Showing posts with label அரசியல்-நிகழ்வு. Show all posts
Showing posts with label அரசியல்-நிகழ்வு. Show all posts

Friday, August 17, 2012

ராமனும்..மன்மோகனும்




ராமாயணத்தில் ஒரு கதை உண்டு..
ராமன் ஒரு சமயம் தாகம் எடுக்க தன்னிடம் இருந்த தனுசை கரையில் ஊன்றிவிட்டு சுனையில் தண்ணீர் பருகிவிட்டு..பின் ஊன்றிய தனுசை எடுக்கையில்..அதனடியில் ஒரு தவளை தனுசு தன் மீது ஊன்றியதால் மரணப்போராட்டத்தில் இருந்தது.அதைக்கண்டு வருந்திய ராமன்.."ஏ..தவளையே..நான் தனுசை ஊன்றும் போது நீ குரல் கொடுத்திருக்கலாமே' என்றார்.

அதற்கு..தவளை''ராமா..எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால்..'ராமா எனைக்காப்பாற்று' எனக் குரல் கொடுக்கலாம்..ஆனால் செய்வது ராமனே என்னும் போது நான் யாருக்கு குரல் கொடுக்கமுடியும்?' என்றதாம்.

காமன்வெல்த் ஊழல், 2ஜி 176000 கோடி ஊழல் என்றெல்லாம் சேதி வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்/அமைச்சர்களை பதவி விலகச்சொன்ன பிரதமர்..நிலக்கரி சுரங்க உழல் 186000 கோடி என்றபோது அச்சமயம் அத்துறையை தன்னிடம் வைத்திருந்ததால் பதவி விலக வேண்டாமா?

உனக்கொரு நீதி..மற்றவனுக்கு ஒரு நீதியா?