
கேபிள் சங்கர்...தமிழ் வலைப்பூ எழுத்தாளர்களில் அனைவராலும் அறியப்பட்ட பதிவாளர்.
இவர் இவ்வளவு நாட்களாக போட்டுக் கொண்டிருந்த வேஷம் சிறிது சிறிதாகக் கலைந்து வருகிறது.
இவர் 'டக்கீலா' கதைகளும், நிதர்சனக் கதைகளும்,கொத்து பரோட்டாவும், அதில் போடும் A ஜோக்குகளும்,சாப்பாட்டுக் கடையும்..அவ்வப்போது நானும் 'யூத்து தான்" என சுய விளம்பரங்களும்..சக பதிவர்களிடம்..இவர் யூத்துதான் போல இருக்கிறது என்ற எண்ணத்தை உருவாக்கி வந்தது.
இந்நிலையில்..இன்று இவரது வேஷம் சிறிது கலையத் தொடங்கியுள்ளது.
ஆம்..இன்று அவர் வயது மேலும் ஒன்று அதிகரிக்கிறது..
இப்படி..இன்னும் சில ஆண்டுகள் அவர் பிறந்த நாள் வரும் போது அவரின் யூத் முகத்திரை முழுதும் கிழியும்.
இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு..நம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
உடன்..இன்று பதிவுலக மார்க்கண்டேயன் ..முந்தைய தன் ஏழு மூதாதையரை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கும் அப்துல்லாவிற்கும் பிறந்த நாள்.
அவருக்கும் நம் பிறந்த நாள் வாழ்த்துகள்.