Showing posts with label சினிமா-விமரிசனம். Show all posts
Showing posts with label சினிமா-விமரிசனம். Show all posts

Sunday, March 11, 2018

சவரக்கத்தி

லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் (வேறுயாருதாக இருக்கும்.மிஷ்கினின் பட நிறுவனம்தான்) சார்பில், மிஷ்கின் கதை, தயாரிப்பில் வந்துள்ள படம் "சவரக்கத்தி"
இப்போதுதான் பார்த்தேன்.ஒரு பொழுது போக்குக்கான படம் என்பதால் உங்களுடன் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்

ராம் தான் படத்தின் கதாநாயகன்.வாயைத் திறந்தால் பொய்.தொழில் ,முடிதிருத்துபவர்

அவர் மனைவியாக, காது கேட்காமல் நிறைமாத கர்ப்பிணியாக பூரணா

மங்கா எனும் ரௌடி பாத்திரத்தில் மிஷ்கின்

பரோலில் வந்து இருக்கும் அவருக்கு அன்று மாலை 6 மணி யுடன் பரோல் முடிகிறது.

அத்ற்குள், தெருவில் காரில் செல்கையில், ராமுடன் ஒரு தகராறு.ராம் அடித்துவிட வாயில் ரத்தம் ஒழுக, மங்காவின் கூட இருக்கும் அல்லக்கைகள் ஏற்றிவிட, ராமை துரத்தி கொலை செய்ய வேண்டும் என்ற வெறியில் மிஷ்கின்

டஹ்ப்பித் தப்பிப் பிழைக்கும் ராம்.அவருக்கு இவ்வளவு நடிப்பு...அதுவும் நகைச்சுவையாக நடிக்க வருமா? ஆச்சரியப்பட வைக்கிறார்.

பூரணா..அந்தப் பாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம்.இவர் திறமையை தமிழ்த் திரை நங்கு பயன் படுத்திக் கொள்ளலாமே!

மிஷ்கின், கேட்கவே வேண்டாம்..சொந்தப்படம் வேறு.கண்களை உருட்டி, மிரட்டி அசத்துகிறார்.

ராமை கொலை செய்ய எடுத்த கத்தி,ஒரு உயிர் பிறக்கவும் பயனாகிறது.

மிஷ்கினின் உடன் வருபவர்களும் கச்சிதம்.

பல இடங்களில் நம்மையும் மீறி வாய் விட்டு சிரிக்கிறோம்

இயக்குநர் ஆதித்யாவிற்கு முதல் படமாம்.பிரபலம் அதிகம் இல்லாத, அதெ சமயம் பாத்திரத்திற்குத் தகுதியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததால் வெற்றி பெற்றுள்ளார்.

குறைகளே இல்லையா? என்ற கேள்விக்கு..நிறைய சொல்லலாம்.ஆனாலும், அனைத்தையும் மறக்க வைத்துவிடுகின்றனர் நடிகர்கள்

இயக்குநரிடமிருந்து இனி இன்னமும் நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது