இன்று பௌர்ணமி..மெகா பௌர்ணமி.
ஆம்..பூமிக்கு அருகில் இன்று சந்திரன் வருவதால்..வழக்கத்தைவிட சந்திரன் சற்று பெரியதாகத் தெரியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இப்படி வானில் அதிசயங்கள் வருகையில்..பூகம்பம்,எரிமலை,வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.அதற்கேற்றாற் போல ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் இது குறித்து விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்...
பூகம்பமோ..சுனாமியோ ஏற்பட எந்த வகையிலும் இது காரணமாய் அமையாது.சற்று பெரியதாய்த் தெரியும் நிலவை பார்த்து ரசியுங்கள்.
இதனால் வெப்பநிலையிலும் மாற்றம் இராது.கடல் அலைகள் மட்டும் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும்.
1993ஆம் அண்டுக்குப் பிறகு இன்று தான் இந்நிகழ்வு ஏற்படுகிறது.சந்திரன் இன்று 14 விழுக்காடு வழக்கத்தைவிட பெரியதாகவும்..30 விழுக்காடு அதிக ஒளியுடனும் திகழும்.
பூமிக்கு 356577 கிலோமீட்டர் தூரத்தில் சந்திரன் வருகிறதாம்.