எந்த பிரச்னைகளுக்கும்..முடிவு என்று ஒன்று உண்டு.,ஆனால் இந்த இடஒதுக்கீடு பிரச்னைக்கு..இந்தியாவில் முடிவே இல்லை எனலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு I.I.T.,I.I.M., இவற்றில் 27சதவிகிதம் இட ஒதுக்கீடு அமுல் செய்வதில் பிரச்னை வளர்கிறது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதால் வருஷம் ஒன்றிற்கு 9 சதவிகிதம் என மூன்றாண்டுகளுக்கு இடங்கள் அதிகரிக்கும் என ஒரு தேவையில்லாத ஒன்றும் உள்ளே நுழைந்து விட்டது.
அடுத்து...பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாக இருப்பவை..பொதுவில் சேர்ந்துவிடும்..ஆகவே..பொருளாதாரத்தை வைத்துப் பார்க்காது அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்..என்கின்றனர்.இது எனக்கு சரியாகவே படுகிறது.இதில் எதற்கு ஒரு கிரீமி லேயர்..வருஷம் 4.5 லட்சத்திற்குள் வருமானம் வருபவர்கள் இதில் வரவேண்டுமாம்.அப்பா..சாமி..அவனுக்குள்ள 27%ல் அவனைச் சார்ந்த யார் வந்தால் உனக்கென்ன..அதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்.
அடுத்து ஒரு குற்றச்சாட்டு..கல்வியின் தரம் குறைந்து விடுமாம்...
ஆடு நனைகிறது என்கிறது ஓநாய்
இன்று மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப்பாருங்கள்..O.C.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைவிட இவர்கள் அதிகம் வாங்குகிறார்கள்.
அவர்களுக்கும்..இவர்களுக்கும்..கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருப்பதில்லை.1 அல்லது 2 மதிப்பெண்கள்தான் வித்தியாசம்.
கடைசியாக..பொதுவாக..ஒன்று..
படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்