Showing posts with label செய்திகள் - திமுக. Show all posts
Showing posts with label செய்திகள் - திமுக. Show all posts

Friday, February 3, 2012

ஓட்டுப் பிச்சை எடுக்க மாட்டேன் - கலைஞர்




சென்னையில் நேற்று திமுக பொதுக்குழு கூடியது.அப்போது வீரபாண்டி ஆறுமுகம் பேச்சிற்கு ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் சிலர் கூச்சலிட்டனர்.அது குறித்து பேசிய கலைஞர்...

பொதுக்குழுவில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலினுக்கு ஆதரவு போல சில குண்டர்கள் முயற்சித்தார்கள் என்ற கலைஞர்..ஸ்டாலின் முக்கிய பொறுப்பை ஏற்கும் முன் அவர் மீது களங்கம் ஏற்படும் வகையில்..இந் நிகழ்ச்சி அமைந்து விட்டது என்றார்.

அவர் மேலும் கூறுகையில்

பேரும், புகழும், மதிப்புகளும், சான்றிதழும் வாங்கியவன் நான். அண்ணா, பெரியாராலேயே பாராட்டப்பட்டவன்.
பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவன்' என்றெல்லாம் சொல்லி, நான் தி.மு.க., தலைவனாக நீடிக்க வேண்டுமென்று
உங்களிடம் ஓட்டு கேட்க விரும்பவில்லை. ஓட்டுப் பிச்சையெடுத்து, நான் தலைவனாக நீடிக்க வேண்டிய அவசியமில்லை.
 வேண்டுமானால், அடுத்த பொதுக்குழுவை, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று வைத்து, அதில் ஓட்டளிக்கச் செய்து,
அதை எண்ணிப் பார்த்து, யார், யார் இதற்கு என்று அறுதியிட்டு, முடிவு செய்யலாம் என்றார்.

பொதுக்குழுவைப் பற்றிய, இப்போதுள்ள தி.மு.க.,வைப் பற்றிய, ஒரு காட்சியைக் காட்டியதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று மனவருத்தத்துடன் கூறினார்.