Showing posts with label கமல்- விஸ்வரூபம். Show all posts
Showing posts with label கமல்- விஸ்வரூபம். Show all posts

Tuesday, March 12, 2013

விஸ்வரூபம்..இரண்டாம் பாகம்..




விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளில் சிக்கி, கமலுக்கு பலர் அறிவுரைகளைக் கூறி, தமிழக அரசுடன் பேசி, இஸ்லாமிய சகோதரர்களுக்காக ஒலிப்பதிவை மியூட் செய்து.., கடன்காரர்களின் அச்சுறுதல் என சொல்லின.ஒருவழியாக வெளிவந்து , இன்னமும் சில அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிரது.

இதனிடையே வசூல் 200 கோடிகளை தாண்டி விட்டது என்றும் கூறப்படுகிறது. கமலும், படத்தின் மூலம் லாபம்தான் என்றுள்ளார்.

இப்போது கமல், விஸ்வரூபத்தில் விடுபட்ட காட்சிகளை 2ஆம் பாகத்தில் காணலாம் என்றுள்ளார்.

இரண்டாம் பாகத்தில், காதல், தாய்..மகன் பாசம் மற்றும் போர்க்களக் காட்சிகள் இருக்குமாம்.

இன்னமும் சில காட்சிகளைச் சேர்த்து, போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முடிந்துவிட்டால், படம் வெளியிடத் தயாராம்.

இரண்டாம் பாகமாவது சுமுகமாக வர வேண்டுமானால்..கமல் பெருமாளை பழிப்பது நிறுத்தட்டும் என ஆன்மீகவாதிகளும்...

நம்மைப் பற்றி எது சொன்னாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலே போதும் என சம்பந்தப் பட்ட சமூகத்தினரும்..

இன்னொருமுறை வீட்டை அடகு வைக்க மாட்டார் என ஃபைனான்சியர்களும்..பேசிக்கொள்ளக் கூடும்.

சராசரி ரசிகனுக்கோ..பால் விலை அதுவரை ஏறாமல் இருந்தால் போதும் என்று மட்டுமே கவலை இருக்கக்கூடும்.



Saturday, February 2, 2013

விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!



விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரித்தார் கமல். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர். மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி... மேலும் கூறுகையில், "இப்படியொரு சந்திப்புக்கு வாய்ப்பு அமைத்துத் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் கமல். மேலும் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக கமல் கூறினார். அரசும் தடையை விலக்கிக் கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார். ரிலீஸ் தேதியை இன்று இரவுக்குள் அறிவிப்பதாக கமல் தெரிவித்தார்.

(தகவல் - தட்ஸ்தமிழ்)

Wednesday, January 30, 2013

தாமதமான நீதி..மறுக்கப்பட்ட நீதியாகும்..(விஸ்வரூபம்)




ஜனவரி 11 ஆம் நாள் வெளியாக வேண்டிய  விஸ்வரூபம் டி.டி.எச். பிரச்னையால் 25 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.

இதனிடையே..இஸ்லாமிய சகோதரர்கள் போராட்டம் காரணமாக..படத்தை தமிழக அரசு தமிழகத்தில் தடை செய்தது.இதனால்..மற்ற மாநிலங்களில் வெளியான இப்படம் ஆங்காங்கே ஏற்பட்ட சச்சரவுகளால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் அருகே இப் படத்தின் திருட்டி டிவி டி கிடைத்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..இப்படத்தைப் பார்த்துவிட்டு தடையை நீக்கினாலும்..அவசர அவசரமாக தமிழக அரசு செயல் பட்டு உயர்நீதி மன்ற பெஞ்ச்சிடம் மீண்டும் தடையுத்தரவைப் பெற்றது.கமல் உச்ச நீதிமன்றம் போகப் போவதாகத் தகவல்.அங்கும் உடனடியாக இவ் வழக்கு எடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.

கமல் இது குறித்து அறிக்கையில்..தன் ஆள்வார்பேட்டை வீட்டை அடமானம் வைத்து இப்படம் எடுத்ததாகவும்...இனி தான் தங்கக் கூட இடமில்லை என்று பொருள் பட பேசினார்.மேலும்..இதே நிலை நீடித்தால்..தான் மதச்சார்பற்ற மாநிலத்திற்கு குடி போகவும் தயார் என்றுள்ளார் வேதனையுடன்.

95 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் தலைவிதி இப்போது கேள்விக்குறியாய் உள்ளது.

