Showing posts with label அரசியல்-நையாண்டி -விஜயகாந்த். Show all posts
Showing posts with label அரசியல்-நையாண்டி -விஜயகாந்த். Show all posts

Monday, October 20, 2008

அநாவசியமாக யாரும் விஜய்காந்தை விரோதித்துக் கொள்ளாதீர்கள்

சமீப காலங்களாக சில பத்திரிகைகள்..சில இணைய பதிவாளர்கள் கேப்டனை மரியாதை இல்லாமல் விஜய்காந்த் என்று சொல்வதுடன்..அவரை..அவர் அரசியலை கிண்டல் செய்து வருகிறார்கள்.அவர் ஒருவர் மட்டுமே..மரியாதை கொடுக்கமாட்டேன் என்று கூறி கலைஞரை..கருணாநிதி எனக் கூற ஏக போக உரிமை பெற்றவர்.
இவ்வளவு நாட்கள் சந்தேகத்தோடு இருந்த ..என்னைப்போன்றவர்கள்..சமீபத்திய அவர் கட்சியின் இளைஞர் பேரணி பார்த்து மலைத்துப் போயிருக்கிறோம்.கலைஞர் திருடிவிடுவார்..என்பதற்காக பல அரிய திட்டங்களை ரகசியமாக அவர் வைத்திருக்கிறார்..பதிவிக்கு வந்ததும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுவார்.
அவரால் எப்படி பதவிக்கு வரமுடியும் என்கிறீர்களா..
ஒரு எளிய கணக்கு..
இவ்வளவு நாட்களாக அரசியலில் இருந்தும்..கலைஞர்,ஜெயலலிதா ஆகியவர்களுக்கு தெரியாத கணக்கு.
அதை ரகசியமாக வைக்காமல் உடைத்து விட்டார் பேரணி கூட்டத்தில்.
'மொத்தம் 5 லட்சம் பேர் வந்திருக்கிறீர்கள்..ஒருவர் 100 வாக்குகள் வாங்கிக்கொடுத்தால் 5கோடி வாக்குகள்.' என்றார்..பின் என்ன அவர்தான் முதல்வர்.
ஆகவே அனைவரும் இனி அவரை கிண்டல் செய்ய வேண்டாம்.