Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

Sunday, May 24, 2009

பிரபாகரன் மரணம்...

பிரபாகரன் ஒரு வாரத்திற்குமுன் மரணம் அடைந்ததை விடுதலைப்புலிகள் இன்று உறுதி செய்துள்ளார்கள்.

18 ஆண்டுகள் கழித்து...பழி வாங்கியதற்கு..காங்கிரஸ் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளதை மறக்கவோ, மறுக்கவோ முடியா உண்மை.

இனி தமிழின மக்களின் கதி என்ன?

அதைப்பற்றி என்னக் கவலை..3 கேபினட் அமைச்சர்கள்..வாங்கியாய் விட்டது.நம்மால் முடிந்தளவு உண்ணாவிரதம், மனிதசங்கிலி,தந்தி என முயற்சி செய்தாகிவிட்டது.

அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும்..வெளியிருந்து ஆதரவு என்று பயமுறுத்தியவரால்...அன்று..இதை செய்ய முடியாமல் போயிற்றே!

பிரபாகரா..போய் வா..தமிழின துரோகிகள் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

அவர்களால் முடிந்தது இதுதான்.