ஜென்பேக்ட் பீபிஓ நிறுவனத் தலவரும்..நாஸ்காம் தலைவருமான பிரமோத் பாசின்.. ஒரு பேட்டியில் ...
கடந்த ஆண்டில் சர்வதேச நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அநேகம் பேர் வேலை இழந்தனர்.இதற்கு இந்தியாவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.இதன் அடிப்படையில் எச் 1 பி விசாவிற்கு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது.தகவல்,தொழில் நுட்ப சேவையில்..இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவை நம்பி உள்ள நிலையில் இக் கட்டுப்பாடு கவலை அளிக்கிறது.
ஆனால்...உலகம் முழுதும்... பொருளாதார சரிவு உள்ளது..வேலை இழப்பு உள்ளது.ஆகவே யு.எஸ்.ஸில் வேலை இழப்புக்கு இந்தியா காரணம் இல்லை.இந்நிலையில் விசா கட்டுப்பட்டை நீக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளோம்.
தகவல், தொழில் நுட்பத் துறையில், அமெரிக்கா முக்கியமான சந்தையாக விளங்குவதால்...அவர்களை சரிவிலிருந்து மீட்க இந்தியா உதவ வேண்டும்.
இந்திய ஐ.டி., நிறுவனங்கள், அமெரிக்கர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த வேண்டும்.இதன் மூலம் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி அடையும்... என்று கூறியுள்ளார்.