உப்பிட்டவனை உள்ளளவும் நினை என்பார்கள்..
ஆனால் இக்காலத்தில் உப்பை அதிகம் சேர்க்கக் கூடாது என மருத்துவர்கள் கூறினாலும்..
நமக்கு ஆதரவாய் இருந்தவர்கள்..பசியாற சோறிட்டவர்களை மறக்கக் கூடாது எனலாம்.இந்த குறும்படம் அதைச் சொல்கிறது.
அதே சமயம் மாணவ சமுதாயம் பொறுப்பற்றவர்கள் என ஆங்காங்கே சில அதி மேதாவிகள் கூறுவதுண்டு.ஆனால் இள ரத்தம் சில சமயங்களில் பயமறிவதில்லை என்பது உண்மை
ஆனால் மாணவர்கள் பொறுப்புள்ளவர்கள் என்பதை எவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாகக் கூறுகிறார்கள்.
இதைப் பார்த்ததும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தூண்டியது மனம்.
என்னைக் கவர்ந்த இந்த குறும்படம்..உங்களையும் கவரலாம்..
இதன் தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்