Showing posts with label சிந்தனைகள் - துறவி. Show all posts
Showing posts with label சிந்தனைகள் - துறவி. Show all posts

Wednesday, March 10, 2010

உண்மையான துறவிகள் யார்..ஒரு விளக்கம்


திருமணம் முடித்து..குழந்தை பெற்று, வியர்வை சிந்தி உழைத்து ஊதியம் பெற்று..வாழ்வை சிறப்பாக அனுபவித்தவர்கள் மட்டுமே துறவியாக இருப்பதற்கும், குருவாக வாழவும் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

உண்ணாமல்..உறங்காமல் தவ நிலையில் பதினான்கு ஆண்டுகள் விழித்திருந்து நினைத்தபோது பரம்பொருளை தெய்வீகக் கண்களால் பார்க்கவும்..உணரவும் முடிய வேண்டும்.

நாளை நடக்கப்போவதை இன்றே அறந்து கொள்ளும் சூட்சமம்..எந்த குருவிடமும் கற்றுக்கொள்ளாமல் இறை அருளால் ஆய கலைகள் கற்றுத் தேர்ந்திருத்தல்..

அரையாடை தவிர சொந்தமென எதுவும் இல்லாத பற்றற்ற தன்மை.

புற்படுக்கையும், வானமே கூறையெனவும் பாதணி அணியாமலும் இருத்தல்

நாடிவந்த சீடர்களுக்கு தனக்குத் தெரிந்ததை பிரதிபலன் எதிர்பாராது கற்றுக் கொடுத்தல்

இறைவனுக்கு நடுவே இடைத்தரகர் என்றில்லாமல், பூஜைகள், புனஸ்காரங்கள், சடங்குகள் செய்விக்க மக்களுக்கு பயிற்சி அளித்தல்

தானாக கிடைக்கும் பொருட்களை மறுகணமே தானமாக வழங்கிவிடல்

மூன்று மாதங்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்காமை மற்றும் கடல் கடந்து செல்லாமை

உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பாவித்தல்.இறைவனை நம்பாதவர் மற்றும் மாற்றுக் கருத்து உடையவர்க்கு எவ்வித சாபமும், பாபமும் சுமத்தாமை

ஒருவேளை உணவு, ஒரு ஜாம தூக்கம், கோபமில்லா பேச்சு இவையே தேவையான முக்குணங்கள்

சாதாரண மனிதர் போல உணவு, தூக்கம்,பிணி,துன்பம் அண்டாமல் எல்லாவகையிலும் ஒரு படி உயர்ந்து இருத்தல்..தனக்கென்றோ, தன் சீடர்களுக்கென்றோ அல்லது தங்களை மதிக்கும் மக்கள் கூட்டத்திற்கென்றோ சொந்தமாக கட்டிடம், செல்வம் சேர்க்காமலிருத்தல்.

தன்னை வணங்குபவர்களைக் கண்டு சீறிவிழும் பாம்பாய் இருத்தல்.ஏனெனில் வணக்கம் பெற தகுதி படைத்தவர் இறைவன் மட்டுமே..


மேலே சொன்னவை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே உண்மையான சாமியார் என்கின்றது வேதங்கள்.

(சமிபத்தில் நான் இவற்றை ஒரு புத்தகத்தில் படித்தேன்)

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், 'காசும்,பணமும் ஆட்கொல்லி' என்றார்

பக்கத்தில் ஒரு குச்சி..கையில் விசிறி..இரண்டு சிரட்டைகள் ஆகியவற்றை மட்டுமே சொத்தாய் வைத்திருந்த யோகி ராம்சுரத்குமார்' ஐ யாம் எ பெக்கர். உனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன்' என்பார். (நன்றி-விகடன்)