Tuesday, December 15, 2015

நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்



தமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.

அப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்

முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'

1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.

கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.

ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.

பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்

பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.

'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கொல்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் வேதாந்தம் ராகவையா..

இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.

அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.

No comments: