Showing posts with label அரசியல் -சமுகம் -கட்சிகள். Show all posts
Showing posts with label அரசியல் -சமுகம் -கட்சிகள். Show all posts

Friday, October 10, 2008

இலங்கை தமிழர் பிரச்னை பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமிக்கு வருத்தம் அதிகமாயிடுச்சாம்.,காரணம் கேட்டா சொல்றார்...
இப்ப தமிழ்நாட்டிலே அத்தனைக் கட்சியும் இலங்கை தமிழர் பிரச்னை பத்தித்தான் பேசறாங்க..உண்மையிலேயே தமிழர்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு பற்று இருக்கே என்று நினைத்து முடிக்கும் முன்னரே பிரச்னைகளும் ஆரம்பம் ஆயிடுச்சு.
தமிழர் பிரச்னைன்னதுமே எல்லாக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.அப்போது அனைத்துக் கட்சிக்கூட்டத்தை முதல்வர் கூட்டினால் மட்டும் நான் கலந்துக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.ஒரு அரசை முன்னின்று ந்டத்துபவர் இன்று..கலைஞர்..பிரச்னையோ பொதுவானது..அப்போ எல்லாக் கட்சியும் கலந்துக்கொண்டு தங்கள் கருத்தை கூறட்டும்.முடிவுகளை எடுக்கட்டுக்..அதை விட்டு விட்டு...
ஆமாம்...இவங்களுக்குள்ள ஒற்றுமை இருந்தா..என்னிக்கோ காவேரி பிரச்னை தீர்ந்திருக்கும்...முல்லை பெரியார் பிரச்னை தீர்ந்திருக்கும்..ஓகேனக்கல் பிரச்னை தீர்ந்திருக்கும்.,
அரசியல் ஆதாயத்தைத் தேடும் கட்சிகளும்..ஈகோ பிரச்னையும்..பகை உணர்ச்சியும் இருக்கிறவரை நாம உருப்படமுடியாது.,
தமிழா..இதுதான் உன் தலை எழுத்துன்னா...யார் வந்து அதை மாற்றமுடியும்?