Showing posts with label சினிமா -விமரிசனம் -ஜாதி. Show all posts
Showing posts with label சினிமா -விமரிசனம் -ஜாதி. Show all posts

Monday, October 13, 2008

பிராமணர்களும்..தனம் படமும்..

தனம் திரைப்படத்தை இப்போதுதான் dvd ல் பார்த்தேன்.,
படம் எடுத்த இயக்குநர் யாரை திருப்தி படுத்த வேண்டும் ..என்று படம் எடுத்தாரோ..தெரியாது.
படத்தில் தேவையில்லாமல்..ஒரு பிராமண குடும்பத்தை இழுத்துள்ளார்.
அது ஆசாரமான குடும்பமாம்...அவர்கள் ஜோதிடர்..பையனுக்கு தாசி பெண் மருமகளாக வந்தால் லக்ஷ்மி காடாக்ஷம் வரும்?! என சொல்கிறார்.ஏனென்றால் அவர்களது பையன் ஒரு தாசியை காதலிக்கிறான்.,குடும்பம் அதை ஏற்கவில்லை.அந்த ஜோதிடரும் ..அவளிடம் ஒரு முறை போக முயன்றபோது.. அவள் மறுத்து விட..அவளை பழி வாங்க இப்படி ஜோதிடம் சொல்கிறார்.
லக்ஷ்மி வருவாள் என்றதும் ..அந்த குடும்பம் சம்மதித்து விடுகிறதாம் ??!!
அவர்கள் வீட்டு எதிர் வீட்டு திண்ணையில்..ஒரு பிராமண கோஷ்டி..பிறன் மனை என்று தெரிந்தும்..அந்த வீட்டு மருமகளைப் பற்றி பேசுவதும்..ஆபாசமாக பேசுவதும்..
இதுதான் அவர்களின் வேலை என்பது போல் காட்டப்படுகிறது.அந்த பிராமணர்களின் மனைவிமார்தான் வீட்டுப்பொறுப்பை ஏற்று..கடைக்கு செல்வது போன்ற தொழில்களை செய்கிறார்கள்.இவர்கள் வெறும் வெத்து வேட்டு.
இப்போது மீண்டும் ஜோதிடர்..அந்த பெண்ணை நெருங்குகிறார்.அவள் மறுத்து விட...குடும்பத்தாரிடம்..அவல் மூலம் பிறந்த பெண் குழந்தையால் குடும்பத்துக்கு ஆபத்து எனக்கூறி..குழந்தையை கொன்றுவிடச் சொல்கிறார்.அப்படியே நடக்கிறது.பின் அந்த பெண் குடுப்பத்தையும்..அந்த ஜோதிடரையும் விஷம் வைத்துக் கொல்கிறாள்.
என் கேள்வியெல்லாம்
குசேலன் படத்தில்..நாவிதர்களை காமெடி என்ற பெயரில் கேலி செய்திருக்கிறார்கள் என அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
தனம் படத்தில் ஜோதிடர்களை கேவலப் படுத்துகிறார்களே..அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை.
ஜாதியைக்காட்டாமல்..ஒரு குடும்பத்தைக் காட்டி இருக்கலாமே..ஏன் ஒரு பிராமிண் குடும்பத்தைக் காட்ட வேண்டும்? இதை ஏன் அவர்கள் எதிர்க்கவில்லை?
படம் முழுதும் அந்த பிரிவினரை கிண்டல் செய்ய என்றே எடுக்கப்பட்டதாய் தெரிகிறது..தேவையில்லாமல்.எந்த ஜாதியை இழுப்பவர்கள் ஆனாலும்.அவர்கள் கண்டிக்க பட வேண்டியவர்களே!!.