Showing posts with label அரசியல் -சமூகம். Show all posts
Showing posts with label அரசியல் -சமூகம். Show all posts

Tuesday, October 28, 2008

தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?

தி.மு.க.வில்..இக்கட்டான நேரங்களில்..முரசொலி மாறன் இருந்தவரை அவரை கலைஞர் பேச விடுவார்.ஒரு சமயம் கலைஞர் முன்னிலையிலேயே..அமைச்சர்கள்..எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் ஒரு பிடி பிடித்தார்.
அவரது மறைவுக்குப் பின்..அந்த வேலையை ஆற்காடு வீராசாமியை விட்டு செய்ய வைத்தார் கலைஞர்.பா.ம.க. கூட்டணியில் தி.மு.க.,வை காராசாரமாக விமரிசித்து வந்த போது..அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி பற்றி பேச வைத்து..பா.ம.க.வை கழட்டி விடும் வேலைக்கு உபயோகித்துக் கொண்டார்.
ஆனால்..பா.ம.க., பிரிந்து சென்றதும்..கம்யூனிஸ்ட்கள் விலகியதும்..தி.மு.க.விற்கு சற்றே கவலையை ஏற்படுத்தியது.எப்படியாவது அக்கட்சியை திரும்ப இழுத்துக் கொள்ள முயன்று வருகிறது.
ஆனால்..மின்வெட்டு...ஆற்காட்டாரை ஓரளவு கலைஞரிடமிருந்து தள்ளி வைத்திருக்க...கலைஞர் பா.ம.க.,வை திரும்ப கொண்டுவரும் வேலையை டி.ஆர்.பாலு விடம் ஒப்படைத்திருக்கிறார் போலிருக்கிறது.
திண்டிவனத்தில்..நான்கு வழி சாலை திறப்பு விழாவில்..பிரிந்தவர்கள்..மீண்டும் கூடி..வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்..என மறைமுகமாக..பா.ம.க.,விற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலைஞர் சம்மதம் இல்லாமல் அவர் இவ்வேலையை செய்திருக்க மாட்டார் என நம்பலாம்.

Thursday, October 23, 2008

கலைஞரின் ராஜதந்திரமும்...வைகோ கைதும்..

கலைஞருக்கு எதிராக அரசியல் செய்வோர் அவர் அளவிற்கு முடியாவிட்டாலும்..ஓரளவு புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய வேண்டும்.
வைகோ கைது மீண்டும் இதை நிரூபித்துள்ளது.
சங்கரராமன் கொலை ஆன போது..அதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால்..தி.மு.க.,ஆர்ப்பாட்டம் செய்யும் என்றதுமே..அவசர அவசரமாக ஜெ அரசு..ஜெயேந்திரரை ஹைதராபாத்தில் கைது செய்தது.இதன் காரணமாக ஜெ ஒரு சாராரின் ஆதரை இழந்தார்.
இப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்களை..தி.மு.க.,அரசு விட்டு வைத்திருக்கிறது..என் ஆட்சிக் காலத்தில் பொடா சட்டத்தில் இவர்களை கைது செய்திருக்கிறேன்..என்று ஜெ சொல்லப்போக...அவர் இப்படி சொன்னதால்தான் வைகோ கைதானாற்போல ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. கலைஞரும்..ஜெ க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கூட்டணிக் கட்சிக்கு வேட்டு வைத்து விட்டார்.,
ஜெ..தனித்து விடப்பட்டுள்ளார்..
நுணலும் தன் வாயாற் கெடும்...