப்பொழுது..மேற்கண்ட பாடலை நீங்களும் முணுமுணுப்பது கேட்கிறது.

No comments: