Showing posts with label சினிமா -தலைமுறை -ரசனை. Show all posts
Showing posts with label சினிமா -தலைமுறை -ரசனை. Show all posts

Monday, October 13, 2008

காலம் மாறுது..ரசனை மாறுது..

காலம் மாறிக்கொண்டேருக்கிறது..
தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ரசனையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பாலசந்தரை அன்று ரசித்த தலைமுறை..இன்றுள்ள இயக்குநர்களை ரசிக்கமுடியவில்லை.
இன்றுள்ள தலைமுறை பாலசந்தரையும்..பாரதிராஜாவையும்..பாலு மகேந்திராவையும் ரசிப்பதில்லை.
அதனால்தான் சமீப காலங்களில் இவர்கள் படங்களால் வெற்றி கிடைப்பதில்லை.
இதுதான் யதார்த்தம்..இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள்..ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அந்த நாளில் 30..35..பாட்டுக்களுடன் தியாகராஜ பாகவதரை ரசித்தார்கள்..
அடுத்த தலைமுறை..சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும் ரசித்தார்கள்
பின் வந்த தலைமுறை ரஜினியும் ,கமலையும் ரசித்தார்கள்
இப்போது கில்லியும்,சாமியும் ரசிக்கப்படுகின்றன.
சுதர்சனம்,எஸ்.எம்.எஸ்.,ஜி.ராமநாதன் ரசிக்கப்பட்டனர்.
விஸ்வனாதன்-ராமமூர்த்தி,கே.வி.மஹாதேவன் பின்னர் வந்தனர்.
இளையராஜா..ரஹ்மான்..பரத்வாஜ்..வித்யாசாகர்..யுவன்..ரசனைகள் மாறிக்கோண்டே இருக்கின்றன.
பீம்சிங்,கோபாலகிருஷ்ணன்,ஸ்ரீதர்,பாலச்ந்தர்,பாரதிராஜா.மகேந்திரன்,பாலுமஹேந்திரா..இப்போது..ஹரி,கௌதம்,அமீர் இப்படி
இதை அனைவரையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக..நடிகர்கள் சிலர் மட்டும்..இரண்டு..மூன்று தலைமுறைக்கும் நிற்கிறார்கள்.
அவர்கள்..சிவாஜி,எம்.ஜி.ஆர்., ரஜினி,கமல் ஆகியோர்தான்.