Thursday, March 19, 2009

வாய் விட்டு சிரியுங்க..தங்கமணி ஸ்பெஷல்...

1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..
அவ பேர் என்ன
'சுலோ 'சனா

2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்
அதென்ன 6 மணி கணக்கு
அப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..

3.சுதந்திரம் எப்ப கிடைச்சுது
2009 மார்ச் 10ஆம் தேதி
என்ன சொல்ற நீ
அன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..

4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..
இல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே

5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா?
அம்மா- ஆமாம்..அதுக்கென்ன இப்ப
மகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...

6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..
ஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.