தமிழ் படத்தயாரிப்பாளர்களில்..அனேகமாக அனைத்துப் படங்களும் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அதில்..முதலில் இருப்பவர் பாலாஜி..
மிகுந்த முயற்சிக்குப் பின்..ஜெமினிகணேசனின் ஆதரவுடன்..திரைஉலகில் அறிமுகமானவர் பாலாஜி.ஔவையார் படத்தில்..முருகனாக சிறு பாத்திரத்தில் நடித்தார்.பின்னர் படிப்படியாக முன்னேறி..பானை பிடித்தவள் பாக்யசாலி,மறுமலர்ச்சி போன்ற படங்களில் கதாநாயகன் ஆனார்.சிவாஜியுடன் பல படங்களில் நடித்தார்.
பின்..தன் மகள் சுஜாதா பெயரில் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்.ஜெமினி நடிக்க அண்ணாவின் ஆசை..இவர் தயாரித்த முதல் படம்.அது ஓரளவு வெற்றி பெற..தன் படத்தயாரிப்பைத் தொடர்ந்தார்.
சிவாஜியை வைத்து..திருடன்,தங்கை,எங்கிருந்தோ வந்தாள்..என் தம்பி..போன்று பல படங்களை எடுத்தார்.
பின்னர் கமலை வைத்து சில படங்கள் வந்தது..(சவால்)
பின் ரஜினியை வைத்து...தீ..பில்லா போன்ற வெற்றி படங்கள் தயாரித்தார்.
தமிழ்த் திரை உலகில் ராசியான தயாரிப்பாளர் ஆனார்., ஆனால் நடிப்பதையும் விட்டு விடவில்லை..கிட்டத்தட்ட அவர் படங்களில் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை அவரே செய்வார்.
சமீபத்தில் மீண்டும் தன் மகன் தயாரிப்பில் ஈடுபட...அஜித் நடிக்க பில்லா படமும்...சமீபத்தில் யாவரும் நலம் படமும் இவருடையதே..
எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாத இவர் கடைசியாக ஜெயா டிவியில்..திரும்பிப்பார்க்கிறேன்..என்ற நிகழ்ச்சியில் சமீபத்திதான் கலந்துக் கொண்டார்.
மோகன்லால் இவரது மருமகன் ஆவார்
கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டவர் இன்று அமரர் ஆனார்.
அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.