Showing posts with label கர்நாடகா..தமிழ்நாடு. Show all posts
Showing posts with label கர்நாடகா..தமிழ்நாடு. Show all posts

Tuesday, September 18, 2012

கர்நாடகாவும்..தமிழ்நாடும்




 காவிரி நதிநீர் விவகாரத்தில் எப்பொழுதும் கர்நாடக அரசியல் கட்சிகள், வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடனேயே கைகோர்ப்பது வழக்கம். இந்த முறையும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் நாளை டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடனான ஆலோசனையின் போது ஷெட்டருடன் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையும் உடனிருந்தார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் நாளை கூடுகிறது. இதில் கர்நாடகம் மேற்கொள்ள வேண்டிய வியூகங்களை ஷெட்டரிடம் கிருஷ்ணா கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கிருஷ்ணா முதல்வராய் இருந்த போது நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழகத்திலோ...

20ஆம் தேதி  எதிர்க்கட்சிகள் மத்ய அரசுக்கு எதிராக நடத்தப்படும் பந்த் அன்று பள்ளிகளுக்கு முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.ஆனால்..பந்திற்கு தி.மு.க. ஆதரவு என்றதும், அறிவிக்கப்பட்ட விடுமுறையை அரசு ரத்து செய்து விட்டது.அந்த அளவு ஒற்றுமை.