சாதாரணமாக கமல் அநாவசியமாக அரசியலிலோ..அரசியல் சர்ச்சைகளிலோ ஈடுபடுபவர் இல்லை.அரசியலுக்கு நான் லாயக்கில்லை என்றும் அறிவித்துள்ளார்..

அப்படிப்பட்டவருக்கு...இந் நிலை ஏன்?

இதற்கான காரணம் பல கூறப்பட்டாலும்...உண்மை விரைவில் வெளிவரும்.



Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் முழுவதும் திரையிட உயர்நீதிமன்றம் அனுமதி




 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வந்தார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில்இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். நள்ளிரவுக்கு 2 மணி நேரததிற்கு முன்பு வந்த தீர்ப்பு ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதனால் தீர்ப்பை அறியக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில் ஒரு வழியாக பத்து மணிக்கு மேல் தீர்ப்பு வெளியானது. திரையிட அனுமதி அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். மேலும் தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். பெருமளவில் போலீஸ் குவிப்பு முன்னதாக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கோர்ட் வளாகம் தவிர கோர்ட்டுக்கு வெளியேயயும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டுக்குள் குழுமியிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 144 தடை உத்தரவுக்கும் தடை அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்

(நன்றி -தட்ஸ்தமிழ்)



(As soon as the order was pronounced, Additional Advocate-General P.H. Arvindh Pandian wanted the judge to suspend his own order until Wednesday morning. However, he declined the request.
Advocate-General A. Navaneethakrishnan and Mr. Pandian rushed to the residence of Acting Chief Justice Elipe Dharma Rao in a midnight effort to get the order suspended. Later, the AG told reporters that Mr. Justice Dharma Rao had permitted them to mention the matter on Wednesday on moving an appeal before a Division Bench.

_the Hindu )
Latest News
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.

Thursday, January 10, 2013

7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..


7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..
விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன்? என ஒரு சமயம் கேள்வி கேட்ட போது..

'இப்படம் 3000 திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதுவே வெளியாக தாமதம்' என்றார்.

பின்..ஒரு மாதிரி..சென்ற ஆண்டு பல படங்களுக்கு வழிவிட்டு..வெளியாகும் தேதி தள்ளீப் போனது.இந்நிலையில்..சென்ற டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் ஒருநாள்..ஜனவரி 11ஆம் நாள் படம் வெளியாகும் என விளம்பரப் படுத்தப் பட்டது.

50 கோடி பட்ஜெட் போட்டு..95 கோடிகள் வரை செலவானதாக சொல்லப்பட்ட இந்த படம்..ஜனவரி11 ஆம் நாள் சொன்னபடி திரையரங்குகளில் வந்திருந்தால்..வசூலில் கொடிகட்டி பறந்திருக்க வாய்ப்பு உண்டு.

சமயத்தில்..நமக்கு நேரம் சரியில்லையெனில்...நம் வாயாலேயே நாம் கெடுவோம்..

படத்தின் தரம் பற்றி சந்தேகம் வந்ததாலோ என்னவோ...10 ஆம் தேதியே டி.டி.எச்,சில் ஒரு காட்சி வெளியிடப்படும் என்றார் கமல்.இதனால்..30 கோடி அதற்காக முதலிலேயே பணம் கிடைத்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது.

வந்தது வினாசகாலம்..

திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு.சற்றும் அசராமல் இருந்த கமல்..சற்று பின் வாங்கினார்..

காரணம்..எதிர்ப்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை.மிஞ்சி, மிஞ்சி போனால்..300 திரயரங்குகளே கிடைக்கும் என்னும் நிலை/

இப்போது..ஏதோ சமரசம் ஏற்பட்டு, பட வெளியீடு 25ஆம் நாள் அன அறிவித்துள்ளார்.டி.டி.எச்.சில் எப்போது எனெத் தெரியாது..பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.(எதிர்பார்த்த அளவு 1000 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இல்லை என்றும் கேள்வி)
கிடைத்த 300 திரங்குகளில் வெளிவந்திருந்தாலும்..ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என..விடுமுறை நாட்கள் ஐந்து நாட்களிலும் அரங்கு நிறையும்.ஆக 7500 அரங்கு நிறைந்த காட்சிகளை பட வெளியீடு தள்ளிப் போனதால் கமல் இழந்தார்.

ஒரு கலைஞன்..நடிப்பத் தவிர..வேறு துறைகளிலும் தலையிட்டால் ,..அதற்கு இப்படி ஒரு தடையா..

கமல் விஸ்வரூபம் எடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பிரச்னைகளிலிருந்து விடுபடட்டும்.