Monday, April 27, 2009

நாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு...

சென்னை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் 20 ஆவது நாடகவிழா 22ஆம் தேதி நாரத கான சபா அரங்கில் நடந்தது.தொடர்ந்து 9 நாடகங்கள் 30ஆம் தேதி வரை நடைபெறும்.விழாவிற்கு நல்லி செட்டியாரும், கிருஷ்ணாஸ்வீட்ஸ் முரளியும் வந்திருந்தனர்.ஆரம்ப விழாவில் பேச சேகரை...மைலாப்பூர் எம்.எல்.ஏ., பேசுவார் என்றனர்.

உடன் வந்த சேகர்..'என் கட்சியே நான் ஒரு எம்.எல்.ஏ., என்பதை மறந்து விட்டது' என்றார்.

மேலும்..'எனக்கு பச்சை ஷால் போர்த்துவதா..அல்லது மஞ்சளா என விழாக்குழுவினர் யோசித்தனர்' என்றார்.தனது அரசியல் நிலைப்பாடு...தான் எந்த கட்சியில் இருக்கப்போகிறேன் என்பதை மே 15ஆம் தேதிக்குபின் அறிவிப்பதாகக் கூறினார்..அனைவரையும்...தேர்தல் நாளன்று ஓட்டு போட்டு விடுங்கள் என்றார்.

விழாவில் முதல் நாடகமாக என் எண்ணம்,எழுத்து,இயக்கத்தில் 'பத்ம வியூகம்' என்ற நாடகம் நடந்தது.

2 comments:

கோவி.கண்ணன் said...

//நாடக விழாவில் எஸ்.வி.சேகர் பேச்சு... //

தலைப்பைப் பார்த்துட்டு அவரு நேற்று கடற்கரைப் பக்கம் போனாரோன்னு நினைத்தேன்.
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நேற்று கடற்கரைக்குப் போய் கலைஞரையும் சந்தித்தார்