Thursday, July 28, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் - 7

                                               
ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ. சாமி என அழைக்கப்பட்ட ஏ.சூசை அந்தோணி சாமி, தமிழ்நாடு குருவிக்குளம் என்ற கிராமத்தைச் சேற்ந்தவர்.இவர் பெற்றோர் இலங்கைச்  சென்று கொழும்பு நகருக்குக் குடி பெயர்ந்தனர்.இவர் இளம் வயதில் பி.ஏ.(ஹானர்ஸ்) ஆக்ஸ்ஃபோர்ட்  பல்கலைக் கழகம், லண்டனில் படித்தார்,பின் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்த போது இவரது குடும்பம் திருநெல்வேலி பாளயம்கோட்டைக்கு வந்தது.

பில் ஹணன் என்ற நாடகம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.ஜூபிடர் சோமு இந்நாடகத்தை படமாக்கினார்.


பின் வால்மீகி, ஸ்ரீமுருகன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.ஸ்ரீமுருகன் படத்தை இயக்கினார்.

ராஜகுமாரி எனும் படத்தில் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக அறிமுகமானார்.

அபிமன்யூ, மருமகள், நீதிபதி போன்ற படங்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.

கற்புக்கரசி என்ற படம் தயாரிப்பில் இருந்த போது அதன் இயக்குநர் மறைந்துவிடவே..அப்படத்தை இயக்கும் வாய்ப்பை சாமி பெற்றார்.

தங்கப்பதுமை,அரசிளங்குமரி,ஆனந்தஜோதி ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் வந்த வெற்றி படங்கள் எனலாம்.

தவிர்த்து, கடவுளைக்கண்டேன்,ஆசை அலைகள், துளிவிஷம் ஆகிய படங்களையும் இவர் இயக்கினார்.

No comments: