Showing posts with label அரசியல்..சமூகம்..செய்தி. Show all posts
Showing posts with label அரசியல்..சமூகம்..செய்தி. Show all posts

Tuesday, October 21, 2008

தமிழகம் இரண்டாகப் பிரியப்போகிறதா?

திராவிட முன்னேற்ற கழகம் பிறந்த போது..அதன் முக்கிய கொள்கையே..தனி திராவிட நாடு..ஆனால் ஒரு கால கட்டத்தில்..அண்ணா அந்த கொள்கையை கைவிட்டார்.
மும்பையில் சமீபத்திய வட இந்தியரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி பேசும்போதும்..மத்திய அமைச்சர் சிவராஜ் படீல்..'பிரிவினைக் கேட்கும் நபர் யாராய் இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.
இனி தமிழகத்திற்கு வருவோம்...
ஏற்கனவே..மதுரையில் தனிக்காட்டு ராஜாவாக இயங்கிவரும் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.தனியொரு மனிதனைக் கண்டித்து..அதுவும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரை குறிவைத்து இதுவரை எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை.
இந்நிலையில் ..ஒரு சில பத்திரிகைகள் ..எல்லை மீறி ..நடப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு தமிழ் இதழில்..தென் தமிழக முதல்வர் அழகிரி ..என்று கூறியுள்ளது.
நம் கேள்வி எல்லாம்...
1.இதை ஏன் முதல்வர் கண்டிக்கவில்லை.
2.தமிழகத்தில் வருங்காலத்தில்..இரண்டு முதல்வர்கள் வரும் வாய்ப்புண்டா?
3.சாதாரண கருத்துக்கணிப்புக்கே...குடும்ப சண்டை..பிரிவினை எல்லாம் வந்த போது..இந்த விஷயம் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கப்படுகிறது.
4.இல்லை..வட தமிழகத்திற்கு தனியாக ஸ்டாலின் முதல்வர் ஆகிறாரா?