Saturday, September 17, 2011

அலை வரிசைகள்





மரங்கள்
வெட்டப் படுகின்றன
காரணம் கேட்கிறேன்
நாளை இவ்விடங்களில்
செடி நடுவிழா
என்கிறான் ஒருவன்.

அலைகள்
வரிசை வரிசையாகவே வருகின்றன
வந்த சுவடு தெரிவதற்குள்
பின்னோக்கி
தந்தை கடல் அரக்கனுடன்
சேர்ந்து விடுகின்றன

வாழ்வின் சிறையில்
கைதி ஆனேன்
முன் ஜாமீன் கேட்டேன்
மனைவியுடன் வாழ் நிபந்தனையுடன்
விடுவிக்கப் பட்டேன்

4 comments:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் படைப்பும் ஒரே அலைவரிசையில்
மிக அழகாக இணந்து போகின்றன
அருமையான வித்தியாசமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள் த,ம 2

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramani

aotspr said...

அருமையான கவிதை.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan