தமிழன் வீரமுள்ளவன்..என பழம் பெரும் காப்பியங்கள் உரைக்கின்றன.மறத்தமிழன் என்றே போற்றப்பட்டவன்..அவன்.
ஆனால்..இன்றோ..அவன் போகுமிடம்..இருக்குமிடம் எல்லாம் அடி வங்குகிறான்.
நம்ம இடம்..கச்சத்தீவு..அதை வாரி இலங்கையிடம்..தாரைவார்த்தது இந்தியா..இன்று..அந்த இடத்தில் ..தங்கள் வயிற்றைக் கழுவ...மீன் பிடிக்கச் செல்லும் தமிழன்..மீண்டும் மாலை வீடு திரும்புவது நிச்சயமில்லை.இலங்கை கடற்படையினரால்..கைது செய்யப்பட்டு..கொடுமைப்படுத்தப் படுகிறான்.தமிழகத் தலைவர்..கடிதம் எழுதி..தந்தி அடித்து..பிரதமரை தட்டி எழுப்பி..அவனை விடுவிக்க வேண்டியிருக்கிறது.இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு..நேரமில்லையா...மனமில்லையா..தெரியவில்லை.
அது போனால் போகட்டும் என்றால்...அண்டை நாட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி..தட்ஸ் தமிழில் வந்துள்ளது.
பெரியாறு அணையை ஆய்வு செய்யச் சென்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை, கேரள வனத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் சிறைபிடித்தனர்.வழக்கமான ஆய்வு செய்துவிட்டு..திரும்பிய பொறியாளர் ராஜேஷ்,உதவி செயற்பொறியாளர்கள் தியாகராஜன்,தினேஷ் கண்ணன்,தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் ஆகியோரை அத்துமீறி நுழைந்ததாக கெரள வனத்துறை சிறைப்பிடித்து வைத்தனர்.
பின்..தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு..அதிகாரிகள் தலையிட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
தமிழினத்தை காக்கவில்லை..என சொல்லும்..இலங்கை தமிழின சகோதரர்களே..தமிழ்நாட்டிலும் தமிழனுக்கு நடக்கும் அட்டூழியங்களைக் கேட்க ஆளின்றி அவன் அனாதையாகத்தான் இருக்கின்றான்.