இப்போது ..இந்த பதிவில் ..உங்களில் பலருக்குத் தெரிந்த குட்டிக்கதை ஒன்றை சொல்கிறேன்..
இதை படித்துவிட்டு..உடனே...மணிகண்டன்..போன்றோர்..வேறு ஏதாவது அர்த்தம் கண்டுபிடிக்காதீர்கள்...
ராமர்..ஒரு சமயம் வனத்தில் நடந்துக்கொண்டிருந்த போது...அடக்கமுடியா தாகம் ஏற்பட்டது..பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா?என்று தேடிப்பார்த்த போது...அருகாமையில் ஒரு பொய்கை இருப்பதைப்பார்த்தார்.கையில் இருந்த அம்பை..தரையில் ஊன்றி விட்டு..தண்ணீர் குடிக்கச்சென்றார்.குடித்து விட்டு திரும்பும்போது..அம்பை எடுக்க குனிந்தார்..அம்பு..தரையில் இருந்த ஒரு தவளை மீது குத்தி இருந்தது..தவளையும்..குற்றுயிராய்..மரணத்திற்கு போராடிக்கொண்டிருந்தது.
உடனே..ராமர்..'ஏ..தவளையே...நான் அம்பை தரையில் ஊன்றுவதற்கு முன்..நீ இருப்பதை தெரிவித்திருக்கலாமே?'என்றார்..
அதற்கு..தவளை'ராமா..வேறு..யாராவது இக்காரியத்தை செய்திருந்தால்..நான்..ராமா..எனக்கு உதவு..என உன்னை அழைத்திருப்பேன்..ஆனால்..நீயே இக்காரியத்தை செய்துவிட்டதால்...என்னால் உன்னை அழைக்கமுடியாமல் போயிற்று'என்றதாம்.
இது ஆத்திகவாதிகள் மட்டும் அல்ல..நாத்திகவாதிகளும்..ஒரு கதையாகவே எடுத்துக் கொள்ளவும்.